search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Torch Light"

    • பாராளுமன்றத் தேர்தலில் கட்சிகள் தங்களுக்கான சின்னத்தைக் கேட்டு விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
    • விண்ணப்பம் செய்வதற்காகக் குறிப்பிட்டிருந்த முதல் நாளான டிசம்பர் 17-ந்தேதி அன்றே டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கித் தரும்படி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

    ெசன்னை, ஜன.31-

    பாராளுமன்றத் தேர்த லில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 'டார்ச் லைட்' சின்னத்தை ஒதுக்கி தருமாறு தேர்தல் ஆைண யத்தில் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது.

    இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    பாராளுமன்றத் தேர்த லில் கட்சிகள் தங்களுக்கான சின்னத்தைக் கேட்டு விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. விண்ணப்பம் செய்வ தற்காகக் குறிப்பிட்டிருந்த முதல் நாளான டிசம்பர் 17-ந் தேதி அன்றே டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கித் தரும்படி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விண்ணப்பிக் கப்பட்டுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சி யின் தலைவர் கமல் ஹாசன் வெளிநாடு செல்லவிருப்ப தால், கட்சியின் துணைத் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர் ஆகி யோருடன் 'பாராளு மன்றத் தேர்தல்' குறித்து ஆலோ சனை மேற்கொண்டார்.

    ஆலோசனைக்குப் பின், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செயல் திட் டங்களை உருவாக்குவதற் கும், செயல்படுத்துவதற்கும், பிற குழுக்களை அமைப்ப தற்கும் கமல்ஹாசன் 'தேர் தல் பணி ஒருங்கிணைப்பு குழுவினை' உருவாக்கி உள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி யின் துணைத் தலைவர்க ளான மவுரியா, தங்கவேலு, பொதுச் செயலாளர் அரு ணாச்சலம் ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பி னர்களாகச் செயல்படு வார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சி யின் மனுவை ஏற்றுக் கொண்டு தேர்தல் ஆணை யம் கமல் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கு மா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அப்துல் மஜித் இயக்கத்தில் சதா - ரித்விகா நடிப்பில் வெளியாகி இருக்கும் `டார்ச் லைட்' படத்தின் விமர்சனம். #TorchLightReview #Sadha
    ரித்விகாவுடன் இணைந்து நெடுஞ்சாலையில் விபச்சார தொழில் செய்து வருகிறார் நடிகை சதா. ஒருநாள் பேருந்தில் செல்லும் போது தன்னை உரசும் ஒருவருக்கு சதாவை தக்க பதிலடி கொடுக்கிறார். இதையடுத்து தைரியமாக செயல்படட்ட சதா மீது அவருக்கு காதல் வந்துவிடுகிறது. இதையடுத்து அவளை திருமணம் செய்ய முடிவு செய்து, சதாவிடம் தனது காதலையும் வெளிப்படுத்துகிறார். ஆனால், சதா அவரது காதலை ஏற்க மறுக்கிறார். 

    இதற்கிடையே சதா விபச்சாரத்தில் ஈடுபடுவது, அவருக்கு தெரிய வருகிறது. இருப்பினும் விபச்சார தொழிலை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவர் வற்புறுத்த, தனக்கு திருமணம் ஆன உண்மையை சதா அவரிடம் தெரிவிக்கிறாள். தான் ஒரு நல்ல குடும்பத்து பெண் என்றும், தனக்கு திருமணம் ஆனதையும், திருமணத்திற்கு பிறகு தனது கணவரின் முதலாளி தன்னை அடைய நினைத்ததையும், அவருடன் தனது கணவர் சண்டை போட்டதையும் விவரிக்கிறாள். 

    இந்த நிலையில், ஒருநாள் தனது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட, அவரை காப்பாற்ற தனது தோழி ரித்விகாவின் உதவியுடன் தான் விபச்சார தொழிலுக்கு வந்ததாகவும் கூறுகிறாள்.



    மறுபுறம் உடல்நலம் பெற்று திரும்புகிறார் சதாவின் கணவர். இந்த நிலையில், தன்னை காப்பாற்ற சதா விபச்சார தொழிலில் ஈடுபட்டது அவருக்கு தெரிய வருகிறது. இதனால் மனவேதனைக்குள்ளாகும் அவர் சதாவை விட்டுபிரிய முடிவு செய்கிறார். 

