என் மலர்
நீங்கள் தேடியது "Viduthalai chiruthaigal katchi"
- கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு சென்னை வந்த திருமாவளவன் முதுகு எரிச்சல் காரணமாக அவதிப்பட்டார்.
- வடபழனியில் உள்ள ஆஸ்பத்திரியில் நேற்றிரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வைரஸ் காய்ச்சல் காரணமாக வடபழனியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு சென்னை வந்த திருமாவளவன் முதுகு எரிச்சல் காரணமாக அவதிப்பட்டார்.
வடபழனி கட்சி அலுவலகத்தில் அவர் மணிக்கணக்கில் நின்றுகொண்டே கட்சி நிர்வாகிகளையும், பார்வையாளர்களையும் சந்தித்ததில் மிகவும் சோர்வடைந்து விட்டார். உடல் வலி அதிகமாகி காய்ச்சலும் அவருக்கு வந்துவிட்டது.
இதனால் அவர் வடபழனியில் உள்ள ஆஸ்பத்திரியில் நேற்றிரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் 2 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெறுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
- வேங்கைவயல், நாங்குனேரி சம்பவங்களில் மேற்கொண்ட அணுகுமுறையால் பட்டியலினத்தவர்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்துள்ளது என்பதை சுட்டி காட்டி பேசி இருக்கிறார்கள்.
- அ.தி.மு.க. அணியில் சேர்ப்பதற்கான முயற்சியையும் கொங்கு மண்டலத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் முன்னெடுத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தனது கட்சியினரை தனித்து போட்டியிடவும் தயாராக இருங்கள் என்று உஷார்படுத்தியது அரசியல் களத்தில் பலரது புருவங்களையும் உயர்த்தியது.
அப்படின்னா தி.மு.க. கூட்டணியில் இருக்க மாட்டாரா? என்ன பிரச்சனை? என்ற கேள்விகள் எழுந்தது. இது தொடர்பாக அந்த கட்சி நிர்வாகிகள் கூறிய தகவல்கள் மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர்கள் கூறியதாவது:-
கூட்டணி நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது. இடையில் பா.ம.க.வை சேர்க்க நடந்த முயற்சிகள் அண்ணனுக்கு பிடிக்கவில்லை.
இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். தற்போது சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் சிறுத்தைகள் கைவசம் உள்ளன. வருகிற தேர்தலில் 3 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளோம். ஆனால் தி.மு.க. தலைமையோ கூடுதல் தொகுதி தர முடியாது. இரண்டு தொகுதிகள்தான் தர முடியும். வேங்கைவயல், நாங்குனேரி சம்பவங்களில் மேற்கொண்ட அணுகுமுறையால் பட்டியலினத்தவர்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்துள்ளது என்பதை சுட்டி காட்டி பேசி இருக்கிறார்கள். இது அண்ணனுக்கு கூடுதல் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. அணியில் சேர்ப்பதற்கான முயற்சியையும் கொங்கு மண்டலத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் முன்னெடுத்துள்ளார். அ.தி.மு.க. தரப்பும் அண்ணனை வரவேற்க தயாராகி விட்டார்கள். இனி அண்ணன்தான் முடிவெடுக்க வேண்டும். கொடுக்கும் 2 தொகுதிகளை பெற்றுக்கொள்வதா? அல்லது கூட்டணிக்கு 'கல்தா' கொடுப்பதா? என்பதை விரைவில் முடிவு செய்வார் என்றனர்.
- சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் மாலை 3 மணிக்கு முதல் நிகழ்ச்சி தொடங்குகிறது.
- திருமாவளவன் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடி வந்த நிலையில் இன்று மணிவிழா நிறைவு விழா நடக்கிறது.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நாளை (17-ந்தேதி) 61-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
கடந்த ஆண்டு மணி விழாவை (60 வயது) கண்ட அவருக்கு ஒரு வருடம் முழுவதும் விழாக்களை கட்சி தொண்டர்கள் நடத்தி வந்தனர்.
ஏழை-எளிய மக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கி திருமாவளவன் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடி வந்த நிலையில் இன்று மணிவிழா நிறைவு விழா நடக்கிறது.
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் மாலை 3 மணிக்கு முதல் நிகழ்ச்சி தொடங்குகிறது. வாழ்த்தரங்கத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு தலைமை தாங்கி மலர் வெளியிடுகிறார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முன்னிலை வகித்து விழா மலரை பெறுகிறார். நடிகர் சத்யராஜ், கவிஞர்கள் அறிவுமதி, பழனி பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன், துரை.ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். முடிவில் திருமாவளவன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.
விழாவையொட்டி மாலை 3 மணிக்கு இசை அரங்கம் நடக்கிறது. பின்னர் நடக்கும் கவியரங்கத்திற்கு திரைப்பட பாடலாசிரியர் கபிலன் தலைமை தாங்குகிறார்.
துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு வரவேற்கிறார். கவிஞர் காசி முத்து மாணிக்கம் தொடக்க உரையாற்றுகிறார். கவிஞர்கள் தமிழ் மணவாளன், ரவிக்குமார், தனிக்கொடி, தஞ்சை இனியன், தேன் மொழிதாஸ், அருண்பாரதி ஆகியோர் கவிப்பொழிவு நிகழ்த்துகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை தலைமை நிர்வாகிகள் உஞ்சை அரசன், ஏ.சி.பாவரசு, தமிழ்செல்வன், இளஞ்சேகுவாரோ, பால சிங்கம் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள் வக்கீல் பி.சாரநாத், பா. வேலுமணி, சேத்துப்பட்டு கோ.இளங்கோ, சைதை ஜேக்கப், வேளச்சேரி இளையா, கரிகால் வளவன், வழக்கறிஞர் அப்புன், சவுந்தர், இளங்கோவன், உஷாராணி, தேவ.ஞான முதல்வன் ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர்.
