search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth injured"

    • மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த தினேஷ்குமார் தூக்கி வீசப்பட்டு அங்கிருந்த 30 அடி பள்ளத்தில் விழுந்தார்.
    • தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் துட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகன் தங்கபாலு (26). இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் தினேஷ்குமார் (20) என்பவருடன் நேற்று மாலை 3 மணிக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்காட்டிற்கு சென்றனர்.

    மோட்டார் சைக்கிளை தங்கபாலு ஓட்டி சென்றார். ஏற்காட்டில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு இரவு 7.30 மணியளவில் சேலம் திரும்பினர்.

    அப்போது கடும் பனி மூட்டத்துடன் கூடிய லேசான மழை பெய்து கொண்டிருந்தது. மழையில் நனைந்தபடியே இருவரும் மலைப்பாதையில் சென்றுள்ளனர். 17-வது மற்றும் 18-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது தங்கபாலுவின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த தினேஷ்குமார் தூக்கி வீசப்பட்டு அங்கிருந்த 30 அடி பள்ளத்தில் விழுந்தார். தங்கபாலு இடது காலில் முறிவு ஏற்பட்டு சாலையில் கிடந்தார்.

    இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர் மற்றும் ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தங்கபாலுவை மீட்டு சிகிச்சை அளித்தனர். மேலும் தீயணைப்பு துறையினர் பள்ளத்தில் விழுந்த தினேஷ்குமாரை தேடினர். இதில் அதிர்ஷ்டவசமாக தினேஷ்குமார் தலை மற்றும் கைகளில் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அவரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் இருவரையும் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சிலிண்டரை சரியாக மூடாமல் வைத்திருந்ததால் கியாஸ் வெளியேறி தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
    • தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கொல்கத்தாவை சேர்ந்தவர் பிஜாய் (வயது 35). இவர் கோவை தியாகி குமரன் வீதி பகுதியில் தங்கி தங்க நகை பட்டறையில் வேலை செய்து வருகிறார்.

    அவர் இன்று காலை வழக்கம்போல வீட்டில் சமைப்பதற்காக கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டிலிருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமானது. அதிர்ஷ்டவசமாக பிஜாய் உயிர் தப்பினர்.

    சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அங்கு காயம் அடைந்து கிடந்த பிஜாயை மீட்டனர். அவரை உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சிலிண்டரை சரியாக மூடாமல் வைத்திருந்ததால் கியாஸ் வெளியேறி தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளப்பெரம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள சக்கரசாமந்தத்தை சேர்ந்த முருகையன் என்பவரின் மகன் செங்குட்டுவன் (வயது 30). விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் சக்கரசாமந்தத்தில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் ரெட்டிப்பாளையம் அருகே உள்ள சப்தகிரி நகர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் செங்குட்டுவன் மீது மோதியது.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த செங்குட்டுவனின் கால் முறிந்து காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து தகவல் அறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வானூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #bombrange

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறைகாசிப் பாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார்(வயது 38). இவர் அதேபகுதியில் செங்கல்சூளை நடத்தி வருகிறார்.

    இவர் தொழில் சம்பந்தமாக பணம் வசூல் செய்ய புதுவை சென்றிருந்தார். பின்னர் நேற்று இரவு உதயகுமார் புதுவையில் இருந்து காசிப்பாளையத்துக்கு ரூ.50 ஆயிரம் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர் நள்ளிரவு 12 மணிக்கு காசிப்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது உதயகுமாரை மர்மகும்பல் திடீரென்று வழிமறித்தனர்.

    அவர்களை பார்த்ததும் உதயகுமார் அதிர்ச்சி அடைந்தார். உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள முந்திரிதோப்புக்குள் ஓடினார். அங்கிருந்து உதயகுமார் தனது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு செல்போன் மூலம் மர்மகும்பல் வழிமறித்த தகவலை தெரிவித்தார்.

    உடனே அவரது உறவினர் மணிபாலன்(28) உள்பட 4 பேர் சம்பவ இடத்துக்கு வந்தனர். மர்மகும்பலை பிடிக்க முயன்றனர். இதைபார்த்த மர்மகும்பல் அவர்கள் மீது சரமாரியாக வெடிகுண்டு வீசினர். இதில் உதயகுமாரின் உறவினர் மணிபாலன்(28) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து உதயகுமார் வானூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வெடிகுண்டு வீசிய மர்மகும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    தொழில் போட்டி காரணமாக வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். #bombrange

    மீன்சுருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள அய்யப்பன் நாயகன் பேட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜேஷ் (வயது 23). இவர் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் அருகே உள்ள பாப்பாக்குடி கிராமத்திற்கு சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். 

    பாப்பாக்குடி மரபட்டறை அருகே வந்த போது, எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜேசை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    இந்த விபத்து குறித்து மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசந்தர் வழக்குபதிவு செய்து வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார். 
    முசிறி அருகே விபத்தில் வாலிபர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முசிறி:

    முசிறி செவந்தலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (35). இவர் திருச்சி-சேலம் சாலையில் செவந்தலிங்க புரம் காலனி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முசிறி வேதாத்திரி நகரை சேர்ந்த பத்தையக்கான் (20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர் பாராதவிதமாக பிரபு மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    இது குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆரணி அருகே மணல் திருட்டை தடுக்க கோரி டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

    ஆரணி:

    ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தையொட்டி உள்ள செய்யாற்றில் லாரி, டிராக்டர் மற்றும் மாட்டுவண்டுகளில் மணல் கொள்ளை சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் தச்சூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 21). இவர் இன்று காலை தச்சூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது மணல் கடத்தி கொண்டு வேகமாக வந்த டிராக்டர் ஏழுமலை மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டிராக்டரை சிறைபிடித்து ஆரணி தேவிகாபுரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. செந்தில், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் தச்சூர் பாலாற்றில் தொடர் மணல் கொள்ளை சம்பவம் அதிகம் நடப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே மணல் திருட்டை தடுத்து விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய வாலிபருக்கு கால் துண்டாது. ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சேலம்:

    சேலம் கருங்கல்படி தெற்கு முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 40). இவர் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்றிரவு ஊருக்கு புறப்பட்டார்.

