என் மலர்
நீங்கள் தேடியது "Bollywood"
- இதனால் மோனாலிசா அசைவுகர்யங்களுக்கும் ஆளாகியுள்ளார்.
- நேரடியாகச் சென்று மோனாலிசா மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து விவாதிப்பதாகக் சனோஜ் மிஸ்ரா கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை நடைபெறும்.
சுமார் 40 கோடி பேர் இங்கு புனித நீராட வருகை தருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் 16 வயதான மோனாலிசா போஷ்லே என்ற 16 வயது பெண் தனது தந்தையுடன் சேர்ந்து பாசி மாலை விற்று வருகிறார்.
மோனாலிசா தனது தனித்துவமான கண்கள் மற்றும், இயற்கையான அழகால் இணையத்தில் டிரண்ட் ஆகி வருகிறார். இதனால் அவரை பேட்டி காணவும், அவருடன் செல்பி எடுத்துக்கொள்ளவும், கும்பமேளாவில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் மோனாலிசா அசைவுகர்யங்களுக்கும் ஆளாகியுள்ளார். அவரின் பாசி மாலை வியாபாரமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
See what happened to Kumbh Mela Monalisa ? అతి సర్వత్రా వర్జాయేత్!#MonalisaBhosle #KumbhMela2025 # pic.twitter.com/YVGuc7DjQR
— North East West South (@prawasitv) January 21, 2025
ஆனால் மோனாவிசாவுக்கு சினிமாவில் ஹீரோனியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மோனாலிசாவை தனது அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க விருப்புவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேரடியாகச் சென்று மோனாலிசா மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து விவாதிப்பதாகக் சனோஜ் மிஸ்ரா கூறியுள்ளார்.

'டைரி ஆஃப் மணிப்பூர்' என்ற தனது அடுத்த படத்தில் நடிக்க பொருத்தமான ஒருவருக்காக காத்திருந்ததாகவும், மோனாலிசாவின் கரிய தோல் மற்றும் தேன் போன்ற கண்கள் தனது படத்தின் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- மாடல் அழகியாகவும் இருந்த மம்தா 2002 ஆம் ஆண்டோடு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
- திரையுலகைச் சேர்ந்த அனைவரும் அவரைச் சந்திப்பது வழக்கம், அதனால் நானும் அவரைச் சந்திக்கச் செல்வேன்.
80, 90 களில் ராம் லகான், வக்த் ஹமாரா ஹை, கிராந்திவீர், கரண் அர்ஜுன், சப்சே படா கிலாடி, அந்தோலன் மற்றும் பாஸி போன்ற பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படங்களில் நடித்த நடிகை மம்தா குல்கர்னி. மாடல் அழகியாகவும் இருந்த மம்தா 2002 ஆம் ஆண்டோடு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 1997 ஆம் ஆண்டு துபாய் நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைபட்ட விக்கி கோஸ்வாமியுடன் மம்தா உறவில் இருந்தார். மம்தா அவரை அடிக்கடி சிறைக்கு சென்று பார்ப்பதாகவும், அவர் சிறையில் இருந்தபோதே இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சிறையில் இருந்து 2012 இல் வெளியே வந்த விக்கி கோஸ்வாமியின் 2016 இல் மீண்டும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் சிக்கி கைதானார். இதில் மம்தாவுக்கும் பங்கு உள்ளதாக கூறப்பட்டது. பாலிவுட்டில் பிரபல பிரபல நடிகையாக திகழ்ந்த மம்தாவின் குல்கர்னி உடனான உறவு அதிக பரபரப்பாக இந்தி பத்திரிகைகளால் கவர் செய்யப்பட்டது.

இந்நிலையில் 25 ஆண்டுகளாக வெளிநாடுகளையே சுற்றிய மம்தா குல்கர்னி [52 வயது] சமீபத்தில் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார். கையோடு தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கும் மம்தா குல்கர்னி மும்பையில் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார்.
