search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road Accident"

    • 2022 ஆம் ஆண்டில் சுமார் 1.68 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.
    • 2021 உடன் ஒப்பிடும்போது, ​​2022-ல் சாலை விபத்துகள் 12% அதிகரித்து, இறப்புகளில் 9% அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது.

    2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 462 பேர் சாலை விபத்துகளில் இறந்ததாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்த அறிக்கையில், நாடு முழுவதும் தினமும் குறைந்தது 1,264 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    "இந்தியாவில் சாலை விபத்துகள்" குறித்த ஆண்டு அறிக்கை, அதிர்ச்சியூட்டும் இறப்பு எண்ணிக்கையை குறிப்பிட்டுள்ளது. இறப்பவர்களில் பெரும்பாலோர் 25- 35 வயதுக்குட்பட்டவர்கள்.

    2022 ஆம் ஆண்டில் சுமார் 1.68 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்ததாக கூறப்பட்டுள்ளது. அவர்களில் குறைந்தது 42,671 பேர் 25-35 வயதுடையவர்கள்.

    அதன்படி, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 64,105 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் உத்தரபிரதேசத்தில் 22,595 இறப்புகளுடன் அதிக எண்ணிக்கை பதிவாகியுள்ளன.

    அதிக சாலை விபத்து எண்ணிக்கையைக் கொண்ட பிற மாநிலங்களில் மத்தியப் பிரதேசம் (54,432), கேரளா (43,910), மற்றும் உத்தரப் பிரதேசம் (41,746) ஆகியவை அடங்கும்.

    உ.பி.க்குப் பிறகு, சாலை விபத்துகளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் தமிழ்நாட்டில் 17,884, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா 15,224 வழக்குகளுடன், மத்தியப் பிரதேசத்தில் 13,427 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

    2021 உடன் ஒப்பிடும்போது, 2022-ல் சாலை விபத்துகள் 12% அதிகரித்து, இறப்புகளில் 9% அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. 2022ம் ஆண்டில் மொத்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 4.61 லட்சமாக உயர்ந்துள்ளது, இது 2021 ஆம் ஆண்டில் 4.12 லட்சமாக இருந்தது.

    அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளால் ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 18 வயதுக்குட்பட்டவர்களில் 9,528 ஆகவும், 2021 ஆம் ஆண்டில் 7,764 ஆகவும் இருந்தது.

    60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில், 2022-ல் மொத்த இறப்புகள் 13,636 ஆகவும், 11,739 இறப்புகளிலிருந்து அதிகமாகவும் உள்ளன.

    இந்தியாவில் 2018 ஆம் ஆண்டில் மொத்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 470,403 ஆக உயர்ந்துள்ளது. இது 2019-ல் 4,56,959 ஆகக் குறைந்து, பின்னர் 2020-ல் 3,72,181 ஆகக் குறைந்தது. இது 2021-ல் 4,12,432 ஆகவும், பின்னர் 2022-ல் 4,61,312 ஆகவும் உயர்ந்தது.

    2022-ல் 3 விபத்துகளுடன் லட்சத்தீவு மிகக் குறைந்த சாலை விபத்துகளைப் பதிவு செய்தது. 2022-ல் இரண்டு இறப்புகளுடன் மிகக் குறைந்த இறப்புகளையும் பதிவு செய்தது.

    2023-ல் வெளியிடப்பட்ட சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிக்கையில், "வேகம், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்துச் சட்டங்களை மீறுதல்" போன்ற அடிப்படைக் காரணங்களை நிவர்த்தி செய்வதற்கு ஒரு முழுமையான அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்தியது.

    • பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு 48 பக்தர்களுடன் சொகுசு பேருந்து ஒன்று ஆன்மீக சுற்றுலாவுக்கு புறப்பட்டுள்ளது.
    • கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை உடைத்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    குஜராத்தில் சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.

    பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு 48 பக்தர்களுடன் சொகுசு பேருந்து ஒன்று ஆன்மீக சுற்றுலாவுக்கு புறப்பட்டுள்ளது.

