search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BMW"

    • இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் களமிறங்கியது.
    • இந்தியா தவிர மற்ற நாடுகளில் விற்பனை செய்து வந்தது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் வெளியிட்டது. இதன் விலை ரூ. 14 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் மூலம் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் களமிறங்கி இருக்கிறது.

    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் பிஎம்டபிள்யூ தனது முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை மட்டும் தற்போதுதான் வெளியிட்டுள்ளது. பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியா தவிர மற்ற நாடுகளில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    புதிய CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 31 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் 41 ஹெச்பி பவர், 61 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தை 2.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும், மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.

     



    இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல ரைடிங் மோட்கள், 10.25 இன்ச் டிஎப்டி ஸ்கிரீன், டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 8.5 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய பிஎம்டபிள்யூ CE 04 முழு சார்ஜ் செய்தால் 130 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டருடன் ஸ்டான்டர்டு மற்றும் ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷன்களை பிஎம்டபிள்யூ வழங்குகிறது. ஸ்டான்டர்டு சார்ஜர் 4 மணி நேரத்திலும், பாஸ்ட் சார்ஜர் 1 மணி 40 நிமிடங்களிலும் பேட்டரியை சார்ஜ் ஏற்றிவிடும்.

    தற்போதைக்கு இந்த ஸ்கூட்டர் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இது இம்பீரியல் புளூ மற்றும் லைட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிய நிலையில், வினியோகம் விரைவில் துவங்கும் என்று தெரிகிறது.

    • 18 இன்ச் மற்றும் 19 இன்ச் வீல்கள் இந்த மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • எஞ்சின் பின்புற சக்கரங்களை இயக்கும் எட்டு வேக AT உடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறை மாடலான பிஎம்டபிள்யூ 5 சீரிஸின் ஆரம்ப விலை ரூ.72.90 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இரண்டு வகைகளில், இரண்டு வண்ணங்கள் மற்றும் ஒரு பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கிறது. இது உலகளவில் வெற்றிபெற்ற நடுத்தர அளவிலான செடானின் 8-வது தலைமுறையாகும்.

    வெளிப்புற தோற்றம்:

    புதிய 5 சீரிஸ் சமீபத்திய பிஎம்டபிள்யூ-வின் சிக்னேச்சர் கிட்னி கிரில்லை நேர்த்தியான முழு எல்இடி ஹெட்லேம்ப்களுடன் பெறுகிறது. பிஎம்டபிள்யூ 18 இன்ச் மற்றும் 19 இன்ச் வீல்கள் இந்த மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கூடுதல் நீளமாக உள்ளதை பார்க்க முடியுகிறது.

    பின்புறம் முந்தைய தலைமுறையின் வட்டத்தன்மையை இழந்து, உறுதியான பம்பர் மற்றும் சிக்னேச்சர் ரேப்-அரவுண்ட் எல்இடி டெயில் லேம்ப்களுடன் கூர்மையான தோற்றத்தில் காணப்படுகிறது.

    உட்புறம் மற்றும் சிறப்பம்சங்கள்

    பிஎம்டபிள்யூ கேபின் வடிவமைப்பு, கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஒற்றை திரை போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் சென்டர் கன்சோல் பெரியதாகவும் மற்றும் ஸ்க்ரோல் வீல் மற்றும் கியர் செலக்டர் மெக்கானிசம் வழங்கப்பட்டுள்ளது.


    இரண்டாவது சீட் வரிசை மிகவும் விசாலமாகவும் அனைத்து வயதினருக்கும் தேவைப்படும் அனைத்து வசதிகளும் உள்ளன.

    இத்துடன் பனோரமிக் சன்ரூஃப், போவர்ஸ் மற்றும் வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டம், மல்டி-சோன் கிளைமேட் கண்ட்ரோல், இன்டீரியர் கேமரா, லெதரெட் இருக்கை மேற்கவர்கள், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஃபோன் மிரரிங், கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா மற்றும் தானியங்கி பார்க்கிங் உள்ளிட்ட டிரைவர் உதவி அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

    பவர்டிரெய்ன் விருப்பங்கள்

    புதிய 5 சீரிஸ் ஒரு பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கிறது. இது 2.0-லிட்டர் நான்கு சிலிண்டர் மோட்டார் 256bhp/400Nm வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சின் பின்புற சக்கரங்களை இயக்கும் எட்டு வேக AT உடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த எஞ்சினுடன் 48V மைல்ட் ஹைப்ரிட் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.5 வினாடிகளில் எட்டிவிடும். இந்த புதிய தலைமுறையில் 5 சீரிஸ், வரவிருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் E-Class மாடலுக்கு போட்டியாக இருக்கும்.

