search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kiara Advani"

    • 21.07 மில்லியன் லைக்குகளுடன் கோலியின் பதிவு இச்சாதனையை படைத்துள்ளது.
    • BTS உறுப்பினர் V-ன் பதிவு 21.01 மில்லியன் லைக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    உலகக்கோப்பையை வென்ற புகைப்படத்தை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம் 21.07 மில்லியன் லைக்குகளை கடந்து ஆசியாவிலேயே அதிக லைக் வாங்கிய புகைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

    ஆசியாவில் அதிக லைக்குகள் வாங்கிய இன்ஸ்டாகிராம் பதிவு என்ற BTS உறுப்பினர் V-ன் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

    V பதிவிட்டிருந்த தனது செல்லப்பிராணியின் புகைப்படங்கள் 21.01 மில்லியன் லைக்குகள் பெற்றிருந்த நிலையில், விராட் கோலி பதிவிட்ட டி20 உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்ட புகைப்படங்கள் 21.07 மில்லியன் லைக்குகள் பெற்றுள்ளது.

    இதற்கு முன்பு நடிகை கியாரா, சித்தார்த்தின் திருமண புகைப்படம் தான் இந்தியாவிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகள் வாங்கி சாதனை புடைத்திருந்தது. அந்த சாதனையை அண்மையில், விராட் கோலியின் டி20 உலகக்கோப்பை புகைப்படம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

    • 16.48 மில்லியன் லைக்குகளுடன் கோலியின் பதிவு இச்சாதனையை படைத்துள்ளது.
    • நடிகை கியராவின் திருமண பதிவு 16.26M லைக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், டி20 உலக கோப்பை வெற்றி தொடர்பான கோலியின் பதிவு, இன்ஸ்டாவில் அதிகம் லைக் செய்யப்பட்ட இந்தியரின் பதிவு என்ற சாதனையை படைத்துள்ளது. 16.48 மில்லியன் லைக்குகளுடன் கோலியின் பதிவு இச்சாதனையை படைத்துள்ளது.

    இதற்கு முன்பு, இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பதிவில் அதிகம் லைக் செய்யப்பட்ட போஸ்ட் என்ற பெருமையை கியாரா, சித்தார்த்தின் திருமணப் பதிவு பெற்றிருந்தது.

    தற்போது நடிகை கியராவின் திருமண பதிவு 16.26 மில்லியன் லைக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

    ஆலியா பட்டின் திருமணப் பதிவு 13.19 மில்லியன் லைக்குகளுடனும் கேத்ரினா கைஃபின் திருமணப் பதிவு 12.6 மில்லியன் லைக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

    • இவர் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார்.
    • தனது 50-வது படமான 'ராயன்' படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். மேலும், தனது 50-வது படமான 'ராயன்' படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். ராயன் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழ் தாண்டி இந்தியிலும் 'ராஞ்சனா', 'ஷமிதாப்', 'அத்ராங்கி ரே' ஆகிய படங்களில் தனுஷ் நடித்துள்ளார். இந்தியில் மீண்டும் ஆனந்த் எல்.ராயுடன், தனுஷ் இணைந்து தேரே இஷ்க் மெயின் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படம் ராஞ்சனா படத்தைப் போல் ஒரு காதல் காவியமாக உருவாகவுள்ளது.

    ஆனந்த எல் ராய் இயக்கத்தில் தனுஷ் இப்படத்தின் மூலம் மூன்றாவது முறை இணைந்து பணியாற்றவுள்ளார்.

    தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தொடங்கலாம் என்றும், முதல்கட்டமாக வாரணாசியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

     

    இந்நிலையில், காதலை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 77-வது கேன்ஸ் திரைப்பட விழா மே 14-ந்தேதி தொடங்கி வருகிற 25-ந்தேதி வரை 16 நாட்கள் நடக்கிறது.
    • இந்தியாவில் இருந்து பிரபல நடிகைகளான ஐஸ்வர்யா ராய், கியாரா அத்வானி, சோபிதா துபிபாபா உள்பட பலர் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

    77-வது கேன்ஸ் திரைப்பட விழா மே 14-ந்தேதி தொடங்கி வருகிற 25-ந்தேதி வரை 16 நாட்கள் நடக்கிறது. விழாவில் இந்திய திரை உலக பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளனர். சர்வதேச அளவிலான பல படங்கள் திரையிடப்படுகின்றன.