    இன்று காலை 4.15 மணியளவில் டாங் மாவட்டத்தில் சபுதாரா மலைப் பிரதேச சாலையில் பேருந்து வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை உடைத்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 17 பேர் தீவிர காயங்களுடன் அஹ்வா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் லேசான காயங்களுடன் தப்பினர். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    • 20 பேர் ஜலாலாபாத் நகரில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கசென்டுற்கொண்டிருந்தனர்.
    • ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியுள்ளார்.

    பஞ்சாபில் இன்று காலை லாரியும் வேனும் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

    பஞ்சாபில் பெரோஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 20 பேர் ஜலாலாபாத் நகரில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை வேனில் சென்றுகொண்டிருந்தனர்.

    பெரோஷ்பூர் -பாசில்கா நெடுஞ்சாலையில் கொல்காமவுர் கிராம் அருகே காலை 7.45 மணியளவில் வாகனம் வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியுள்ளார். இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 

    • சவுதி அரேபியாவின் மேற்குப் பகுதியான ஜிசான் அருகே விபத்து நடந்துள்ளது.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்துடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருவதாக தகவல்

    சவுதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஜிசான் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 9 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், முழு ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

    "சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். விபத்து தொடர்பாக தகவல் அறிய ஒரு பிரத்யேக உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது" ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் "விபத்து மற்றும் உயிர் இழப்பு குறித்து அறிந்து துயரமடைந்தேன். ஜெட்டாவில் உள்ள தூதர அதிகாரியிடம் பேசினேன். அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் தொடர்பில் உள்ளார். இந்த துயரமான சூழ்நிலையில் முழு ஆதரவையும் வழங்கி வருகிறார் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்" என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    • ரயில்வே தண்டவாளங்கள் அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகளை லாரி ஏற்றிச் சென்றது.
    • நான்கு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    தெலுங்கானாவில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம், மாமுனூர் பிரதான சாலையில் இன்று காலை 11 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

    ரயில்வே தண்டவாளங்கள் அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, பாரத் பெட்ரோல் பம்ப் அருகே சாலையில் வந்துகொண்டிருந்த 2 ஆட்டோக்களை முந்திச் செல்ல முயன்றது.

    லாரி முந்திச் சென்றபோது கட்டுக்குப்பட்டை இழந்து கவிழ்ந்ததில், அதில் இருந்த இரும்புக் கம்பிகள் ஆட்டோ மீது  விழுந்துள்ளது. இதில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

    மேலும் 6 படுகாயமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். லாரி ஓட்டுநர் குடிபோதையிலிருந்தது தெரியவந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். 

    • சாலை விபத்தில் யூடியூபர் ராகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • ராகுல் ஏற்கனவே திருமணமானவர் என்ற விவரம் எனக்கு பின்னர் தான் தெரிந்தது என்று மனைவி தகவல்.

    ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த பிரபாகரன் - சாகிதா தம்பதிகளின் ஒரே மகன் ராகுல் (27).

    என்ஜினீயரிங் பயின்ற ராகுல் டிக் டாக் மூலம் பிரபலமானவர். கடந்த சில வருடங்களாக இன்ஸ்டா கிராமில் பல்வேறு வாழ்க்கை சம்பவங்களையும், சினிமா பாடல்கள், வசனங்களை நகைச்சுவை உணர்வு களோடு பதிவு செய்து ஏராளமான ரசிகர்களின் ஆதரவை பெற்று இருந்தார்.

    இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, நேரு நகரைச் சேர்ந்த தேவிகா ஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்று இருந்த தன் மனைவியை பார்க்க கவுந்தப்பாடிக்கு கடந்த 16-ந் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் ராகுல் சென்றார்.

    அப்போது சாலையின் வளைவில் திரும்ப முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பின் மீது மோதியது.

