என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "President Trump"

    • இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது உலகம் முழுவதுக்கும் தெரியும்.
    • பிரதமர் மோடி அதானி என்ற ஒரு நபருக்காக மட்டுமே பணியாற்றுகிறார்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், இந்தியப் பொருளாதாரம் இறந்து விட்டது என்று டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    டிரம்ப் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்யாவுடனான இந்திய உறவு குறித்து எனக்கு கவலை இல்லை. இந்தியா விதிக்கும் வரிகள்தான் உலகிலேயே அதிகம். நாங்கள் அவர்களுடன் பெரிய அளவில் வணிகம் வைத்துக் கொண்டதில்லை. ரஷ்யாவுடனும் அமெரிக்கா வணிக உறவு கொண்டதில்லை. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இறந்து போன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்ற டிரம்பின் கருத்து குறித்து பேசிய ராகுல் காந்தி, "டிரம்ப் சொல்வது சரிதான், பிரதமர் மற்றும் நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் இது தெரியும். இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஜனாதிபதி டிரம்ப் ஒரு உண்மையை கூறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது உலகம் முழுவதுக்கும் தெரியும். பிரதமர் மோடி அதானி என்ற ஒரு நபருக்காக மட்டுமே பணியாற்றுகிறார். அதானிக்கு உதவ பாஜக இந்திய பொருளாதாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

    எங்களிடம் ஒரு சிறந்த வெளியுறவுக் கொள்கை உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகிறார். ஒருபுறம், அமெரிக்கா உங்களை துஷ்பிரயோகம் செய்கிறது. மறுபுறம், சீனா உங்கள் பின்னால் உள்ளது. நீங்கள் உங்கள் குழுவை உலகிற்கு அனுப்பியபோது, எந்த நாடும் பாகிஸ்தானைக் கண்டிக்கவில்லை.

    பிரதமர் மோடி தனது உரையில் டிரம்ப், சீனாவின் பெயரை கூட சொல்லவில்லை. இந்த பஹல்காம் தாக்குதலை நடத்திய பாகிஸ்தானின் இராணுவத் தலைவர், ஜனாதிபதி டிரம்ப் அவருடன் மதிய உணவு அருந்துகிறார். நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்" என்று கூறினார்

    இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் 30-32 முறை கூறியுள்ளார். 5 இந்திய ஜெட் விமானங்கள் வீழ்ந்ததாகவும் அவர் கூறினார். டிரம்ப் இப்போது இந்திய பொருட்களுக்கு 25% வரிகளை விதிப்பதாகக் கூறுகிறார். இதற்கு பிரதமர் மோடி ஏன் பதில் அளிக்க முடியவில்லை? உண்மையான காரணம் என்ன? யார் கையில் அதிகாரம் உள்ளது?

    பாஜக அரசாங்கம் நமது பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கையை அழித்துவிட்டது" என்று தெரிவித்தார். 

    • இந்தியா பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்
    • ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், இந்தியப் பொருளாதாரம் இறந்து விட்டது என்று டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    டிரம்ப் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்யாவுடனான இந்திய உறவு குறித்து எனக்கு கவலை இல்லை. இந்தியா விதிக்கும் வரிகள்தான் உலகிலேயே அதிகம். நாங்கள் அவர்களுடன் பெரிய அளவில் வணிகம் வைத்துக் கொண்டதில்லை. ரஷ்யாவுடனும் அமெரிக்கா வணிக உறவு கொண்டதில்லை. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இறந்து போன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • இந்தியா பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.
    • ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

    டிரம்பின் புதிய வரி விதிப்பால் எந்தத் துறைக்கு பாதிப்பு?

    இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் 25% வரி விதிப்பால் வேளாண்மை, ஜவுளி, மின்னணு, ஆபரணங்கள் உள்பட பல முக்கியத் துறைகள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

    அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள் ஐபோன்களில் 44% இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகிறது. வரிவிதிப்பால் நாட்டில் செல்போன் உற்பத்தித் துறைக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
    • இந்திய நிறுவனங்களுக்கச் சொந்தமான கப்பல்களுக்கும் அமெரிக்க தடை விதித்துள்ளது

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், ஈரானிய பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வர்த்தகம் செய்ததாகக் கூறி 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கச் சொந்தமான கப்பல்களுக்கும் அமெரிக்க தடை விதித்துள்ளது

    அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்ட இந்திய நிறுவனங்கள் :

