search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sunny Deol"

    • நீண்ட நாட்களுக்கு பிறகு ப்ரீத்தி ஜிந்தா மீண்டும் வெள்ளித்திரையில் நடிக்கிறார்.
    • ப்ரீத்தி சினிமாவில் நடிக்க வந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    அமீர்கான் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் வரலாற்று இந்தி திரைப்படம் ''லாகூர், 1947 '.சன்னி தியோல், ராஜ்குமார் சந்தோஷி மற்றும் அமீர் கான் ஆகிய மூவரும் இந்தப் படத்திற்காக முதன்முறையாக இணைந்துள்ளனர்.

    ,நீண்ட நாட்களுக்குப் பிறகு சன்னி தியோல் - ப்ரீத்தி ஜிந்தா ஜோடியாக இப்படத்தில் நடிக்கின்றனர். இருவரும் போர்ஸ், தி ஹீரோ , பையாஜி சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளனர் .



    இந்த படத்தில் நடிப்பது தொடர்பான புகைப்படங்களை ப்ரித்தி ஜிந்தா இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    படப்பிடிப்பு செட்களில் இருந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். படத்தின் 'கிளாப் போர்டு' அதைத் தொடர்ந்து இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியுடன் செல்பி எடுத்த படம் அவர் வெளியிட்டுள்ளார்.



    இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 12-ந் தேதி தொடங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு ப்ரீத்தி ஜிந்தா மீண்டும் வெள்ளித்திரையில் இப்படத்தின் மூலமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    ப்ரீத்தி மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். இணைய தளத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர். மேலும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



    இப்படத்தில் மேலும் மூத்த நடிகை ஷபானா ஆஸ்மி மற்றும் அலி பசல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இப்படம் மக்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படமாகும். இப்படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 55.99 கோடி ரூபாய்க்காக ஏலம் விடப்படும் என நேற்று அறிவிப்பு
    • இன்று காலை அந்த அறிவிப்பு திரும்பப்பெறுவதாக பரோடா வங்கி அறிவித்தது

    பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல். இவர் பாராளுமன்ற பா.ஜனதா எம்.பி.யாகவும் உள்ளார். கடந்த 2022-ல் இருந்து பேங்க் ஆஃப் பரோடாவில் சுமார் 55.99 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். சன்னி தியோல் தந்தை தர்மேந்திரா வங்கியில் தனி உத்திரவாதம் அளித்துள்ளார்.

    கடனை திருப்பி செலுத்தாததால், ஜூகுவில் உள்ள அவரது பங்களாவை, வங்கி நேற்று முடக்கியது. அத்துடன் வருகிற 25-ந்தேதி ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படும் என அறிவிப்பையும் வெளியிட்டது.

    ஆனால், இன்று காலை தொழில்நுட்ப காரணமாக ஏலம் அறிவிப்பு திரும்பப் பெறுவதாக வங்கி அறிவித்துள்ளது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. பா.ஜனதா எம்.பி. என்பதால் வங்கி உடனடியாக திரும்பப்பெற்றுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ''56 கோடி ரூபாய் வாங்கிய கடனை கட்டத் தவறியதால், சன்னி தியோலின் பங்களா ஏலம் விடப்பட இருக்கிறது என்ற செய்தியை நேற்று நாட்டு மக்கள் கேட்டனர். இன்று காலை, 24 மணி நேரத்திற்குள், தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, வங்கி அதன் ஏல அறிவிப்பை திரும்பப்பெற்றது என்ற செய்தியை நாட்டு மக்கள் கேட்கின்றனர்.

    இந்த 'தொழில்நுட்ப காரணங்களை' தூண்டியது யார் என்று ஆச்சரியமாக இருக்கிறதா?'' எனப் பதிவிட்டுள்ளார்.

    • நிலுவை தொகையை மீட்பதற்காக சன்னி தியோலுக்கு சொந்தமான பங்களாவை ஏலம் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
    • ங்களா வருகிற 25-ந்தேதி ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படும் என வங்கி தரப்பில் பங்களாவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.

