என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றிமாறன்"

    • மனுசி திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் அறம் படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் கோபி நயினார். இவர் இயக்கிய அறம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார்.

    இயக்குநர் கோபி நயினாரின் அடுத்த படம் "மனுசி" என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை வெற்றி மாறன் தயாரித்துள்ளார். இயக்குநரின் முதல் படத்தை போன்றே இந்த படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை கொண்டிருக்கிறது. இதில் ஆன்ட்ரியா ஜெர்மியா நடித்துள்ளார்.

    இளையராஜா இசையமைத்துள்ள மனுசி படத்தின் டிரெயிலரை நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் கடந்த ஆண்டு வெளியிட்டார்.

    இப்படத்தில் நடிகர் நாசர், தமிழ் மற்றும் ஹக்கிம் ஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறம் படத்தை போன்றே இப்படமும் சமூக பிரச்சினைகளை பேசும் கதைக்களம் கொண்டிருக்கும் என்பது டிரெயிலரில் தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே, மனுசி திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மாநில அரசை மோசமாக சித்தரித்து உள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தணிக்கை சான்று மறுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு எதிராக தயாரிப்பாளர் வெற்றிமாறன் மனு தாக்கல் செய்தார்.

    அதில், நிபுணர் குழு அமைத்து 'மனுசி' படத்தை மீண்டும் தணிக்கை செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரியும், பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    மேலும்,"பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சியை எடிட் செய்ய தயார. படத்தை மறுஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், மனுசி திரைப்படத்தை பார்வையிட்டு இன்று மறு ஆய்வு செய்யப்படும். திரைப்படத்தின் ஆட்சேபகரமான காட்சிகள் வசனங்கள் குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் உறுதி அளித்துள்ளது. 

    • மாநில அரசை மோசமாக சித்தரிப்பு உள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் என மறுப்பு.
    • மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் அறம் படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் கோபி நயினார். இவர் இயக்கிய அறம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார்.

    இயக்குநர் கோபி நயினாரின் அடுத்த படம் "மனுசி" என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை வெற்றி மாறன் தயாரித்துள்ளார். இயக்குநரின் முதல் படத்தை போன்றே இந்த படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை கொண்டிருக்கிறது. இதில் ஆன்ட்ரியா ஜெர்மியா நடித்துள்ளார்.

    இளையராஜா இசையமைத்துள்ள மனுசி படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் கடந்த ஆண்டு வெளியிட்டார்.

    இப்படத்தில் நடிகர் நாசர், தமிழ் மற்றும் ஹக்கிம் ஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறம் படத்தை போன்றே இப்படமும் சமூக பிரச்சினைகளை பேசும் கதைக்களம் கொண்டிருக்கும் என்பது டிரைலரில் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், மனுசி திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மாநில அரசை மோசமாக சித்தரிப்பு உள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தணிக்கை சான்று மறுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு எதிராக தயாரிப்பாளர் வெற்றிமாறன் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில், நிபுணர் குழு அமைத்து 'மனுசி' படத்தை மீண்டும் தணிக்கை செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரியும், பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    மேலும்,"பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சியை Edit செய்ய தயார்; படத்தை மறுஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    • மாமன்' படத்திற்கு பிறகு நடிகர் சூரி `மண்டாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார்
    • இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார்.

    மாமன்' படத்திற்கு பிறகு நடிகர் சூரி `மண்டாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோ இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

    மண்டாடி என்பவர் நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படத்தில் சூரி ஒரு மீனவனாக நடித்துள்ளார். மேலும் இப்படம் கடலில் நடக்கும் படகு விளையாட்டு போட்டியை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

    சூரி இப்படத்தில் முத்துகாளி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் நாயகியாக மகிமா நம்பியார் நடிக்கிறார் மேலும் சத்யராஜ், சாச்சனா, அச்யுத் குமார், ரவிந்தர விஜய், சுகாஸ் நடிகின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    தெலுங்கு நடிகரான சுகாஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். இவர் இப்படத்தில் புலி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நாளை காலை 11.07 மணிக்கு படத்தின் தெலுங்கு மொழியின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சுகாஸின் கதாப்பாத்திர போஸ்டரை வெளியிடவுள்ளனர்.