    இந்த ரெயில் இன்று காலை 5.30 மணியளவில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்தது. ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்த போது தேவேந்திரன் ரெயிலில் இருந்து இறங்கினார்.

    அப்போது நிலை தடுமாறிய அவர் ரெயிலுக்கும் பிளாட்பாரமுக்கும் இடையில் விழுந்தார். இதில் அவரது கால் துண்டானது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை மீட்ட ரெயில்வே போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரை அருகே இன்று அதிகாலை வாகனம் மோதியதில் 40 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. மேலும் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
    அவனியாபுரம்:

    மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம் மாரணி பகுதியைச் சேர்ந்தவர் கூத்தபெருமாள் (வயது 40). இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார்.

    இன்று அதிகாலை அவனியாபுரம் அருகே உள்ள வலையங்குளத்தில் ஆட்டுக்கிடை அமைப்பதற்காக தனது ஆடுகளை ஓட்டிச்சென்றார். பெருங்குடி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராத விதமாக ஆடுகளின் மீது மோதியது.

    இதில் 40 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தன. இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.

    மேலும் மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற கூத்த பெருமாள் மீதும் அந்த வாகனம் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
    வீராம்பட்டினம் கோவில் விழாவில் வண்டியை பார்க்கிங் செய்ததில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் ஒதியம்பட்டு அன்புநகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது30). இவர் நேற்று முன்தினம் வீராம்பட்டினம் கோவில் திருவிழாவுக்கு சென்றார். அங்குள்ள சுனாமி நகரில் பிரபாகரன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார். அப்போது 2 பேர் வந்த மோட்டார் சைக்கிள் மீது பிரபாகரன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் உரசியது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரும் பிரபாகரனிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். மேலும் பீர்பாட்டிலால் குத்தினார். இதில் காயம் அடைந்த பிரபாகரன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரபாகரனை தாக்கியவர்கள் வீராம்பட்டினத்தை சேர்ந்த பிரேம் மற்றும் மதுரையை சேர்ந்த ராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    வெங்கல் அருகே குடிபோதையில் மோதலில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #youthinjured

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் கிராமத்தில் சீத்தஞ்சேரி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே நேற்று வெங்கல் அம்பேத்கார் தெருவைச் சேர்ந்த தமிழ்செல்வன், நண்பர் நரசிம்மன் ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர்.

    இவர்கள் அருகில் வெங்கல் கிராமத்தைச் சேர்ந்த சார்லஸ், தினேஷ் மது அருந்தினர்.அப்போது இரு தரப்புக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு தாக்கி கொண்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த தமிழ்செல்வன், நரசிம்மன் ஆகியோரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனு மதித்தனர். இதுகுறித்து வெங்கல் போலீசில் தமிழ் செல்வன் மனைவி கற்பகம் புகார் செய்தார். போலீசார் வழக் குப்பதிவு செய்து சார்லசை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தினேசை தேடி வருகிறார்கள்.

    மர்ம நபர்கள் கொல்வதுபோல கனவு கண்டு அய்யோ என்று கூறி கொண்டே அரசு ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #youthinjured

    சேலம்:

    விழுப்புரம் மாவட்டம் சின்னச்சேலம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் மன்சூர்(வயது 23). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவர் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது கம்புகள் நட்டு அதில் ஏறி நின்று கட்டுமான பணி செய்து கொண்டிருந்தபோது, கம்புகள் சரிந்து கீழே விழுந்தார். இதில் மன்சூருக்கு இடது கை முறிந்தது.

    இதையடுத்து கடந்த 19-ந்தேதி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மன்சூர் சேர்ந்தார். இங்கு அவர் 2-வது தளத்தில் உள்ள உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    வழக்கம்போல் நேற்று இரவு டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1.30 மணிக்கு மர்ம நபர்கள் தன்னை அடிப்பது போல், வெட்டுவது போல் கனவு கண்டு அய்யோ, அம்மா என மன்சூர் அலறினார்.

    சத்தத்தை கேட்டு பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் கண் விழித்து பார்த்தனர். ஆனால் மன்சூர் தூக்கத்தில் கனவு கண்டபடி தொடர்ந்து யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஓரு கட்டத்தில் என்னை கொல்லுறாங்க.. கொல்லுறாங்க என கூறிக் கொண்டு 2-வது தளத்தில் இருந்து கீழே குதித்தார்.

    இதில் அவர் அதிர்ஷ்டவசமாக முதல் தளத்தில் உள்ள சிலாப்பில் விழுந்து தங்கியதால் உயிர் தப்பினார். இதில் அவருக்கு இடுப்பு எழும்பு, முதுகு தண்டு, தண்டுவடம் உள்ளிட்ட இடங்களில் பலத்த அடிப்பட்டது. இதை பார்த்து மற்ற நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் டாக்டர்கள் வந்து படுகாயம் அடைந்த மன்சூரை மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    ×