    இந்தி நடிகர் சன்னி தியோல் நடித்து சமீபத்தில் வெளிவந்த கதார் 2 திரைப்படம் 'ஹிட்' ஆகி வசூலை குவித்து வருகிறது.

    இந்நிலையில் சன்னிதியோலுக்கு சொந்தமாக மும்பை ஜூகு காந்தி கிராம் சாலையில் உள்ள பங்களாவை அவர் திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டூடியோவாக பயன்படுத்தி வந்தார். அந்த பங்களாவுக்காக அவர் பேங்க் ஆப் பரோடா வங்கியில் கடன் வாங்கி இருந்தார்.

    அந்த பணத்தை சன்னி தியோல் முறையாக கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவருக்கு ரூ.56 கோடிக்கு மேல் செலுத்தப்படாமல் நிலுவை தொகை இருந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து நிலுவை தொகையை மீட்பதற்காக சன்னி தியோலுக்கு சொந்தமான பங்களாவை ஏலம் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி அவரது பங்களா வருகிற 25-ந்தேதி ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படும் என வங்கி தரப்பில் பங்களாவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.

    சன்னி தியோலின் உண்மையான பெயர் அஜய்சிங் ஆகும். அஜய்சிங் பெயரில் தான் பங்களாவும் இருக்கிறது. எனவே அந்த பெயரில் ஏலம் அறிவிப்பு வெளியானது.

    இந்நிலையில் திடீரென ஏல அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக பேங்க் ஆப் பரடோ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    பா.ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த நடிகர் சன்னி டியோல் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #SunnyDeol
    புதுடெல்லி:

    பிரபல இந்தி நடிகர் சன்னி டியோல் கடந்த 23-ந்தேதி பா.ஜனதா கட்சியில் இணைந்தார். பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.

    இதையடுத்து குர்தாஸ்பூர் தொகுதியில் நடிகர் சன்னி டியோல் பா.ஜனதா சார்பில் போட்டியிடக்கூடும் என்று தகவல்கள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் குர்தாஸ்பூர் தொகுதி பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இதற்காக நேற்று பிரதமர் மோடியை சந்தித்து சன்னி டியோல் நன்றி தெரிவித்தார். முன்னதாக அவர் கடந்த சனிக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் ரோடு ஷோ நடத்தி பிரசாரம் செய்தார்.

    இன்று நடிகர் சன்னி டியோல் குர்தாஸ்பூர் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தார். அவருடன் மறைந்த நடிகர் வினோத்கன்னாவின் மனைவி கவிதாகன்னா, மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் ஆகியோர் உடன் சென்றனர்.

    முன்னதாக நடிகர் சன்னி டியோல் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றார். அங்கு தேர்தல் வெற்றிக்காக சிறப்பு வழிபாடுகள் செய்தார். வேட்பு மனுதாக்கல் செய்ததை தொடர்ந்து நாளை முதல் குர்தாஸ்பூர் தொகுதியில் தீவிர பிரசாரத்தை தொடங்க சன்னி டியோல் திட்டமிட்டுள்ளார்.



    குர்தாஸ்பூர் தொகுதி பா.ஜனதா கட்சியின் கோட்டையாக கருதப்படும் தொகுதியாகும். பிரபல மறைந்த நடிகர் வினோத் கன்னா இந்த தொகுதியில் 1998, 1999, 2004, 2014-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

    வாஜ்பாய் அமைச்சரவையில் மந்திரியாகவும் வினோத் கன்னா இருந்தார். இதனால் இந்த தொகுதி பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக நீடிக்கிறது.

