என் மலர்
நீங்கள் தேடியது "கமல்ஹாசன்"
- வாச்சாத்தி சம்பவம் குறித்து COMRADE TALKIES ஆவணப்படம் தயாரித்துள்ளது.
- வாச்சாத்தி வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 215 பேரும் குற்றவாளிகள்என்று தீர்ப்பளிக்கப்பட்டது
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலைக் கிராமத்தில், கடந்த 1992ம் ஆண்டு வனத்துறை, காவல் துறையினர் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் பாலியல் வன்முறை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்டிருந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 215 பேரும் குற்றவாளிகள் என்று தருமபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இவர்களில் 126 பேர் வனத்துறை அலுவலர்கள். 84 பேர் காவல் துறையினர். மீதமுள்ள 5 பேர் வருவாய்த்துறை ஊழியர்கள் இதில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. இவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை பெற்றவர்கள் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
COMRADE TALKIES தயாரித்துள்ள 'வாச்சாத்தி' ஆவணப் படத்தைப் பார்த்த பிறகு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேட்டி
இந்நிலையில், வாச்சாத்தி சம்பவம் குறித்து COMRADE TALKIES தயாரித்துள்ள 'வாச்சாத்தி' ஆவணப்படம் நேற்று திரையிடப்பட்டது. இந்த ஆவணப்பட திரையிடலில் கலந்து கொண்ட எம்.பி. கமல்ஹாசன், நீதியை நிலைநாட்டிட 30 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து போராடிய வாச்சாத்தி கிராம மக்களுடன் உரையாடினார்.
- கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
- ரஜினி-கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர்.
கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார்.
இதையடுத்து ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
- நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது
- மாநிலங்களவை எம்.பி. கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.
அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்" என்றார்.
நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து மாநிலங்களவை எம்.பி. கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "அது அவங்க அரசியல்.. என் அரசியல் இல்ல" என்று தெரிவித்தார்.
- படத்திற்காக சென்னையில் கார் மெக்கானிக் செட் மற்றும் ஓட்டல் என 2 பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.
- படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். இந்நிலையில் ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்து வெளியாகி வரும் தகவல் ரஜினி, கமல் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது.
இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இதற்கிடையே ரஜினி-கமல் இணைந்து நடிக்க இருக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் படத்தின் முதன்மை தயாரிப்பாளராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி மற்றும் ஐஸ்வர்யா ரஜினி, சுருதிஹாசன் ஆகியோர் இணை தயாரிப்பிலும் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
படத்திற்காக சென்னையில் கார் மெக்கானிக் செட் மற்றும் ஓட்டல் என 2 பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினி தற்போது ஜெயிலர்-2 டப்பிங் பணிகளில் இருக்கிறார். இந்த பணிகள் முடிவடைந்ததும் மார்ச் மாதத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினியின் 173-வது படப்பிடிப்பு தொடங்குகிறது.
இதற்கு முன்னதாக ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தின் புரோமோவில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் 15 நாட்கள் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு முன்னதாக படத்தின் புரோமோ பணிகளை முடிப்பதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
- கமல்ஹாசன் பேசியது புரியவில்லை என்று கூறியிருந்தனர்.
- கூட்டணியை விட கொள்கை தான் முக்கியம்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் மற்றும் ராஜ்யசபா எம்.பி.யான கமல்ஹாசன், சில தினங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார். கமல்ஹாசன் உரை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். பலரும், கமல்ஹாசன் பேசியது புரியவில்லை என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில், சென்னை திரும்பிய கமல்ஹாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது உரை பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசிய கமல்ஹாசன், "ஆக்கப்பூர்வமான யோசனைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். நான் நல்ல எண்ணத்துடன் பேசினேன், மாற்றுக்கருத்து கொண்டவர்கள் விவாதத்தில் ஈடுபட வேண்டும்," என்று கூறினார்.
2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பற்றிய கேள்விக்கு பதிலளித்த கமல் ஹாசன், "ஒட்டுமொத்த இந்தியாவுடன் தான் எனது கூட்டணி, கூட்டணியை விட கொள்கை தான் முக்கியம்," என்றார்.
- கமல்ஹாசனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- பா.ஜ.க.வினர் வயிற்றெரிச்சலில் பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய மாநிலங்களவை உறுப்பினர், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றம் பெற்றது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து என்ன சொல்லுகிறீர்கள். தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதா? ஒரு தர்க்கத்திய அறிவுரை தந்தாய். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது.
தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். தங்கச்சி, ஓட்டையும், நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் பாராளுமன்றத்தில் கமல்ஹாசனின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான ஒரு மனநிலையை கொண்டவர்கள் என்பதற்கு இதைவிட ஒரு சான்று தேவையில்லை.
நம்முடைய மாநிலங்களவை உறுப்பினர், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் இதற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழினமே அவரை பாராட்டுகிறது. வாழ்த்துகிறது. பா.ஜ.க.வினர் அந்த வயிற்றெரிச்சலில் பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
த.வெ.க. தலைவர் விஜய் 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் வேல்முருகன் பாடலுக்கு மேடையில் ஆடியது தொடர்பான கேள்விக்கு,
இதில் கருத்து சொல்ல எதுவுமில்லை. அவர்கள் அப்படித்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது என நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்
- தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான் என்று கமல் பேசியிருந்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் உரையாற்றினார்.
மாநிலங்களவையில் ஆற்றிய முதல் உரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிக்கூறி தொடங்கிய அவர், ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் தொடர்ந்தார். கடைசியில் தமிழில் முடித்தார். தமிழில் அவர் பேசியது தற்போது கவனம் ஈர்த்துவருகிறது.
தமிழில் உரையைத் தொடங்கிய கமல்ஹாசன், "நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றம் பெற்றது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து என்ன சொல்லுகிறீர்கள். தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதா? ஒரு தர்க்கத்திய அறிவுரை தந்தாய். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது.
தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். தங்கச்சி, ஓட்டையும், நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர்" என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தேசிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெரியார் பேசியதை குறிப்பிட்டு, "தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதை தவிர உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை. இதற்காக செலவிட்ட காலத்தை வேறு துறையில் செலவிட்டிருந்தால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும்" என்று தெரிவித்தார். இதற்கு அப்போது பெரும் கண்டனங்கள் எழுந்தது.
இதனை தான் தங்கச்சி என நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு கமல்ஹாசன் பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கமல்ஹாசனின் பாராளுமன்ற பேச்சை பாராட்டி வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கவிதை எழுதியுள்ளார்
அந்த பதிவில்,
"கமல்ஹாசன் எம்.பி அவர்களின் நாடாளுமன்ற உரைக்கு எனது பாராட்டும் அவர் பேசி அனுப்பிய விடையும்
அன்புள்ள கமல் எம்.பி அவர்களே!
கன்னிப் பேச்சல்ல; காளைப் பேச்சு
ஒரு தேசியவாதியின் மொழி ஆனால், தமிழச் சாதியின் குரல்
நாடாளுமன்றமே நிமிர்ந்து அமர்ந்தது தாடிச் சிங்கத்தின் தமிழ் கேட்டும்; ஆங்கிலம் கேட்டும்
என்னையறியாமல் மீசை முறுக்கின என் கட்டை விரலும் சுட்டு விரலும்
காடு அதிரட்டும் களிறே பிளிறு"
என்று தெரிவித்தார்.
- தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது என நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.
- தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் உரையாற்றினார்.
மாநிலங்களவையில் ஆற்றிய முதல் உரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிக்கூறி தொடங்கிய அவர், ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் தொடர்ந்தார். கடைசியில் தமிழில் முடித்தார். தமிழில் அவர் பேசியது தற்போது கவனம் ஈர்த்துவருகிறது.
தமிழில் உரையைத் தொடங்கிய கமல்ஹாசன், "நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றம் பெற்றது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து என்ன சொல்லுகிறீர்கள். தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதா? ஒரு தர்க்கத்திய அறிவுரை தந்தாய். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது.
தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். தங்கச்சி, ஓட்டையும், நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர்" என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தேசிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெரியார் பேசியதை குறிப்பிட்டு, "தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதை தவிர உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை. இதற்காக செலவிட்ட காலத்தை வேறு துறையில் செலவிட்டிருந்தால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும்" என்று தெரிவித்தார். இதற்கு அப்போது பெரும் கண்டனங்கள் எழுந்தது.