    கடைசியில் தனது கணவரை காப்பாற்ற தன்னையே அர்பணித்த சதாவின் வாழ்க்கை என்ன ஆனது? சதாவின் கணவர் அவளை ஒதுக்கிவிட்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு சினிமாவில் மீண்டும் நடிக்க வந்திருக்கும் சதா, முற்றிலும் வித்தியாசமான, அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். நெடுஞ்சாலைகளில் விபச்சார தொழிலில் ஈடுபடும் கதாபாத்திரத்தில் சதா, ரித்விகா என இருவரது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே கதையின் போக்குக்கு ஏற்ப படத்தோடு ஒன்றி நடித்திருக்கின்றனர்.



    வேறு வழியில்லாமல் விபச்சார தொழிலுக்கு தள்ளப்படும் பெண்கள், அவர்களது வாழ்க்கையின் மறுபக்கம், அந்த வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் என அவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படும்யடியாக உண்மை கதையை மையப்படுத்தி படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அப்துல் மஜித். படத்தில் வசனங்கள் அவர்களது வாழ்க்கையின் வலிகளை பிரதிபலிப்பதாக உள்ளன. படத்தில் தனது கணவனை காப்பாற்ற மனைவி தவறான வழியில் செல்கிறாள் என்பதை அறியும் கணவன் மற்றும் கணவன் முன்னாலேயே மனைவியை பலர் வர்ணிப்பது போல காட்சிகள் நெருடலாக உள்ளது. 

    கணவன் முன்பே மனைவியை மற்றவர்கள் வர்ணித்து பேசுவது அந்த கணவனுக்கு, இறப்பை விட பெரிய வலியை கொடுக்கும் என்பதை படமாக இயக்கியிருக்கிறார். படத்தின் முடிவு ஏற்கும்படியாக இல்லை.

    ஜே.வி.யின் பின்னணி இசை படத்திற்கு பலம் தான். சக்திவேலின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஓரளவு திருப்தியாக வந்துள்ளது. 

    மொத்தத்தில் `டார்ச் லைட்' தூக்கிப்பிடிக்கப்பட வேண்டும். #TorchLightReview #Sadha #Riythvika

    டார்ச் லைட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட சதா, டிரைலரை பார்த்து படத்தை எடை போடாதீர்கள் என்று பேசியிருக்கிறார். #Sadha
    விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ படத்தை இயக்கியவர் அப்துல் மஜீத். இவர் தற்போது ‘டார்ச் லைட்’ படத்தை இயக்கியிருக்கிறார். இது பாலியல் தொழிலாளி பற்றிய கதை என்கிற பரபரப்பு நிலவி வருகிறது. ‘டார்ச் லைட்’ படம் சார்ந்த பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    இதில் கதாநாயகியாக நடித்துள்ள சதா பேசும்போது, "நான் சற்று இடைவெளிக்குப் பின் தமிழில் நடித்திருக்கிறேன். இடையில் தெலுங்கு, இந்தி என்று நடித்தேன். நல்லதொரு கேரக்டருக்காக தேர்ந்தெடுத்து நடிக்க விரும்பியதால் இந்த தாமதம் நேர்ந்தது. 'டார்ச் லைட்' படத்தின் கதையை இயக்குநர் மஜீத் என்னிடம் ஒரு முறை சொன்னார். கதை பிடித்தது. ஆனால் என்னால் உடனே முடிவெடுக்க முடியவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் கேட்டேன். அப்போதும் அவர் அதே தெளிவோடு கூறினார். என்னால் எதுவும் சட்டெனக் கூற முடியவில்லை. சரியாக வருமா நம்மால் முடியுமா என்கிற எண்ணம் இருந்தது. 

    மஜீத் என் மேல் நம்பிக்கை வைத்தார். உங்களால் முடியும் என்று ஊக்கம் தந்தார். நடிப்பது என்று முடிவெடுத்து விட்டேன். இது மாதிரி பாலியல் தொழிலாளியாக நடிக்கப் பலரும் தயங்கவே செய்வார்கள். காரணம் படத்தின் பாத்திரத்தை பாத்திரமாகப் பார்க்கும் பக்குவம்  பலருக்கும் இருப்பதில்லை. 



    அது தான் பிரச்சினை. என்னைப் பார்க்கிறவர்கள் எல்லாருமே முதலில் இதைத்தான் கேட்கிறார்கள். என்னை படத்தில் சதாவாகப் பார்க்காதீர்கள். பாத்திரமாகப் பாருங்கள் என்பதே என் பதில். டிரைலரை பார்த்து விட்டு கேள்வி கேட்கிறார்கள். டிரைலர், போஸ்டர் பார்த்து விட்டு படத்தை முடிவு செய்யக் கூடாது. அட்டைப் படத்தைப் பார்த்து விட்டு ஒரு புத்தகத்தை முடிவு செய்ய முடியாது அல்லவா?. டிரைலரில் சில வினாடிகள் உள்ள வசனங்கள் பற்றிக் கேட்கிறார்கள். சர்ச்சையாக இருக்கிறதே என்கிறார்கள். படம் பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள். 

