என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "wedding day"
- செங்கல்பட்டு என்.ஜி.ஓ.நகரை சேர்ந்தவர் ரமேஷ்.
- ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.
புதுச்சேரி:
செங்கல்பட்டு என்.ஜி.ஓ.நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் புதுவை உருளையன்பேட்டை ஒத்தவாடை வீதியை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரேவதி இதய நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் உருளையன்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது ரமேஷ் மனைவியை பார்த்து செல்வார்.
இந்த நிலையில் நேற்று திருமண நாளையொட்டி ரமேஷ் மனைவியை பார்க்க தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் அறையில் ரேவதி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரேவதியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரேவதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது கணவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் உருளை யன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமண நாளில் பெண் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சோகத்ததை ஏற்படுத்தியது.
மகாகவி பாரதியாரின் 125-வது திருமணநாள் விழாவை முன்னிட்டு சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில், பாரதி- செல்லம்மாள் சிலை சென்னையில் வடிவமைக்கப்பட்டு கடந்த 1 மாதமாக தமிழகம், புதுச்சேரி முழுவதும் சுற்றி வந்தது.
சுமார் 1,000 கிலோமீட்டர் சென்ற ரதம் -செல்லமாளின் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையத்திற்கு இன்று வந்து சேர்ந்தது. கடையம் வடக்கு தெரு பிள்ளையார் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்கள் ரதத்தை வரவேற்றனர்.
முன்னாள் தலைமை ஆசிரியர் கல்யாணி சிவகாமிநாதன் தலைமையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் கோபால் முன்னிலையில், லயன்ஸ் கிளப் குமரேசன் பத்திர எழுத்தர்கள் பால்சிங், ராஜசேகர் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
ரதத்தில் இருந்த பாரதியார்- செல்லம்மாள் சிலைக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் சேவாலயா கிங்ஸ்டன் காஞ்சனா, ஒருங்கிணைப்பாளர் சங்கிலிபூதத்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். சேவாலயா நிறுவனர் முரளிதரன் நன்றி கூறினார்.
பின்னர் கல்யாணிபுரத்தில் நடந்த பாரதியார்- செல்லம்மாள் சிலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு கீழக் கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார்.
திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மலர்தூவி பாரதியார் சிலைக்கு மரியாதை செய்தனர்.
பாரதியாரின் நண்பர் சுடலைமாடன் என்பவர் வசித்த இல்லத்தை சேவாலயா நிறுவனர் முரளிதரன் சென்று பார்வையிட்டார். பாரதியார் கடையத்தில் இருந்தபோது இங்கு பலமுறை வந்து இருந்ததை அங்கிருந்த மக்களும் நெகிழ்ச்சியோடு நினைவுபடுத்தினர்.
பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புளி புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த வாரம் இவரது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக சுரேஷ் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று வைகை அணை அருகே நடந்த தனது உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றார்.
பின்னர் நண்பர்களுடன் வைகை அணை நீர் தேக்கத்துக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் இறங்கினார். நீரில் மூழ்கிய அவர் தனது நண்பர்களிடம் காப்பாற்றுமாறு சத்தம் போட்டார். ஆனால் அவர்களால் முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு துறையினர் அங்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் 3 மணி நேரம் போராடி அவரது உடலை மீட்டனர். இது குறித்து வைகை அணை போலீசார் வழக்கு பதிவு செயது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று தனது முதலாவது திருமண நாளை கொண்டாட தயார் நிலையில் இருந்த சுரேஷ் அணையில் மூழ்கி பலியானது அவர்கள் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்