search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "van accident"

    • விபத்தில் ஓட்டுநர் சசிகுமார், தனியார் பாதுகாவலர் பால்ராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோவை மாவட்டத்தில் இருந்து சேலம் நோக்கி இரவு செக்யூல் லாஜிஸ்டிக் என்ற பெயரில் தங்க நகைகளை கொண்டு செல்லும் தனியார் வேன் சென்று கொண்டிருந்தது.

    வேனை சசிகுமார் என்பவர் ஓட்டி வந்தார். தனியார் பாதுகாவலர் பால்ராஜ் என்பவர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் உடன் வந்து கொண்டிருந்தார். வேனில் பல்வேறு தங்க நகைக் கடைகளில் பெறப்பட்ட 800 கிலோ தங்க நகைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.666 கோடியாகும்.

    இந்த வேன் நள்ளிரவில் ஈரோடு மாவட்டம் சித்தோடு சமத்துவபுரம் பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    அப்போது ஒரு வளைவில் வேன் திரும்பிய போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தங்க நகைகளை கொண்டு வந்த வேன் திடீரென சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் சசிகுமார், தனியார் பாதுகாவலர் பால்ராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து உடனடியாக சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தங்க நகைகளுடன் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த வேனை பத்திரமாக மீட்டு சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதேப்போல் விபத்தில் காயம் அடைந்த சசிகுமார், பால்ராஜ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மற்றொரு வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 800 கிலோ தங்க நகைகள் பத்திரமாக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விரைந்து வந்த மதுரவாயல் போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் மினி வேனை அப்புறப்படுத்தினர்.
    • விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    பூந்தமல்லியில் இருந்து பூக்கள் ஏற்றிய மினி வேன் ஒன்று கோயம்பேடு மார்க்கெட் நோக்கி இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.

    காலை 6 மணி அளவில் மதுரவாயல் பைபாஸ் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வந்தபோது போகிப்பண்டிகையை முன்னிட்டு எரிக்கப்பட்ட பழைய பொருட்களால் கடும் புகை மூட்டம் மற்றும் பனி மூட்டத்தின் காரணமாக சாலையே தெரியாத அளவுக்கு காணப்பட்டது.

    இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடி சாலையில் கிடந்த பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. இதில் மினி வேனில் இருந்த பூக்கள் அனைத்தும் சாலையில் கொட்டி சிதறியது.

    இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விரைந்து வந்த மதுரவாயல் போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் மினி வேனை அப்புறப்படுத்தினர். இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.

    இந்த விபத்தில் வேன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அருகில் சென்ற மற்ற வாகனங்கள் மீது வேன் மோதாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேவூரை அடுத்த தண்டுக்காரம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
    • பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.இது குறித்து சேவூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

    அவிநாசி:

    அவிநாசியை அடுத்த சேவூா் பகுதியில் வசித்து வருபவா் விருதுநகரை சோ்ந்த ஞானராஜ் (வயது 55), பாத்திர வியாபாரி. இவா், சேவூரை அடுத்த தண்டுக்காரம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.அப்போது, அவ்வழியாக வந்த வேன் ஞானராஜின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.இது குறித்து சேவூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

    • போலீசார் விசாரணை
    • மின்ஒயர்களும் அறுந்து சேதமானது

    வந்தவாசி:

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் வெங் கடேசன் (வயது 30), வேன் டிரைவர்.

    இவர் நேற்று அதி காலை வேனில் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திண்டிவனத்திலிருந்து காஞ்சீபுரத்துக்கு வந்து கொண்டிருந்தார்.

    வந்தவாசி-திண்டிவனம் நெடுஞ்சாலையில், இளங்காடு கூட்டுச் சாலை அருகே வந்தபோது சாலையோரம் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் டிரெயிலர் மீது வேன் மோதியது.

    அதன்பிறகும் நிற்காத வேன் சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீதும் மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து சேதமாகி கம்பிகளும் அறுந்து விழுந்தது.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த டிரைவர் வெங்கடேசன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    மின்கம்பம் சேதமடைந்து மின்ஒயர்களும் அறுந்ததால் இது குறித்து பொன்னூர் போலீஸ் நிலையத்தில் உதவி மின் பொறியாளர் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் உமேஸ்வரன் (வயது 30). இவர் நண்பர்களுடன் காரில் நேற்று வாணியம்பாடியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் (24). இவர் கூரியர் வேனை ஓட்டிக்கொண்டு வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் அருகே வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது முன்னாள் உமேஸ்வரன் ஓட்டி சென்ற கார் மீது சஞ்சய் ஓட்டி வந்த வேன் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் கார் சாலை தடுப்பில் மோதி நின்றது. வேன் கவிழ்ந்தது.

    இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் சாலையில் இருந்த வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

    இந்த விபத்தில் காரும், கூரியர் வேனும் முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிர்ஷ்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கொணவட்டத்தை சேர்ந்தவர் சாமியுல்லா.

