என் மலர்
நீங்கள் தேடியது "Mammootty"
- 'மார்கோ' படத்தை தயாரித்த கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- நியோக் திரைக்கதை எழுதுகிறார் .
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தள்ளுமலா, ஆலப்புழா ஜிம்கானா, அனுராக கரிக்கின் வெள்ளம் போன்ற படங்களை இயக்கிய மலையாளத் திரைத்துறையின் முக்கிய இளம் இயக்குநரான கலித் ரஹ்மான் இப்படத்தை இயக்குகிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'உண்டா' படத்திற்குப் பிறகு இந்த கூட்டணி இணையும் இரண்டாவது படம் இதுவாகும். நடிகர் உன்னி முகுந்தனின் ஆக்ஷன் த்ரில்லர் படமான 'மார்கோ' படத்தை தயாரித்த கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரஹ்மான் இயக்கும் இந்தப் படத்திற்கு நியோக் திரைக்கதை எழுதுகிறார் .
நடிகர்கள், மற்ற தகவல்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 225 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் ஸ்ரீனிவாசன் நடித்துள்ளார்.
- தனது நகைக்சுவை நடிப்பால் தமிழக ரசிகர்களையும் ஸ்ரீனிவாசன் கவர்ந்தவர்.
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் காலமானார். 69 வயதான ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
225 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீனிவாசன், சமூகத்தில் நடக்கும் விஷயங்களை தனது காமெடி வாயிலாக வெளிப்படுத்தி ரசிகர்களால் கவரப்பட்டவர்.
மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமாக்களிலும் நடித்துள்ள அவர், தனது நகைக்சுவை நடிப்பால் தமிழக ரசிகர்களையும் கவர்ந்தவர். திரைப்பட துறையில் நடிப்பு மட்டுமின்றி, பல படங்களில் இயக்குனராகவும் இருந்துள்ளார். மேலும் திரைக்கதை எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் இயக்கிய பல படங்கள் மாநில மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீனிவாசன் உயிரிழந்த பிறகு மம்முட்டி குறித்தும் மதம் குறித்தும் அவர் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் "தனக்கு திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. ஆனால் அதற்கான அடிப்படை செலவுக்குக் கூட என்னிடம் பணம் இல்லை. அப்போது அப்போது இன்னசென்ட் (குணசித்திர நடிகர்) தனது மனைவி ஆலிஸின் வளையல்களை அடகு வைத்து ரூ. 400 கொடுத்து உதவினார்
தனது தாயார், இந்து முறையில் தாலி கட்டவேண்டும் என்று வற்புறுத்தினார். அதற்காக மம்முட்டியிடம் தாலிக்குத் தங்கம் வாங்க ரூ.2000 கேட்டேன். அவரும் தந்து உதவினார். அந்த பணத்தில் தாலி வாங்கி, அடுத்த நாள் நானும் விமலாவும் ரெஜிஸ்டர் ஆபீசில் திருமணம் செய்து கொண்டும்.
என் திருமணத்திற்கு ரூ.400 கொடுத்தவர் ஒரு கிறிஸ்தவர். ஒரு முஸ்லிம் மம்மூட்டி தாலி வாங்க கொடுத்த பணத்தால் என் இந்து மனைவிக்கு தாலி கட்டினேன். என்ன மதம், யாருடைய மதம், அது எங்கே இருக்கிறது? வாழ்க்கையில் மதம் முக்கியமில்லை, மனிதனும் மனிதநேயமும் தான் முக்கியம்" என்று ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
நடிகர் ஸ்ரீனிவாசன் நம்மை விட்டு மறைந்தாலும், அவர் கூறிய இந்த மனிதநேயக் கதை நமக்கு வழிகாட்டும் விளக்காக இருக்கும் என்றால் அது மிகையாகாது.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் மம்மூட்டி, தற்போது பேட்ரியாட் எனும் அரசியல் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இதில் மோகன்லால், ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ரேவதி, தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் ஸாரின் ஷிஹப் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தில் மம்மூட்டி நடிக்க உள்ளதாக இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மம்மூட்டியுடன் மீண்டும் இணைவது குறித்து பேசிய இயக்குநர் அடூர் கோபாலாகிருஷ்ணன் " என்னுடைய அடுத்த படத்தில் மம்மூட்டியே முக்கிய வேடத்தில் நடிப்பார். மீதமுள்ள கதாபாத்திரங்களுக்கான தேர்வு தற்போது நடந்து வருகிறது. திரைக்கதை எழுதும் பணி நடந்து கொண்டிருந்தபோது, மையக் கதாபாத்திரத்திற்கு மம்மூட்டியின் முகம் மட்டுமே என் நினைவுக்கு வந்தது.