    • பழுதடைந்த காருக்கு பதிலாக புதிய காரை வாங்க வாடிக்கையாளர் மறுத்துவிட்டார்.
    • இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    கடந்த 2009 ஆம் ஆண்டு கடுமையான குறைபாடுகள் இருந்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை தனக்கு விற்றதாக பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்திற்கு எதிராக வாடிக்கையாளர் புகார் அளித்திருந்தார்.

    இந்த வழக்கில், பழுதடைந்த பிஎம்டபிள்யூ காருக்கு பதிலாக புதிய காரை வாடிக்கையாளருக்கு வழங்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

    ஆனால் பழுதடைந்த காருக்கு பதிலாக புதிய காரை வாங்க வாடிக்கையாளர் மறுத்துவிட்டார். தனக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பழுதடைந்த காரை விற்றதற்காக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவின் அடிப்படையில் வாடிக்கையாளருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். பழைய காருக்கு பதில் புதிய காரை மாற்றிக்கொடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவும் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
    • அவர்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. நாங்கள் தான் கஷ்டத்தை அனுபவிக்க போகிறோம்' என்று பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

    பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வெளிப்படையாகவே இந்த வித்தியாசத்தை அன்றாடம் நம்மால பார்க்கவும் உணரவும் முடிகிறது. அந்த வகையில் சாலைகளில் பணக்காரர்கள் மற்றும் பெரும் புள்ளிகளின் சொகுசு கார்கள் இடித்து சாமானிய மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன.

    தற்போது மும்பையில் முக்கிய புள்ளி ஒருவரின் மகன் குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் 24 வயதுடைய அந்த இளைஞர் மிஹிர் ஷாம் என்பதும் மகாராஷ்டிர முதலவர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.

    தற்போது மிஹிர் தப்பித்த நிலையில் அவரின் தந்தை ராஜேஷ் ஷாவைவும் குடும்ப டிரைவரையும் போலீசார் கஸ்டடியில் எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் மிஹிர் ஷாமை முக்கிய குற்றவாளியாக குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை மும்பையின் உரோலி பகுதியில் உள்ள கோலிவாடா பகுதியில் தனது தம்பதி சென்ற இருசக்கரவாகனத்தின்மீது மிஹிர் ஷாம் ஓட்டிவந்த பிஎம்டபில்யூ சொகுசு கார் பின்னால் இருந்து மோதியதில் தூக்கிவீசப்பட்டு கார் பானட்டில் சிக்கி பெண் 100 மீட்டருக்கு இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார்.

    பெண்ணின் கணவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது விபத்து குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், 'கார் மோதியதில் நான் ஸ்கூட்டரில் இருந்து இடது புறமாக விழுந்துவிட்டேன். எனது மனைவி காரின் முன்புறம் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. நான் இப்போது என்ன செய்வேன். இவர்களெல்லாம் [விபத்து ஏற்படுத்திய இளைஞர் மற்றும் அவரது தந்தை] பெரிய ஆட்கள். அவர்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. நாங்கள் தான் கஷ்டத்தை அனுபவிக்க போகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விபத்து துரதிஷ்டவசமானது, சட்டம் தன் கடமையைச் செய்யும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தப்பியோடிய மிஹிரை தேடும் பணியில் போலீஸ் இறங்கியுள்ளது. 

     

    • ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 1 மணி நேரம் 40 நிமிடங்களிலும் சார்ஜ் ஏற்றலாம்.
    • ஸ்கூட்டரின் இருக்கை உயரம் 780mm அளவில் உள்ளது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் ஏற்கனவே தனது மோட்டார் சைக்கிளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், தனது பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியாவில் பிஎம்டபிள்யூ CE 04 மாடல் ஜூலை 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி திறன் 8.9 கிலோ மெகாவாட் ஆகவும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 130 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம். இதன் மோட்டார் 31kW திறன் கொண்டது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2.6 வினாடிகளில் 0-50 கி.மீட்டரும் அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்திற்கு செல்லும். இந்த ஸ்கூட்டரை ஸ்டான்டர்டு சார்ஜர் மூலம் 4 மணி நேரம் 20 நிமிடங்களிலும், ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 1 மணி நேரம் 40 நிமிடங்களிலும் சார்ஜ் ஏற்றலாம்.


    பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன் மற்றும் பின்புறம் 15 அங்குல சக்கரங்களை கொண்டிருக்க்கிறது. இந்த ஸ்கூட்டரின் இருக்கை உயரம் 780mm அளவில் உள்ளது. இதன் எடை 179 கிலோ ஆகும். இந்த ஸ்கூட்டரில் ஏபிஎஸ், புளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட TFT டிஸ்ப்ளே மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    ஒட்டுமொத்தமாக பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வடிவமைப்பானது எதிர்காலத்திற்கு ஏற்றதாகவும், அதிக வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    முன்னதாக, C 400 GT விலையானது ரூ.11.20 லட்சம் எக்ஸ் ஷோரூமில் இந்தியாவில் விற்பனையானது. இதன்அடிப்படையில் பார்த்தால் பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மாடலானது, லாங் வீல்பேஸ் காராக உருவாக்கப்பட்டுள்ளது.
    • 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் என இருவிதமாக இந்த பிஎம்டபிள்யூ கார் விற்பனை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    ஜெர்மனியை சேர்ந்த முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று பிஎம்டபிள்யூ (BMW). பல்வேறு நாடுகளில் கார்களை விற்பனை செய்யும் BMW நிறுவனத்துக்கு முக்கியமான மார்க்கெட்டாக இந்தியா திகழ்கிறது. இதனாலேயே இங்கு அவ்வப்போது புதுப்புது கார்களை அறிமுகப்படுத்துகிறது BMW நிறுவனம்.

    அந்த வகையில், தற்போது BMW நிறுவனத்தின் 8-வது தலைமுறை 5 சீரிஸ் லாங்க் வீல்பேஸ் (BMW 5 Series Long Wheelbase) மாடலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. வருகிற 24-ந்தேதி தான் இந்த மாடலை அறிமுகம் படுத்தப்படுகிறது. இதற்கு முன்னதாகவே முன்பதிவு தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள BMW டீலர்கள் அல்லது ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம்.


    பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மாடலானது, லாங் வீல்பேஸ் காராக உருவாக்கப்பட்டுள்ளது. 5 சீரிஸ் காரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் முன்பு இருந்ததை காட்டிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காருக்குள் இடவசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் என இருவிதமாக இந்த பிஎம்டபிள்யூ கார் விற்பனை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    • புதிய நிறங்கள் மற்றும் புதிதாக கூடுதல் உபகரணங்களை கொண்டிருக்கிறது.
    • முற்றிலும் புதிய 1300சிசி, லிக்விட் கூல்டு, பாக்சர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது R 1300 GS பிளாக்ஷிப் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய அட்வென்ச்சர் பைக்கின் விலை ரூ. 20 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய R 1300 GS மாடல் புதிய நிறங்கள் மற்றும் புதிதாக கூடுதல் உபகரணங்களை கொண்டிருக்கிறது. அந்த வகையில், பிஎம்டபிள்யூ R 1300 GS மாடல் லைட் வைட், GS டிராபி, ஆப்ஷன் GS டிரமான்டுனா மற்றும் டிரிபில் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

     


    இவைதவிர இந்த பைக்கின் ஒட்டுமொத்த டிசைன், எஞ்சின் மற்றும் பெரும்பாலான அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பிஎம்டபிள்யூ R 1300 GS மாடலில் முற்றிலும் புதிய 1300சிசி, லிக்விட் கூல்டு, பாக்சர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள எஞ்சின் 145 ஹெச்.பி. பவர், 149 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஷாப்ட் டிரைவ் சிஸ்டம் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய பிஎம்டபிள்யூ R 1300 GS மாடலில் டிஎப்டி ஸ்கிரீன், ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற வசதி கொண்டிருக்கிறது.

    இத்துடன்- இகோ, ரெயின், ரோட், என்டியூரோ போன்ற ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், பிரேக் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் டயர் பிரெஷர் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

    • இந்த பைக்கிற்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
    • டூரிங் மற்றும் டைனமிக் பேக்கேஜ் வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பி.எம்.டபிள்யூ. S 1000 XR மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சமீபத்தில் M 1000 XR மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்த நிலையில், தற்போது S 1000 XR மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய பி.எம்.டபிள்யூ. S 1000 XR மோட்டார்சைக்கிள் விலை ரூ. 22.5 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் இந்திய சந்தைக்கு முழுமையாக அசெம்பில் செய்யப்பட்ட வடிவில் இறக்குமதி செய்யப்பட இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

     


    இந்த மாடலின் வினியோகம் விரைவில் துவங்கும் என்று தெரிகிறது. பி.எம்.டபிள்யூ. S 1000 XR மாடலின் ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் பிளாக் ஸ்டாம் மெட்டாலிக், கிராவிட்டி புளூ மெட்டாலிக் நிறங்களிலும், வைட் சாலிட் பெயின்ட் / மோட்டார்ஸ்போர்ட் (M பேக்கேஜ் உடன்) நிறங்களிலும் கிடைக்கிறது. இந்த பைக் உடன் டூரிங் மற்றும் டைனமிக் பேக்கேஜ் வழங்கப்படுகிறது.