    இவர் தனது மனைவி மாமனார் மாமியார் குழந்தைகளுடன் ேவனில் சென்னைக்கு சுற்றுலா சென்று இருந்தார். சுற்றுலா முடிந்து இன்று காலை வேனில் வேலூர் நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

    வேன் சத்துவாச்சாரியில் வந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்தது. நாய் மீது வேன் மோதாமல் இருக்க டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.

    இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய வேன் சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் கவிழ்ந்த வேனை அப்புறபடுத்தினர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 20 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டோர் 5 சொகுசு வேன்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு இன்று காலை கோவை ஈஷா யோகா மையத்துக்கு புறப்பட்டனர்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலைக்கடை பகுதியில் செல்லும் போது ஒரு வேனின் டிரைவர் சீர்காழியை சேர்ந்த விஜய் (வயது 38) என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரமுள்ள வயலுக்குள் புகுந்து கவிழ்ந்தது.

    இதில் வேனில் பயணித்த சரோஜா, பத்மா, அரிய முத்து, மது, சுமதி, சரோஜினி உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தை பார்த்த விவசாயி ஒருவர் உடனடியாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 20 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்ப் மோட்டார் பழுதானதால் விபரீதம்
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்

    செய்யாறு:

    திருவள்ளுவர் மாவட்டத்தில் இருந்து சிலர் வேனில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நடக்கும் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வந்தனர்.

    பஸ் நிலையம் பின்புறம் பங்களா தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் இறக்கினர். அப்போது வேனை சாலையோரம் நிறுத்திவிட்டு டிரைவர் ஓய்வு எடுத்து கொண்டி ருந்தார். திடீரென செல்ப் மோட்டார் எரிந்து கியரில் இருந்து வேன் தானாக ஓடியது. உடனே சுதா ரித்து கொண்ட டிரைவர் வேனில் இருந்து கீழே இறங்க முயன்றார்.

    அதற்குள் அருகே இருந்த சாலையோர தடுப்பு மீது வேன் மோதி நின்றது. பின்னர், வேன் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    இதற்கிடையில், வேன் தானாக ஓடியதால் அங்கி ருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின் னர், மண்ணை வாரிதூவி என்ஜினில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

    மேலும், செய்யாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், சம்பவ இடத்திற்கு வருவ தற்குள் அங்கிருந்த மக்கள் நீரை ஊற்றி வேன் என்ஜினில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

    தொடர்ந்து, வேனில் பழுது ஏற்பட்ட செல்ப் மோட்டார் மாற்றப்பட்டு தயார் நிலைக்கு வந்தது. மேலும், வேனில் யாரும் இல்லாதபோது இந்த விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்பட வில்லை. இச்சம்பவம் அப்ப குதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த பழைய அக்ராவரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 55) தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் ராஜேந்திரன் நேற்று மதியம் வீட்டிற்கு செல்வதற்காக அக்ராவரம் -பெல் சாலையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் ராஜேந்திரன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 பேர் படுகாயம்
    • போக்குவரத்து பதிப்பு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி மலைக்கு வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுமார் 20 பேர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ஏலகிரி மலைக்கு மினி வேனில் சுற்றுலா வந்தனர்.

    வேனை ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திப்குமார் (வயது 34) ஓட்டினார். ஏலகிரி மலையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள், நேற்று மாலை 7 மணியளவில் மலையில் இருந்து கீழே இறங்கினர். 4-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, வேன் கட்டுப்பாட்டை இழந்து பாறையின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் வாலாஜா குடிமல்லூர் பகுதியை சேர்ந்த சாம்பசிவம் மனைவி சாந்தி (65), காட்பாடி தொப்பலாம் மோட்டூரை சேர்ந்த ராம்குமார் (27), எம்பெருமாள் (41) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். 17 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.

    தகவலறிந்த ஏலகிரி மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டம் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாலையின் நடுவில் மினி வேன் கவிழ்ந்ததால் போக்குவரத்து தடைபட்டது. பொக்லைன் எந்திரம் மூலம் வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

    • ராமநாதபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலியானார்.
    • விபத்து குறித்து சிக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் விஜயகுமார் (வயது 20). நேற்று இரவு இவரும், அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சூர்யாவும் சிக்கல் அருகே உள்ள சிறைக்குளம் கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் ெசன்றனர்.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிக்கல் டாஸ்மாக் கடை அருகே சென்று கொண்டிருந்தபோது கேரளாவில் இருந்து ராமேசு வரத்தில் மீன்லோடு ஏற்றி வந்த வேன் எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.இதில் விஜய குமார், சூர்யா ஆகிய 2 பேர் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த விஜய குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய சூர்யாவை அங்கிருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த சிக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துஉடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பைக் மீது வேன் மோதி விபத்து
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 70), ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இவர், நேற்று காலை பைக்கில் ஆற்காடு வந்தார்.

    பின்னர் மீண்டும் விளாப்பாக்கம் நோக்கி செல்லும் போது தாஜ்புரா கூட்ரோடு அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றார்.

    அப்போது 'ஷூ' கம்பெனிக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நடராஜ் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச் சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×