    • தலைவர்கள் என்பவர்கள் மக்களோடு மக்களாக நின்று சண்டை போட்டு, அந்த மக்களுக்கான விடுதலையை வென்று எடுத்து கொடுப்பவர்கள்.
    • ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் ஒரு தலைவர் அவர் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்னாடி போய் நிற்கிறார்.

    மதுரையில் நடைபெற்றுவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன் கூறியதாவது:

    தலைவர்கள் என்பவர்கள் மக்களோடு மக்களாக நின்று சண்டை போட்டு, அந்த மக்களுக்கான விடுதலையை வென்று எடுத்து கொடுப்பவர்கள். அந்த தலைவர்களை நமக்கு தெரியவே இல்லை. அது மாதிரி நமக்கு ஆயிரக்கணக்கான தலைவர்கள் இருக்கிறார்கள். இங்கேயே இருக்கிறார்கள்.

    ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் ஒரு தலைவர் அவர் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்னாடி போய் நிற்கிறார். அடுத்த தலைமுறையை உருவாக்குகிறார். அடுத்த தலைமுறையும் ஒரு பிரச்சனை என்றால் முன்னால் நின்று கேள்வி கேட்க போகிறார்கள்.

    விடுதலைக்கு முன்பு சினிமா மாணவனாக இருந்த நான் இப்போது ஒரு மார்க்சிஸ்ட் மாணவனாகவும் இருக்கிறேன்.

    எந்த ஒரு சமூக அமைப்பும் மார்க்சிய கட்டமைப்பு மேல் கட்டமைக்கப்படவில்லை என்றால் ஏதோ கட்டத்தில் மக்களுக்கு எதிர்நிலையில் போய் நின்று விடும் என்பது என்னுடைய புரிதலாக உள்ளது.

    இதெல்லாம் 4 ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்ட விஷயம் என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது.
    • இப்புகைப்படங்களை மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பகிர்ந்துள்ளார்.

    மதுரையில் நடைபெற்றுவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இயக்குநர்கள் வெற்றிமாறன், சமுத்திரக்கனி, ஞானவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    அப்போது கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை சந்தித்து சமுத்திரக்கனி, ஞானவேல் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    இதனையடுத்து மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸ் சிலையுடன் சமுத்திரக்கனி மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    இப்புகைப்படங்களை மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
    • படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார்.

    வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் ரோட்டர்டாமின் மதிப்பிற்குரிய விருதான NETPAC விருதை இப்படம் வென்றது. திரைப்படத்தின் முதல் பாடலான "ப்ளீஸ் என்ன அப்படி பாக்காதே" பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கேபர் வாசுகி வரிகளில் மாளவிகா மனோஜ் பாடியுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் பொல்லாதவன்.
    • இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

    இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான படம் பொல்லாதவன். இப்படத்தில் தனுஷ் மற்றும் திவ்யா ஸ்பந்தனா இணைந்து நடித்திருந்தனர். மேலும் டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், சந்தானம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

     

    இந்நிலையில் இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர்கள் தனுஷ் மற்றும் திவ்யாஸ்பந்தனா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து நடிகை திவ்யா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் இதுவரை பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
    • விடுதலை படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டு சண்டை பயிற்சியாளர் உயிழந்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

     

    விடுதலை

    விடுதலை

    இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

     

    விடுதலை

    விடுதலை

    கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

     

    படப்பிடிப்பில் உயிரிழந்த சண்டை பயிற்சியாளர்

    படப்பிடிப்பில் உயிரிழந்த சண்டை பயிற்சியாளர்

    இந்நிலையில் சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்று வந்த 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பின்போது ரோப் கயிறு அறுந்து விழுந்து சுரேஷ் என்ற சண்டை பயிற்சியாளர் உயிரிழந்துள்ளார். ரோப் கயிறு அறுந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரழந்துள்ளார். 

    • சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் தற்போது விஜய் ஆண்டனி ரத்தம் படத்தில் நடித்து வருகிறார்.
    • ‘ரத்தம்’ திரைப்படத்தின் டீசரில் 3 முன்னனி இயக்குனர்கள் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    நடிகர் சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்படம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். மேலும் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படத்திற்கு 'ரத்தம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

     

    வெற்றிமாறன் - பா.இரஞ்சித் - வெங்கட் பிரபு

    வெற்றிமாறன் - பா.இரஞ்சித் - வெங்கட் பிரபு

    இந்த படத்தின் டீசர் வரும் 5-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் முன்னனி இயக்குனர்களான வெற்றிமாறன், பா.இரஞ்சித், வெங்கட் பிரபு ஆகிய 3 பேரும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் 'ரத்தம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் இந்த திரைப்படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • இயக்குனர் வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரோப் கயிறு அறுந்து விழுந்த சுரேஷ் என்ற சண்டை கலைஞர் உயிர்ழிந்தார்.

    வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

     

    விடுதலை

    விடுதலை

    இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 3-ம் தேதி சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது ரோப் கயிறு அறுந்து விழுந்து சுரேஷ் என்ற சண்டை கலைஞர் உயிரிழந்தார். ரோப் கயிறு அறுந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். இவரின் இறப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

     

    விடுதலை

    விடுதலை

    இந்த விபத்து குறித்து விடுதலை பட தயாரிப்பு நிறுவனம் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சண்டை கலைஞர் சுரேஷ் 'விடுதலை' படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தது மிகப்பெரிய வருத்தத்தையும், வலியையும் ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட முதலுதவி சிகிச்சை போன்ற முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், சுரேஷை காப்பாற்ற முடியாதது மிகப்பெரிய இழப்பு.

     

    பட தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

    பட தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

    இந்த சம்பவம் எங்களது இதயத்தில் மாறாத வலியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த சண்டை கலைஞர் சுரேஷ் மற்றும் அவருடைய குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
    • சமீபத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பேட்டைக்காளி வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன், தற்போது 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை இயக்க உள்ளார். இதனிடையே பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், வெற்றிமாறன் இயக்கவுள்ள புதிய வெப் தொடரில் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

     

    பி.சி.ஸ்ரீராம்

    பி.சி.ஸ்ரீராம்

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வெற்றிமாறன் அடுத்ததாக ஒரு வெப் தொடரை எழுதி, அதனை தயாரிக்க உள்ளார். அதில், நான் பணியாற்ற உள்ளேன்.ஏற்கனவே வெற்றிமாறன் தயாரித்த பேட்டைக்காளி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விஜய்சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.
    • விடுதலை, ரத்த சாட்சி ஆகிய இரண்டு படங்கள் ஒரே கதை சாயலில் தயாராகி இருப்பதாக வலைத்தளத்தில் சர்ச்சை கிளம்பி உள்ளது.

    விஜய்சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். ரத்த சாட்சி என்ற படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமாரவேல், கல்யாண், ஆறுபாலா, வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வசந்தபாலனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரபிக் இஸ்மாயில் இயக்கியுள்ளார்.

     

    விடுதலை

    விடுதலை

    இப்படத்தின் டிரைலர் வெளியாகி, வெற்றிமாறனின் விடுதலை படம் போன்ற கதையம்சத்தில் இருப்பதாக வலைத்தளத்தில் பலரும் பதிவிட்டு வந்தனர். இரண்டு படங்களுமே நக்சலைட்களுக்கும், போலீசுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளை பேசும் படமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

     

    ரத்தசாட்சி

    ரத்தசாட்சி

    இதுகுறித்து இயக்குனர் ரபிக் இஸ்மாயில் கூறும்போது, ''இரண்டு படங்களும் ஒரே விஷயத்தை பேசினாலும் கதைக்களமும், படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களும் வெவ்வேறானவை. ரத்த சாட்சி ஆயுத போராட்டத்தை நியாயப்படுத்தாமல் அமைதியை வலியுறுத்தும் படமாக இருக்கும்" என்றார். 

    ×