என் மலர்
நீங்கள் தேடியது "Yash"
- தொடர் சிகிச்சையில் இருந்து வந்த ஹரிஷ் ராய் நேற்று காலமானார்.
- அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
'கே.ஜி.எப்.' மற்றும் உபேந்திரா இயக்கத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஓம்' படங்களில் நடித்து பிரபலமானவர் ஹரிஷ் ராய். இவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பெங்களூருவில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனையில் ஹரிஷ் ராய்க்கு நுரையீரலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த ஹரிஷ் ராய் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, நடிகர் யாஷ் மறைந்த ஹரிஷ் ராய் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
கன்னட சினிமாவில் மூத்த நடிகராக இருந்த ஹரிஷ் ராய் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காசிம் பாய் கதாபாத்திரத்தில் ஹரீஸ் ராய் தோன்றினார்.
- 1995 இல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன சிவராஜ் குமாரின் 'ஓம்' படத்தில் டான் ராய் என்ற கதாபாத்திரம் மூலம் கவனம் பெற்றார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018 இல் வெளியான படம் கேஜிஎஃப். இந்திய அளவில் மிகப்பெறிய வெற்றியை இப்படத்தின் 2ஆம் பாகம் 2022 இல் வெளியானது. இந்த 2 படத்திலும் காசிம் பாய் கதாபாத்திரத்தில் தோன்றி கவனம் பெற்றவர் ஹரீஸ் ராய்.
கேஜிஎஃப் மூலம் பரிட்சயமானவராக இருந்தாலும் கன்னட சினிமாவில் பல படங்களில் தோன்றியிருக்கிறார்.
குறிப்பாக 1995 இல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன சிவராஜ் குமாரின் 'ஓம்' படத்தில் டான் ராய் என்ற கதாபாத்திரம் மூலம் கவனம் பெற்றார். கடந்த மூன்று ஆண்டுகளாக புற்றுநோயுடன் ஹரீஸ் ராய் போராடி வந்தார்.
இந்நிலையில் தைராய்டு புற்றுநோய் வயிறு வரை பரவியதால் அவர் பெங்களூருவில் உள்ள கித்வாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (நவம்பர் 6) அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 55.
முன்னதாக ஒரு நேர்காணலில் தனது நோய் குறித்து பேசியிருந்த ஹரிஷ் ராய், கேஜிஎஃப் படத்தில் தாடியுடன் தோன்றியதற்கான காரணத்தை விளக்கினார்.
"புற்றுநோய் என் தொண்டையில் வீக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வீக்கத்தை மறைக்க நான் தாடியை வளர்த்தேன். "யாரும் விதியிலிருந்து தப்பிக்க முடியாது" என்று அவர் தெரிவித்திருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சிகிச்சை செலவுகள் குறித்து அவர் கூறுகையில், 'ஒரு ஊசியின் விலை 3.55 லட்சம் ரூபாய், மருத்துவர்கள் 63 நாட்களில் 3 ஊசிகள் போட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர், அதன் விலை சுமார் 10.5 லட்சம் ரூபாய்' என்று கூறி நிதி உதவி கோரியிருந்தார்.
இந்நிலையில் அவரின் மறைவு கன்னட திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார்.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.
இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்து இருந்தது.
இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இத்திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக இணையத்தில் தகவல் பரவின. ஆனால் திட்டமிட்டபடி டாக்ஸிக் படம் மார்ச் மாதம் 19-ந்தேதி வெளியாகும் என்று படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
- இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார்.
- இத்திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி வெளியாக இருக்கிறது.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.
இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்து இருந்தது.
இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இத்திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், "டாக்ஸிக்" திரைப்படத்தில் யாஷ் நடித்த ஒரு காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வீடியோவில், மேல் சட்டை இல்லாமல் பால்கனியில் நின்று யாஷ் புகைப்பிடிப்பது போன்று வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இப்படம் தொடர்பான எந்தவித காட்சிகளும் இணையதளத்தில் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள வீடியோ காட்சி படக்குழுவினரை கவலையடையச் செய்துள்ளது.
- ‘பாடிகார்டு'க்கு வழங்கும் மாத சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது.
- ‘பாடிகார்டு’க்கு மட்டுமே அதிக சம்பளம் வழங்கும் நடிகராக மாறி போயிருக்கிறார், யாஷ்.
'கே.ஜி.எப்.' படத்துக்கு பிறகு, இந்திய அளவில் பேசப்படும் நடிகராக மாறிவிட்டார் யாஷ். யாஷ் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் 'டாக்சிக்' படத்திலும், நிதேஷ் திவாரி இயக்கத்தில் 'ராமாயணா' படத்திலும் (ராவணன் கதாபாத்திரத்தில்) நடித்து வருகிறார்.
இதற்கிடையில் யாஷ் தனது 'பாடிகார்டு'க்கு வழங்கும் மாத சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது.
யாஷ் 'பாடிகார்டு' ஆன சீனிவாஸ் என்பவருக்கு மாத சம்பளமாக ரூ.10 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்படுகிறதாம். இதனால் கார், மோட்டார் சைக்கிள் என பந்தா ஆசாமியாக அவர் வலம் வருகிறார்.
