என் மலர்
நீங்கள் தேடியது "germany"
- ஜி-7 நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசுவதையும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.
- ஐரோப்பா முழுவதும் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை சந்திக்க இருக்கிறேன்.
ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு இன்று ஜெர்மனியில் தொடங்குகிறது. தெற்கு ஜெர்மனியில் உள்ள ஸ்க்லோஸ் எல்மா லில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்தார்.
இதை ஏற்று கொண்ட மோடி, ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்றிரவு தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார்.
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi departs for Germany for the G7 Summit.
After the Summit, PM will travel to UAE on June 28 to pay his condolences on the passing away of Sheikh Khalifa bin Zayed Al Nahyan, former UAE President & Abu Dhabi Ruler. pic.twitter.com/By9v0pts3M
— ANI (@ANI) June 25, 2022
முன்னதாக பிரதமர் தமது பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஜி7 அமைப்புக்கு தலைமைதாங்கும் நாடு என்ற அடிப்படையில், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ஷ் விடுத்த அழைப்பின் பேரில், நான் ஸ்கிளாஸ் எல்மாவோ-வுக்கு பயணம் மேற்கொள்கிறேன்.
கடந்த மாதம் இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கு இடையே நடைபெற்ற ஆக்கப்பூர்வ ஆலோசனைக்கு பிறகு ஜெர்மன் பிரதமர் ஸ்கால்சை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.
முக்கிய சர்வதேச விவகாரங்களில், சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக, பிற ஜனநாயக நாடுகளான அர்ஜென்டினா, இந்தோனேஷியா, செனகல் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி அழைப்பு விடுத்துள்ளது.
இந்த உச்சிமாநாட்டின் பல்வேறு அமர்வுகளின் போது, சுற்றுச்சூழல், எரிசக்தி, பருவநிலை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், தீவிரவாத எதிர்ப்பு, பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் போன்ற முக்கியமான அம்சங்கள் குறித்து நான் கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளேன்.
உச்சிமாநாட்டின் இடையே ஜி-7 மற்றும் விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசுவதையும் நான் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். ஜெர்மனியில் தங்கியிருக்கும் போது, ஐரோப்பா முழுவதும் வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் நான் சந்திக்க உள்ளேன்.
இந்தியா திரும்பும் வழியில் ஜூன் 28ந் தேதி அபுதாபி சென்று ஐக்கிய அரபு எமிரேட்சின் மன்னரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஷேக் கலிஃபா பின் சையது அல் நஹ்யான் மறைவையொட்டி, தற்போதைய மன்னரும், அதிபருமான ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யானை சந்தித்து நேரில் இரங்கல் தெரிவிக்க இருக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
- இயற்கை எரிவாயு சப்ளையை ரஷியா குறைத்ததைத் தொடர்ந்து எரிவாயு விநியோக அவசர திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- எரிபொருள் வர்த்தக பிரச்சனை நீடிப்பதால், ஜெர்மனியும் பிற நாடுகளும் நிலக்கரிக்கு திரும்புகின்றன.
பெர்லின்:
ஜெர்மனி அரசு இன்று இயற்கை எரிவாயு விநியோகத்திற்கான தனது மூன்று-நிலை அவசரத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்தியது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி, இயற்கை எரிவாயு நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், பல்வேறு நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தை ரஷியா குறைத்த பின்னர், குளிர்காலத்திற்கான சேமிப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் முதல் உக்ரைன் போர் காரணமாக எரிபொருட்களின் விலைகள் உயர்ந்து, இயற்கை எரிவாயு சப்ளையை ரஷியா குறைத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி அரசு கூறியது.
மேலும், தொழில்துறை நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்தும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ரஷியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே எரிபொருள் வர்த்தக பிரச்சனை நீடிப்பதால், ஜெர்மனியும் பிற நாடுகளும் நிலக்கரிக்கு திரும்புகின்றன. இது, ஐரோப்பாவில் பருவநிலை இலக்குகளை அடைவதற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
நம்மால் இன்னும் உணர முடியாவிட்டாலும், நாம் இப்போது எரிவாயு நெருக்கடியில் இருக்கிறோம் என ஆற்றல்துறை மந்திரி ராபர்ட் ஹாபெக் கூறினார்.

புதுடெல்லி:
இந்தியாவைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி ஸ்மிதா சாரூர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஜெர்மனியில் முனீச் நகரம் அருகே தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் பிரசாந்தும், அவரது மனைவி ஸ்மிதாவும் கத்தியால் குத்தப்பட்டனர். அவர்களில் பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்மிதா காயத்துடன் உயிர் தப்பினார்.
முனிச் நகரில் குடியேறி இருக்கும் மற்றொரு வெளி நாட்டுக்காரர் இக்கொலையில் ஈடுபட்டார். இந்ததகவலை மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரசாந்த்-ஸ்மிதாவின் 2 குழந்தைகளையும் முனிச் நகரில் உள்ள இந்திய தூதரகம் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மற்ற விரிவான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.
டுவிட்டரில் தன்னை சவ்கிதாரி (காவலாளி) என சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு டுவிட்டர் பயன்பாட்டாளர் ஒருவர் விளக்கம் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த அவர், “ஏனெனில் நலன் விரும்பிகளுக்கும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் நான் காவலாளியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ரபேல் போர் விமான விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடியை காவலாளியே ஒரு திருடனாக இருக்கிறார் என குற்றம் சாட்டினார். எனவே மோடி தன்னை ஒரு சவ்கிதாரி (காவலாளி) என குறிப்பிட்டார். அவரை தொடர்ந்து பா.ஜனதா தலைவர்களும் மந்திரிகளும் தங்களது பெயருக்கு முன்னாள் சவ்கிதாரி’ என சேர்த்துக் கொண்டனர். #Indianmurder

இதற்கிடையே புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரத்தை சர்வதேச நாடுகளிடம் இந்தியா கொண்டு சென்றது. அதை தொடர்ந்து பயங்கரவாதி மசூத் அசாருக்கு எதிராக பிரான்சு கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவு பெருகியுள்ளது.
தீர்மானத்துக்கு தற்போது ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த தகவலை இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் ஹன்ஸ் கிறிஸ்டியன் வின்கலர் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து ஐரோப்பிய யூனியனில் ஆலோசிக்கப்பட்டது.அதில் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் அனைத்தும் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க கோரும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதன் மூலம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 உறுப்பினர்களில் 14 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துள்ளன. #MasoodAzhar
மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஜெர்மனியில் உள்ள டிரையர் நகரில் உள்ள ஆங்குஸ்டா-விக்டோரியா என்ற பழமையான பள்ளிக்கூடத்தில் காந்தியின் மார்பளவு சிலை திறக்கப்பட்டு உள்ளது.
ஜெர்மனி நாட்டிற்கான இந்திய தூதர் முக்தா தத்தா தோமர் முன்னிலையில், டிரையர் மாநகர மேயர் ஒல்ப்ரம் லேபே சிலையை திறந்து வைத்தார். விழாவில் பங்கேற்ற முன்னாள் மேயர் கிளாஸ் ஜேன்சன், காந்தியின் தத்துவங்களை நினைவுகூர்ந்தார்.

