ஜனாதிபதியிடம் இருந்து பத்ம பூஷண் விருதை பெற்றார் மம்மூட்டி

மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பத்ம பூஷண் விருதை வழங்கினார்.
மம்மூட்டி
மம்மூட்டி
Published on

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் விருதுகளை அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி வருகிறது.

திரைப்படத் துறையில் சாதித்ததற்கான மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பத்ம பூஷண் விருது வழங்கினார். அதேபோல் பாடகி அல்கா யாக்னிக் பத்ம பூஷண் விருதை பெற்றார்.

பிரபல மலையாள பத்திரிகையாளர் பி. நாராயணன், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் ஆகியோர் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பத்ம விபூஷண் விருதை வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com