என் மலர்
நீங்கள் தேடியது "Anirudh"
- திரையரங்குகளில் பிரத்யேகமாக அரசன் படத்தின் ப்ரோமோ இன்று திரையிடப்பட்டது.
- அரசன் ப்ரோமோ நாளை காலை 10.07க்கு அரசன் படம் யூடியூபில் வெளியாகிறது
நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார்.
இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன்மூலம் சிம்பு மற்றும் வெற்றிமாறன் உடன் முதல்முறையாக அனிருத் கூட்டணி சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், இன்று மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக அரசன் படத்தின் ப்ரோமோ திரையிடப்பட்டது. இந்த ப்ரோமோ சிறப்பாக உள்ளதாக பார்த்த ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த ப்ரோமோவில் இயக்குநர் நெல்சன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். நெல்சனிடம் நான் கூறிய கதையில் தனுஷை நடிக்க வைங்க சார் என்று சிம்பு பேசிய வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த ப்ரோமோ நாளை காலை 10.07க்கு அரசன் படம் யூடியூபில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசன் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
- இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது.
நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார்.
இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன்மூலம் சிம்பு மற்றும் வெற்றிமாறன் உடன் முதல்முறையாக அனிருத் கூட்டணி சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், இன்று மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக அரசன் படத்தின் ப்ரோமோ திரையிடப்பட்டது. இந்த ப்ரோமோ சிறப்பாக உள்ளதாக பார்த்த ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த ப்ரோமோ நாளை காலை 10.07க்கு அரசன் படம் யூடியூபில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- LIK படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.
- நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இப்படத்தில் நடித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கும் LIK படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்ட்டது. பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டூட்' படம் அதே நாளில் வெளியாவதால் Lik படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்தது. அதனை தொடர்ந்து, Lik படம் டிசம்பர் மாதம் 18-ந்தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டரை 'LIK' படக்குழு வெளியிட்டுள்ளது.
- 'அரசன்' படத்தின் ப்ரோமோ நாளை காலை 10.07க்கு அரசன் படம் யூடியூபில் வெளியாகிறது.
- இன்று மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக ப்ரோமோ திரையிடப்படுகிறது.
நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார்.
இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 'அரசன்' படத்தின் ப்ரோமோ நாளை காலை 10.07க்கு அரசன் படம் யூடியூபில் வெளியாகிறது.
முன்னதாக, இன்று மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக ப்ரோமோ திரையிடப்படுகிறது. குறிப்பிட்ட திரையரங்குகளில் டிக்கெட் கட்டணமாக ரூ.15 செலுத்தி ப்ரோமோவைக் காணலாம்.
இந்நிலையில், அரசன் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். இதன்மூலம் சிம்பு மற்றும் வெற்றிமாறன் உடன் முதல்முறையாக அனிருத் கூட்டணி சேர்ந்துள்ளார்.
- தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத்.
- தனுஷ் நடித்து வெளியான ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உள்ள தனுஷ் தற்போது இயக்கி நடித்துள்ள படம் 'இட்லி கடை. இப்படம் கடந்த 1-ந்தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தனுஷ் அடுத்து நடிக்க உள்ள படம் மீதான எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில், 'லப்பர் பந்து' படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், டான் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் இணைந்துள்ள தனுஷ்- அனிருத் காம்போ ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் வெளியான தனுஷின் 'இட்லி கடை' மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி' படத்தையும் டான் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. தற்போது மீண்டும் தனுஷின் படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் தனுஷ் நடித்து வெளியான '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி', 'மாரி', 'தங்கமகன்', 'திருச்சிற்றம்பலம்' போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்த பாடல்களால் இருவரின் கூட்டணிக்காகவே ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு பிறகு இவர்கள் கூட்டணி எப்போது அமையும் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு தற்போது கிடைத்துள்ள இன்ப செய்தியால் உற்சாக மிகுதியில் உள்ளனர்.
- தேவரா படம் முதல் நாளிலேயே ரூ.172 கோடி வசூலை பெற்றது.
- உலகம் முழுவதும் தேவரா படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த தேவரா படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜான்விகபூர் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் தென்னிந்திய திரை உலகில் ஜான்வி கபூர் முதல் முறையாக அறிமுகமானார்.
தேவரா படம் முதல் நாளிலேயே ரூ.172 கோடி வசூலை பெற்றது. மூன்று நாட்களில் 307 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. உலகம் முழுவதும் இப்படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
இந்நிலையில், தேவரா படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தேவரா 2 படத்தின் அறிவிப்பை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். படத்தில் இடம் பெற்ற சலம்பல பாடல் ஹிட்டானது. பலரும் அதில் வரும் ஹூக் ஸ்டெப்பை இணையத்தில் ரீல்ஸாக பதிவிட்டனர். இந்நிலையில் சலம்பல பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.
படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். திரைப்படம் இதுவரை 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற தங்கபூவே பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.
படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி திரைப்படம் 12.8 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
#Madharaasi begins its RAMPAGE at the box office ??Day 1 GROSS of 12.8 CRORES in Tamil Nadu and a blockbuster weekend loading with massive bookings all over ???Book your tickets now!?️ https://t.co/DiYIeLe7q1#MadharaasiMadness #BlockbusterMadharaasi pic.twitter.com/MRTgB1AGHS
— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) September 6, 2025
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்த நிலையில், படம் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியானது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிக்கிடு பாடலின் ப்ரோமோ வீடியோ படம் வெளியாவதற்கு முன்பே வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில், டி.ராஜேந்திரன், அனிருத், சாண்டி ஆகியோர் துள்ளலாக நடமாடி இருப்பர்
இந்நிலையில், சிக்கிடு பாடலின் ஒரிஜினல் வீடியோ இன்று யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.
கதைக்களம்
சிறுவயதிலேயே தன் கண்முன்னே குடும்பத்தை இழந்த நாயகன் சிவகார்த்திகேயன், டெலியுசன் என்ற மன நோயால் பாதிக்கப்படுகிறார். அதாவது யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று நினைத்து காப்பாற்றி வருகிறார். இவரது குணத்தை அறிந்த நாயகி ருக்மணி வசந்த், சிவகார்த்திகேயனை காதலிக்க ஆரம்பிக்கிறார். இருவரும் காதலித்து வரும் நிலையில் சிவகார்த்திகேயனுக்கு மனநிலை சரியாகி விடுகிறது. ஆபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றாமல் விட்டுவிடுகிறார்.
சிவகார்த்திகேயன் மற்றவர்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து ருக்மிணி வசந்த் அவரை விட்டு பிரிகிறார். இதனால் வாழ்க்கையை வெறுக்கும் சிவகார்த்திகேயன் தற்கொலை செய்ய முயற்சி செய்கிறார். இதே சமயம் சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் துப்பாக்கிகளை வித்யூத் ஜமால், சபீர் கும்பல் கடத்தி வந்து, ஒரு பெரிய தொழிற்சாலையில் துப்பாக்கிகளை பதுக்கி வைக்கிறார்கள்.
தற்கொலை செய்ய நினைக்கும் சிவகார்த்திகேயனை, அந்த தொழிற்சாலை மற்றும் துப்பாக்கிகளை அழிக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் பணயம் வைக்கிறார்கள். இறுதியில் சிவகார்த்திகேயன், தொழிற்சாலையை அழித்தாரா? காதலி ருக்மிணி வசந்த்துடன் இணைந்தாரா? வித்யூத் ஜமால், சபீர் இருவரும் சிவகார்த்திகேயனை என்ன செய்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சிவகார்த்திகேயன், துறுதுறு இளைஞனாக நடித்து அசத்தி இருக்கிறார். நாயகியுடன் காதல், எதிரிகளுடன் சண்டை, டைமிங் காமெடி என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக மருத்துவமனையில் நோயாளிகளை காப்பாற்றும் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ருக்மிணி வசந்த், அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். சிவகார்த்திகேயனை அடிப்பது, கண்டிப்பது, அரவணைப்பது, சிவாவை நினைத்து வருந்துவது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.
வில்லத்தனத்தில் வித்யூத் ஜமால், சபீர் இருவரும் மிரட்டி இருக்கிறார்கள். என்.ஐ.ஏ அதிகாரியாக வரும் பிஜு மேனன் மற்றும் விக்ராந்த் ஆகியோர் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இயக்கம்
துப்பாக்கி கலாச்சாரம் தமிழ்நாட்டில் வர வேண்டும் என்று நினைக்கும் தீவிரவாதத்திற்கும், அதை தடுக்க நினைக்கும் என்.ஐ.ஏ க்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த போராட்டத்திற்கு இடையே காதல், காமெடி, சென்டிமென்ட் என ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் படத்தை கொடுத்து இருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்.
இசை
அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.
ஒளிப்பதிவு
சுதீப் எலமான் ஒளிப்பதிவு சிறப்பு.
தயாரிப்பு
ஸ்ரீ லட்சுமி மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ரேட்டிங் - 3.75/5
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான மதராஸி படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று மாலை முதல் தொடங்க இருக்கிறது.
மதராஸி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைப்பெற்றது. அப்போது சிவகார்த்திகேயன் தெலுங்கு மொழியில் ரசிகர்களிடம் பேசி அசத்தினார் அவர் கூறியதாவது " எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. மகேஷ் பாபு , சிரஞ்சீவி போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கியவர் அவருடைய படத்தில் நான் நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அவருக்கும் மிகபெரிய நன்றி" என கூறினார்.