    இதன் ஸ்டான்டர்டு வெர்ஷனில் ரைடர் மோட் ப்ரோ, ஹீட்டெட் க்ரிப், ஹெட்லைட் ப்ரோ மற்றும் அடாப்டிவ் டர்னிங் லைட், குரூயிஸ் கண்ட்ரோல், கீலெஸ் ரைட், யு.எஸ்.பி. சார்ஜர் மற்றும் டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த மோட்டார்சைக்கிள் M பேக்கேஜ் உடன் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இதில் பிரத்யேக நிற ஆப்ஷன், M ஸ்போர்ட் சீட், M லைட் வெயிட் பேட்டரி, M ஃபோர்ஜ் செய்யப்பட்ட வீல்கள், M என்டூரன்ஸ் செயின், M GPS லேப்ட்ரிகர், ஸ்போர்ட்ஸ் சைலன்சர், டின்ட் செய்யப்பட்ட ஸ்போர்ட்ஸ் விண்ட் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபிள்யூ. S 1000 XR மாடலில் 999 சிசி, இன்-லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 168 ஹெச்.பி. பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் பை-டைரெக்ஷனல் குயிக் ஷிஃப்டர் வழங்கப்படுகிறது.

    இந்த பைக் - ரெயின், ரோட், டைனமிக் மற்றும் டைனமிக் ப்ரோ என நான்குவித ரைடிங் மோட்களில் கிடைக்கிறது. இந்த பைக் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் இரட்டை டிஸ்க் பிரேக்குகள், பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • பிஎம்டபிள்யூ காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
    • இந்த காரில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் எஞ்சின் உள்ளது.

    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முற்றிலும் புதிய X3 xDrive20d M ஸ்போர்ட் ஷேடோ எடிஷன் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிஎம்டபிள்யூ X3 xDrive20d M மாடலின் விலை ரூ. 74 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன.

    ஷேடோ எடிஷன் மாடல் என்பதால், இந்த காரில் பிளாக்டு-அவுட் செய்யப்பட்ட கிட்னி கிரில், பி.எம்.டபிள்யூ.-வின் லேசர் லைட் தொழில்நுட்பம், பிரத்யேகமான புளூ அக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டெயில் பைப்களில் ஹை-கிலாஸ் பிளாக் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. உள்புறம் M சீரிஸ் மல்டி-பன்ஷன் வசதி கொண்ட ஸ்போர்ட் ஸ்டீரிங் வீல், எலெக்ட்ரிக் சீட் அட்ஜஸ்ட்மென்ட், M ஸ்போர்ட் பேக்கேஜ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    இந்த காரில் ஆம்பியன்ட் லைட்டிங், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பி.எம்.டபிள்யூ.-வின் டிரைவிங் அசிஸ்டண்ட், பார்க்கிங் அசிஸ்ட் பிளஸ் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய பி.எம்.டபிள்யூ. ஷேடோ எடிஷன் காரில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த எஞ்சின் 187 ஹெச்.பி. பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 213 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் மற்றும் பி.எம்.டபிள்யூ. எக்ஸ் டிரைவ் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    • பி.எம்.டபிள்யூ. பைக்கில் 999சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • பைக்கின் ஒட்டுமொத்த தோற்றமும் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது.

