என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Simbu"

    • வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.
    • இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

    சிம்பு அடுத்ததாக STR 49,50, 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

    இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் அறிவிப்பு வீடியோ படப்பிடிப்பு சமீபத்தில் நடைப்பெற்றது. இதற்காக சிம்பு புது கெட்டப்பில் காணப்படுகிறார். இப்படத்தின் கதைக்களம் வட சென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படம் எடுப்பதற்கு தனுஷ் தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்ததாக சமீபத்தில் தகவல் வெளிவந்து அது உண்மையில்லை என மறுத்து வெற்றிமாறன் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

    இந்நிலையில் இப்படத்தில் சிம்பு இரண்டு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். ஒன்று இளமை மற்றும் சிறிய முதுமை தோற்றத்திலும் நடிக்கிறார். படத்தில் குட் நைட் புகழ் மணிகண்டன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிகண்டன் நடிக்கும் கதாப்பாத்திரம் இப்படத்திலும் வட சென்னை 2 படத்திலும் இடம் பெறும் கதாப்பாத்திரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

    • மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான படம் 'தக் லைஃப்'.
    • திரைப்படம் வெளியாகி மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான படம் 'தக் லைஃப்'. திரைப்படம் வெளியாகி மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானது.

    இந்நிலையில் தக் லைஃப் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சித்தார்த் மற்றும் சரத்குமார் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
    • 3 BHK படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

    சித்தார்த் 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.

    இப்படம் 3 BHK வீடு வாங்க ஆசைப்படும் குடும்பத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, 3 BHK படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இயக்குநர் ராம், ரவி மோகன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டினர்.



    இந்த நிலையில், நடிகர் சிம்பு 3 BHK படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இப்போதுதான் 3 BHK படம் பார்த்தேன். ஒரு உணர்ச்சிப்பூர்வமான பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் ஒரு இதயப்பூர்வமான அழகான படம். சித்தார்த் மற்றும் சரத்குமார் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். ஒட்டுமொத்த படக்குழுவிற்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். இதனால் 3 BHK படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.



    • சிம்பு அடுத்ததாக STR49,50, 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
    • சிம்பு படத்தை எடுப்பதற்கு தனுஷ் தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்துள்ளதாக தகவல் வெளியானது.

    சிம்பு அடுத்ததாக STR49,50, 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியானது.

    இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் அறிவிப்பு வீடியோ படப்பிடிப்பு சமீபத்தில் நடைப்பெற்றது. இதற்காக சிம்பு புது கெட்டப்பில் காணப்படுகிறார். இப்படத்தின் கதைக்களம் வட சென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படம் எடுப்பதற்கு தனுஷ் தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்துள்ளதாக தகவல் வெளியானது.

    படத்தின் தலைப்பிற்கும், படத்தின் கதை, கதாப்பாத்திரங்கள் ஆகியவற்றிற்கான உரிமை தங்களிடமே உள்ளதாக அது சம்பந்தமான படத்தை எடுப்பதாக இருந்தால் தங்களிடம் என் ஓ சி சான்றிதழ் வாங்க வேண்டும் என்றும் அதற்கு 20 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இதுகுறித்த விளக்கம் அழித்து வீடியோ ஒன்றை வெற்றி மாறன் வெளியிட்டுள்ளார் அதில் அவர் "நான் அடுத்த திரைப்படம் நடிகர் சிம்புவை வைத்து இயக்கவுள்ளேன். இப்படம் வட சென்னை டைம்லைனில் நடக்க கூடியவையாகும். வட சென்னை திரைப்படத்தின் கதைக்களம், கதாப்பாத்திரம்,கதை என அனைத்திற்கும் சொந்தக்காரர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம். நான் இதுக்குறித்து தனுஷிடம் பேசியபோது அவரிடம் 

    இப்படத்தை என்னால் வட சென்னை பட உலகத்தில் என்னால் இயக்க முடியும் இல்லை என்றால் இது தனி திரைப்படமாகவும் இயக்க முடியும். அது உங்கள் கையில் தான் இருக்கிறது.

