search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயம்"

    தாரமங்கலம் அருகே விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பலியானார்.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள சிக்கம்பட்டி பெட்ரோல் பங்க் அருகே கடந்த 26-ந்தேதி இரவு 2 மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதியதில் குறுக்குப்பட்டி பகுதியை சேர்ந்த கொத்தனார் சந்திரசேகரன் (40) என்பவர் பலியானார். 

    இந்த விபத்தில்  மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த பெரியகாடம்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரன்  மகன் சிவா (வயது21) என்பவர் பலத்த காயம் அடைந்தார்.

    உடனே அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம்  குமாரபாளையம் அருகே உள்ள ஆனங்கூர் ரோடு பழைய அஞ்சல் அலுவலகம் அருகே வசிப்பவர் சுரேஷ் (வயது 30). கட்டிட கூலி தொழிலாளி. 

    இவர் தனது மொபட் வாகனத்தில் ஒட்டன்கோவில் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி திடீரென மொபட்  மீது மோதியது. இதில்  சுரேஷ் பலத்த காயமடைந்தார். 

    இதையடுத்து அவர் குமாரபாளையம்  அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரித்ததில் லாரி டிரைவர் திருச்சியை சேர்ந்த (சுரேஷ் 45), என்பது தெரியவந்தது. லாரி டிரைவர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

    ×