    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் இந்தியா நிறுவனம் தனது சக்திவாய்ந்த முற்றிலும் புதிய M 1000 XR சூப்பர் பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபிள்யூ. M 1000 XR மாடலின் விலை ரூ. 45 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய பி.எம்.டபிள்யூ. M 1000 XR மாடலில் விசேஷமான ஹை-கிளாஸ் பிளாக் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இது பைக்கின் ஹை-கிலாஸ் கார்பன் ஃபைபர் பேனல்களுக்கு முரணாக காட்சியளிக்கிறது. இதுதவிர இந்த பைக்கின் ஒட்டுமொத்த தோற்றமும் கவனம் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     


    ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கும் பி.எம்.டபிள்யூ. M 1000 XR மாடலில் ஸ்ப்லிட் எல்.இ.டி. ஹெட்லைட்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட டி.ஆர்.எல்.கள், சிறிய வின்ட் ஸ்கிரீன், பின்புறம் கிராப் ஹேண்டில்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பி.எம்.டபிள்யூ. M 1000 XR மாடலில் 999சிசி, இன் லைன், நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 201 ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த பைக் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும். மேலும், மணிக்கு அதிகபட்சம் 278 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    பி.எம்.டபிள்யூ.-வின் முற்றிலும் புதிய சூப்பர் பைக் மாடல்- ரோட், டைனமிக், ரேஸ் மற்றும் ரேஸ் ப்ரோ போன்ற நான்கு ரைட் மோட்களை கொண்டுள்ளது. இத்துடன் டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த சூப்பர் பைக்கில் 6.5 இன்ச் டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

    • முழுமையாக அசெம்பில் செய்யப்பட்ட நிலையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது.
    • இந்த காரில் S58 ஆறு சிலிண்டர்கள் கொண்ட டர்போ என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் சத்திவாய்ந்த கார்களில் ஒன்றான M4 காம்படிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகமானது. புதிய கூப் மாடலில் பி.எம்.டபிள்யூ. எக்ஸ் டிரைவ் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் S58 ஆறு சிலிண்டர்கள் கொண்ட டர்போ என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் முழுமையாக அசெம்பில் செய்யப்பட்ட நிலையில், இந்தியா கொண்டுவரப்படுகிறது. புதிய பி.எம்.டபிள்யூ. M சீரிஸ் காரில் உள்ள என்ஜின் 530 ஹெச்.பி. பவர், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. என்ஜின், சேசிஸ், ஸ்டீரிங், பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற செட்டிங்களை இயக்குவதற்காக சென்டர் கன்சோலில் பட்டன் ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது.

    2024 M4 காம்படிஷன் மாடலின் விலை ரூ. 1 கோடியே 53 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • பி.எம்.டபிள்யூ. காப்புரிமையில் தெரியவந்துள்ளது.
    • மோட்டார்சைக்கிள்களில் கொண்டுவர திட்டமிடுகிறது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது எதிர்கால மோட்டார்சைக்கிள் மாடல்களில் கிம்பலில் மவுன்ட் செய்யக்கூடிய எல்.இ.டி. ஹெட்லைட் வழங்க இருக்கிறது. இது தொடர்பான விவரங்கள் பி.எம்.டபிள்யூ. காப்புரிமையில் தெரியவந்துள்ளது.

    காப்புரிமை விவரங்களின் படி எல்.இ.டி. ஹெட்லைட் 3-ஆக்சிஸ் கிம்பலில் மவுன்ட் செய்யப்பட்டு இருக்கிறது. ஒளிப்பதிவு துறையில் கேமரா ஆடினாலும், காட்சிகள் ஆடாமல் பார்த்துக் கொள்ளவே கிம்பல் பயன்படுத்தப்படுகிறது. இதே பாணியை பி.எம்.டபிள்யூ. தனது மோட்டார்சைக்கிள் மாடல்களில் கொண்டுவர திட்டமிடுகிறது.

     


    மோட்டார்சைக்கிள் எந்த பக்கம் திரும்பினாலும் அல்லது கடுமையாக பிரேகிங் செய்யும் போதும் பி.எம்.டபிள்யூ. சிஸ்டத்தில் எல்.இ.டி. ஹெட்லைட் எந்த பக்கமும் அசையாது. இதுதவிர ஹெட்லைட் கார்னெரில் மட்டும் ஒளியை பாய்ச்சும். இதனால் ரைடிங்கின் போது அதிக பாதுகாப்பு கிடைக்கும்.

    இந்த ஹெட்லைட் சிஸ்டம் முழுவதும் இனெர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட் (IMU) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதே போன்ற யூனிட் தான் மோட்டார்சைக்கிளின் இதர பாதுகாப்பு வசதிகளான கார்னரிங் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் கார்னெரிங் ஏ.பி.எஸ். உள்ளிட்டவைகளையும் கட்டுப்படுத்துகிறது. புதிய கிம்பல் ஹெட்லைட் சிஸ்டம் பி.எம்.டபிள்யூ. உற்பத்தி செய்யும் எதிர்கால GS சீரிஸ் மாடல்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    ×