இதனை தான் தங்கச்சி என நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு கமல்ஹாசன் பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கமல்ஹாசன் பேச்சை ஒட்டி நிர்மலா சீதாராமனை விமர்சித்து சினேகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "நேற்று மாநிலங்களவில் கமல்ஹாசன் ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்க உரை. அந்த உரையை கேட்டதில் இருந்து வியந்து பொய் அந்த வியப்பில் இருந்து எழுபடாமலேயே இருக்கிறேன். நான் மட்டும் அல்ல, லட்சோப லட்ச மக்கள் வியந்து கொண்டும் புகழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள். எங்கிருந்து பேசினால் இந்த உலகத்தின் காதில் விழுமோ அங்கிருந்து பேசியிருக்கிறீர்கள்
- பிச்சை பாத்திரம் உருமாற்றம் பெற்றது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது.
- தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் உரையாற்றினார். மாநிலங்களவையில் ஆற்றிய முதல் உரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிக்கூறி தொடங்கிய அவர், ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் தொடர்ந்தார். கடைசியில் தமிழில் முடித்தார். தமிழில் அவர் பேசியது தற்போது கவனம் ஈர்த்துவருகிறது.
தமிழில் உரையைத் தொடங்கிய கமல்ஹாசன்,
``நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றம் பெற்றது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து என்ன சொல்லுகிறீர்கள். தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதா? ஒரு தர்க்கத்திய அறிவுரை தந்தாய். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது.
தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். தங்கச்சி, ஓட்டையும், நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர்.
உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது 'உம் வினை உம்மை சுடுக'. என்றும் எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பமும் வீட்டைச் சுடுக. 'வந்தீர் வென்றீர் செல்வீர்' இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட. வீழ்க வளமுடன். தமிழ் என்றும் வாழும் நலமுடன். வணக்கம், அவை வந்தடைந்த தலைவர் கூட்டத்திற்கு. சென்றும் வருவேன், நாளை எமதே. உங்கள் கமல்ஹாசன், ஜெய்ஹிந்த்" என தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தேசிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெரியார் பேசியதை குறிப்பிட்டு,
'தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதை தவிர உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை. இதற்காக செலவிட்ட காலத்தை வேறு துறையில் செலவிட்டிருந்தால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும்' என்று தெரிவித்தார். இதற்கு அப்போது பெரும் கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் தங்கச்சி என நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு கமல்ஹாசன் பேசியதாக கூறப்படுகிறது.
- இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
- படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. பின்னர் அவரது திடீர் விலகலை தொடர்ந்து, சிபி சக்கரவர்த்தி படத்தை இயக்கப் போகிறார் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது ரஜினிகாந்தின் 173-வது படமாகும். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படம் குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட் படமான 'தி அவுட்பிட்' படத்தின் தழுவலாக இந்த படம் உருவாக இருப்பதாகவும், ரஜினிகாந்த் இதில் டெய்லராக நடிக்கப் போவதாகவும், இது 70 காலகட்டத்தில் நடக்கும் கதைக்களம் என்றும் பேசப்படுகிறது.
ரஜினிகாந்த் - கமல்ஹாசன் கூட்டணியில் தயாராகும் இந்த புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.
- நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை.
- நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார்.
இந்தியாவின் 77வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் நடிகர்கள் தர்மேந்திரா, மம்மூட்டி, நடிகர் மாதவனுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தர்மேந்திராவுக்கு பத்ம விபூஷனும், மம்மூட்டிக்கு பத்ம பூஷனும், மாதவனுக்கு பத்மஸ்ரீயும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் விருதுபெற்ற நடிகர் மம்மூட்டிக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன்,
"என்னுடைய பிரியத்துக்குரிய நண்பர் மம்மூட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்தும் ஒருவருக்கொருவர் நேரடியாக விமர்சித்துக்கொண்டும் ஒரு 'கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்' நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம்.
நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரில் சந்தித்துக்கொண்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு. நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார். நண்பனுக்கு வாழ்த்து." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- சட்டமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல.
- தமிழர் பெருமையை வெளிப்படுத்தும் அகழாய்வு அறிக்கைகளை முடக்குவதற்கு கண்டனம்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களுக்கு கண்டனம்.
சட்டமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல.
தமிழர் பெருமையை வெளிப்படுத்தும் அகழாய்வு அறிக்கைகளை முடக்குவதற்கு கண்டனம்.
மீண்டும் மீண்டும் பல்வேறு வடிவங்களில் இந்தியை திணிப்பதையும் கண்டிப்பதாக மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத்திட்ட பலனை வழங்கும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திய முதல்வருக்கு நன்றி உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்பமனு அளிக்கலாம் என மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.