அவர்தான் அந்தக் கதாபாத்திரத்திற்கு சரியான நபராக இருப்பார் என்று நான் உணர்ந்தேன். எனது படங்களில் ஆண் கதாநாயகனாக நடிப்பது இது நான்காவது முறையாகும். நான் வேறு எந்த முன்னணி நடிகருடனும் இவ்வளவு முறை பணியாற்றியதில்லை". என தெரிவித்தார்.
இப்படம் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு மம்மூட்டியை அடூர் உலகிற்குள் கொண்டுவருகிறது. கடைசியாக இவர்களின் கூட்டணியில் வெளியான படம் விதேயன் (1994). அடூர் - மம்மூட்டி கூட்டணியில் வெளியான அனந்தரம் (1987), மதிலுகள் (1989) மற்றும் விதேயன் ஆகியவை மலையாள சினிமாவின் மிகவும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படைப்புகளாகும்.
மலையாளத் திரையுலகில் மெகாஸ்டார் என்று லட்சக்கணக்கான ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் மம்மூட்டி உடைய இயற்பெயர் 'முகமது குட்டி பனப்பரம்பில் இஸ்மாயில்' ஆகும்.
இந்நிலையில் தனது பெயர் மம்மூட்டி என மறுவியதற்கு பின்னால் உள்ள சுவாரஸ்யமான கதையை அவர் பகிர்ந்துள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மம்மூட்டி தனது கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்தார்.
அப்போது, "நான் கல்லூரியில் படிக்கும் போது, என் பெயர் உமர் ஷெரீப் என்று எல்லோரிடமும் சொல்வேன். என் உண்மையான பெயர் முகமது குட்டி என்று யாருக்கும் தெரியாது.
ஒரு நாள், என் ஐடி கார்டு தற்செயலாக பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிட்டது. இதன் காரணமாக, எனது உண்மையான பெயர் முழு கல்லூரிக்கும் தெரிய வந்தது என்று தெரிவித்தார்.
அந்த நேரத்தில், அவரது நண்பர்களில் ஒருவரான சசிதரன், ஐடி கார்டில் 'முகமது குட்டி' என்ற பெயரை 'மம்மூட்டி' என்று தவறாகப் படித்ததாகக் கூறினார்.
எனவே, "அவர் தவறாகப் படித்த பெயர் பின்னர் எனக்குப் பொருத்தமாகிவிட்டது" என்று மம்மூட்டி சிரித்தபடி கூறினார்.
இந்த சந்தர்ப்பத்தில், அவர் தனது நண்பர் சசிதரனை மேடைக்கு அழைத்து பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். ரஜினியின் குசேலன் படம் போல நடந்த இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
- க்ரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் விநாயகனும், வில்லனாக மம்மூட்டியும் நடித்துள்ளனர்.
- இப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியது.
மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் மம்மூட்டி. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான 'பிரம்மயுகம்' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து 'குரூப்' படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே.ஜோஸ் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடித்துள்ள படம் 'களம் காவல்'. க்ரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் விநாயகனும், வில்லனாக மம்மூட்டியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியது.
இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் 'களம் காவல்' நாளை திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், 'களம் காவல்' படம் நாளை வெளியாகாது என்றும் டிசம்பர் மாதம் 5-ந்தேதி வெளியாகும் என்றும் போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
- 2024ஆம் ஆண்டுக்கான கேரள மாநிலத்தின் திரைப்பட விருது அறிவிக்கப்பட்டது
- பிரம்மயுகம் படத்தில் நடித்ததற்காக மம்மூட்டி சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேசிய திரைப்பட விருதுக் குழுவை விளாசிய நடிகரும் கேரள திரைப்பட விருதுக் குழுத் தலைவருமான பிரகாஷ்ராஜ்
2024ஆம் ஆண்டுக்கான கேரள மாநிலத்தின் திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 55ஆவது திரைப்பட விருது பட்டியலை கலாச்சார விவகாரத்துறை அமைச்சர் சஜி செரியன் அறிவித்தார்.
பிரம்மயுகம் படத்தில் நடித்ததற்காக மம்மூட்டி சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மலையாள சினிமாவில் வசூலை வாரிக் குவித்த மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம், சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேரள திரைப்பட விருதுக் குழுத் தலைவர் பிரகாஷ்ராஜ், "பிரம்மயுகம் படத்தில் மம்முட்டி மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இளம் நடிகர்கள் அவரிடம் இருந்து இதை கற்றுக்கொள்ளவேண்டும்" என்று தெரிவித்தார்.
இதனிடையே, தேசிய விருதில் மம்மூட்டிக்கு ஏன் உரிய அங்கீகாரம் ஏன் தரப்படுவதில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த பிரகாஷ்ராஜ், "இது தொண்டு நிறுவனம் கிடையாது. நாம் திறமையான நடிப்பை வெளிப்படுத்துபவர்களுக்கு விருது அளிக்கிறோம். ஆனால் FILES, PILES போன்ற பெயர் உள்ள படங்களுக்கு தேசிய விருது கிடைப்பதை பார்க்கும்போதே நமக்குத் தெரிகிறது, அவை நடுநிலையுடன் அறிவிக்கப் படுவதில்லை. மம்முட்டிக்கு விருது கொடுக்கும் அளவிற்கு அவர்கள் தகுதியானவர்கள் இல்லை. இதைச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை" என்று தெரிவித்தார்.
- நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார்.
- இப்படத்தில் ஃபகத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நடிகர் மம்மூட்டி உடல்நிலைக் காரணமாக 7 மாதங்கள் ஓய்வில் இருந்தார். இதனால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார்.
இந்த நிலையில், மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் PATRIOT படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐதாராபாத் புறப்பட்டு சென்றார்.
- பதிவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
நடிகர் மம்மூட்டி உடல்நிலைக் காரணமாக 7 மாதங்கள் ஓய்வில் இருந்தார். இதனால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார். நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐதாராபாத் புறப்பட்டு சென்றார்.
இதனை தொடர்ந்து நடிகர் மம்மூட்டி தனது ஃபேஸ்புக் பதிவில், "சிறிய இடைவெளிக்குப் பிறகு, நான் என் வாழ்க்கையில் மிகவும் விரும்பியதைச் செய்யத் திரும்பியுள்ளேன். கேமரா அழைக்கிறது!" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு MMMN என்று தெரிவித்துள்ள படக்குழு டீசர் நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி, மகேஷ் நாராயணன் ஆகியோரின் பெயரின் ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தைக் கொண்டு படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மம்மூட்டி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.
- பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சமும் த.வெ.க. சார்பில் விஜய் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சமும் த.வெ.க. சார்பில் விஜய் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.
நடிகர் மம்மூட்டி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "கரூரில் நடந்த துயர சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மன வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அவரை தொடர்ந்து நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "கரூரில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசலில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்காகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.
- நடிகர் மம்மூட்டி கடந்த 7 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார்.
- இப்போது எல்லாம் குணமாகிவிட்டது. அவர் விரைவில் திரும்புவார்.
நடிகர் மம்மூட்டி கடந்த 7 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். ரமலான் பண்டிகையில் இருந்தே அவர் எந்த படப்பிடிப்பிலும் கலந்துக் கொள்ளவில்லை.