    இந்தியாவில் இருந்து பிரபல நடிகைகளான ஐஸ்வர்யா ராய், கியாரா அத்வானி, சோபிதா துபிபாபா உள்பட பலர் விழாவில் பங்கேற்றுள்ளனர். ஐஸ்வர்யாராய் சிவப்பு கம்பளத்தில் கையில் கட்டுடன் நடந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தார்.

    வெளிநாட்டு திரைப்பிரபலங்களான சாம்பியா, நடிகை சூசன் சார்பு, ஜெர்மனை சேர்ந்த பெபேக்காமிர், வாலன் புனா பஹிடே, பிரசிலின் லுமாக்ரோத், கிரேக்க மாடலான பகிங்ஸா நோமிகோ, பிரிட்டீஷ் நடிகை நதாலி இமானுவேல் உள்பட ஏராளமானோர் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

    விழாவில் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ள பிரபல இந்தி நடிகை கியாரா அத்வானி அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் கியாரா அத்வானி அளித்துள்ள பேட்டியில் என் சினிமா வாழ்க்கையில் இது ஒரு வரலாறாக இருக்க போகிறது. விழாவில் பங்கேற்று இருப்பது எனக்கு சிறந்த அனுபவம். இவ்வாறு அவர் கூறினார்.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்
    • ஷங்கருடன் இணைந்து இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

    நடிகர் ராம் சரண் தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகர் . இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் நடித்தார். RRR படம் மிகப் பெரிய படமாக அமைந்தது. அந்த படத்தில் வரும் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கேம் சேஞ்சர் படத்தில் நடித்துள்ளார். அரசியல் அதிரடி திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் படம் இதுவே. ஷங்கருடன் இணைந்து இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

    கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் ராம்சரண் இரு வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமன் இசையமைக்க திரு ஒளிப்பதிவு மேற்கொள்ள தில் ராஜு இப்படத்தை தயாரித்துள்ளார்.

    இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடலான ஜரகண்டி பாடல் நாளை காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளது. எக்ஸ் பக்கத்தில் #ஜரகண்டி என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
    • இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

    கவர்ச்சி நடிகையான கியாரா அத்வானியும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருவருக்கிடையே காதல் முறிவு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து விட்டதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி வந்தது.

    இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக கியாரா அத்வானியின் பிறந்தநாளை, அவரது காதலர் சித்தார்த் மல்ஹோத்ரா துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக கொண்டாடி பிரமிப்பூட்டினார். இதையடுத்து, காதலர்களான நடிகை கியாரா அத்வானியும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.


    கியாரா அத்வானி  -சித்தார்த் மல்ஹோத்ரா

    ராஜஸ்தானின் சூர்யகிரக் மண்டபத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் குடும்ப உறுப்பினர்களும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்நிலையில், கியாரா அத்வானி -சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியினருக்கு ஆர்.சி.15 படக்குழு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    கியாரா அத்வானி, ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் 'ஆர்.சி.15' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் கியாரா அத்வானியும் காதலித்து வந்தனர்.
    • இவர்களது திருமணம் நேற்று ராஜஸ்தானின் சூர்யகிரக் மண்டபத்தில் நடைபெற்றது.

    கவர்ச்சி நடிகையான கியாரா அத்வானியும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருவருக்கிடையே காதல் முறிவு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து விட்டதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி வந்தது.


    கியாரா அத்வானி -சித்தார்த் மல்ஹோத்ரா

    இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக கியாரா அத்வானியின் பிறந்தநாளை, அவரது காதலர் சித்தார்த் மல்ஹோத்ரா துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக கொண்டாடி பிரமிப்பூட்டினார். இந்நிலையில், காதலர்களான நடிகை கியாரா அத்வானியும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் நேற்று திருமணம் செய்துகொண்டனர்.