    இந்த தொகுதியை பா.ஜனதாவிடம் கைப்பற்றுவதற்காக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் தானே அந்த தொகுதியில் களம் இறங்கி உள்ளார். இதனால் அந்த தொகுதியில் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    காங்கிரசின் தேர்தல் வியூகத்துக்கு பதிலடி கொடுப்பதற்காகவே நடிகர் சன்னி டியோலை பா.ஜனதா குர்தாஸ்பூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தி உள்ளது. பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவின் மகனான சன்னி டியோலுக்கு அந்த தொகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    வினோத் கன்னாவின் மனைவி கவிதா தீவிர பிரசாரம் செய்து சன்னி டியோலுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். ஹேமமாலினியும் சன்னி டியோலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளார்.

    பா.ஜ.க.வில் இணைந்தவுடன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சன்னி டியோல் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். #SunnyDeol #Modi
    புதுடெல்லி:

    இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சன்னி டியோல். இவர் பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவின் முதல் மனைவியின் மகன். தர்மேந்திரா பா.ஜ.க. சார்பில் கடந்த 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்.
     
    தர்மேந்திராவின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான ஹேமமாலினியும் பா.ஜ.க. வேட்பாளராக மதுரா பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

    இதற்கிடையே, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் சன்னி டியோல் சமீபத்தில் பா.ஜ.க.  கட்சியில் இணைந்தார். அன்றிரவே பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.



    இந்நிலையில், சன்னி டியோல் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட மோடி, ’சன்னி டியோலின் எளிமையும், தன்னடக்கமும் தன்னை வெகுவாக கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட சன்னி டியோல் குர்தாஸ்பூர் தொகுதியில் வெற்றிபெற தனது நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார். #SunnyDeol #Modi #SunnyDeolmeetsModi #ModimeetsSunnyDeol 
    பா.ஜ.க.வில் இன்று இணைந்த இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான சன்னி தியோல், பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார் என அக்கட்சி அறிவித்துள்ளது. #BJP #SunnyDeol
    புதுடெல்லி:

    இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சன்னி தியோல். இவர் பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவின் முதல் மனைவியின் மகன். தர்மேந்திரா பா.ஜ.க. சார்பில் கடந்த 2004ஆம் ஆண்டு பொதுதேர்தலில் போட்டியிட்டு வென்றவர்.
     
    தர்மேந்திராவின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான ஹேமமாலினியும் பா.ஜ.க.வில் மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இதற்கிடையே, சன்னி தியோல் பா.ஜ.க. தலைவரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அந்த கட்சியில் இன்று இணைந்தார்.



    இந்நிலையில், இன்று இரவு பாஜக சார்பில் பஞ்சாப், சண்டிகர் மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

    இதில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் சன்னி தியோலும், ஹொசைர்பூர் தொகுதியில் சாம் பிரகாஷும், சண்டிகரில் கிரண் கெர் ஆகியோரும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர் என அறிவித்துள்ளது. #BJP #SunnyDeol
    இந்தி சினிமாவில் முன்னணி நடிகரான சன்னி தியோல் இன்று பா.ஜனதா தலைவரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார். #BJP #SunnyDeol
    அமிர்தசரஸ்:

    இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சன்னி தியோல். இவர் பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவின் முதல் மனைவியின் மகன். தர்மேந்திரா பா.ஜனதா கட்சி சார்பில் கடந்த 2004ஆம் ஆண்டு பொதுதேர்தலில் போட்டியிட்டு வென்றவர்.

    தர்மேந்திராவின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான ஹேமமாலினியும் பா.ஜனதாவில் மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் சன்னி தியோல் இன்று பா.ஜனதா தலைவரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார். முன்னதாக சன்னி தியோல் கடந்த 19ந்தேதி டெல்லி விமான நிலையத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.



    சன்னி தியோல் பா.ஜனதாவில் இணைந்தது பற்றி நிர்மலா சீதாராமன் கூறும்போது ‘சன்னி தியோல் மக்களின் மனநிலையை நன்கு அறிந்தவர். சிறந்த தலைவராக விளங்குவார் என்று நம்புகிறோம்’ என்று கூறினார்.

    பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று தெரிகிறது. #BJP #SunnyDeol
    ×