    அதற்கு தனுஷ் " உங்களுக்கு எது சரியாக இருக்குமோ அதை செய்யுங்கள். அதற்காக எனக்கு ஒரு பணமும் வேண்டாம் " என கூறினார். என்னை பற்றியோ, படத்தை பற்றியோ, தனுஷை பற்றியோ யூடியூபில் பேசுவது எனக்கு வேதனை அளித்தது. தனுஷுக்கும் எனக்கும் உள்ள உறவு இந்த ஒரு சம்பவத்தினாலோ, படத்தினாலோ உடைந்து விடாது.

    நடிகர் சிம்புவும் படத்திற்கு எது சரியாக இருக்குமோ அதை செய்யுங்கள். என கூறினார்.

    என்னை யாரும் வற்புறுத்தி ஒரு விஷயத்தை செய்ய வைக்க முடியாது. இணையத்தில் பேசுவது அனைத்தும் வதந்தியே" என கூறியுள்ளார் வெற்றி.

    • சிம்பு அடுத்ததாக STR49,50, 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
    • வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியானது.

    மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இவருடன் சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    சிம்பு அடுத்ததாக STR49,50, 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியானது.

    இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் அறிவிப்பு வீடியோ படப்பிடிப்பு சமீபத்தில் நடைப்பெற்றது. இதற்காக சிம்பு புது கெட்டப்பில் காணப்படுகிறார். இப்படத்தின் கதைக்களம் வட சென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக இருக்கும் என கூறப்பட்டது. படத்திற்கு ராஜன் வகையறா என்ற தலைப்பு வைக்கப்படவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தனுஷ் தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

    படத்தின் தலைப்பிற்கும், படத்தின் கதை, கதாப்பாத்திரங்கள் ஆகியவற்றிற்கான உரிமை தங்களிடமே உள்ளதாக அது சம்பந்தமான படத்தை எடுப்பதாக இருந்தால் தங்களிடம் என் ஓ சி சான்றிதழ் வாங்க வேண்டும் என்றும் அதற்கு 20 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை ஆகிய திரைப்படங்கள் தனுஷிற்கு பெரிய திருப்பு முனையாக இருந்தாலும் தனுஷ் இப்படி வெற்றி மாறனிடமே நஷ்ட ஈடு கேட்ட தகவல் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    • உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • சரத்குமார், கமல், சிரஞ்சீவி என பலர் பொன்னம்பலத்திற்கு உதவி செய்தனர்.

    தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் பொன்னம்பலம். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பொன்னம்பலம் கலந்துக் கொண்டார்.

    அண்மையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வீடியோ வைரலானது. இதையடுத்து பலரிடம் உதவி கேட்டார். சரத்குமார், கமல், சிரஞ்சீவி என பலர் பொன்னம்பலத்திற்கு உதவி செய்தனர்.

    தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில், நடிகர் பொன்னம்பலம் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், "மீண்டும் சிறுநீரக தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தேன். கமல், தனுஷ், ரவி மோகன், சிம்பு என்று எல்லோரும் உதவி செய்தார்கள். அவர்களுக்கு எனது கோடான கோடி நன்றி. எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று உருக்கமாக பேசியுள்ளார்.

    • இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாநாடு'.
    • இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாநாடு'. தொடர் தோல்வி படங்களால் துவண்டு இருந்த சிம்புவிற்கு இந்த திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

    டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது.

    இந்நிலையில், மாநாடு திரைப்படத்தின் பாகம் 2 உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு கோட் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து படத்தை இயக்க இருக்கிறார். சிம்புவும் அவர் ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ள படங்களில் நடித்து முடித்துவிட்டு இப்படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • சமீபத்தில் தக் லைஃப் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
    • சிம்புவின் 50-வது திரைப்படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க போவதாக படக்குழு அறிவித்தது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிலம்பரசன்.சமீபத்தில் தக் லைஃப் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இந்நிலையில் சிம்பு தற்பொழுது வெற்றி மாறன் இயக்கும் வட சென்னை பின்னணியில் உள்ள ஒரு படத்தில் நடித்து வருகிறார். சிம்புவின் 50-வது திரைப்படத்தை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்க போவதாக படக்குழு அறிவித்தது.