"நான் விக்கியை திருமணம் செய்து கொள்ளவில்லை, அவர் என் கணவர் அல்ல. நான் இன்னும் தனியாக இருக்கிறேன். நான் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
விக்கிக்கும் எனக்கும் ஒரு உறவு இருந்தது, ஆனால் நான் அதை முறித்துக்கொண்டேன். விக்கியை அந்த சமயத்தில் திரையுலகைச் சேர்ந்த அனைவரும் அவரைச் சந்திப்பது வழக்கம், அதனால் நானும் அவரைச் சந்திக்கச் செல்வேன். அவரை பற்றிய உண்மை தெரிந்ததும் அவரை விட்டுவிட்டேன்.

2012ல் சிறையில் இருந்து விக்கி வெளியே வந்தார். 2016ல் அவரை சந்தித்தேன். ஆனால் அதன் பின் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் இப்போது என் கடந்த காலம். நான் அவரை விட்டுவிட்டேன் என்று மம்தா குல்கர்னி அந்த பேட்டியில் தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனது பதிவை பலர் தவறாக புரிந்துகொண்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
- கடந்த 2 படங்கள் எனக்கு பல வருட நினைவுகளை கொடுத்துள்ளது.
விது வினோத் சோப்ராவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வசூலை குவித்த படம் '12வது ஃபெயில் (12th Fail).இப்படத்தில் நடித்த விக்ராந்த் மாஸ்ஸி-க்கு இந்த படம் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
தனது நடிப்பின் மூலம் பலரது மனதில் இடம் பிடித்துள்ள விக்ராந்த், கடைசியாக சபர்மதி ரிப்போர்ட் படத்தின் நடித்திருந்த இவர் சினிமாவை விட்டு விலகுவது குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் 2025 ஆம் ஆண்டு அவரது கடைசி படத்தை நடிக்கவுள்ளதாக அறிவித்தார்.
அவரது பதிவில், கடந்த சில வருடங்களும் அதற்குப் பின்னரும் தனித்தன்மை வாய்ந்தவை. உங்களது அழியாத ஆதரவுக்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள்.

ஆனால் நான் முன்னோக்கிச் செல்லும்போது, மறுபரிசீலனை செய்து வீட்டிற்குத் திரும்புவதற்கான நேரத்தை நான் உணர்கிறேன். கணவன், தந்தை மற்றும் மகனாக. மேலும் ஒரு நடிகராகவும். எனவே வரும் 2025ல், கடைசியாக ஒருமுறை மீண்டும் சந்திப்போம். காலம் சரியாக இருக்கும் வரை. கடந்த 2 படங்கள் எனக்கு பல வருட நினைவுகளை கொடுத்துள்ளது. மீண்டும் நன்றி. என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தான் தற்காலிகமாக மட்டுமே ஓய்வு பெறுகிறேன் என்றும் தனது பதிவை பலர் தவறாக புரிந்துகொண்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

எனக்கு தெரிந்ததெல்லாம் நடிப்பது மட்டும்தான். இப்போது என்னிடம் உள்ள அனைத்தையும் அது எனக்கு கொடுத்தது. ஆனால் எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுமே பாதிக்கப்பட்டுள்ளன. எனது குடும்பம் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்குச் சிறிது ஓய்வு எடுக்க விரும்புகிறேன்.
இந்த நேரத்தில், நான் என்னை முழுமையாக உணர்கிறேன். நடிப்பிலிருந்து விலகுவது அல்லது ஓய்வு பெறுவது என எனது பதிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. எனக்கு நேரம் தேவை, ஆனால் நேரம் சரியாக இருக்கும் போது நான் திரும்பி வருவேன் என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மும்பை, ஜூஹூ [Juhu] பகுதியில் உள்ள தனது வீட்டில் கோவிந்தா தயாராகிக் இந்த விபத்து நடந்துள்ளது.
