search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யப்ப பக்தர்கள் உள்பட 15 பேர் படுகாயம்
    X

    அய்யப்ப பக்தர்கள் உள்பட 15 பேர் படுகாயம்

    • விபத்துக்குள்ளான வேன் மீது மற்றொரு வேன் மோதியது
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    ராணிப்பேட்டை சிப்காட்டில் இருந்து தனியார் கம்பெனி ஊழியர்கள் ஆரணிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வீ.சி. மோட்டூர் எம்.பி.டி.சாலையில் வேன் சென்ற போது நடுவே அமைக்கப் பட்டு இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

    அப்போது திருத்தணியிலிருந்து சபரிமலை நோக்கி வந்த அய்யப்ப பக்தர்கள் வந்த வேன், விபத்துக்குள்ளான வேன் மீது மோதியது.

    இந்த விபத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர் களை ஏற்றி வந்த வேன் தலை குப்புறக்கவிழ்ந்தது. அதில் இருந்த 13 பேரில் 9 பேர் காயம் அடைந்தனர்.

    அதேபோல் அய்யப்ப பக்தர்கள் வந்த வேனில் இருந்த 21 பேரில் ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும் 5 பேர் லேசான காயம் அடைந்தனர்.

    2 வேன்களிலும் காயம் அடைந்த 15 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.

    அதில் படுகாயம் அடைந்த அய்யப்ப பக்தர் ஒருவர் மட்டும் வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வாலாஜா போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    Next Story
    ×