search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "baby girl"

    • பெண் சிசுவை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • குப்பை மேட்டில் இறந்த நிலையில் பெண் கிசு வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    எருமப்பட்டி:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி கருப்பணசாமி கோவில் அருகே உள்ள குப்பை மேட்டில் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் சிசு இறந்த நிலையில் கிடப்பதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எருமப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து எருமப்ப ட்டி சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் பொட்டிரெட்டிபட்டி கிராம நிர்வாக அலுவலர் முரளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து குப்பைமேட்டில் இறந்து கிடந்த பெண் சிசுவை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் குப்பைமேட்டில் இறந்த பெண் சிசுவை வீசி சென்றது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் இச்சம்பவம் குறித்து சுகாதாரத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவ ர்கள் எருமப்பட்டி மற்றும் பொட்டிரெட்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார சுகாதார நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்களின் விவரங்களை சேகரித்து வருகிறார்கள். குப்பை மேட்டில் இறந்த நிலையில் பெண் கிசு வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    • 15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக அவரது உறவினர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • மகளிர் போலீஸ் நிலையத்தில் சந்தனமாரி புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை யூனியன் சமூக நல விரிவாக்க அலுவ லர் சந்தனமாரி. இவருக்கு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து செல்போனில் அழைப்பு வந்தது. அதில் 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்து உள்ளதாக தகவல் தெரி விக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சந்தனமாரி அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அப்போது அந்த சிறுமிக்கும், பாலையம் பட்டி முத்தரையர் நகர் பகுதியை சேர்ந்த உறவினர் இளங்கோவன் (24) என்பவ ருக்கும் பழக்கம் இருந்ததாக வும், தான் உறவினர் வீட்டுக்கு பாலையம் பட்டிக்கு செல்லும்போது அடிக்கடி தனிமையில் இருந்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.

    இதனால் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. பெற்றோர் அவரை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக் காக அழைத்து சென்றிருந்த னர். அங்கே பரிசோதனை செய்த டாக்டர்கள் அடுத்த மாதம் வரும்படி கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி சிறுமிக்கு வயிற்று வலி வந்துள்ளது. இதை யடுத்து பெற்றோர் சிறு மியை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதைத்தொடர்ந்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சந்தனமாரி புகார் செய்தார்.

    போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீன்பிடி தொழில் செய்து வரும் இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
    • சுவரின் கீழே சிக்கிய 2 குழந்தைகளையும் மீட்டு, அருகில் உள்ள காரைக்கால் மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு தூக்கி சென்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால்மேடு சிங்காரவேலர் வீதியைச்சேர்ந்தவர் சரவணன். மீன்பிடி தொழில் செய்துவரும் இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு யோஹனா(12), சஞ்சுஸ்ரீ(9), சஞ்சனா(7), சாய் (5) ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர். இரவு சஞ்சனா மற்றும் சாய் ஆகிய இருவரும், வழக்கம் போல், வாசல் இரும்பு கேட்டில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, சுவர் இடிந்து இரும்பு கேட்டுடன் விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை மற்றும் உறவினர்கள், சுவரின் கீழே சிக்கிய 2 குழந்தைகளையும் மீட்டு, அருகில் உள்ள காரைக்கால் மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு தூக்கி சென்றனர். மேல் சிகிச்சைக்காக, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். இதில், சஞ்சனா சிகிச்சை பலனின்றி இறந்து போனார். சாய் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காரைக்கால் நகர போலீசில் சரவணன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசரித்து வருகின்றனர்.

    • பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.
    • 2-ம் கட்டமாக 550 குழந்தைகளுக்கும் முதிர்வுத் தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. அவர் பேசியதாவது, 

    முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் 31.12.2001 முதல் ரூ.15,200/- தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலம் நிலையான வைப்புத் தொகையாக டெபாசிட் செய்யப்பட்டு நிலையான வைப்புத் தொகை ரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்தது. 01.08.2011 அன்று அல்லது அதற்குப்  பிறகு பிறந்த பெண் குழந்தையின் பெயரில் ஒரு பெண் குழந்தை உள்ள குடும்பத்திற்கு ரூ.50,000/- மற்றும் 2 பெண் குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.25,000/- என உயர்த்தி தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலம் நிலையான வைப்புத் தொகையாக டெபாசிட் செய்யப்பட்டு நிலையான வைப்புத் தொகை பத்திரம் நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.