- அவரது காலில் பாய்ந்த குண்டு டாக்டர்களால் நீக்கப்பட்டது
பாலிவுட் நடிகர் கோவிந்தா தனது ரிவால்வர் துப்பாக்கியால் அவரது காலிலேயே தவறுத்தலாக சுட்டுக்கொண்டதால் குண்டடிபட்டு படுகாயம் அடைந்துள்ள்ளார். கொல்கத்தாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள 6 மணி விமானம் ஏறுவதற்கு இன்று அதிகாலை 4.45 மணியளவில் மும்பை, ஜூஹூ [Juhu] பகுதியில் உள்ள தனது வீட்டில் கோவிந்தா தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
உடனே மருத்துமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் காலில் பாய்ந்த குண்டு டாக்டர்களால் நீக்கப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கோவிந்தாவின் மேனேஜர் சசி சின்ஹா தெரிவித்துள்ளார்.
லைஸ்சன்ஸ் பெற்று கோவிந்தா வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக கீழே விழுந்து வெடித்ததில் அவரது காலில் குண்டு பாய்ந்ததாக மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார். 1990 களில் பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக கோவிந்தா வலம்வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மெட்ரோ ரெயிலில் இளம்பெண் ஒருவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இந்த வீடியோவை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் வளர்ச்சியடைந்த இக்காலகட்டத்தில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுப்பது பொது இடங்களில் மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுப்பது அதிகரித்துள்ளது.
அவ்வகையில் மெட்ரோ ரெயிலில் இளம்பெண் ஒருவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் சஹேலி ருத்ரா என்ற பெண் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். 4 நாட்களுக்கு முன்பு வெளியான இந்த வீடியோவை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
ஸ்ட்ரீ 2 திரைப்படத்தில் தமன்னா நடனமாடிய 'ஆஜ் கி ராத்' என்ற இந்தி பாடலுக்கு முகம் சிலுக்கும் படியான நடன அசைவுகளை பயன்படுத்தி அப்பெண் நடனமாடுகிறார். சிலர் அப்பெண்ணை பாராட்டினாலும் பொது இடங்களில் இப்படி நடனமாடுவது சரியில்லை என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.
- அம்பேத்கர் சாலையில் வாழ்ந்தாலும் சாதிப் பாகுபாடுகள் பற்றி எனக்கு போதிய அளவிற்கு தெரியாது.
- அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி ஜான்வி கபூர் பிஸியாக நடித்து வருகிறார்.
அண்மையில் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான Mr & Mrs மஹி படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
தி லாலன்டோப் சினிமா யூட்யூப் சேனலில் Mr & Mrs மஹி படம் தொடர்பாக ஜான்வி கபூர் பேட்டி அளித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அப்போது வைரலானது.

அந்தப் பேட்டியில் பேசிய ஜான்வி கபூர் தனக்கு வரலாற்றில் அதிக ஆர்வம் இருப்பதாக கூற, உடனே நெறியாளர், 'வரலாற்றின் எந்த காலக்கட்டத்துக்கு செல்ல விரும்புகிறீர்கள்' என்று கேட்கிறார். அதற்கு அவர், "மகாத்மா காந்திக்கும், அம்பேத்கருக்கும் இடையில் 'சாதி' குறித்து அவர்களின் பார்வையையும், கருத்துகளையும், விவாதங்களையும் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களின் சித்தாந்தங்களுக்கு இடையிலான உரையாடலையும், பல்வேறு விஷயங்களில் அவர்கள் கொண்டிருந்த பார்வையையும் அறிந்துகொள்ளலாம்.
சாதி குறித்த தன்னுடைய நிலைப்பாட்டில் தொடக்கத்திலிருந்தே அம்பேத்கர், தெளிவாகவும், கடுமையாகவும் இருந்தார் என நினைக்கிறேன். ஆனால் காந்தியின் பார்வை தொடர்ந்து வளர்ந்து வந்தது என்று நான் நினைக்கிறேன்.
நம் சமூகத்தில் இருக்கும் இந்த சாதிய பிரச்சினை பொறுத்தவரை, மூன்றாவது நபரின் கண்ணோட்டத்திலிருந்து அதை பார்ப்பதற்கும், அந்த வாழ்க்கையை வாழ்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது" என்றார்.
