என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vetrimaran"

    • சமீபத்தில் அரசன் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
    • கோவில்பட்டியில் அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'அரசன்'. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    கோவில்பட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் புரோமோ வீடியோவின் BTS வீடியோவை சிம்பு வெளியிட்டுள்ளார் .

    • அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'அரசன்'. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    கோவில்பட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது, ரேஸிங் களத்தில் அஜித்குமாருடன் சிம்பு எடுத்த புகைப்படத்தை பிரேம் செய்து சிம்புவிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்கினர்.

    அண்மையில் மலேசியா சென்ற சிம்பு அங்கு ரேஸிங் களத்தில் அஜித்குமாரை சந்தித்து பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
    • கோவில்பட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'அரசன்'. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    கோவில்பட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'அரசன்' படத்தில் நடிகை யோகலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மற்றும் 'ஹார்ட் பீட்' தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை யோகலட்சுமி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    • தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் 'மாஸ்க்'. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

    இப்படத்தில் தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படம் தொடர்பான டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து 'மாஸ்க்' படம் கடந்த 21-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது.

    இந்த நிலையில், 'மாஸ்க்' படம் பாக்ஸ் ஆபிஸில் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 'மாஸ்க்' படம் ரூ.5 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

    • ‘மாஸ்க்’ படம ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • மோசடிக்காரர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களை குறிவைக்கின்றனர்.

    அறிமுக இயக்குநர் விகர்னன் அசோக் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் 'மாஸ்க்'. முன்னணி நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். ரூ.440 கோடி பணம் கொள்ளைப் போனதை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ள இப்படம் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பாக்ஆபிசில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

    இதனிடையே, பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னையும் தனது குடும்பத்தினரையும் பாதித்த ஒரு நிஜ வாழ்க்கை ரியல் எஸ்டேட் மோசடியில் இருந்துதான் மாஸ்க் படத்திற்கான யோசனை வந்ததாக இயக்குநர் விகர்னன் அசோக் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், இது என் வாழ்க்கையில் நடந்தது. நான் ஒரு ரியல் எஸ்டேட் மோசடியில் பாதிக்கப்பட்டேன். இதுபோன்ற மோசடிக்காரர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களை குறிவைக்கின்றனர்.

    மோசடி கும்பல் விரும்பும் மக்கள், நம்பிக்கையுடன் நடுத்தர வர்க்கத்தினரை ஏமாற்றத் தேர்வு செய்கிறார்கள், ஏனெனில் இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் பதிலடி கொடுக்கத் தயங்குவார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அன்றாடப் பொறுப்புகள் காரணமாக பலர் எதிர்ப்பு தெரிவிப்பதையோ அல்லது எதிர்த்துப் போராடுவதையோ கடுமையாக்குகின்றன.

    படித்தவர்கள் ஏமாற்றப்படும்போது, அவர்கள் கோபப்படுவது உறுதி. ஆனால், அவர்களால் எதிர்வினையாற்ற முடியாது. அந்த நிலையில் உள்ள ஒருவருக்கு இறுதியாக பதிலடி கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தால் என்ன நடக்கும் என்ற யோசனையால் வந்தக் கேள்வி இறுதியில் மாஸ்க்கின் முன்மாதிரியாக வளர்ந்தது என்றார்.

    இதனிடையே, மோசடிக்காரர்களால் ஏமாற்றப்பட்ட பணத்தை கிடைத்ததா? என்ற கேள்விக்கு இயக்குநர் விகர்னன் அசோக், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் 2025 இல், எங்கள் பணம் திரும்ப கிடைத்தது என்றார்.

    • ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
    • டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

    அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் 'மாஸ்க்'. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

    இப்படத்தில் தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    தேர்தலில் விநியோகிக்க வைத்திருந்த ரூ.440 கோடி பணம் கொள்ளைப் போனதை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.

    இப்படம் தொடர்பான டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து 'மாஸ்க்' படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது.

    இந்த நிலையில், 'மாஸ்க்' படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் ரூ.1.5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உலகளவில் இப்படம் 2 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி நேற்றுமுன்தினம் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமும் 'மாஸ்க்' தான். இதன்மூலம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 திரைப்படமாக 'மாஸ்க்' அமைந்திருக்கிறது.

    கடைசியாக கவின் நடிப்பில் வெளியான 'கிஸ்' திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் ரூ.40 லட்சம் மட்டுமே வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மாஸ்க் படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
    • தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கவின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த லிப்ட், டாடா, ஸ்டார் உள்ளிட்ட படங்கள் கவினுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. சமீபத்தில் வெளியான கிஸ் திரைப்படம் கவலையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

    கிஸ் படத்தை தொடர்ந்து, கவின் அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் மாஸ்க் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், மாஸ்க் படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 21-ந் தேதி உலகளவில் இந்த திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    படம் அன்பு மட்டும் அண்டம் தேடும் ' என்ற டேக்லைனையும் கதையையும் கொண்டுள்ளது.

    திரவ் இயக்கத்தில், அப்பா- மகள் இடையேயான அழகான உறவை திரையில் பிரதிபலிக்கும் கதையாக "மெல்லிசை" உருவாகியுள்ளது. இப்படத்தில், கிஷோர் குமார் மற்றும் புதுவரவு தனன்யா நடிக்கின்றனர். கிஷோருக்கு ஜோடியாக சுபத்ரா ராபர்ட் கதாநாயகியாக நடிக்கிறார். காதல், லட்சியம், தோல்வி, மீட்பு ஆகிய உணர்வுகளை 'மெல்லிசை' பேசுகிறது.

    ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன், தனன்யா, புரோக்டிவ் பிரபாகர் மற்றும் கண்ணன் பாரதி நடித்துள்ளனர்.

    விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'வெப்பம் குளிர் மழை' திரைப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களான ஹேஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் தற்போது தயாரித்துள்ள 'மெல்லிசை' அனைத்து தலைமுறையினரையும் ஈர்க்கும் வகையில், ' அன்பு மட்டும் அண்டம் தேடும் ' என்ற டேக்லைனையும் கதையையும் கொண்டுள்ளது.

    இந்நிலையில், 'மெல்லிசை' திரைப்படத்தின் முதல் பார்வையை பார்த்த வெற்றிமாறன் படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    போஸ்டரின் ஆழத்தையும் தெளிவையும் பாராட்டி வெற்றிமாறன் தெரிவித்ததாவது, "முதல்பார்வை போஸ்டரில் கிஷோர் இன்னும் இளைமையாக இருக்கிறார். 'அன்பு மட்டும் அண்டம் தேடும் ' என்ற டேக்லைன் படத்தின் கருவை சரியாக பிரதிபலிக்கிறது. 'மெல்லிசை' படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்றார்.

    வெற்றிமாறனின் அன்பார்ந்த வாழ்த்துக்கு 'மெல்லிசை' படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

    • திரையரங்குகளில் பிரத்யேகமாக அரசன் படத்தின் ப்ரோமோ இன்று திரையிடப்பட்டது.
    • அரசன் ப்ரோமோ நாளை காலை 10.07க்கு அரசன் படம் யூடியூபில் வெளியாகிறது

    நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார்.

    இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

    சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன்மூலம் சிம்பு மற்றும் வெற்றிமாறன் உடன் முதல்முறையாக அனிருத் கூட்டணி சேர்ந்துள்ளார்.

    இந்நிலையில், இன்று மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக அரசன் படத்தின் ப்ரோமோ திரையிடப்பட்டது. இந்த ப்ரோமோ சிறப்பாக உள்ளதாக பார்த்த ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த ப்ரோமோவில் இயக்குநர் நெல்சன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். நெல்சனிடம் நான் கூறிய கதையில் தனுஷை நடிக்க வைங்க சார் என்று சிம்பு பேசிய வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    இந்த ப்ரோமோ நாளை காலை 10.07க்கு அரசன் படம் யூடியூபில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசன் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
    • இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது.

    நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார்.

    இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

    சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன்மூலம் சிம்பு மற்றும் வெற்றிமாறன் உடன் முதல்முறையாக அனிருத் கூட்டணி சேர்ந்துள்ளார்.

    இந்நிலையில், இன்று மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக அரசன் படத்தின் ப்ரோமோ திரையிடப்பட்டது. இந்த ப்ரோமோ சிறப்பாக உள்ளதாக பார்த்த ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த ப்ரோமோ நாளை காலை 10.07க்கு அரசன் படம் யூடியூபில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 'அரசன்' படத்தின் ப்ரோமோ நாளை காலை 10.07க்கு அரசன் படம் யூடியூபில் வெளியாகிறது.
    • இன்று மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக ப்ரோமோ திரையிடப்படுகிறது.

    நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார்.

    இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

    சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், 'அரசன்' படத்தின் ப்ரோமோ நாளை காலை 10.07க்கு அரசன் படம் யூடியூபில் வெளியாகிறது.

    முன்னதாக, இன்று மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக ப்ரோமோ திரையிடப்படுகிறது. குறிப்பிட்ட திரையரங்குகளில் டிக்கெட் கட்டணமாக ரூ.15 செலுத்தி ப்ரோமோவைக் காணலாம்.

    இந்நிலையில், அரசன் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். இதன்மூலம் சிம்பு மற்றும் வெற்றிமாறன் உடன் முதல்முறையாக அனிருத் கூட்டணி சேர்ந்துள்ளார். 

    'அரசன்' படத்தின் ப்ரோமோ வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்தது- The film crew announced the promo release date for the film 'Arasan'.

    நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார்.

    இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

    சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

    பின்னர், 'எஸ்டிஆர் 49' படத்தின் தலைப்பு 'அரசன்' என்று கலைப்புலி எஸ்.தாணு எக்ஸ் தள பக்கத்தில் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்நிலையில், 'அரசன்' படத்தின் ப்ரோமோ வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்தது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம்17ம் தேதி காலை 10.07க்கு அரசன் படம் யூடியூபில் வெளியாகிறது.

    முன்னதாக, 16ம் தேதி மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக ப்ரோமோ திரையிடப்படும் எனவும் தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.

    மேலும், 'அரசன்' படத்தின் ப்ரோமோ அக்.16ம் தேதி பிரத்யேகமாக திரையிடப்படவுள்ள தியேட்டர்களின் பட்டியலை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டார். டிக்கெட் கட்டணமாக ரூ.15 செலுத்தி ப்ரோமோவைக் காணலாம் என கூறப்பட்டுள்ளது. 

    ×