இவர் சீக்கிரம் குணமடைய வேண்டும் என பல லட்ச ரசிகர்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பராக நடிகர் மோகன்லால் சபரிமலையில் அவருக்காக அர்ச்சனை செய்திருந்தார் அச்செய்தி மிகவும் வைரலானது.
அதைத் தொடர்ந்து, அவர் உடல்நலம் குணமாகி மீண்டும் படப்பிடிப்புகளுக்கு வரவிருக்கிறார் என்ற தகவல் நேற்று முதல் இணையத்தில் பரவி வந்தது.
இதனை உறுதிபடுத்தும் வகையில் அனைவரும் மம்மூட்டியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கம் பேக், வெல்கம் பேக் என மனதார வாழ்த்துக்களை பதிவிட்டனர்.
மம்மூட்டியின் உடல்நிலை தொடர்பாகவும், சிகிச்சையின்போது எப்படியான விஷயங்களை அவர் கடந்து வந்தார் என்பது குறித்து, அவருடைய நண்பரும், நடிகரும், எழுத்தாளருமான வி.கே.ஶ்ரீராமன் பேசியிருக்கிறார்.
வி.கே.ஶ்ரீராமன், "சிகிச்சையின் ஆரம்பக் கட்டங்களில், அவர் உணவின் சுவை தெரியவில்லையெனவும், மணம் உணரும் திறனை இழந்துவிட்டதாகவும் கூறினார்.
இப்போது எல்லாம் குணமாகிவிட்டது. அவர் விரைவில் திரும்புவார்.
மம்மூட்டி அவரே தொலைப்பேசியில் அழைத்து, தான் முழுமையாகக் குணமடைந்துவிட்டதாகக் கூறினார்.
அவரது குரலில் ஒருபோதும் பலவீனத்தின் அறிகுறி இருந்ததில்லை. அவர் பேசும்போது ஒரு நோயாளியின் குரல் போலவே இல்லை.எப்போதும் இருக்கும் அதே வலிமை, அதே ஆற்றல் இப்போதும் இருக்கிறது. அவர் என்னைத் தொடர்ந்து அழைத்துப் பேசுகிறார்." என கூறியுள்ளார்.
- மம்மூட்டிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை இது என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
- பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர், மம்மூட்டி.
73 வயதானாலும், அது தெரியாத அளவுக்கு இளம் கதாநாயகர்களுக்கே 'டப்' கொடுத்து நடித்து வருகிறார்.
மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானும் முன்னணி நடிகராக ஜொலிக்கிறார். குறிப்பாக ரசிகைகளுக்கு பிடித்த நடிகராக வலம் வருகிறார்.
சினிமாவில் 50 ஆண்டுகளாக நடித்து வரும் மம்மூட்டிக்கு கவுரவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. வரலாறு பாடத்திட்டத்தில் 'மலையாள சினிமாவின் வரலாறு' என்ற பெயரில் மம்மூட்டியின் 50 ஆண்டு கலைப்பயணம் ஒரு பாடமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இது மம்மூட்டிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை இது என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
- சிறந்த இயக்குனர்: விருதை பிளஸ்ஸி (ஆடுஜீவிதம்) வென்றார்.
- ஆடுஜீவிதம் திரைப்படம் மொத்தமாக 9 விருதுகளைப் பெற்றது
2024ம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளை முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்கினார்.
சிறந்த நடிகருக்கான விருது ஆடு ஜீவிதம் படத்திற்காக பிரித்விராஜுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இயக்குனர்: விருதை பிளஸ்ஸி (ஆடுஜீவிதம்) வென்றார். ஆடுஜீவிதம் திரைப்படம் மொத்தமாக 9 விருதுகளைப் பெற்றது.
சிறந்த நடிகைக்கான விருது உள்ளொழுக்கு படத்திற்காக ஊர்வசிக்கும் தடவு படத்திற்காக பீனா ஆர் சந்திரனுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த படத்திற்கான விருது மம்முட்டியின் 'காதல் - தி கோர்' படத்திற்கு வழங்கப்பட்டது.