அந்தவகையில் 'பாடிகார்டு'க்கு மட்டுமே அதிக சம்பளம் வழங்கும் நடிகராக மாறி போயிருக்கிறார், யாஷ். சமூகம் பெரிய இடம் தான் போல...
- நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணா திரைப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வருகிறது.
- படத்தின் டைட்டில் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
இந்திய சினிமாவில் வருடம் வருடம் ராமாயணம் கதையை மையமாக வைத்து திரைப்படங்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் அடுத்ததாக நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணா திரைப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வருகிறது.
இப்படத்தில் ராம் கதாப்பாத்திரத்தில் ரன்பிர் கபூர், சீதா கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி மற்றும் ராவணன் கதாப்பாத்திரத்தில் யாஷ் நடிக்கின்றனர்.
படத்தின் டைட்டில் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளிக்கும் அதற்கு அடுத்த பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவில் அதிக பொருட் செலவில் உருவாக்கப்படும் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இரண்டு பாகமும் சேர்ந்து சுமார் 4000 கோடி ரூபாயில் தயாராகி வருகிறது.
இந்த பட்ஜெட் பிரபல ஹாலிவுட் திரைப்படமான ட்யூன் 1 மற்றும் 2 பாகம் தயாரித்த செலவைவிட அதிகமாகும் என படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
திரைப்படம் ஐமேக்ஸ் திரையில் வெளியிட இருக்கின்றனர். படத்தின் VFX காட்சிகளை 8 முறை ஆஸ்கர் விருது வென்ற DNEG நிறுவனம் மேற்கொள்கிறது. இசையை ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மேற்கொள்கின்றனர்.
- கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ்.
- நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.
இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.
இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையானால் அனிருத் இப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் காலடி பதிப்பார்.
- இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார்.
- டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.
இதைத் தொடர்ந்து கே.ஜி.எஃப். சாப்டர் 2 படமும் வசூலில் பட்டையை கிளப்பியது. இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. போஸ்டரின் யாஷ் கையில் gun உடன் நடந்து வருகிறார். அவரை சுற்றி தீ எரிந்துக் கொண்டு இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இப்படம் பான் இந்தியன் திரைப்படமாக வெளியாக இருக்கிறது. படத்தின் கதாநாயகியாக நயன் தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
- கே.ஜி.எஃப் படத்தின் மூலம் பலராலும் அறியப்பட்டவர் யஷ்.
- இவரை சந்திக்க நீண்ட வரிசையில் நின்று ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் யஷ். 2007-ம் ஆண்டு வெளியான ஜம்பட ஹுடுகி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான யஷ், அதன்பின் ராக்கி, கோகுல, லக்கி, ஜானு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் படத்தின் மூலம் இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமடைந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றார்.

இந்நிலையில் நடிகர் யஷ்-ஐ சந்திக்க ரசிகர்கள் அவருடைய இல்லத்திற்கு முன்பு குவிந்துள்ளதாகவும், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து ஹேஷ் டேக் ஒன்றையும் வைரலாக்கி வருகின்றனர்.
- 14-வது சர்வதேச விமான தொழில் கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று தொடங்கியது.
- ரோஇந்தியா கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, 14-வது சர்வதேச விமான தொழில் கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி நிகழ்வான ஏரோஇந்தியா கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் பிரதமர் மோடி பெங்களூரில் 'காந்தாரா' பட இயக்குனர் ரிஷப் ஷெட்டி, கே.ஜி.எப். நடிகர் யஷ், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி உள்ளிட்ட கன்னட திரையுலகைச் சேர்ந்தவர்களை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த சந்திப்பின் போது கன்னட சினிமா குறித்தும் கன்னட திரையுலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் மோடியுடன் பேசியதாக கூறப்படுகிறது.
- ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
- இதில், 600-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டதில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியது. மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது ரெயில் பாதை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் யஷ், "ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தை நினைக்கும் போது, என் இதயம் எப்படி நொறுங்கியது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மீட்பு பணிகளுக்கு உதவியவர்களுக்கு என் நன்றிகள்" என்று சோகமாக பதிவிட்டுள்ளார்.
It's difficult to describe in words how heart-wrenching the train tragedy of Odisha is. My deepest condolences to the families of the deceased and praying for the speedy recovery of those injured. Gratitude to the people who have come out in large numbers to help with rescue…
— Yash (@TheNameIsYash) June 3, 2023
- இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இதில் ‘பாகுபலி’ நடிகர் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து 'சலார்' திரைப்படத்தின் டீசர் ஜூலை 6-ம் தேதி காலை 5.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இயக்குனர் பிரசாந்த் நீல் ஒரு புதிய யூனிவர்ஸை உருவாக்குகிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதாவது, கே.ஜி.எப். இரண்டாவது பாகத்தின் கிளைமேக்ஸில் யஷ் சென்ற கப்பல் மீது அதிகாலை 5 மணிக்கு தான் தாக்குதல் நடக்கும் என்று சுட்டிக்காட்டும் ரசிகர்கள் இதன் தொடர்ச்சியாக 'சலார்' இருக்குமோ என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.






