search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துணவு அமைப்பாளர் சாவு
    X

    சத்துணவு அமைப்பாளர் சாவு

    • பைக் மீது வேன் மோதி விபத்து
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 70), ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இவர், நேற்று காலை பைக்கில் ஆற்காடு வந்தார்.

    பின்னர் மீண்டும் விளாப்பாக்கம் நோக்கி செல்லும் போது தாஜ்புரா கூட்ரோடு அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றார்.

    அப்போது 'ஷூ' கம்பெனிக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நடராஜ் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச் சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×