    1. அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்

    2. குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட்

    3. ஜூபிடர் டை கெம் பிரைவேட் லிமிடெட்

    4. ராம்னிக்லால் எஸ் கோசாலியா & கோ

    5. பெர்சிஸ்டண்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட்

    6. காஞ்சன் பாலிமர்ஸ்

    • பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
    • ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய டிரம்ப், பாகிஸ்தான் நாட்டுடன் நாங்கள் ஒப்பந்தம் ஒன்றை முடிவு செய்துள்ளோம். இதன்படி, பாகிஸ்தானிலுள்ள பெரிய அளவிலான எண்ணெய் இருப்புகளில் இருந்து எண்ணெய் எடுக்கும் பணியை இணைந்து மேற்கொள்ள போகிறோம். இதற்காக எண்ணெய் நிறுவனம் தேர்வு செய்யும் நடைமுறையில் ஈடுபட்டு இருக்கிறோம்.

    யாருக்கு தெரியும், ஒரு நாள் இந்தியாவுக்கு கூட பக்ஷிதன் எண்ணெயை விற்பனை செய்ய கூடும் என்று டிரம்ப் கிண்டலாக கூறினார்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரை நான் தான் தடுத்து நிறுத்தினேன் என்று தொடர்ந்து டிரம்ப் கூறி வரும் நிலையில், பாகிஸ்தானுடன் அமெரிக்கா கைகோர்த்துள்ளது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்கும் மோடியை சந்திக்கிறார்.
    வாஷிங்டன்:

    சமீபத்தில் நடைபெற்ற இந்திய பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

    அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ள மோடிக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்கும் மோடியை சந்திக்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.



    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜப்பானில் ஜூன் மாதம் 28, 29ம் தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்கிறார். அப்போது அவர் இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்க உள்ள மோடியை சந்திக்கிறார் என தெரிவித்துள்ளது.

    தேர்தலில் அபார வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    வடகொரிய தலைவரை 3-வது முறையாக சந்தித்து பேச டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா சரியான அணுகுமுறையுடன் வரவேண்டும் கிம் ஜாங் அன் நிபந்தனை விதித்துள்ளார். #Trump #KimJongUn
    சியோல்:

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் எதிரிகளாக திகழ்ந்து, வார்த்தை யுத்தம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் போட்டனர்.

    அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27, 28-ந்தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் இரண்டாவது உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் ஏதுமின்றி தோல்வியில் முடிந்தது.

    அணு ஆயுதங்களை ஓரளவுக்கு கைவிடவே, தன் மீதான பொருளாதார தடைகளை எல்லாம் அகற்ற வேண்டும் என்று வடகொரிய தலைவர் கிம் கூறியதே, பேச்சுவார்த்தை தோல்விக்கு காரணம் என அமெரிக்கா கூறியது.

    ஆனால் வடகொரியாவோ, தங்கள் வாழ்வாதாரத்துக்காக பொருளாதார தடைகளில் ஒரு பகுதியையாவது விலக்கிக்கொள்ள வேண்டும் என்றுதான் கூறினோம் என தெரிவித்தது.

    இந்த நிலையில், இப்போது 3-வது முறையாக கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விருப்பம் வெளியிட்டுள்ளார்.

    இதை வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஏற்றுக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா சரியான அணுகுமுறையுடன் வரவேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

    இதுபற்றி வடகொரிய பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் அவர் பேசும்போது, ‘‘இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அம்சங்களுடனும், சரியான அணுகுமுறையுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா முன்வந்தால், 3-வது உச்சி மாநாடு நடத்தி சந்திக்க நாங்கள் விரும்புகிறோம்’’ என குறிப்பிட்டார். #Trump #KimJongUn
    மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு தேவையான நிதி ஒப்புதலை நாடாளுமன்றம் அளிக்கும் என்று ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். #DonaldTrump #MexicoWall
    வாஷிங்டன்:

    மெக்சிகோ நாட்டின் வழியாக அமெரிக்காவுக்குள் அகதிகள் சட்டவிரோதமாக நுழைவதை தடுப்பதற்காக 5.7 பில்லியன் டாலர்கள் (ரூ.39 ஆயிரம் கோடி) செலவில் தடுப்புச் சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் மிகவும் ஆர்வமாக உள்ளார்.

    ஆனால் இதற்கான நிதியை நாடாளுமன்றம் ஒதுக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து ஜனாதிபதி டிரம்ப், அரசின் பல்வேறு துறை செலவினங்களுக்கு நிதி ஒதுக்காமல் இழுத்தடித்து வருகிறார். இதனால் அமெரிக்காவில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக அரசுத் துறைகள் முடங்கி உள்ளன. 22 நாட்களாக அரசுத்துறை ஊழியர்கள் எந்த சம்பளமும் பெறாமல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.