    இதில் தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராகுல் மரணம் அவரை பின் தொடர்ந்த ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    இதற்கிடையே ராகுலின் மனைவி தேவிகாஸ்ரீ தனது மாமியார் குடும்பத்தினர் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய தேவிகாஸ்ரீ, "ராகுல் இன்ஸ்டாகிராம் மூலமாக தான் எனக்கு பழக்கமானார். எங்களுக்கு கவுந்தப்பாடி புது மாரியம்மன் கோவில் திருமணம் நடந்தது.

    அதற்கு பின்னர் தான் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்ற விவரம் எனக்கு தெரிந்தது. கோவை சேர்ந்த பெண்ணுடன் பெண்ணுடன் ராகுல் 6 மாதம் வாழ்ந்துள்ளார். அதன் பின்னர் எனது மாமியாரின் தொந்தரவால் அந்த பெண் பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு அந்தப் பெண்ணுக்கும் என் கணவருக்கும் விவாகரத்து ஆனது.

    இருந்தாலும் இதனை நான் ஏற்றுக்கொண்டு அவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன். நாங்கள் ஓர் ஆண்டாக மாமியார் வீட்டில் தான் வசித்து வந்தோம். அதன் பின்னர் தான் ஈரோடு வளையகார வீதியில் தனிக்குடித்தனம் வந்தோம். இந்நிலையில்தான் ராகுலுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    எனது மாமியார் ராகுல் மது குடிப்பதை ஊக்குவித்தார். இது தொடர்பாக என் மாமியாரிடம் நான் கேட்டபோது எனக்கும் அவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. ராகுலும் என்னை அடித்து துன்புறுத்தினார். ஆனால் இதையும் தாண்டி அவருடன் நான் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன்.

    ராகுலுக்கு சினிமா மற்றும் பைக் மீது அதிக இஷ்டம். அவரிடம் அதிகமாக குடிக்க வேண்டாம் என்று வலியுறுத்தி வந்தேன். ஆனால் அவர் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த 16-ந் தேதி இரவு என்னை பார்ப்பதற்காக ராகுல் தனது மோட்டார் சைக்கிளில் கவுந்தப்பாடி நோக்கி வந்த போது தான் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    அதன்பின் எனது மாமியார் வீட்டினர் என்னை முழுவதுமாக ஒதுக்கி வைத்தனர். ராகுலின் இறுதி காரியத்துக்கு கூட என்னை அனுமதிக்கவில்லை. கணவரை இழந்த வேதனையில் உள்ளேன்.

    என் மாமியார் வீட்டினர் ராகுலின் ஆதார் மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை கேட்டு எனக்கு போன் செய்தனர். ராகுலுடன் நான் வாழ்ந்ததை மறைக்க நினைக்கின்றனர். ஆனால் அந்த பொருட்களை அவர்களுக்கு தரமாட்டேன். அவருடன் நான் வாழ்ந்ததற்கு அது தான் ஆதாரம்" என்று தெரிவித்தார்.

    மருமகள் குற்றச்சாட்டை தொடர்ந்து ஈரோட்டில் வசிக்கும் ராகுலின் தாய் சாகிதா கூறியதாவது:-

    நேரம் சரியில்லை என்று கூறி எனது மகனும், மருமகளும் தனி குடித்தனம் சென்றனர். என் மகளைப் போலத்தான் எனது மருமகளை நாங்கள் பார்த்துக்கொண்டோம். எனது மகன் ராகுலுக்கு மது குடிக்கும் பழக்கம் கிடை யாது. என் மகன் நினைவாக உள்ள பொருட்களை கேட்டோம்.

    மருமகளை அழைத்து வர சென்ற போதுதான் விபத்தில் ராகுல் சிக்கி உயிரிழந்தார். நான் ராகுலுக்கு மது வாங்கி கொடுக்கவில்லை. என் மகன் நல்லவன். என் மருமகளை நான் எந்த ஒரு தொந்தரவும் செய்யவில்லை" என்று தெரிவித்தார்.