ஜான்வி ஒரு நடிகை என்பதை தாண்டி சமூகத்தைப் பற்றிய அவரது பரந்த புரிதல் பெரும்பாலான மக்களை கவர்ந்தது.
அதே சமயம் பட ப்ரோமோஷனுக்காக ஜான்வி கபூர் செய்த PR ஸ்டண்ட் இதுவென சமூக வலைத்தளங்களில் சிலர் குற்றம் சாட்டினர்.
தற்போது அம்பேத்கர் - காந்தி தொடர்பாக பேசியது பற்றி ஜான்வி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "அம்பேத்கர் - காந்தி தொடர்பாக பேட்டி கொடுத்ததற்கு அடுத்து என்னுடைய PR டீமிடம் ஏதாவது தவறாக பேசி விட்டேனா என்று கேட்டேன். அவர்கள் அம்பேத்கர் - காந்தி பற்றி பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்தனர். பின்னர் நானும் அதை நினைத்து பதற்றமடைந்தேன். பட வெளியீட்டிற்கு முன்பு எந்த சர்ச்சையும் வேண்டாம் என்று நினைத்து பேட்டியின் அந்த குறிப்பிட்ட பகுதியை நீக்க வேண்டும் என்று யூட்யூப் சேனல் நிர்வாகியிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை மறுத்து விட்டார்.
அம்பேத்கர் சாலையில் வாழ்ந்தாலும் சாதிப் பாகுபாடுகள் பற்றி எனக்கு போதிய அளவிற்கு தெரியாது. அம்பேத்கர் எழுதிய சாதியை அழித்தொழித்தல் புத்தகத்தை படித்தது எனது சிந்தனைகளை மாற்றியமைத்தது.
அம்பேத்கரின் இந்த புத்தகம் தான் நம் சமூகத்தில் வர்க்க பாகுபாடும் சாதிப் பாகுபாடும் எவ்வாறு வேரூன்றியுள்ளது என்பதை எனக்கு உணர்த்தியது. நாம் அதை பற்றி பேசுவது இல்லை. அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியான 12 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்தது.
- மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக தமிழ் படத்தை இயக்க இருப்பதாக தகவல்.
மலையாளத்தில் இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மலையாள மொழியில் ரிலீசான போதிலும் இந்த படத்திற்கு தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டுகளை குவித்தனர். மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியான 12 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்தது.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக தமிழ் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பில் அன்பு செழியன் தயாரிக்க இருப்பதாகவும், இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், மஞ்சுமெல் பாஸ்ட் பட இயக்குனர் சிதம்பரம் பாலிவுட்டில் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஃபாண்டாம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் புதிய இந்தி படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- இந்தி சின்னத்திரை துறையில் மிகவும் பிரபலமானவர் ஹினா கான்,
- அதன் பின் கில்லாடி சீசன் 8 மற்றும் பிக் பாஸ் 11 ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக் கொண்டார்.
இந்தி சின்னத்திரை துறையில் மிகவும் பிரபலமானவர் ஹினா கான், அவர் `யே ரிஷ்டா கியா கேலடா ஹை' சீரியலில் அக்ஷரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வீட்டில் ஒரு பெண்ணாக மக்கள் மனதில் பதிந்தார். அதைத் தொடர்ந்து கசௌட்டி சிந்தகி கே 2 என்ற சீரியலில் கோமோலிகா என்ற வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதன் பின் சில மாதத்தில் அந்த கதாப்பாத்திரத்தில் இருந்து விலகினார்.
