என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold"

    • தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 400 குறைந்தது.
    • இன்று மாலை மேலும் 560 ரூபாய் சவரனுக்கு குறைந்தது.

    தங்கம், வெள்ளி விலை கடந்த ஒரு மாதமாக 'கிடுகிடு'வென உயர்ந்து வந்தது. தினமும் புதிய உச்சத்தை கடந்த வண்ணமே விலை பயணம் ஆனது. தங்கத்தை பொறுத்தவரையில், கடந்த 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800-க்கு விற்பனை ஆனது புதிய உச்சமாக பார்க்கப்பட்டது.

    கொஞ்சமாவது விலை குறையாதா? என பார்த்து கொண்டிருந்த நேரத்தில் நேற்று தங்கம் விலை அதிரடியாக சரிந்து இல்லத்தரசிகள், மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.420-ம், சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 360-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 800-க்கும் விற்பனை ஆனது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று காலையும் குறைந்தது சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,550-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,400-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில் இன்று மாலை மீண்டும் தங்கம் விலை குறைந்தது. ஒரு சவரனுக்கு ரூ. 560 குறைந்தது. இதனால் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 960 ரூபாய் குறைந்தது, தற்போது ஒரு சவரன் 99 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    30-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800

    29-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,160

    28-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

    27-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

    26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,120

    • நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 800-க்கு விற்பனை ஆனது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    தங்கம், வெள்ளி விலை கடந்த ஒரு மாதமாக 'கிடுகிடு'வென உயர்ந்து வந்தது. தினமும் புதிய உச்சத்தை கடந்த வண்ணமே விலை பயணம் ஆனது. தங்கத்தை பொறுத்தவரையில், கடந்த 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800-க்கு விற்பனை ஆனது புதிய உச்சமாக பார்க்கப்பட்டது.

    அதேபோல் வெள்ளி விலை கடந்த 27-ந்தேதி ஒரே நாளில் கிராமுக்கு ரூ.31-ம், கிலோவுக்கு ரூ.31 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.285-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது இதுவரை இல்லாத உச்சமாக இருந்தது. இப்படியே விலை உயர்ந்து கொண்டே போனால் என்ன செய்வது? என்று புலம்பும் நிலைக்கு மக்களை கொண்டு சென்றுவிட்டது.

    கொஞ்சமாவது விலை குறையாதா? என பார்த்து கொண்டிருந்த நேரத்தில் நேற்று தங்கம், வெள்ளி விலை இரண்டுமே அதிரடியாக சரிந்து இல்லத்தரசிகள், மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.13 ஆயிரத்து 20-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.420-ம், சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 360-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 800-க்கும் விற்பனை ஆனது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,550-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,400-க்கு விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.258-க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    30-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800

    29-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,160

    28-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

    27-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

    26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,120

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    30-12-2025- ஒரு கிராம் ரூ.258

    29-12-2025- ஒரு கிராம் ரூ.281

    28-12-2025- ஒரு கிராம் ரூ.285

    27-12-2025- ஒரு கிராம் ரூ.285

    26-12-2025- ஒரு கிராம் ரூ.254

    • தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 20-க்கு விற்றது.
    • தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று காலை சற்று குறைந்தது.

    சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை நேற்று முன்தினம் ரூ.13,100 ஆக இருந்தது. சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800-க்கு விற்றது.

    தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 20-க்கு விற்றது. சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 160-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 420 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,600-க்கும், சவரனுக்கு 3,360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,800-க்கு விற்பனையாகிறது.

    தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 258 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    29-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,160

    28-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

    27-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

    26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,120

    25-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    29-12-2025- ஒரு கிராம் ரூ.281

    28-12-2025- ஒரு கிராம் ரூ.285

    27-12-2025- ஒரு கிராம் ரூ.285

    26-12-2025- ஒரு கிராம் ரூ.254

    25-12-2025- ஒரு கிராம் ரூ.245

    • ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது.
    • தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    எல்லோரும் சேமிக்க நினைக்கும் தங்கம், ஏழைகளுக்கு ஏக்கம் தரும் ஒன்றாக மாறிப்போய்விட்டது. இந்த 2025ல், அந்த அளவுக்கு எட்டிப்பிடிக்க முடியாத விலை உயர்வை சந்தித்துள்ளது தங்கம். அதுமட்டுமல்ல தங்கத்துக்கு போட்டியாக வெள்ளியும் விலையேற்றத்தில் விண்ணை முட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது. அதேபோல, அந்த விலையையும் தொட்டது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.