    • இவருக்கு பிப்ரவரி 14ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
    • மதியம் சென்ற அனில் மாலையாகியும் திரும்பி வரவில்லை

    டெல்லியில் தனது திருமணத்துக்காக பத்திரிகை கொடுக்க சென்ற நபர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லி- மீரட் விரைவு சாலையில் காசிபூர் அருகே நேற்று இரவு கார் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.

    இறந்த இளைஞர் கிரேட்டர் நொய்டாவின் நவாடாவில் வசிக்கும் அனில். இவருக்கு பிப்ரவரி 14ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

    மதியம் சென்ற அனில் மாலையாகியும் திரும்பி வராததால் குடும்பத்தினர் கவலையடைந்ததாக அனிலின் மூத்த சகோதரர் சுமித் தெரிவித்தார். நாங்கள் அவரை அழைக்க முயற்சித்தோம், ஆனால் அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது.

    இரவு 11-11:30 மணியளவில், விபத்து குறித்து போலீசார் எங்களுக்குத் தெரிவித்தனர், மேலும் அனில் மருத்துவமனையில் இருப்பதாகக் கூறினர் என்று சகோதரர் சுமித் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனில் தீக்காயங்கள் காரணமாக உயிரிழநதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

    தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • ஈரோட்டில் இருந்து கவுந்தப்பாடியில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றபோது விபத்து.
    • கட்டுப்பாட்டை இழந்த பைக், பாலத்தின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

    ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ராகுல். 27 வயதாகும் ராகுல் இன்ஸ்டா பிரபலம். ராகுலுக்கு சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

    நகைச்சுவையாகவும், வேடங்கள் போட்டு வெளியிடும் வீடியோக்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார்.

    கலகலப்பான அவரது பேச்சு பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. அதற்காகவே அதிக நேரம் செலவிட்டு ரீல்ஸ்களை பதிவிட்டு வந்தார்.

    மேலும், ராகுல் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி நேரு நகர் சேர்ந்த வேலுமணி என்பவரது மகளை திருமணம் செய்தார்.

    இந்நிலையில், ராகுல் நேற்று இரவு அவரது பல்சர் RS200 பைக்கில் ஈரோட்டில் இருந்து கவுந்தப்பாடியில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

    அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், பாலத்தின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் ராகுல் தூக்கி வீசப்பட்டு பைக் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. இதில், ராகுல் தலையில் பலத்த காயமந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    • ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை அளிக்கப்படும்.
    • 2024 ஆம் ஆண்டு சாலை விபத்துக்களில் 1.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

    சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்யும் திட்டம் நாடு முழுவதும் இந்தாண்டு மார்ச் மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்,

    சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டம் சண்டிகரில் கடந்த ஆண்டு மாா்ச்சில் தொடங்கப்பட்டது. பின்னா், அத்திட்டம் 6 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

    விபத்து நடந்த 24 மணி நேரத்திற்குள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் இந்த வசதி அமலுக்கு வரும்.

    இந்த திட்டத்தின் கீழ் விபத்துக்குப் பிறகு முதல் ஏழு நாட்களுக்கு ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை அளிக்கப்படும்.

    2024 ஆம் ஆண்டு சாலை விபத்துக்களில் 1.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 30,000 பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்துள்ளனர்.சாலை விபத்தில் மரணித்தவர்களில் 66% பேர் 18-34 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போக்குவரத்து போலீசார் விபத்து இல்லா புதுச்சேரியை உருவாக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
    • புதுச்சேரி முழுவதும் 148 விபத்து பகுதி என அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.

    புதுச்சேரி:

    சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரியில் மாநில மக்கள் தொகையை விட வாகனங்கள் எண்ணிக்கை அதிகம்.

    குண்டும் குழியுமான குறுகிய சாலைகள், சென்டர் மீடியன் இடைவெளி, தாறுமாறான பார்க்கிங், அதிவேக பயணம் உள்ளிட்ட பல காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

    புதுச்சேரியில் நடக்கும் ஒட்டு மொத்த விபத்து உயிரிழப்புகளில் 70 சதவீதம் பைக் விபத்துகளில் ஏற்பட்டவை. ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக சென்றதால் தலையில் அடிப்பட்டு உயிரிழக்கின்றனர். ஹெல்மெட் அணிவது, அதிவேக பயணத்தை குறைத்தால் 50 சதவீத விபத்து உயிரிழப்புகளை தடுக்க முடியும்.