    இப்படியொரு நிலைமை அமெரிக்க வரலாற்றில் எப்போதும் ஏற்பட்டதில்லை என்று கூறப்படுகிறது. 1995-96-ம் ஆண்டு பில்கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்தபோது கூட அதிக பட்சமாக 21 நாட்கள்தான் அமெரிக்க அரசுத்துறைகள் முடங்கிக் கிடந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், தடுப்புச் சுவர் கட்டுவதற்கான நிதியை நாடாளுமன்றம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் நாட்டில் அவசர நிலையை அறிவிக்க தயங்கமாட்டேன் என்று அண்மையில் அறிவித்த டிரம்ப் தற்போது தனது குரலை சற்று தளர்த்திக் கொண்டு உள்ளார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், “மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் நிச்சயமாக ஒப்புதல் அளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே நாட்டில் அவசர நிலையை உடனடியாக அறிவித்து விட மாட்டேன். அவசர நிலையை அறிவிக்கும் உரிமை எனக்கு இருந்தாலும் கூட தடுப்புச் சுவருக்கான போதிய நிதியை நாடாளுமன்றம் முறைப்படி ஒதுக்கீடு செய்துவிடும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.

    நாடாளுமன்றம் தனது வழக்கமான பணியை மேற்கொள்ளவேண்டும் என்பதே எங்களின் விருப்பம். அதனால் எடுத்த எடுப்பிலேயே அவசர நிலை அறிவிப்பு என்னும் நிலைக்கு போக மாட்டேன். இது நிதியை பெறுவதற்கான எளிதான வழி என்றாலும் கூட அதை விரைவாக கையாள மாட்டேன். அதேநேரம் நாடாளுமன்றம் இதைச் செய்ய தவறும் பட்சத்தில் அவசர நிலை அறிவிக்கப்படும் என்கிற எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.
    ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படைகளை சரிபாதியாக குறைக்க அதிபர் டிரம்ப் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Trumpwithdraw #UStroops #Afghanistan
    வாஷிங்டன்:

    சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் முகாமிட்டிருந்த பன்னாட்டு ராணுவப் படைகள் கடந்த 2014-ம் ஆண்டு திரும்பப்பெற்ற பின்னர் அங்கு தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது.

    நாட்டின் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் தீவிரவாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர்மீது அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அமெரிக்காவை சேர்ந்த ராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    தற்போதைய நிலவரப்படி அங்கு அமெரிக்காவை சேர்ந்த சுமார் 14 ஆயிரம் ராணுவ துருப்புகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிரியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினர் திரும்பி அழைக்கப்படுவார்கள் என அந்நாட்டின் அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.

    இதைதொடர்ந்து, ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படைகளை சரிபாதியாக குறைக்க அதிபர் டிரம்ப் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த தகவல் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலிபான்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளதாக தெரிகிறது. 



    அமெரிக்காவின் இந்த முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்த ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை உயரதிகாரி ஒருவர், ‘தன்னுடைய முக்கிய எதிரி களத்தில் இருந்து பின்வாங்கி விட்டால் யார் சமாதானத்துக்கு வருவார்கள்? தாக்குதல்களை தலிபான்கள் அதிகரிப்பதற்கு இது வாய்ப்பாக அமைந்துவிடும்’ என தெரிவித்தார்.

    ஆனால், தலிபான்கள் இதை ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு என்று குறிப்பிட்டனர். இப்போதாவது அமெரிக்கா இங்குள்ள உண்மை நிலவரத்தை உணர்ந்துள்ளது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. மேலும் சில நல்ல தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பதாக தலிபான்கள் கூறுகின்றனர்.

    கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் படைகளின் முழு கட்டுப்பாட்டில்தான் உள்நாட்டு பாதுகாப்பு உள்ளது. அமெரிக்கப் படைகள் விலகுவதால் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இல்லை என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ஹாரூன் சக்கன்சுரி சுட்டிக்காட்டியுள்ளார்.

    அதேவேளையில், டிரம்ப்பின் இந்த முடிவு  மிகப்பெரிய ஆபத்தாக அமையலாம் என அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் லின்ட்சே கிராஹம் எச்சரித்துள்ளார். 

