என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்ட்ரியா"

    • தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் 'மாஸ்க்'. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

    இப்படத்தில் தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படம் தொடர்பான டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து 'மாஸ்க்' படம் கடந்த 21-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது.

    இந்த நிலையில், 'மாஸ்க்' படம் பாக்ஸ் ஆபிஸில் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 'மாஸ்க்' படம் ரூ.5 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

    • ‘மாஸ்க்’ படம ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • மோசடிக்காரர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களை குறிவைக்கின்றனர்.

    அறிமுக இயக்குநர் விகர்னன் அசோக் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் 'மாஸ்க்'. முன்னணி நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். ரூ.440 கோடி பணம் கொள்ளைப் போனதை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ள இப்படம் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பாக்ஆபிசில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

    இதனிடையே, பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னையும் தனது குடும்பத்தினரையும் பாதித்த ஒரு நிஜ வாழ்க்கை ரியல் எஸ்டேட் மோசடியில் இருந்துதான் மாஸ்க் படத்திற்கான யோசனை வந்ததாக இயக்குநர் விகர்னன் அசோக் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், இது என் வாழ்க்கையில் நடந்தது. நான் ஒரு ரியல் எஸ்டேட் மோசடியில் பாதிக்கப்பட்டேன். இதுபோன்ற மோசடிக்காரர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களை குறிவைக்கின்றனர்.

    மோசடி கும்பல் விரும்பும் மக்கள், நம்பிக்கையுடன் நடுத்தர வர்க்கத்தினரை ஏமாற்றத் தேர்வு செய்கிறார்கள், ஏனெனில் இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் பதிலடி கொடுக்கத் தயங்குவார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அன்றாடப் பொறுப்புகள் காரணமாக பலர் எதிர்ப்பு தெரிவிப்பதையோ அல்லது எதிர்த்துப் போராடுவதையோ கடுமையாக்குகின்றன.

    படித்தவர்கள் ஏமாற்றப்படும்போது, அவர்கள் கோபப்படுவது உறுதி. ஆனால், அவர்களால் எதிர்வினையாற்ற முடியாது. அந்த நிலையில் உள்ள ஒருவருக்கு இறுதியாக பதிலடி கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தால் என்ன நடக்கும் என்ற யோசனையால் வந்தக் கேள்வி இறுதியில் மாஸ்க்கின் முன்மாதிரியாக வளர்ந்தது என்றார்.

    இதனிடையே, மோசடிக்காரர்களால் ஏமாற்றப்பட்ட பணத்தை கிடைத்ததா? என்ற கேள்விக்கு இயக்குநர் விகர்னன் அசோக், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் 2025 இல், எங்கள் பணம் திரும்ப கிடைத்தது என்றார்.

    • ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
    • டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

    அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் 'மாஸ்க்'. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

    இப்படத்தில் தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    தேர்தலில் விநியோகிக்க வைத்திருந்த ரூ.440 கோடி பணம் கொள்ளைப் போனதை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.

    இப்படம் தொடர்பான டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து 'மாஸ்க்' படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது.

    இந்த நிலையில், 'மாஸ்க்' படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் ரூ.1.5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உலகளவில் இப்படம் 2 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி நேற்றுமுன்தினம் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமும் 'மாஸ்க்' தான். இதன்மூலம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 திரைப்படமாக 'மாஸ்க்' அமைந்திருக்கிறது.

    கடைசியாக கவின் நடிப்பில் வெளியான 'கிஸ்' திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் ரூ.40 லட்சம் மட்டுமே வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    நாயகன் கவின் தனியார் துப்பறியும் நிபுணர் (பிரைவேட் டிடெக்டிவ்) என்ற பெயரில் பலரை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார். அதேபோல் நாயகி ஆண்ட்ரியா பெண்கள் பாதுகாப்பு, சமூக ஆர்வலர் என்ற பெயரில் தவறான செயல்களை செய்து வருகிறார்.