    போக்குவரத்து போலீசார் விபத்து இல்லா புதுச்சேரியை உருவாக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். நகர பகுதியில் குறைவான வேகத்தில் செல்வதால் ஹெல்மெட் அவசியமா என கேள்வி எழுப்புகின்றனர்.

    புதுச்சேரி முழுவதும் 148 விபத்து பகுதி என அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர, ஒவ்வொரு நாளும் புது புது இடங்கள் விபத்து பகுதியாக அறியப்பட்டு வருகிறது. அந்த இடங்களில் பொதுப்பணித்துறை, நகராட்சி, போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து விபத்துகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் விபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு மட்டும் புதுச்சேரியில் நடந்த சாலை விபத்துக்களில் 232 பேர் உயிரிழந்தனர்.

    கடந்த 2024-ம் ஆண்டில் 212 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதபோல் கடந்த 2023-ம் ஆண்டு 1,299 சாலை விபத்துகளும், கடந்த 2024-ம் ஆண்டு 1,329 சாலை விபத்துகளும் பதிவாகி உள்ளன.

    நாடு முழுதும் சராசரியாக ஒரு லட்சம் மக்கள் தொகை அடிப்படையில் சாலை விபத்தில் 11 பேர் உயிரிழப்பு ஏற்படுவதாக தேசிய அளவில் பதிவாகி உள்ளது. ஆனால் புதுச்சேரியில் 1 லட்சம் மக்கள் தொகைக்கு சாலை விபத்தில் உயிரிழப்பு 15 ஆக அதிகரித்துள்ளது.

    • 31 வினாடிகளே ஓடும் வீடியோவில், லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.
    • கடைசியில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    இன்றைய நவ நாகரீகம் எவ்வளவு தான் வளர்ந்தாலும் மனிதர்களிடையே முந்தைய காலக்கட்டத்தில் காணப்பட்ட பாசம், பண்பு, சகிப்புத்தன்மை, மனிதநேயம் என்பது இக்கால மக்களிடையே குறைவாகவே உள்ளது. பணத்திற்கான ஓட்டம் தான் மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. மேலும் பணத்திற்காக கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற சம்பவங்களும் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.

    இதனிடையே, இணையத்தின் தாக்கம் காரணமாக உலகின் எந்த மூலையிலும் சம்பவங்கள் எது நடந்தாலும் உடனடியாக சமூக வலைதளங்களில் பரவி விடுகிறது. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவை பார்க்கும் ச்சே.. என்ன மனிதர்களோ... என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

    31 வினாடிகளே ஓடும் வீடியோவில், லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து டிரைவர் முகத்தில் ரத்தத்தோடு காணப்படுகிறார். அப்போது அவர் உதவிக் கேட்பது போல் தெரிகிறது. ஆனால் அங்கு இருப்பவர்களோ அவர் சொல்வதை கேட்காமல், அவரின் பர்ஸ் மற்றும் செல்போனை கொள்ளையடிக்கிறார்கள். கடைசியில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் கர்நாடகாவில் நடந்ததாக கூறப்படுகிறது.

    சாலையில் மனித நேயம் இறந்து விட்டது... என்ற தலைப்பில் சினேகா மொர்தானி என்பவர் வெளியிட்ட வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும், மிகவும் வருத்தமாகவும், அருவருப்பாகவும் உள்ளது என்று தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


    • பள்ளி வேனில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர்.
    • 15 மாணவ, மாணவிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கேரள மாநிலம், கண்ணூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வேனில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர்.

    இந்நிலையில், வளகை என்ற இடத்தில் இறக்கத்தில் வந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர தடுப்பில் மோதி உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், 15 மாணவ, மாணவிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கண்பவர்களை பதைபதைக்க வைக்கும் இந்த விபத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×