    ஆப்கானிஸ்தான் நாட்டில் நாம் அடைந்துள்ள வெற்றியை எல்லாம் இழக்கும் முடிவாக இது அமைவதுடன் மீண்டும் ஒரு 9/11 (அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுரம் தகர்ப்பு) சம்பவத்துக்கும் வழிவகுத்து விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். #Trumpwithdraw #UStroops #Afghanistan
    வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்புடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் நிகழ்ந்த சர்ச்சை அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #WhiteHouse #Trump #Reporter
    வாஷிங்டன்:

    அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு ஜனாதிபதி டிரம்ப் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அந்த பேட்டியின்போது சி.என்.என். டெலிவிஷன் நிருபர் அகோஸ்டா மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு அகதிகளாக வருவோர் பற்றி டிரம்ப் கூறிய கருத்துக்கு எதிராக கேள்வி எழுப்பினார். நாடு கடந்து அகதிகள் வருவது படையெடுக்க அல்ல என்று அவர் கூறினார்.

    அதைக் கேட்ட டிரம்ப் ஏளனமாக, “ஓ எனக்கு சொல்கிறீர்களா, நன்றி. பாராட்டுக்கள்” என்றார்.

    “அவர்களை ஏன் அப்படி சொன்னீர்கள்?” என அந்த நிருபர் மீண்டும் கேள்வி கேட்க, “நான் அவர்கள் படையெடுக்க வருவதாகத்தான் கருதுகிறேன். உங்களுக்கும் எனக்கும் மாறுபட்ட கருத்து இருக்கிறது” என டிரம்ப் கூறினார்.

    இப்படி இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் டிரம்ப், “என்னை இந்த நாட்டை வழிநடத்த அனுமதியுங்கள். நீங்கள் சி.என்.என். டி.வி. சேனலை நடத்துங்கள். நீங்கள் அதை நன்றாக செய்தால் ‘ரேட்டிங்’ (பார்வையாளர்கள் எண்ணிக்கை) கூடும்” என கூற, அந்த நிருபர் மேலும் கேள்வி கேட்க முயற்சிக்க, அவரிடம் இருந்து வெள்ளை மாளிகை பணியாளர் ஒருவர் ஒலிபெருக்கியை பறித்து வேறு ஒரு நிருபருக்கு தர முயற்சிக்க அவர் தர மறுக்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அந்த நிருபரை பயங்கரமான ஆள் என டிரம்ப் கூறியது சர்ச்சையை உண்டாக்கியது.

    இந்த சம்பவத்தின் போது பிற நிருபர்கள் சி.என்.என். நிருபருக்கு ஆதரவாக பேசினர். கடைசியில் சி.என்.என். நிருபர் அகோஸ்டாவின் வெள்ளை மாளிகை அனுமதிச்சீட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    முதலாம் உலக போர் நினைவு நாளில் பங்கேற்க ரஷியா செல்லும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அங்கு அதிபர் புதினை சந்திக்க உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. #WorldWarI #DonaldTrump #VladimirPutin
    வாஷிங்டன்:

    1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி முதலாம் உலக போர் நடைபெற்றது. இந்த போரின் நூற்றாண்டு நினைவு தினம் அடுத்த மாதம் ரஷியாவில் அனுசரிக்கப்பட உள்ளது. இதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் அதிபர் டிரம்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் மாஸ்கோ செல்கிறார்.



    இதுதொடர்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பால்டன் கூறுகையில், ரஷியாவில் நடைபெறும் முதலாம் உலக போர் நூற்றாண்டு நினைவு நாள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிபர் டிரம்ப் செல்கிறார். அவர் பாரிசில் நவம்பர் 11-ம் தேதி ரஷிய அதிபர் புதினை சந்திக்கிறார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசவுள்ளார் என தெரிவித்தார். #WorldWarI #DonaldTrump #VladimirPutin
    சவுதி அரேபியாவில் மாயமான பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவுகளை அந்நாடு சந்திக்கும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். #Trump #JamalKhashoggi
    வாஷிங்டன்:

    சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர், மாயமானார்.

    அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வருகிறது. இது ஆதாரமற்றது, தவறானது என அந்த நாடு திட்டவட்டமாக கூறுகிறது.

    பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார்.



    அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயம் ஆனது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல் துணைத்தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இதற்கிடையே, பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்படும் வீடியோ வெளியாகி உள்ளதாக துருக்கி அரசு நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படி இருக்கும் பட்சத்தில் அது மிகவும் துயரமானது. சவுதி அரேபியா அதற்கான கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். #Trump #JamalKhashoggi
    ×