    இந்நிலையில் அரசியல்வாதியான பவன், தேர்தலுக்காக தொகுதி மக்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பல கோடி ரூபாய் பணத்தை ஆண்ட்ரியாவிடம் கொடுக்கிறார். அந்த பணத்தை ஆண்ட்ரியா தனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் பதுக்கி வைக்கிறார். அந்த பணத்தை மாஸ்க் அணிந்த சிலர் கொள்ளை அடித்து விடுகிறார்கள். அந்த பணத்தை தேடும் பணியை ஆண்ட்ரியா கவினிடம் கொடுக்கிறார்.

    இறுதியில் கவின் அந்த பணத்தை கண்டுபிடித்தாரா? பணத்தை கொள்ளை அடித்தவர்கள் யார்? என்பதே படத்தின் மீதி கதை..

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கவின், எதார்த்தமாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். இவரது நடிப்பில் மற்றொரு நடிகரின் சாயல் தெரிகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் கவனிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆண்ட்ரியா, பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார். இவரது வில்லத்தனமான நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.

    மற்றொரு நடிகை ஆக வரும் ருஹானி சர்மா அழகாக வந்து சென்று இருக்கிறார். அரசியல்வாதியாக நடித்திருக்கும் பவன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக், ரெடின் கிங்ஸ்லீ ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    இயக்கம்

    ஒரு இடத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீண்டும் அதே இடத்தில் கொடுக்க வைப்பதை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விகர்ணன் அசோக். டார்க் காமெடி ஜானரில் படத்தை இயக்கியிருக்கிறார். பெரியதாக டார்க் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை. நெல்சன் இன் பின்னணி குரல் படத்திற்கு பலவீனம்.

    இசை

    ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    ஒளிப்பதிவு

    ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையும் ஆர்.டி ராஜசேகரின் ஒளிப்பதிவும் கதையோடு பயணித்திருக்கிறது.

    • அக்டோபர் 17-ந்தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • இதுதான் இதுவரை இல்லாத தங்கம் விலை உச்சமாக பார்க்கப்பட்டது.

    தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதான் இதுவரை இல்லாத தங்கம் விலை உச்சமாக பார்க்கப்பட்டது.

    அதன் பின்னர் விலை அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், விலை குறையத் தொடங்கியது. அதனையடுத்து தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் நிலையும் நீடித்து வந்ததை பார்க்க முடிந்தது.

    இந்நிலையில், கோவையில் நகைக்கடை ஒன்றை நடிகை ஆண்ட்ரியா திறந்து வைத்தார். அதன்பின்பு பேசிய ஆண்ட்ரியா, "கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர். நான் அடிக்கடி இங்கு வருவேன்.தங்கம் பார்க்க மிகவும் அழகாக தான் இருக்கிறது. ஆனால் தங்கம் விலையை பார்த்தாலே தற்போது பயமாக இருக்கிறது" என்று தெரிவித்தார் 

    • ‘பிசாசு-2' படம் சில ஆண்டுகளாகவே வெளிவராமல் முடங்கி கிடக்கிறது.
    • படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் பார்த்துக்கொண்டு வருகிறார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஆண்ட்ரியா, மிஷ்கின் இயக்கத்தில் நடித்து முடித்த 'பிசாசு-2' படம் சில ஆண்டுகளாகவே வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. ஆனாலும், 'பிசாசு-2' படத்தில் 'ஆண்ட்ரியா அப்படி நடித்துள்ளார், இப்படி நடித்துள்ளார்' என மிஷ்கின் தொடர்ந்து பேசி, படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் பார்த்துக்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆண்ட்ரியாவிடம், 'பிசாசு-2' படம் எப்போது ரிலீசாகும்? என கேட்கப்பட்டது. இதற்கு, ''நடிக்க மட்டும்தான் முடியும். ரிலீசும் நானே செய்ய முடியுமா? நான் மட்டும் தயாரிப்பாளராக இருந்தால் சில ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசாக்கி இருப்பேன். என்ன செய்ய...'' என்று வருத்தப்பட்டு கொண்டார்.

