என் மலர்
நீங்கள் தேடியது "Vetrimaran"
- இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். சமீபத்தில் விடுதலை இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதனை சூரி தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விடுதலை இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாகவும் இவர்கள் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு சிறுமலை என்ற பகுதியில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான 'அசுரன்' திரைப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விடுதலை முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
- இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என இயக்குனர் வெற்றிமாறன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், 'விடுதலை -2' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக நடிகர் சூரி தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
- உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படம் உதயநிதியின் கடைசி படமாக அறிவித்துள்ளார்.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். அதன்பின்னர் நண்பேன்டா, கெத்து, மனிதன், சைக்கோ, கலகத் தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் உதயநிதியின் கடைசி படமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் உதயநிதி சமீபத்திய பேட்டியில், கமல் புரொடக்ஷன்ஸில் நான் நடிக்கவிருந்த கடைசி படத்திற்கு வெற்றிமாறன் திரைக்கதை எழுத வேண்டியதாக இருந்தது. எதிர்பாராத விதமாக அது நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.
- தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
- இப்படத்தின் இடண்டாம் பாகம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் பேசியுள்ளார்.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன், விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வடசென்னை. இதில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

திரையரங்கில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாப்பாத்திரம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. மேலும் ராஜன் கதாப்பாத்திரத்தை தனி படமாக வெளியிட வேண்டும் என்று ரசிகர்களின் விருப்பமாக இன்றுவரை இருக்கிறது. அதேபோல் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என்றும் பலரின் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவில் கலந்து கொண்ட வெற்றிமாறன், வடசென்னை 2 படம் குறித்து பேசியுள்ளார். அதில், தற்போது விடுதலை 2ஆம் பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு வாடிவாசல் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அதன்பின் வடசென்னை 2 ஆம் பாகத்தை இயக்குவேன் என்று உறுதியளித்தார். இந்த அறிவிப்பு வடசென்னை 2 படத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
- விஜய் நேற்று நிகழ்ச்சியில் அசூரன் பட வசனம் பேசியிருந்தார்.
- இது குறித்து வெற்றிமாறனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் விஜய் பேசியது பலரின் கவனத்தை ஈர்த்தது. அதில், சமீபத்தில் ஒரு படத்தில் ஒரு அழகான வசனம் நான் கேட்டேன். கார்டு இருந்தால் எடுத்துகிடுவானுங்க, ரூபா இருந்தா பிடுங்கிடுவானுங்க, ஆனா படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுத்துக்கொள்ளவே முடியாது என்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசூரன் பட வசனத்தை விஜய் பேசியிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறனிடம், அசூரன் படத்தில் இடம்பெற்ற வசனத்தை நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் பேசியிருந்தார், இதனை எவ்வளவு முக்கியமானதாக நீங்கள் பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது? இதற்கு வெற்றிமாறன் அளித்த பதில், ஒரு சினிமாவில் நாம் சொல்கின்ற ஒரு விஷயம், சமூகத்துல மிக முக்கியமான ஒரு நபரிடம் போய் சென்றடையும் பொழுது அதனுடைய தாக்கம் என்னவாக இருக்கும் என்பதற்கான ஒரு மிக பெரிய உதாரணம் தான் இது.

மேலும் அம்பேத்கர், பெரியாரை படிக்க வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார் என்ற கேள்விக்கு, அந்த மேடையில் அவர் சொன்னது, அனைவரும் அவர்களை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே. அம்பேத்கர், பெரியார், காமராஜர் மற்றும் அண்ணாவையும் படிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.
- நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாடிவாசல்
இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கிறார். ஆனால், வெற்றிமாறன், சூரி நடிப்பில் வெளியான 'விடுதலை' திரைப்படத்தில் கவனம் செலுத்தி வந்ததால் சூர்யா கங்குவா படத்தில் நடிக்கத் தொடங்கினார். 'விடுதலை' படப்பிடிப்பு முடிந்ததும் 'வாடிவாசல்' படப்பிடிப்பு தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 'விடுதலை' இரண்டாம் பாகம் பணிகளில் வெற்றிமாறன் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளதால் 'வாடிவாசல்' படப்பிடிப்பு மீண்டும் தள்ளிப் போகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
- இப்படத்தின் இடண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை சந்தோஷ் நாராயணன் கொடுத்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வடசென்னை. தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். திரையரங்கில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

வடசென்னை
இதில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாப்பாத்திரம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. மேலும் ராஜன் கதாப்பாத்திரத்தை தனி படமாக வெளியிட வேண்டும் என்றும் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. அதேபோல் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என்றும் பலரின் கோரிக்கையாக உள்ளது.

வடசென்னை
இந்நிலையில் 'வடசென்னை' படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சமீபத்திய பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், 'வடசென்னை' படத்தில் அமீரின் ராஜன் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து 'ராஜன் வகையறா' என்ற படத்தை வெற்றிமாறன் தயாராக வைத்துள்ளார். 2 மணி நேரத்திற்கும் மேலாக இருக்கும் இந்த படத்தை தயவு செய்து வெற்றிமாறன் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த படம் ரிலீஸ் ஆனால் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறினார்.
- நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
- இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.
'கர்ணன்' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் 'மாமன்னன்'. இப்படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தில் தலைவருமான கமல்ஹாசன், இயக்குனர்கள் பா.இரஞ்சித், வெற்றிமாறன், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, நடிகர்கள் வடிவேலு, சிவகார்த்திகேயன், சூரி, இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, "சமூக நீதியை பேசுகிற படங்களை எடுத்து, சமூக நீதிக்காக போராடுவதும், சமூக நீதிக்கு எதிரானவர்களை எதிர்ப்பதும் தமிழ்நாட்டில் மட்டும் தான். மாமன்னன் என்கிற தலைப்பின் கதாப்பாத்திரத்தை வடிவேலு நடித்திருக்கிறார். நாம் எல்லோரும் அவருடைய காமெடியை ரசித்திருப்போம். அவரை இப்போது சீரியஸான நடிப்பில் பார்க்கப்போகிறோம். வடிவேலுவின் நிலப்பரப்பை மையப்படுத்திய வசனங்களால் ஒரு ஊரை அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறார். சமூக நீதியை சினிமா பேசியதால் தான் நீதி கிடைக்கிறது" என்று அவர் கூறினார்.
- வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘விடுதலை’.
- இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

விடுதலை போஸ்டர்
இந்நிலையில், 'விடுதலை' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நாளை (ஏப்ரல் 28) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் ஒடிடி வெர்ஷனில் திரையரங்கில் வெளியான வெர்ஷனில் இடம்பெறாத சில பிரத்யேக காட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதனை ஓடிடி தளம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Witness the uncut, unseen, unbelievable extended version of #ViduthalaiPart1 Director's cut on zee5tamil premiers on 28th April.#VetriMaaran @ilaiyaraaja @VijaySethuOffl @sooriofficial @rsinfotainment @BhavaniSre @GrassRootFilmCo @VelrajR @dirrajivmenon pic.twitter.com/u9F3QHKm3q
— ZEE5 Tamil (@ZEE5Tamil) April 27, 2023
- வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ’விடுதலை’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'காட்டு மல்லி' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இளையராஜா மற்றும் அனன்யா பாட் பாடியுள்ள இந்த பாடலின் லிரிக் வீடியோ முன்பே வெளியாகி கவனம் பெற்றதையடுத்து தற்போது இப்பாடலின் வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.