    கியாரா அத்வானி -சித்தார்த் மல்ஹோத்ரா

    ராஜஸ்தானின் சூர்யகிரக் மண்டபத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் குடும்ப உறுப்பினர்களும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். திருமண புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள கியாரா, "எங்களின் புதிய பயணத்தில் உங்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறோம்" என்று பதிவிட்டுளளார்.


    • நடிகை கியாரா அத்வானியும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வருகிறார்கள்.
    • இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கவர்ச்சி நடிகையான கியாரா அத்வானியும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வருகிறார்கள். இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இருவருக்கிடையே காதல் முறிவு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து விட்டதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக கியாரா அத்வானியின் பிறந்தநாளை, அவரது காதலர் சித்தார்த் மல்ஹோத்ரா ஆடம்பரமாக கொண்டாடி இருக்கிறார்.

     

    துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தனது காதலியின் பிறந்தநாளை, அவர் வியக்கும் அளவு பிரமாண்டமாக கொண்டாடி பிரமிப்பூட்டி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வாழ்த்துகளை பெற்று வருகிறது. காதலர்களான இருவரும் திருமண வாழ்க்கையில் விரைவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவீட்டாரும் திருமண பேச்சை தொடங்கி விட்டதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

     

    தற்போது கியாரா அத்வானி, ராம் சரண் ஜோடியாக ஷங்கர் இயக்கி வரும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மாவீரன்' படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் - கியாரா அத்வானி நடிப்பில் உருவாகும் காஞ்சனா படத்தின் இந்தி பதிப்பான லட்சுமிபாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
    லாரன்ஸ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘காஞ்சனா’. லாரன்சுக்கு ஜோடியாக ராய் லட்சுமியும், திருநங்கை வேடத்தில் சரத்குமாரும் நடித்திருந்தார்கள். காமெடி, ஹாரர் கலந்த திரில்லர் படமாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைதொடர்ந்து, ‘காஞ்சனா 2’, ‘காஞ்சனா 3’ பாகங்கள் வெளியாகிவிட்டது.

    தற்போது காஞ்சனா முதல் பாகம் இந்தியில் ‘லட்சுமி பாம்’ Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். சரத்குமார் வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். கதாநாயகியாக கியரா அத்வானி நடிக்கிறார்.


    படப்பிடிப்பு மும்பையில் நடந்து வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் அக்‌ஷய் குமார் பெண் வேடமேற்று மேக்கப் செய்யும்படி இருந்தது.

    படம் வருகிற ஜூன் 5 2020-ல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அண்ணன்களுக்கு அரணாய் நிற்கும் ராம்சரணின் ஆக்‌ஷன் சரவெடி - வினய விதேய ராமா விமர்சனம்
    கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பித்து ஓடும் 4 சிறுவர்கள் தண்டவாளத்திற்கு அருகில் ஒரு சிறு குழந்தை இருப்பதை பார்க்கிறார்கள். பின்னர் அந்த குழந்தையை எடுத்து வளர்க்கிறார்கள். அந்த குழந்தைக்காக 4 பேரும் சேர்ந்து உழைக்கிறார்கள். அந்த குழந்தை தான் ராம் சரண். அவரது அண்ணன்களாக பிரசாந்த் உள்ளிட்ட 4 பேர் வருகிறார்கள்.

    கொஞ்சம் பெரிய ஆளான பிறகு வேலைக்கு செல்லும் தனது அண்ணன்களை படிக்க அனுப்பிவிட்டு தான் வேலை பார்க்க ஆரம்பிக்கிறார் ராம் சரண். 4 அண்ணன்களும் படித்து பெரிய ஆளாகின்றனர். ராம் சரண் அடிதடி என்று ஊர் சுற்றி வருகிறார். இதில் கலெக்டராகும் பிரசாந்த்துக்கு சில பிரச்சனைகள் வருகின்றன.

    தனது அண்ணனுக்கு வரும் பிரச்சனைகளை ராம்சரண் எப்படி தடுக்கிறார்? அண்ணன்களுக்கு எப்படி அரணாகிறார்? என்பதே ஆக்‌ஷன் கலந்த மீதிக்கதை.