    கடந்த வார தொடக்கத்தில் ஒரு சவரன் ஒரு லட்சத்து 560-க்கு தொடங்கி வார இறுதியில் ஒரு லட்சத்து 4ஆயிரத்து 800-க்கு விற்பனையானது. கடந்த வாரம் முழுக்க தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையானது.

    அந்த வகையில் இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,020-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

     

    தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 281 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    28-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

    276-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

    26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,120

    25-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,560

    24-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    28-12-2025- ஒரு கிராம் ரூ.285

    27-12-2025- ஒரு கிராம் ரூ.285

    26-12-2025- ஒரு கிராம் ரூ.254

    25-12-2025- ஒரு கிராம் ரூ.245

    24-12-2025- ஒரு கிராம் ரூ.244

    • காலை தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்துக்கு விற்பனையானது.
    • சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

    தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டிவிடுமோ? என பதறி இருந்த நிலையை எல்லாம், கடந்துவிட்டோம். கடந்த 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி இமாலய உச்சத்தை தொட்டது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது. அதேபோல, அந்த விலையையும் தொட்டது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.

    அந்த வகையில் இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்துக்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் ஒரே நாளில் தங்கம் விலை 2-வது முறையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 100-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் 800 ரூபாய்க்கும் விற்பனையானது.

    இதன்மூலம் ஒரே நாளில் தங்கம் விலை 1680 ரூபாய் உயர்ந்துள்ளது.

    தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 31 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 285 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளியும் வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,120

    25-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,560

    24-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

    23-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,160

    22-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    26-12-2025- ஒரு கிராம் ரூ.254

    25-12-2025- ஒரு கிராம் ரூ.245

    24-12-2025- ஒரு கிராம் ரூ.244

    23-12-2025- ஒரு கிராம் ரூ.234

    22-12-2025- ஒரு கிராம் ரூ.231

    • தொடர் விலை உயர்வால் வெள்ளி நகைகளும் வாங்க முடியாத நிலை உள்ளதால் ஏழை மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    • வெள்ளி விலை தொடர் உயர்வால் வெள்ளி நகைகளை பொது மக்கள் வாங்குவது கணிசமாக குறைந்துள்ளது.

    சேலம்:

    தங்கத்திற்கு அடுத்த படியாக வெள்ளி கொலுசு உள்பட வெள்ளி நகைகளை வாங்கி பொது மக்கள் அதிக அளவில் அணிந்து வந்தனர். தற்போது வெள்ளியின் விலை படிப்படியாக அதிகரித்து தினசரி புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

    குறிப்பாக நேற்று வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 54 ஆயிரமாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிலோவுக்கு மேலும் ரூ.20 ஆயிரம் அதிகரித்தது. இதனால் ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ. 2 லட்சத்து 74 ஆயிரமாக அதிகரித்தது. ஒரு கிராம் வெள்ளி விலை 274 ரூபாயாக உயர்ந்து உள்ளது.

    சமீப காலமாக வெள்ளி விலை தினசரி உயர்ந்து வருவதால் தொழில் அதிபர்கள் பலர் வெள்ளியில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் வெள்ளி விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

    இதில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 20 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களிலும் வெள்ளி விலை வேகமாக உயரும் என்று கூறப்படுகிறது. இந்த தொடர் விலை உயர்வால் வெள்ளி நகைகளும் வாங்க முடியாத நிலை உள்ளதால் ஏழை மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    வெள்ளி விலை தொடர் உயர்வால் வெள்ளி நகைகளை பொது மக்கள் வாங்குவது கணிசமாக குறைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வெள்ளி பட்டறைகள் புதிய ஆர்டர்கள் வராததால் வேலை இல்லாத நிலையில் களை இழந்து காணப்படுகிறது. மேலும் அங்கு வேலை பார்த்த பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.

    • தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.
    • வெள்ளியும் வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டிவிடுமோ? என பதறி இருந்த நிலையை எல்லாம், கடந்துவிட்டோம். கடந்த 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி இமாலய உச்சத்தை தொட்டது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது. அதேபோல, அந்த விலையையும் தொட்டது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.

     

    அந்த வகையில் இன்றும் தங்கம் விலை புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்துக்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 274 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளியும் வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,120

    25-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,560

    24-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

    23-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,160

    22-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    26-12-2025- ஒரு கிராம் ரூ.254

    25-12-2025- ஒரு கிராம் ரூ.245

    24-12-2025- ஒரு கிராம் ரூ.244

    23-12-2025- ஒரு கிராம் ரூ.234

    22-12-2025- ஒரு கிராம் ரூ.231

    • தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.
    • வெள்ளி இன்று ஒரே நாளில் கிராமுக்கு 9 ரூபாய் உயர்வு.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டிவிடுமோ? என பதறி இருந்த நிலையை எல்லாம், கடந்துவிட்டோம். கடந்த 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி இமாலய உச்சத்தை தொட்டது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது. அதேபோல, அந்த விலையையும் தொட்டது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.

    அந்த வகையில் இன்றும் தங்கம் விலை புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,890-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 3 ஆயிரம் 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

     

    தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 254 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளியும் வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    25-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,560

    24-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

    23-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,160

    22-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,560

    21-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    25-12-2025- ஒரு கிராம் ரூ.245

    24-12-2025- ஒரு கிராம் ரூ.244

    23-12-2025- ஒரு கிராம் ரூ.234

    22-12-2025- ஒரு கிராம் ரூ.231

    21-12-2025- ஒரு கிராம் ரூ.226

    • இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது.
    • தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டிவிடுமோ? என பதறி இருந்த நிலையை எல்லாம், கடந்துவிட்டோம். கடந்த 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி இமாலய உச்சத்தை தொட்டது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது. அதேபோல, அந்த விலையையும் தொட்டது.

    இந்தநிலையில், அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.

    அந்த வகையில் இன்றும் தங்கம் விலை புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,820-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரம் 560 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. அந்த வகையில், இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளியும் வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    24-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

    23-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,160

    22-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,560

    21-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200

    20-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    24-12-2025- ஒரு கிராம் ரூ.244

    23-12-2025- ஒரு கிராம் ரூ.234

    22-12-2025- ஒரு கிராம் ரூ.231

    21-12-2025- ஒரு கிராம் ரூ.226

    20-12-2025- ஒரு கிராம் ரூ.226

    • அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது.
    • வெள்ளி விலையோ தடையே இல்லாமல் உச்சத்தை எட்டுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டிவிடுமோ? என பதறி இருந்த நிலையை எல்லாம், கடந்துவிட்டோம். கடந்த 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி இமாலய உச்சத்தை தொட்டது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது. அதேபோல, அந்த விலையையும் தொட்டது.

    இந்தநிலையில், அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.

    அந்த வகையில் நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்து இருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை எகிறி காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 570-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 560-க்கும் விற்பனை ஆனது.

    நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்து, நேற்றும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தங்கம் பதிவு செய்துவிட்டது.

    அதனை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரம் 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    தங்கம் கூட இடையில் சில நாட்கள் குறைகிறது. ஆனால் வெள்ளி விலையோ தடையே இல்லாமல் உச்சத்தை எட்டுகிறது.

     

    நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்திருந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.234-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

    அதனை தொடர்ந்து இன்றும் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 244 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளி வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    23-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,160

    22-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,560

    21-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200

    20-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200

    19-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    23-12-2025- ஒரு கிராம் ரூ.234