    முன்னதாக இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேசை நோக்கி சிலர் மின்விசிறியைத் திருப்ப, அவரது தலைமுடி காற்றில் பறந்தது. நிகழ்ச்சிக்காக கூந்தலை சீவி, சிங்காரித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், இதனால் கடும் 'அப்செட்' ஆகி போனார். 'பேனை ஆப் பண்ணுங்க...' என்று அங்கிருப்பவர்களை கடிந்து கொண்டார். பின்னர் உதவியாளர் கலைந்த அவரது கூந்தலை சரிசெய்த பிறகே ஆசுவாசமானார்.

    • மனுசி திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கூறியதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் வழக்கு தாக்கல் செய்தார்.

    தமிழ் சினிமாவில் அறம் படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் கோபி நயினார். இவர் இயக்கிய அறம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார்.

    இயக்குநர் கோபி நயினாரின் அடுத்த படம் "மனுசி" என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை வெற்றி மாறன் தயாரித்துள்ளார். இயக்குநரின் முதல் படத்தை போன்றே இந்த படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை கொண்டிருக்கிறது. இதில் ஆன்ட்ரியா ஜெர்மியா நடித்துள்ளார்.

    இளையராஜா இசையமைத்துள்ள மனுசி படத்தின் டிரெயிலரை நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் கடந்த ஆண்டு வெளியிட்டார்.

    இப்படத்தில் நடிகர் நாசர், தமிழ் மற்றும் ஹக்கிம் ஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறம் படத்தை போன்றே இப்படமும் சமூக பிரச்சினைகளை பேசும் கதைக்களம் கொண்டிருக்கும் என்பது டிரெயிலரில் தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே, மனுசி திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மாநில அரசை மோசமாக சித்தரித்து உள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தணிக்கை சான்று மறுக்கப்பட்டுள்ளது. படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கூறியதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் வழக்கு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் மனுஷி படத்தை ஆகஸ்ட் 24-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பார்வையிட உள்ளார்.

    • மனுசி திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் அறம் படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் கோபி நயினார். இவர் இயக்கிய அறம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார்.

    இயக்குநர் கோபி நயினாரின் அடுத்த படம் "மனுசி" என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை வெற்றி மாறன் தயாரித்துள்ளார். இயக்குநரின் முதல் படத்தை போன்றே இந்த படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை கொண்டிருக்கிறது. இதில் ஆன்ட்ரியா ஜெர்மியா நடித்துள்ளார்.

    இளையராஜா இசையமைத்துள்ள மனுசி படத்தின் டிரெயிலரை நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் கடந்த ஆண்டு வெளியிட்டார்.

    இப்படத்தில் நடிகர் நாசர், தமிழ் மற்றும் ஹக்கிம் ஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறம் படத்தை போன்றே இப்படமும் சமூக பிரச்சினைகளை பேசும் கதைக்களம் கொண்டிருக்கும் என்பது டிரெயிலரில் தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே, மனுசி திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மாநில அரசை மோசமாக சித்தரித்து உள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தணிக்கை சான்று மறுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு எதிராக தயாரிப்பாளர் வெற்றிமாறன் மனு தாக்கல் செய்தார்.

    அதில், நிபுணர் குழு அமைத்து 'மனுசி' படத்தை மீண்டும் தணிக்கை செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரியும், பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    மேலும்,"பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சியை எடிட் செய்ய தயார. படத்தை மறுஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், மனுசி திரைப்படத்தை பார்வையிட்டு இன்று மறு ஆய்வு செய்யப்படும். திரைப்படத்தின் ஆட்சேபகரமான காட்சிகள் வசனங்கள் குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் உறுதி அளித்துள்ளது. 