    மேற்கண்ட டெபாசிட் தொகையானது பெண் குழந்தைகளின் கல்வித் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் 6-வது ஆண்டு வைப்புத் தொகையிலிருந்து ஆண்டுதோறும் ரூ.1800/- ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேற்கூறிய வைப்புத்தொகை ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு 18 வயது நிறைவடைந்தவுடன் பெண் குழந்தைக்கு வட்டியுடன் சேர்த்து வைப்புத் தொகை வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2001 முதல் 2005 வரை பதிவு செய்யப்பட்டு 18 வயது நிறைவடைந்த குழந்தைகளுக்கு முதல் கட்டமாக 2,858 குழந்தைகள் மற்றும் 2-ம் கட்டமாக 550 குழந்தைகளுக்கும் முதிர்வுத் தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது. 

    தற்பொழுது, 1,174 குழந்தைகளுக்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலம் பெயர் பட்டியல் வரப்பெற்றுள்ளது. அக்குழந்தைகளுக்கும் முதிர்வு தொகை பெற்று வழங்கப்படும். நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 57 பயனாளிகளுக்கு வைப்புத் தொகை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் 2 பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், நலத்திட்ட உதவிகள் பெற்றவர்கள், தங்கள் பெண் பிள்ளைகளின் எதிர்கால தேவைக்கு இத்தொகையினை பயன்படுத்திட வேண்டும் என கலெக்டர் பழனி தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • குழந்தையை விட்டுச்சென்றது யார் என்று தெரியவில்லை.
    • 30 நாட்களுக்குள் தொடர்பு கொள்ளாவிட்டால் அந்த குழந்தை தத்துக்கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி 3 மாத பெண் சிசுவை போட்டுவிட்டு தாயார் சென்று விட்டார்.

    குழந்தையை விட்டுச்சென்றது யார் என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அந்த குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.அந்த பெண் குழந்தை குறித்து தகவல் தெரிந்தவர்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் நலக்குழு மற்றும் சேலம் சின்னதிருப்பதியை சேர்ந்த லைப் லைன் டிரஸ்ட், தத்துவள மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

    30 நாட்களுக்குள் தொடர்பு கொள்ளாவிட்டால் அந்த குழந்தை தத்துக்கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • லாரியை சூலூர் போலீஸ் நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தி விட்டு, லாரியிலேயே படுத்து தூங்கி விட்டார்.
    • மது போதையில் லாரியை இயக்கியதற்காக அவருக்கு சூலூர் போலீசார் அபராதம் விதித்தனர்.

    சூலூர்:

    விழுப்புரத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி(வயது41). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி 15 வயதில் மகள் உள்ளார்.இந்த நிலையில் அவரது முதல் மனைவி இறந்து விடவே ராஜீவ்காந்தி 2-வதாக திருமணம்செய்து கொண்டார். அவருக்கு சில தினங்களுக்கு முன்பு 2-வதும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

    இந்த நிலையில் ராஜீவ்காந்தி இரும்பு பொருட்களை ஏற்றுவதற்காக மும்பைக்கு சென்றார். பின்னர் அங்கு பொருட்களை ஏற்றி கொண்டு சேலத்திற்கு வந்தார்.

    அப்போது கோவை சூலூர் அருகே அருகே அவர் வந்த போது லாரியை திடீரென நிறுத்தி விட்டு மது அருந்தினார். பின்னர் லாரியை இயக்கி கொண்டு சென்ற அவரால் மேற்கொண்டு இயக்க முடியவில்லை என தெரிகிறது. இதனால் லாரியை சூலூர் போலீஸ் நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தி விட்டு, லாரியிலேயே படுத்து தூங்கி விட்டார்.

    நீண்ட நேரமாக லாரி அங்கேயே நின்றதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் லாரி அருகே சென்று பார்த்தனர். அப்போது டிரைவர் தூங்கி கொண்டிருந்தார். அருகே மதுபாட்டிலும் இருந்தது. அவரை எழுப்பி பார்த்தனர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை.