    இது பாலியல் தொழிலில் சிக்கிய பெண்கள் பற்றிய கதை தான். அவர்கள் அந்தத் தொழிலுக்கு விரும்பி வருவதில்லை. ஆடம்பர வாழ்க்கைக்கோ, பெரிய பணத்துக்கோ, சந்தோஷத்துக்கோ என்று வருவதில்லை. குடும்ப வறுமை சூழலில் வருகிறார்கள். இந்தத் தொழிலில் ஆண்கள் சம்பந்தப்பட்டாலும் கெட்ட பெயரெல்லாம் பெண்களுக்குத்தான். அவர்களின் வலி, வேதனை, துன்பம், துயரம், மன அழுத்தம் யாருக்கும் தெரிவதில்லை. அதைத்தான் இதில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். படப்பிடிப்பின் பெரும் பகுதி அவுட்டோரில் நடைபெற்றது. அதுவும் லைவ் லொக்கேஷன்களில் நடைபெற்றது. அங்கிருந்த யாருக்கும் நாங்கள் சினிமா எடுப்பது தெரியாது. அப்படிப்பட்ட இடங்களில் கேமரா பொசிஷன் பார்த்து நானும் கூட்டத்தில் கலந்து நடிக்க வேண்டும். இது ஒரு சவால் தான் இருந்தும் நடித்தேன். 

    ஒரு முறை அப்படி நடித்த போது ஹீரோ என்னைத் தள்ளிவிட்டார். கீழே விழுந்து என் முட்டியில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. மொத்தத்தில் பல வகையிலும் எனக்கு இது மறக்க முடியாத படம்’ என்றார்.
    சதா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டார்ச்லைட்’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்க மறுத்து விட்டனர். #Sada #TorchLight
    நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட் அடித்து பாலியல் தொழில் செய்யும் பெண்களை அடிப்படையாக வைத்து ‘டார்ச்லைட்’ என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய வேடத்தில் சதா நடித்துள்ளார். 

    இப்படம் குறித்து இயக்குனர் மஜீத் கூறும்போது, “வறுமையைப் பயன்படுத்திப் பெண்களை இந்தச் சமூகம் எப்படிப்பட்டப் படுகுழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

    இந்தக் கதை சார்ந்து பலர் உண்மை சாட்சியங்களாக உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து பேசி, வீடியோவில் பதிவுசெய்து படமாக்கினேன். இந்தப் படத்துக்கு சென்னையில் உள்ள சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டனர்.



    எனவே, மும்பைக்குச் சென்று போராடி, ‘ஏ’ சான்றிதழ் வாங்கியுள்ளேன். உங்கள் அனைவருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்” என்றார். இப்படத்தில் சதாவுடன் ரித்விகா, உதயா, தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா, ரங்கநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
    மஜீத் இயக்கத்தில் சதா - ரித்விகா நடிப்பில் உருவாகி இருக்கும் `டார்ச் லைட்' படத்திற்கு போராடி சென்சார் சான்றிதழ் பெற்றதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். #TorchLight #Sadha
    விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய மஜீத் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் `டார்ச் லைட்'. சதா, ரித்விகா, புதுமுகம் உதயா, தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா, ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    படம் பற்றி இயக்குநர் மஜீத் பேசும்போது, 

    " இது ஒரு பீரியட் படம். 90-களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட் அடித்து பாலியல் தொழில் செய்யும் பெண்கள்  பற்றிய கதை. இந்தப் படத்தின் கதையைக் கேட்ட நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கினார்கள்.  ஆனால் நடிகை சதா தைரியமாக நடிக்கச் சம்மதித்தார். வறுமையைப் பயன்படுத்தி பெண்ணினத்தை இந்தச் சமூகம் எப்படிப் படுகுழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். 



    இந்தக் கதை சார்ந்து பலர் உண்மைச் சாட்சியங்களாக உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து வீடியோவில் பேசி, பதிவு செய்து படமாக்கினேன். படத்தை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பினேன். ஆனால் இங்கு படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர மறுத்தார்கள். போராடிப் பார்த்து வேறு வழியில்லாமல் மும்பை சென்று `ஏ' சான்றிதழ் பெற்றுள்ளேன். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே படமாக்கி உள்ளேன். படம் சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும். " என்றார்.

    சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேவி இசையமைத்திருக்கிறார். படம் விரைவில் திரைக்க வர இருக்கிறது. #TorchLight #Sadha

    ×