அதன் பின் கில்லாடி சீசன் 8 மற்றும் பிக் பாஸ் 11 ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக் கொண்டு அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். சின்னத்திரை மட்டுமல்லாமல் ஹேக்கட், ஸ்மார்ட்ஃபோன், லைன்ஸ், விஷ்லிஸ்ட் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஹினா கான் அவருக்கு மார்பக புற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 36 வயது ஆகும் ஹினா கானுக்கு மார்பக புற்று நோய் மூன்றாம் நிலையை எட்டியுள்ளது என்பது கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து அவர வெளியிட்ட அறிக்கையில் " எல்லாருக்கும் வணக்கம், நான் தற்பொழுது நலமாக இருக்கிறேன், நான் இந்த புற்று நோயை மீண்டு வருவதற்கான அனைத்து செயல்களையும் செய்து வருகிறேன். நான் இன்னும் அதிக வலிமையுடன் வருவேன். இந்த நிலைமையை புரிந்துக் கொண்டு ரசிகர்கள் ஒத்துழைக்கவேண்டும். உங்கள் ஆசிர்வாதமும், வேண்டுதலும் நான் குணமடைய கண்டிப்பாக தேவை எனக்காக பிரார்தனை செய்யுங்கள் " என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக பிரியங்கா சோப்ரா வலம் வந்தார்.
- ஹாலிவுட்டில் பல படங்களில் பிசியாக அவர் நடித்து வருகிறார்.
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த இவர் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தடம் பதிக்க ஆரம்பித்தார்.
கடந்த 2018- ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோன்சை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். இருவரும் வாடகைத் தாய் மூலம் மால்தி மேரி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். ஹாலிவுட்டில் பல படங்களில் பிசியாக அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரத்த காயங்களுடன் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட வீடியோவை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஹாலிவுட் திரைப்படமான தி பிளப் படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்படும் போது இந்த காயங்கள் ஏற்பட்டதாக அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா சோப்ராவின் அர்ப்பணிப்பை பாராட்டி வருகின்றனர்.
- சல்மான் கான் வீட்டின் முன் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
- சல்மான் கானை கொலை செய்யப் போவதாக வீடியோ வெளியிட்டு மிரட்டிய ராஜஸ்தானை சேர்த்த பன்வாரிலால் பன்டி என்ற யூடியூபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது கொலை முயற்சிகள் அடுத்தடுத்து நடந்து வருவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலையில் மும்பையின் பாந்திரா பகுதியில் உள்ள சல்மான் கான் வீட்டின் முன் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த விவகாரத்தில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுள் அனுஜ் தபான் என்பவர் கடந்த மே 1 ஆம் தேதி காவல் நிலையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தவிர்த்து அவர் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அரியானவைச் சேர்த்த பிஷ்னாய் மற்றும் கோல்டி ஆகிய ரவுடிக் கும்பலைச் சேர்ந்த 5 பேர் நவி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சல்மான் கானின் பாந்திரா இல்லத்தையும், பன்வேலில் உள்ள பண்ணை வீட்டையும், சல்மான் கானின் படப்பிடிப்பு தளத்தையும் பல நாட்களாக வேவு பார்த்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சல்மான் கானை கொலை செய்யப் போவதாக வீடியோ வெளியிட்டு மிரட்டிய ராஜஸ்தானை சேர்த்த பன்வாரிலால் பன்டி என்ற யூடியூபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் நெடுஞ்சாலையில் வைத்து எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் பன்டி பேசியதாவது, "லாரன்ஸ் பிஷ்னாய் மற்றும் கோல்டி கேங்கைச் சேர்நதவர்கள் என்னுடன் தான் உள்ளனர், நான் சல்மான் கானை கொலை செய்யப் போகிறேன்" என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் விரைந்த மும்பை சைபர் கிரைம் போலீசார் பன்டியை கைது செய்து மும்பை அழைத்து வந்தனர். பன்வரலால் பன்டிக்கு குற்றப்பின்னணி இருக்கிறதா? அல்லது விளம்பரத்துக்காக வீடியோ வெளியிட்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
- போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது
ரோடு ரேஜ் (Road rage) என்பது வாகனத்தை வேகமாக அல்லது கண்மூடித்தனமாக இயக்குது ஆகும். இந்தியாவில் இதனால் ஏற்படும் விபத்துகள் சமீப காலங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பணக்காரர்களும், அரசியல், சினிமா பிரபலங்களும் அடிக்கடி இதுபோன்ற விபத்துகளை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கமாக மாறியுள்ளது. சமீபத்தில் புனேவில் மது அருந்திவிட்டு கார் ஓட்டிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உடபட இரண்டு இளம் ஐ.டி ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்து வரும் நிலையில் மும்பையில் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். மும்பையின் ககர் பகுதியில் கார்ட்டர் சாலையில் உள்ள ரவீனா டாண்டனின் வீட்டின் அருகே காரை பார்க் செய்யும் இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர், நியாயம் கேட்க வந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதன்பின் அந்த காரின் உள்ளே இருந்து போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ரவீனாவை அங்கிருந்த பலர் சூழ்ந்துகொள்ளவே, "ப்ளீஸ் என்னை அடிக்காதீங்க; தயவுசெய்து என்னை அடிக்காதீங்க" என்று ரவீனா அவர்களிடம் கத்தியுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் படம் பிடிப்பதை பார்த்த ரவீனா செல்போனை தட்டிவிட முயற்சித்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காயமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு கார் டிரைவரும் ரவீனாவும் தங்களை தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளனர். தன்னைச் சுற்றியுள்ள கும்பலுடன் ரவீனா வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக விளங்கும் ரவீனா டாண்டன், தமிழில் கமலுக்கு ஜோடியாக 'ஆளவந்தான்' படத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் கே.ஜி.எப் 2 படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார்.
- ஜான்வி கபூர், கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி (Mr & Mrs Mahi) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஜான்வி கபூர் நடித்துள்ள Mr & Mrs மஹி படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் ஜான்வி கபூர், கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி (Mr & Mrs Mahi) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்குமார் ராவ் நடித்துள்ள இந்தப் படம் வரும் மே 31 ஆம் தேதி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில், தி லாலன்டோப் சினிமா யூட்யூப் சேனலில் படம் தொடர்பாக ஜான்வி கபூர் பேட்டியளித்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அந்தப் பேட்டியில் பேசிய ஜான்வி கபூர் தனக்கு வரலாற்றில் அதிக ஆர்வம் இருப்பதாக கூற, உடனே நெறியாளர், 'வரலாற்றின் எந்த காலக்கட்டத்துக்கு செல்ல விரும்புகிறீர்கள்' என்று கேட்கிறார். அதற்கு அவர், "மகாத்மா காந்திக்கும், அம்பேத்கருக்கும் இடையில் 'சாதி' குறித்து அவர்களின் பார்வையையும், கருத்துகளையும், விவாதங்களையும் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களின் சித்தாந்தங்களுக்கு இடையிலான உரையாடலையும், பல்வேறு விஷயங்களில் அவர்கள் கொண்டிருந்த பார்வையையும் அறிந்துகொள்ளலாம்.
சாதி குறித்த தன்னுடைய நிலைப்பாட்டில் தொடக்கத்திலிருந்தே அம்பேத்கர், தெளிவாகவும், கடுமையாகவும் இருந்தார் என நினைக்கிறேன். ஆனால் காந்தியின் பார்வை தொடர்ந்து வளர்ந்து வந்தது என்று நான் நினைக்கிறேன்.

நம் சமூகத்தில் இருக்கும் இந்த சாதிய பிரச்சினை பொறுத்தவரை, மூன்றாவது நபரின் கண்ணோட்டத்திலிருந்து அதை பார்ப்பதற்கும், அந்த வாழ்க்கையை வாழ்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது" என்றார்.
அவரிடம், "உங்கள் பள்ளியில் சாதி குறித்து விவாதம் நடக்குமா?" என நெறியாளர் கேட்க, "பள்ளி மட்டுமல்ல, எனது வீட்டிலும் கூட அது தொடர்பான விவாதம் நடந்தது கிடையாது" என்றார்.
ஜான்வி ஒரு நடிகை என்பதை தாண்டி சமூகத்தைப் பற்றிய அவரது பரந்த புரிதல் பெரும்பாலான மக்களை கவர்ந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.