என் மலர்
சினிமா செய்திகள்

தெலுங்கில் அனிருத்துக்கு எளிதாக பட வாய்ப்பு கிடைக்கிறது, ஆனால்... இசையமைப்பாளர் தமன் ஆதங்கம்
- தெலுங்கு சினிமாவில் அனிருத்துக்கு எளிதாக பட வாய்ப்பு கிடைக்கிறது.
- எனக்கு தமிழில் பட வாய்ப்பு கிடைப்பதில்லை
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா). இவர் நடித்து கடந்த 2021-ல் வெளியான படம் அகண்டா. இப்படம் ஹிட் அடித்தநிலையில், இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. போயபதி ஸ்ரீனு படத்தை இயக்கியுள்ளார்.
ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இதில், சம்யுக்தா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதி வில்லன் ரோலில் நடித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ள இப்படம் கடந்த வாரம் வெளியானது. கலவையான விமர்சங்களை பெற்றுள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.
இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை என்று இசையமைப்பாளர் தமன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
அகண்டா 2 பட நிகழ்கை ஒன்றில் பேசிய தமன், "தெலுங்கு சினிமாவில் அனிருத்துக்கு எளிதாக பட வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் எனக்கு தமிழில் பட வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவில் இருக்கும் வலுவான ஒற்றுமை, தெலுங்கு சினிமாவில் இல்லை. பிற மொழி இசையமைப்பாளர்கள் தெலுங்கு சினிமாவில் அதிகமாக சம்பாதிக்கின்றனர். அவர்கள் தெலுங்கு படங்கள் மீதான விருப்பத்தால் வேலை செய்யவில்லை. பணத்திற்காக வேலை செய்கிறார்கள்" என்று தெரிவித்தார்.






