search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "European Commission"

    • எதிர்காலம் டிஜிட்டல் மயமாக இருக்கும் என்றார் உர்சுலா
    • ஏஐ குறித்து அரசாங்கங்கள் சட்டங்கள் இயற்ற வேண்டும்

    ஜி20 கூட்டமைப்பின் 18-வது 2-நாள் உச்சி மாநாடு இந்தியாவின் தலைமையில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. இதன் 3-வது அமர்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிபர் உர்சுலா வான் டெர் லெயென் (Ursula von der Leyen) உரையாற்றினார்.

    அதில் அவர் கூறியதாவது:-

    இன்று நான் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு குறித்து பேச விரும்புகிறேன்.

    ஏஐ-யால் சில அபாயங்களும் ஏற்படலாம். ஆனால், இது மிகப்பெரிய வாய்ப்புகளையும் வழங்குகிறது. விரைவாக மாறிவரும் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது முக்கியமான கேள்வி. செயற்கை நுண்ணறிவை உருவாக்கி மென்பொருளை தயாரிப்பவர்கள் இதனை ஒழுங்குபடுத்த அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என அழைக்கிறார்கள்.

    ஐரோப்பிய ஒன்றியத்தில், 2020-ல், செயற்கை நுண்ணறிவு குறித்த முதல் சட்டத்தை நாங்கள் முன்வைத்தோம். நம்பிக்கையை வளர்க்கும் அதே நேரத்தில் புதுமைகளை எளிதாக்க விரும்புகிறோம். இப்போது உலகம் என்ன செய்கிறது என்பதை பொறுத்தே நமது எதிர்காலம் வடிவமைக்கப்படும்.

    ஐரோப்பா மற்றும் அதன் நட்பு நாடுகள் செயற்கை நுண்ணறிவின் அபாயங்களை களைந்து புதிய உலகளாவிய கட்டமைப்பை உருவாக்கும் என நான் நம்புகிறேன். பாதுகாப்பான மற்றும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு சார்ந்த அமைப்புகளில் முதலீடுகளை வளர்க்க வேண்டும்.

    ஏஐ-யினால் ஏற்படும் அபாயங்கள் குறித்த அறிவையும், மனிதகுலத்திற்கான சாத்தியமான நன்மைகளையும் அவர்கள் வழங்க வேண்டும். இதன் அபாயங்கள் குறித்த அறிவையும், மனிதகுலத்திற்கு சாத்தியமான நன்மைகளையும் நிபுணர்கள் வழங்க வேண்டும்.

    இரண்டாவதாக டிஜிட்டல் பொது கட்டமைப்புகள் குறித்து பேச விரும்புகிறேன். இது வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு உண்மையான ஊக்க சக்தியாக இருக்கலாம். இந்தியா, தனது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளை வெளியிடுவதில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது.

    இந்திய பிரதமர் கூறியதை கேட்டோம். அவருடைய முயற்சிகளை நாங்கள் மிகவும் ஆதரிக்கிறோம். சிறிய முதலீடுகளில் பெரும் பயன்கள் சாத்தியம் என நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். அனைவருக்குமான அனைவரும் நம்பக்கூடிய, சிறப்பாக இயங்கக்கூடிய ஒரு பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதிலேதான் வெற்றி அடங்கியிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் மற்றும் டிரான்ஸ்-ஆப்பிரிக்கா வழிப்பாதை எனும் திட்டம் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார்.

    புதிய பொருளாதார வழித்தடம் (New Economic Corridor) எனப்படும் இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்தை நாளைய உலகின் வேகமான, சுருக்கமான மற்றும் தூய்மையான ஒரு இணைப்பு நடவடிக்கை என பாராட்டினார்.

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாடும் சந்தித்துப் பேசினர். இதில், பரஸ்பர வரி விதிப்பால் மோசமாகி வந்த இரு தரப்பு வர்த்தக உறவில் சமரசம் ஏற்பட்டு உள்ளது. #DoaldTrump #JeanClaude
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்குக்கு 25 சதவீதமும், அலுமினியத்துக்கு 10 சதவீதமும் வரி விதித்து ஜனாதிபதி டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இந்த நடவடிக்கையால் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாமல் கனடா, மெக்சிகோ, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பாதிப்புக்கு ஆளாகின.

    மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படக்கூடிய கார்களுக்கும் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

    அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கத்தக்க விதத்தில் அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு 2.8 பில்லியன் யூரோ (சுமார் ரூ.22 ஆயிரத்து 120 கோடி) வரி விதித்து நடவடிக்கை எடுத்தது.



    இதனால் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு மோசமாகி வந்தது.

    இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாட் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இணக்கமான முறையில் நடந்து முடிந்து உள்ளது.

    அது மட்டுமின்றி இரு தரப்பு வர்த்தக உறவிலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்து இருக்கிறது.

    இந்த சந்திப்புக்கு பின்னர் வெள்ளை மாளிகை ரோஜா தோட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப், ஜீன் கிளாடுடன் நிருபர்களை சந்தித்தார். அப்போது டிரம்ப் கூறியதாவது:-

    ஐரோப்பிய கூட்டமைப்புடன் வர்த்தக தடைகளை குறைத்துக்கொள்வதற்கு அமெரிக்கா சம்மதம் தெரிவித்து உள்ளது. இரு தரப்பு வர்த்தக உறவில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டு உள்ளது. இந்த நாள் சுதந்திரமான, நியாயமான வர்த்தகத்துக்கான நல்ல நாள் ஆகும்.

    நாங்கள் இப்போது முதல் பேச்சு வார்த்தையைத் தொடங்கி உள்ளோம். இது எங்கே போய் முடியும் என்பதை நாங்கள் நன்றாக அறிந்து இருக்கிறோம். அமெரிக்காவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் கூடுதலான இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி.) இறக்குமதி செய்யும். ஐரோப்பிய நாடுகளுடனான சேவைகள், விவசாய வர்த்தகம் அதிகரிக்கும்.

    அமெரிக்க விவசாயிகளிடம் இருந்து அதிலும் குறிப்பாக மத்திய மேற்கு பகுதி விவசாயிகளிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் மிகக்கூடுதலான அளவில் சோயா பீன்ஸ் வாங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாட் நிருபர்களிடம் பேசும்போது, “ஜனாதிபதி டிரம்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவருடனான பேச்சு வார்த்தை நன்றாக அமைந்தது. ஆக்கப்பூர்வமாக இருந்தது. எனது முக்கிய நோக்கம், தொழில் ரீதியிலான பொருட்களுக்கு வரிவிலக்கு பெறுவதற்கு உடன்பாட்டை ஏற்படுத்துவதுதான். தேசிய பாதுகாப்பு தடைகளை விரைவில் மறு மதிப்பீடு செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் ஒப்புக்கொண்டார்” என்று கூறினார்.

    இரு தலைவர்களின் சந்திப்பால் ஏற்பட்டு உள்ள மாற்றங்களை ஐரோப்பிய கூட்டமைப்பு வர்த்தக அதிகாரி செசிலியா மால்ம்ஸ்டிராம் வரவேற்று உள்ளார். 
    ×