    • கோபி நயினார் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘மனுசி’.
    • இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    கடந்த 2017-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கோபி நயினார். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் 'மனுசி'. இயக்குனர் வெற்றி மாறன் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    மனுசி ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

    'அனல் மேலே பனித்துளி' படத்திற்கு பிறகு ஆண்ட்ரியா நடிக்கும் இந்த திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆண்ட்ரியா பிறந்த நாளான இன்று படக்குழு இப்படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, 'மனுசி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • நடிகை ஆண்ட்ரியா தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘நோ என்ட்ரி’.
    • இப்படத்தை இயக்குனர் ஆர். அழகு கார்த்திக் இயக்கியுள்ளார்.

    பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அதன்பின் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் இடம் பெற்று வெற்றியடைந்த பல பாடல்களை இவர் பாடியுள்ளார். சமீபத்தில் இவர் பாடிய 'ஊ சொல்றியா மாமா' பாடல் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.


    நோ என்ட்ரி

    நடிகை ஆண்ட்ரியா தற்போது இயக்குனர் ஆர். அழகு கார்த்திக் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'நோ என்ட்ரி'. இதில் ஆதவ் கண்ணதாசன், மானஸ், ரன்யா ராவ், ஜெயஸ்ரீ மற்றும் ஜான்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜம்போ சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜேஷ் இசையமைத்துள்ளார்.



    நோ என்ட்ரி

    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. வைரசால் பாதிக்கப்பட்ட நாய்கள் மனிதர்களை தாக்குவது போன்று உருவாகியுள்ள இந்த டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த டிரைலரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.



    • நடிகர், பாடகர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆண்ட்ரியா.
    • இவர் தற்போது தீவிர ஒர்க்-அவுட் மோடில் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    பச்சைகிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, வடசென்னை, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஆண்ட்ரியா. நடிகராக மட்டுமல்லாது பாடல்கள் பாடியும் ரசிகர்களை கவர்ந்தார். கண்ணும் கண்ணும் நோக்கியா, இதுவரை இல்லாத உணர்விது, கூகுள் கூகுள், ஊ சொல்றியா மாமா உள்ளிட்ட பல பாடலகளை பாடி தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

     

    ஆண்ட்ரியா

    ஆண்ட்ரியா


    சில படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா, தற்போது தீவிர ஒர்க்-அவுட் மோடில் இருக்கும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகளை குவித்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • ஆண்ட்ரியா இந்த படத்தில் அரை நிர்வாணமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    • 36 வயது ஆகி உள்ள நிலையிலும் திருமணம் செய்யாமல் நடிகை ஆண்ட்ரியா படத்தில் ‘பிசி’யாக உள்ளார்.

    சினிமா பின்னணி பாடகியாக இருந்து பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இதைத்தொடர்ந்து மங்காத்தா, விஸ்வரூபம்,தரமணி, வடசென்னை ஆயிரத்தில் ஒருவன் உள்பட பல படங்களில் நடித்தார்.

    36 வயது ஆகி உள்ள நிலையிலும் திருமணம் செய்யாமல் நடிகை ஆண்ட்ரியா படத்தில் 'பிசி'யாக உள்ளார்.

    தெலுங்கில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட புஷ்பா படத்தில் "ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா" என்ற பாடலை பாடியிருந்தார்.

    இந்த பாடல் பெரிய ஹிட்டாக அமைந்தது. இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் அனல்மேல் பனித்துள்ளி என்ற படத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா படம் குறித்து கூறியதாவது:-

    அனல்மேல் பனித்துளி படத்தில் ஒரு காட்சியில் நடித்த போது கூச்சமாக இருந்தது. இது புதுமையாகவும் இருந்தது. இந்த காட்சிகளைவிட என் நிஜ வாழ்க்கையில் இதை விட பல சம்பவங்கள் நடந்துள்ளது. ஆண்ட்ரியா இந்த படத்தில் அரை நிர்வாணமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×