    படத்தில் ராம்சரண் முழு ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். அண்ணன்கள் மீது பாசம், காதல், அடிதடி என அவரது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். கியாரா அத்வானி அலட்டல் இல்லாமல் அழகாக வந்து செல்கிறார். பிரசாந்த் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தாலும், அவருக்கு இன்னும் வலுவான கதாபாத்திரம் கொடுத்திருக்கலாம்.

    மற்றபடி விவேக் ஓபராய், சினேகா, அர்யான் ராஜேஷ், மதுமிதா, ரவி வர்மா, ஹரிஷ் உத்தமன், சலபதி ராவ், ஈஷா குப்தா, மகேஷ் மஞ்ச்ரேக்கர் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.



    ஒரு முழு நீள ஆக்‌ஷன் படமாக இதை உருவாக்கி இருக்கிறார் பொயபடி ஸ்ரீனு. தெலுங்கு சினிமாவுக்கே உரித்தான ஆக்ஷன் காட்சிகளை படத்தில் பார்க்க முடிகிறது. ஆக்‌ஷன் காட்சிகள் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது. மற்றபடி குடும்பம், பாசம், காதல், காமெடி என ஆங்காங்கு ரசிக்கும்படியான காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. 

    தேவி ஸ்ரீ பிரசாத் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். தமிழில் பாடல்களும் கேட்கும் ரகம் தான். ரிஷி பஞ்சாபி, ஆர்தர் ஏ.வில்சனின் ஒளிப்பதிவு அருமை.

    மொத்தத்தில் `வினய விதேய ராமா' சரவெடி. #VinayaVidheyaRama #VinayaVidheyaRamaReview #RamCharan #KiaraAdvani

    பொயாபதி சீனு இயக்கத்தில் ராம்சரன் நடிப்பில் உருவாகி வரும் ‘வினய விதய ராமா’ படத்தில் பிராந்த் நடித்துள்ளதை பார்த்த அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்துள்ளனர். #VinayaVidheyaRaama #Prasanth
    ராம் சரண், கியாரா அத்வானி நடித்த ‘வினய விதய ராமா’ தெலுங்குப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை பொயாபதி சீனு இயக்கி உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசரைப் பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.

    படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் டீசரில் இரண்டு இடத்தில் வருகின்றன. அதில் ஒரு காட்சியில் ராம் சரணுக்கு பின்னால் நடந்து வரும் நான்கு பேரில் ஒருவராக பிரசாந்த் வருகிறார். இதைப் பார்த்த பிரசாந்த் ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை வருத்தத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.



    நடிகர் பிரசாந்த் ’வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை பல வெற்றிப் படங்களில் நடித்த பிரசாந்த் தமிழில் இதுவரை ஹீரோவாக மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #VinayaVidheyaRaama #Prashanth

    இணைய தொடரில் நடித்து மிகவும் பிரபலமான கியாரா அத்வானி, இனிமேல் சினிமாவில் மட்டும்தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். #KiaraAdvani
    விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தில் இந்தி நடிகை கியாரா அத்வானியை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கியாரா நடித்த இணைய தொடர் ஒன்று சர்ச்சையானது. பாலியல் தேவைகள், அதில் உள்ள முரண்பாடுகள் குறித்து உருவான அந்தப் படத்தில் கரண் ஜோஹர் இயக்கிய அத்தியாயத்தில் கியாரா அத்வானி நடித்திருந்தார். 

    அந்த படத்தில் அவரது நடிப்பு, பாராட்டுகளைப் பெற்றதுடன் சர்ச்சைகளையும் சந்தித்தது. “இது போன்று நடந்துவிடக்கூடாது என்பதற்காக தான் இணைய தொடர்களில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளேன். ஒருவேளை லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தை கரன் ஜோகர் இயக்கவில்லை என்றால் நான் நடித்திருப்பது சந்தேகமே. 



    தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வந்தாலும் நான் திரைப்படங்களில் மட்டுமே நடிப்பேன். இனி இணைய தொடர் பக்கம் செல்ல விருப்பம் இல்லை’’ என்று கூறி இருக்கிறார்.
    ×