என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் சாவு
- ராமநாதபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலியானார்.
- விபத்து குறித்து சிக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் விஜயகுமார் (வயது 20). நேற்று இரவு இவரும், அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சூர்யாவும் சிக்கல் அருகே உள்ள சிறைக்குளம் கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் ெசன்றனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிக்கல் டாஸ்மாக் கடை அருகே சென்று கொண்டிருந்தபோது கேரளாவில் இருந்து ராமேசு வரத்தில் மீன்லோடு ஏற்றி வந்த வேன் எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.இதில் விஜய குமார், சூர்யா ஆகிய 2 பேர் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த விஜய குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய சூர்யாவை அங்கிருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சிக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துஉடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்