search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோதல்"

    நாமகிரிப்பேட்டை அருகே தனியார் பஸ்-கார் மோதல்; 4 பேர் காயமடைந்தனர்.
    ராசிபுரம்:

    ராசிபுரத்தில் இருந்து ஒரு கார் ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல் ஆத்தூரிலிருந்து ராசிபுரத்தை நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. 

    ஆயில்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது பஸ்சை கார் முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக காரும் பஸ்சும் மோதிக்கொண்டன.

     பஸ் சாலையோரத்தில் உள்ள தண்ணீர் இல்லாத சிறிய கால்வாயில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 4 பேர் காயமடைந்தனர். 

    சம்பவ இடத்திற்கு ஆயில்பட்டி போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு  சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். 
    சீர்காழி அருகே கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதலில் 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் நத்தம் பகுதியில் தனியார்கலை மற்றும் அறிவியல்கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை வகுப்புகள் முடிந்து பேருந்தில் செல்வதற்காக சட்டநாதபுரம் கிராமத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்

    அப்போது மாணவர்க ளுக்கு இடையேமோதல் ஏற்பட்டது.இதனையடுத்து இரு பிரிவு மாணவர்களுக்கு ஆதரவாக வெளிநபர்களும் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பதற்றமான சூழ்நிலை காண ப்பட்டது. ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் அதனை தட்டிக் கேட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து சீர்காழி காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் மாணவர்களுக்கு இடை யேயான மோதலை தடுத்த னர், அப்போது மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் உள்பட 12 பேரை விரட்டிப் பிடித்த சீர்காழி போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

    கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் சட்டநாதபுரம் கைக்காட்டி பகுதியில் பரபரப்பாக சூழ்நிலை நிலவியது.
    ×