search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கம்"

    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
    • கிராமுக்கு ரூ.2.50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.86.50-க்கும் பார் வெள்ளி ரூ.86,500-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்தது.

    தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு, இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் சூழல், அமெரிக்காவில் வங்கி வட்டி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தது.

    இதன் மூலம் இதுவரை இல்லாத வகையில் தினமும் தங்கம் விலை அதிகரித்த படியே இருந்தது.

    கடந்த மார்ச் மாதம் இறுதியில் பவுன் ரூ.50 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின்னரும் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே இருந்தது.

    ரூ.52 ஆயிரம் முதல் ரூ.54 ஆயிரம் வரை பவுன் விலை தாண்டியது. தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும் ஒரு நாளில் அதிகரிக்கும் விலை தொடர்ந்து அதிகமாக இருந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் பவுனுக்கு ரூ. ஆயிரத்துக்கு மேல் அதிகரித்தது.

    இதற்கிடையே கடந்த 19-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ. 55 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. இது ஏழை, நடுத்தர மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

    இதற்கிடையே நேற்று பவுன் ரூ.55 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54 ஆயிரத்து 760-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.6,845 ஆக இருந்தது.

    இந்த நிலையில் தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் விலையில் இன்று அதிரடி மாற்றம் காணப்பட்டது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,160 குறைந்து விலையில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதன் மூலம் பவுன் ரூ.54 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் விலையில் ரூ.145 குறைந்து ரூ.6,700 ஆக உள்ளது.

    தங்கத்தை போல வெள்ளி விலையிலும் பெரும் சரிவு காணப்பட்டது. வெள்ளி கிலோவுக்கு ரூ.2,500 குறைந்து ரூ.86 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.86.50-க்கு விற்கப்படுகிறது.

    கடந்த 3 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தங்கம் விலை தொடர்ந்து உச்சநிலையில் இருந்ததால் ஏழை, நடுத்தர மக்கள் கவலையில் ஆழ்ந்தனர். தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தபடி இருக்கும் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் ஒரே நாளில் பெரும் சரிவு ஏற்பட்டு இருப்பது அவர்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. வரும் நாட்களிலும் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டு தனது வட்டி விகிதத்தை குறைக்காது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதனாலும் வேறு சில காரணங்களாலும் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    • ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 845 ஆக உள்ளது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.89 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.89-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் தொடர்ந்து உயர்வு காணப்பட்டது. சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்து 80-க்கு விற்றது.

    இந்தநிலையில் இன்று தங்கம் விலை குறைந்து சவரன் ரூ.55 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54 ஆயிரத்து 760-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 845 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.89 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.89-க்கு விற்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 870 ஆக உள்ளது.
    • தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.

    சென்னை:

    தங்கம் விலை சமீபத்தில் சவரன் ரூ.54 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. விலை தொடர்ந்து உயர்ந்தபடி இருந்து வருகிறது.

    இதனிடையே நேற்று சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54 ஆயிரத்து 320-க்கு விற்பனையானது

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.54 ஆயிரத்து 960-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 870 ஆக உள்ளது. ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது.

    தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. இன்று வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 அதிகரித்து ரூ.90,500-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.90.50-க்கு விற்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54 ஆயிரத்தை கடந்தது.
    • சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் குறைந்து 89 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54 ஆயிரத்தை கடந்தது. மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு ஒரு பவுன் ரூ.54 ஆயிரத்து 440-க்கு விற்பனையானது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 805-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 200 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் குறைந்து 89 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.89,000-க்கு விற்பனையாகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை மீண்டும் ஏற்றத்துடனேயே பயணிக்க தொடங்கி இருக்கிறது. கடந்த 5-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.52 ஆயிரத்தை தாண்டியது. அதனைத் தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே வந்து, ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது. அந்தவகையில் நேற்றும் அதன் விலை உயர்ந்திருந்தது.

    அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 705-க்கும், ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 725-க்கும், ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று ஒரு பவுன் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது. ஒரு பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54 ஆயிரத்து 440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6 ஆயிரத்து 805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 50 காசு அதிகரித்து 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • வெள்ளி விலையும் உயர்ந்த வண்ணம் உள்ளது.
    • வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.89-க்கும் பார் வெள்ளி ரூ.89ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இம்மாத தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. அதே போல வெள்ளி விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,640-க்கும் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,705-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.89-க்கும் பார் வெள்ளி ரூ.89ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 53,360-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,670-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை சவரன் ரூ.53 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் தங்கம் வாங்குவோர் மற்றும் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இந்நிலையில் வார தொடக்கமான முதல் நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,660-க்கும் சவரன் ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,280-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,615-க்கும் விற்பனை.
    • தங்கம் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் 28-ந்தேதி சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை எட்டியது. இதையடுத்து வந்த நாட்களிலும் தங்கம் விலை உயர்ந்து வந்தது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை ஜெட் வேகத்தில் ஏறியுள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,615-க்கும் சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,920-க்கும் விற்பனையாகிறது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 2ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.87-க்கும் பார் வெள்ளி ரூ.87,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.85-க்கும் பார் வெள்ளி ரூ.85,000-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்து விற்பனையாகிறது. கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6,510-க்கும் சவரன் ரூ.52,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.85-க்கும் பார் வெள்ளி ரூ.85,000-க்கும் விற்பனையாகிறது.

    தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏறுமுகத்தில் தங்கம் விலை காணப்பட்டு, மீண்டும் புதிய உச்சத்தை எட்டிப்பிடித்து இருக்கிறது.
    • தங்கத்தின் விலை உயர்வு இல்லத்தரசிகளை கலக்கம் அடையச் செய்துள்ளது.

    சென்னை

    தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்திலேயே பயணிக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு பவுன் ரூ.46 ஆயிரம் முதல் ரூ.47 ஆயிரம் வரை விற்பனை ஆனது. அதன் பின்னர் ஏற்ற, இறக்கத்துடனேயே தங்கம் விலை இருந்து வந்தது.

    அதன் தொடர்ச்சியாக கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்து விலை கிடுகிடுவென உயரத்தொடங்கியது. யாரும் எதிர்பார்த்திராத வண்ணம் ஒரு பவுன் தங்கம் ரூ.48 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை கடந்த மாதம் 5-ந் தேதி பதிவு செய்தது. அதற்கு பிறகு விலை அதிகரித்து, கடந்த 9-ந் தேதி ஒரு பவுன் ரூ.49 ஆயிரத்தையும் கடந்தது.

    அதனைத் தொடர்ந்து விலை குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை காணப்பட்டது. இந்த விலை உயர்வால் கடந்த மாதம் 28-ந் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. அதற்கு மறுநாளே (29-ந் தேதி) பவுனுக்கு ரூ.1,120 அதிகரித்து, ஒரு பவுன் தங்கம் ரூ.51 ஆயிரம் என்ற நிலையையும் ஒரே நாளில் தாண்டியது.

    தங்கத்தின் விலை உயர்வு இல்லத்தரசிகளை கலக்கம் அடையச் செய்தது. இப்படியே போனால், ஏழை, நடுத்தர மக்களுக்கு தங்கம் ஒரு கனவாக மாறிவிடுமோ? என்று அவர்கள் நினைக்கும் அளவுக்கு அதன் விலை இருந்தது. அதன் பின்னர் ஓரிரு நாட்கள் விலை குறைந்த நிலையில், கடந்த 1-ந் தேதி மீண்டும் அதிகரித்து, ஒரு பவுன் ரூ.52 ஆயிரத்தை தொடும் அளவுக்கு சென்றது. ஓரிரு நாட்களில் ரூ.52 ஆயிரத்தை தொட்டு விடும் என்று எதிர்பார்த்த நிலையில், நேற்று முன்தினம் சற்று குறைந்து, ஆறுதலை தந்தது.

    நேற்று ஏறுமுகத்தில் தங்கம் விலை காணப்பட்டு, மீண்டும் புதிய உச்சத்தை எட்டிப்பிடித்து இருக்கிறது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 52 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 545 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலையில் 84 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.84,000-க்கு விற்பனையாகிறது.

    • தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்தது.
    • தங்கத்தின் விலை உயர்வால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த மாதம் 28-ந்தேதி வரலாற்றிலேயே முதன்முறையாக சவரன் ரூ.50,000-க்கு விற்பனையானது. மறுநாள் ரூ.51,120-க்கும், 30 மற்றும் 31-ந்தேதிகளில் ரூ.50,960-க்கும், 2-ந்தேதி ரூ.51,640-க்கும், நேற்று ரூ. 51,440-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,000-க்கும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தின் விலை உயர்வால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    ×