    தற்பொழுது சிம்பு வெற்றி மாறன் திரைப்படத்தில் நடித்து வருவதால். தேசிங் பெரியசாமி அடுத்து மணிகண்டனை வைத்து ஒரு சிறிய பட்ஜெட்டில் திரைப்படத்தை இயக்குவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 50-வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். மணிகண்டன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    அதற்குள் சிம்பு வெற்றி மாறன் மற்றும் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • சிம்பு அடுத்ததாக STR49,50, 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
    • இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இவருடன் சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

    சிம்பு அடுத்ததாக STR49,50, 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியானது.

    இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் டெஸ்ட் ஷூட் இன்று படக்குழு செய்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் சிம்பு சட்டை மற்றும் லுங்கியுடன் காணப்படுகிறார். இயக்குநர் நெல்சனும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.




     


    நெல்சன் மற்றும் நடிகர் கவின் இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்க இருக்கின்றனர்.ஆண்டிரியா மற்றும் கிஷோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர்.

    இப்படத்தை தொடர்ந்து வெற்றி மாறன் வாடிவாசல் மற்றும் வட சென்னை 2 ஆகிய திரைப்படங்களை இயக்க வுள்ளார். இந்த கூட்டணியில் எம்மாதிரியான திரைப்படம் உருவாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

    • நாக சைத்தன்யா - சமந்தா நடிப்பில் வெளியான 'ஈ மாயா சேசாவா' ரீ-ரிலீஸ் ஆகிறது.
    • 'ஏ மாயா சேசாவே' (2010) படப்பிடிப்பின் போது சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் காதல் தொடங்கியது.

    சமீபத்தில் பழைய திரைப்படங்கள் 'ரீ ரிலீஸ்' செய்யப்படுவது டிரெண்ட் ஆகி விட்டது. அவ்வகையில் ரீ ரிலீசான கிள்ளி திரைப்படம் வசூல் சாதனை படைத்தது.

    குறிப்பாக சிம்பு - திரிஷா நடிப்பில் வெளியான விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் ரீ ரிலீசில் 1000 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது.

    நாக சைத்தன்யா, சமந்தா இணைந்து நடித்த 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு வெர்ஷனான 'ஈ மாயா சேசாவா' படம் ஜூலை 18ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    'ஏ மாயா சேசாவே' (2010) படப்பிடிப்பின் போது தொடங்கிய சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் காதல், 2017 ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.

    தென்னிந்திய திரையுலகின் பிரபல ஜோடியாக அறியப்பட்ட இவர்கள், கிட்டத்தட்ட நான்கு வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
    • இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    இப்படம், கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் நேற்று வெளியானது. இதனை தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். 'நாயகன்' (1987) படத்தை தொடர்ந்து, அதாவது 38 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீது வைத்திருந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், 'தக் லைஃப்' படம் ஓ.டி.டி. தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓ.டி.டி. உரிமம் பெற்றுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடும் என கூறப்படுகிறது. 

    • 38 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.
    • திரையரங்குகளில் அதிகாலை முதலே குவிந்த ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    'நாயகன்' (1987) படத்தை தொடர்ந்து, அதாவது 38 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. இப்படத்தில் சிம்பு நடித்துள்ளதால் அவரின் ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இப்படம் தொடர்பான டிரெய்லர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.



    இதற்கிடையில், இன்று ஒருநாள் மட்டும் 'தக் லைஃப்' படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இந்த நிலையில், சர்ச்சைகளை தாண்டி 'தக் லைஃப்' படம் கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதையொட்டி திரையரங்குகளில் அதிகாலை முதலே குவிந்த ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இப்படத்தில் நடித்த நடிகர்களும் திரையரங்கிற்கு திரைப்படத்தை காண வந்தனர்.

    இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×