    இதையடுத்து போலீசார் லாரியை போலீஸ் நிலையம் எடுத்து சென்றனர். பின்னர் தண்ணீரை ஊற்றி டிரைவரை எழுப்பினர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அவர் தனக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. தற்போது 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. நான் செய்யும் டிரைவர் தொழிலில் 2 பெண் குழந்தைகளை வைத்து வளர்ப்பது மிகவும் கஷ்டம் எனவும் அந்த மன வருத்தத்திலேயே மது அருந்தியதாகவும், பிறந்த குழந்தையை கூட இன்னும் பார்க்கவில்லை. அதனை பார்க்கவும் எனக்கு பிடிக்க வில்லை. அதனால் நான் ஊருக்கு செல்லவில்லை எனக் கூறி புலம்பினார்.

    இதையடுத்து ராஜீவ்காந்திக்கு பெண் பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியே உருவாகும். பெண்களுக்கு அரசின் பல நலதிட்டங்கள் நடைமுறையில் உள்ளது என அறிவுரை கூறினர்.

    தொடர்ந்து மது போதையில் லாரியை இயக்கியதற்காக அவருக்கு சூலூர் போலீசார் அபராதம் விதித்தனர்.

    • பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை விற்பனையை செய்யப்பட்டதா என விசாரணை நடந்து வருகிறது.
    • 5 பெண்களிடம் நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது உசிலம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த சின்னப்பாண்டி மனைவி பாண்டியம்மாள் (வயது60) என்பவர் பச்சிளம் பெண் குழந்தையுடன் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார்.

    போலீசார் அவரிடம், குழந்தை குறித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். இதனால் பாண்டி யம்மாள் மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து பாண்டியம்மாளை போலீஸ் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது. இதற்கு அந்த குழந்தையின் தாய் மற்றும் மாலதி, கருப்பசாமி மனைவி அழகுபாண்டி, கரும்பாலை நாகராஜன் மனைவி பாண்டியம்மாள் ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வறுமை அல்லது பெண் என்பதால் குழந்தையை விற்க முற்பட்டார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை திடீரென இறந்தது.
    • சம்பவத்தன்று வீட்டில் அக்குழந்தை மூச்சு இல்லாமல் இருந்து வந்தது

    கடலூர்:

    கடலூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை திடீரென இறந்தது. கடலூர் அடுத்த ரெட்டி ச்சாவடி செல்லஞ்சேரியை சேர்ந்தவர் சுமன் (வயது 30). இவரது மனைவி மலர். இவர்களுக்கு கடந்த 14 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது.   சம்பவத்தன்று வீட்டில் அக்குழந்தை மூச்சு இல்லாமல் இருந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக பெண் குழந்தையை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.   ஆனால் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த 14 நாளான பெண் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கழிவு நீர் தொட்டியில் பெண் சிசு பிணம் மிதந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டு அருகில் உள்ள ஒரு கழிவு நீர் தொட்டியில் ஒரு குழந்தை பிணமாக மிதந்த நிலையில் கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இது தொடர்பாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்துக்கு விைரந்து சென்று கழிவுநீர் தொட்டியில் கிடந்த அந்த குழந்தை உடலை மீட்டனர். அது பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஆகும்.

    அந்த குழந்தையை கழிவுநீர் தொட்டியில் வீசி சென்றது யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்காக வந்திருந்த யாரோ பெண் தான், பெண் சிசு சடலத்தை கழிவு நீர் தொட்டியில் வீசிச்சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.

    கள்ளக்காதலில் பிறந்ததால் வேண்டாம் என்று குழந்தையை பெற்றெடுத்த பெண் வீசி சென்றாரா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீசினார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாகவும், அவரது உடலை அருகில் உள்ள ஓடையில் புதைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
    • குழந்தையின் தந்தையான ராமச்சந்திரனிடம் கேட்டபோது அவர் தனக்கு குழந்தை இறந்த விபரம் தெரியாது என கூறினார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள பாலூத்து தேவராஜ் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 27). கம்பி கட்டும் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (21). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ரம்யா மீண்டும் கருவுற்றார். இவருக்கு கடந்த மாதம் 29-ந் தேதி கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது.