    22-12-2025- ஒரு கிராம் ரூ.231

    21-12-2025- ஒரு கிராம் ரூ.226

    20-12-2025- ஒரு கிராம் ரூ.226

    19-12-2025- ஒரு கிராம் ரூ.221

    • அமெரிக்காவில் மத்திய பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்ததன் விளைவால், தங்கம் ராக்கெட் வேகத்தில் ஏற்றம் காணுகிறது.
    • தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் (நவம்பர்) வரை சற்று குறைந்திருந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் எகிறத் தொடங்கியது. அந்த வகையில் கடந்த 15-ந்தேதி சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 515-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதுவரை இல்லாத வகையில் தங்கம் விலை அதிகரித்து வரலாறு காணாத புதிய உச்சத்தையும், ஒரு சவரன் ரூ.1 லட்சம் என்ற இமாலய உச்சத்தையும் எட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. மேலும் விலை அதிகரிக்கத்தான் செய்யும் என பேசப்பட்ட சூழலில், அடுத்த நாளே விலை 'மளமள'வென சரிந்து காணப்பட்டது. பின்னர் மீண்டும் கொஞ்சம், கொஞ்சமாக உயரத் தொடங்கியது.

    இப்படியாக விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 400-க்கும், ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம், பிற்பகல் நிலவரப்படி, மேலும் கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் என மொத்தம் நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 570-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 560-க்கும் விற்பனை ஆனது. ஏற்கனவே தங்கம் விலை கடந்த 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,00,120-க்கு விற்பனை ஆனதுதான் உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. தற்போது அந்த விலையையும் 'ஓவர்டேக்' செய்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.

    உலக சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதால், பெருமுதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தையே சார்ந்து இருப்பது, போர் பதற்றச் சூழல் இன்னும் சில நாடுகளில் முடிவுக்கு வராதது உள்ளிட்ட காரணங்கள் முக்கியமானவையாக சொல்லப்படுகிறது.

    அதிலும் சமீபத்தில் அமெரிக்காவில் மத்திய பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்ததன் விளைவால், தங்கம் ராக்கெட் வேகத்தில் ஏற்றம் காணுகிறது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,770-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,160-க்கும் விற்பனையாகிறது.

    தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. அந்த வகையில் இன்று வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 234 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளி வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    22-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,560

    21-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200

    20-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200

    19-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,040

    18-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,520

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    22-12-2025- ஒரு கிராம் ரூ.231

    21-12-2025- ஒரு கிராம் ரூ.226

    20-12-2025- ஒரு கிராம் ரூ.226

    19-12-2025- ஒரு கிராம் ரூ.221

    18-12-2025- ஒரு கிராம் ரூ.224

    • நகையை திருப்பாமல், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிடுகிறார்கள்.
    • தற்போது, நகைகள் அடகு வைக்கும்போது தங்கத்தின் மதிப்பில் 70 முதல் 72 சதவீதம் வரையிலான அளவுக்கு கடன் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை திடீரென ராக்கெட் வேகத்தில் உயர்வதும், பின்னர் லேசாக குறைவதுமாக உள்ளது. பொதுமக்கள் தங்களுடைய பல்வேறு வகையான நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கைவசம் உள்ள நகைகளை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து கடன் வாங்கி வருகிறார்கள்.

    வங்கிகளில் நகையை அடகு வைத்து வாங்கப்பட்ட கடன் தொகை கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.1.10 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த அக்டோபர் மாதம் ரூ.3.37 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 40 முதல் 45 சதவீதம் அளவிலான நகைக்கடனை 31 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் வாங்கி இருக்கிறார்கள்.

    தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும்போது, வாங்கிய கடன் தொகையானது அடகு வைக்கப்படும் நகையின் மதிப்பை விடவும் அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற சமயங்களில் நகை கடனை திருப்பி செலுத்துவதில் பெரும்பாலானோர் ஆர்வம் செலுத்துவதில்லை. மேலும் நகையை திருப்பாமல், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிடுகிறார்கள்.

    இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்து இருந்தது. நகைக்கடன் மீதான இடர் மேலாண்மை அதிகரித்துள்ளதால் தங்க நகைகளின் மீது வழங்கப்படும் கடனில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

    தற்போது, நகைகள் அடகு வைக்கும்போது தங்கத்தின் மதிப்பில் 70 முதல் 72 சதவீதம் வரையிலான அளவுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்த சூழலில் தங்க நகையின் மதிப்பில் இருந்து 60 முதல் 65 சதவீதம் வரையிலான அளவுக்கு மட்டுமே கடன் வழங்குவதற்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    ×