    சில நாட்கள் கழித்து தாயும், சேயும் நலமாக இருந்ததைத் தொடர்ந்து ரம்யாவை வீட்டுக்கு செல்லுமாறு டாக்டர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரம்யாவின் தாய் களிச்சியம்மாள் அவர்களை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

    இந்நிலையில் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வருமாறு அழைப்பதற்காக அவரது வீட்டுக்கு பணியாளர்கள் சென்றனர்.

    ஆனால் ரம்யாவின் தாயார் களிச்சியம்மாள் தனது பேத்தி இறந்துவிட்டதாக தெரிவித்தார். குழந்தை எப்படி இறந்தது? என கேட்டதற்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாகவும், அவரது உடலை அருகில் உள்ள ஓடையில் புதைத்துவிட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் அவரது பேச்சில் பணியாளர்கள் சந்தேகமடைந்தனர்.

    முதலில் தாய்ப்பால் கொடுத்தபோது, மூச்சுத் திணறி இறந்ததாகவும், பின்னர் குழந்தைக்கு இருமல் ஏற்பட்டதால் தேனும், துளசி நீரும் கொடுத்ததால் இறந்து விட்டதாகவும் மாறி மாறி பதிலளித்தார். இது மட்டுமின்றி குழந்தை இறந்த விபரத்தை அக்கம் பக்கத்தினர் யாருக்கும் சொல்லாமல் வீட்டில் குழந்தை இருப்பது போலவே காட்டிக் கொண்டுள்ளார்.

    மேலும் குழந்தையின் தந்தையான ராமச்சந்திரனிடம் கேட்டபோது அவர் தனக்கு குழந்தை இறந்த விபரம் தெரியாது என கூறினார். இதனால் களிச்சியம்மாளிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அதனை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகமடைந்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். சமூக நலத்துறை அலுவலர் ஷியாமளா தேவி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

    இந்நிலையில் குழந்தையின் தாய் ரம்யாவுக்கு மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கும் என்ன நடந்தது என தெரியாமல் தான் சொன்ன வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் கூறி வருவதால் அவரது தாய் களிச்சியம்மாள் மீது போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கடமலைக்குண்டு போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோவில் எதிரே குளத்தில் பச்சிளம் பெண் குழந்தை பிணமாக மிதந்தது.
    • பெண்குழந்தை உடலை மீட்ட போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோவில் எதிரே குளம் உள்ளது. இந்த குளத்தில் இன்று காலை பிறந்து 2 நாளே ஆன பச்சிளம் குழந்தை பிணம் மிதந்தது. இந்த குழந்தை உடல் குளத்தில் வடக்கு கரை ஓரம் கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் விரைந்தனர். பெண்குழந்தை உடலை மீட்ட போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் குழந்தையை வீசி சென்றது யார் ?பிறந்ததால் வீசி சென்றாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 14 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்ததால் அவரை திருமணம் செய்த வாலிபர் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 4-ந் தேதி இளம்பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக பிரசவத்துக்காக சேர்ந்தார்.

    மறுநாள் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் தாயின் வயதை ஆய்வு செய்த போது அவர் 14 வயதே ஆன சிறுமி என்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் டாக்டர்கள் இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக குழந்தைகள் நல அமைப்பினர் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் தாய் அவரது தந்தைக்கு தெரியாமல் 22 வயதான இளைஞர் ஒருவருக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாகி குழந்தை பிறந்தது தெரியவந்தது. பின்னர் குழந்தைகள் நல அமைப்பினர் சிறுமி, குழந்தை மற்றும் அவரை திருமணம் செய்த வாலிபர் ஆகியோரை மாவட்ட சமூக நல அலுவலரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 3 பேரையும் சமூக நல கோர்ட்டில் ஆஜர் படுத்த உள்ளனர்.

    நீதிபதி விசாரணை நடத்திய பின்னர் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய், அவரை திருமணம் செய்த வாலிபர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    ×