மணி விழா நிறைவு விழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தையினர் திரள்கிறார்கள்.
- 7 வருடத்திற்கு பிறகு கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
- வட சென்னை வடக்கு இளங்கோவன், வடசென்னை தெற்கு-அப்புன், மத்திய சென்னை கிழக்கு-சாரநாத், மத்திய சென்னை மேற்கு-வேலுமணி.
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள், மண்டலச் செயலாளர்கள், மண்டல துணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
7 வருடத்திற்கு பிறகு கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
சட்டமன்ற தொகுதி வாரியாக 144 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர்களை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-
வடசென்னை கிழக்கு சி.சவுந்தர், வட சென்னை மேற்கு-உஷாராணி, வட சென்னை வடக்கு இளங்கோவன், வடசென்னை தெற்கு-அப்புன், மத்திய சென்னை கிழக்கு-சாரநாத், மத்திய சென்னை மேற்கு-வேலுமணி, மத்திய சென்னை வடக்கு-சேத்துப்பட்டு இளங்கோ.
தென் சென்னை மையம்-சைதை ஜேக்கப், தென் சென்னை வடக்கு-கரிகால் வளவன், தென் சென்னை தெற்கு-இளையா, மேற்கு சென்னை-ஞான முதல்வன்.
திருவள்ளுவர் கிழக்கு-நீலமேகம், திருவள்ளூர் மேற்கு-தளபதி சுந்தர், திருவள்ளூர் மையம்-அருண் கவுதம், வேலூர் கிழக்கு-கோவேந்தன், வேலூர் மேற்கு சுதாகர், திருப்பத்தூர்-வெற்றி கொண்டான், திருப்பத்தூர் வடக்கு-ஓம்பிரகாசம்.
செங்கல்பட்டு வடக்கு-தென்னவன், செங்கல்பட்டு மையம்-கானல் விழி, செங்கல்பட்டு மேற்கு-பொன்னிவளவன், செங்கல்பட்டு தெற்கு-தமிழினி, ஆவடி மாநகர்-ஆதவன், காஞ்சிபுரம் மாநகர்-மதி ஆதவன், வேலூர் மாநகர்-பிலிப், ஓசூர் மாநகர்-ராமச்சந்திரன், கடலூர் மாநகர்-செந்தில், கும்பகோணம் மாநகர்-ராஜ்குமார், தஞ்சாவூர் மாநகர்-இடிமுரசு இலக்கண்ணன், கரூர் மாநகர்-இளங்கோ, திண்டுக்கல் மாநகர்-மைதீன் பாவா, சிவகாசி மாநகர்-செல்வன் ஜேசுதாஸ், நெல்லை மாநகர்-முத்துவளவன், நாகர்கோவில் மாநகர்-அப்துல் காலித்.
சேலம் கிழக்கு-கருப்பையா, சேலம் மேற்கு-மேட்டூர் மெய்யழகன், சேலம் வடக்கு-தெய்வானை, சேலம் தெற்கு-தமிழன், ஈரோடு மாநகர்-சாதிக், ஈரோடு மேற்கு-தங்கவேல், ஈரோடு தெற்கு-கமலநாதன், ஈரோடு வடக்கு-அந்தியூர் ஈஸ்வரன், நாமக்கல் கிழக்கு-மும்பை அர்ஜூன், நாமக்கல் மேற்கு-முகிலன், நாமக்கல் மையம்-நீலவானத்து நிலவன்.
கோவை கிழக்கு-ஸ்டீபன், கோவை மாநகர் வடக்கு-குரு, கோவை மாநகர் தெற்கு-குமணன், கோவை வடக்கு-குடி மைந்தன், கோவை தெற்கு-அசோக்குமார்.
திருச்சி கிழக்கு-அன்புசெல்வன், திருச்சி தெற்கு-ஆற்றலரசு, திருச்சி வடக்கு-கலைச்செல்வன், தஞ்சாவூர் மையம்-ஜெய்சங்கர், தஞ்சாவூர் மேற்கு-ஜான்பீட்டர், தஞ்சாவூர் தெற்கு-அரவிந்த்குமார், தஞ்சாவூர் வடக்கு-முல்லைவளவன்.
திருப்பூர் மாநகர்-மூர்த்தி, திருப்பூர் கிழக்கு-ஓவியர் மின்னல், திருப்பூர் தெற்கு-சதிஷ்குமார், திருப்பூர் வடக்கு-சண்முகம்.
மதுரை கிழக்கு-முத்துப் பாண்டியன், மதுரை மேற்கு-சிந்தனைவளவன், மதுரை தெற்கு-காளிமுத்து, மதுரை மாநகர் தெற்கு-ரவிக்குமார், மதுரை மாநகர் வடக்கு-சுடர்மொழி, தேனி கிழக்கு-ரபிக் முகமது, தேனி மேற்கு-போடி மதன், திண்டுக்கல் மையம்-தமிழரசன், திண்டுக்கல் மேற்கு-கணபதி, திண்டுக் கல் கிழக்கு-தமிழ்முகம்.
தூத்துக்குடி தெற்கு-டிலைட்டா, தூத்துக்குடி மையம்-கணேசன், தூத்துக் குடி வடக்கு-முருகன், நெல்லை தெற்கு-அருட் செல்வன், நெல்லை மேற்கு-எப்.சி.சேகர், கன்னியாகுமரி மையம்-மேசியா, கன்னியாகுமரி மேற்கு-தேவகி, கன்னியாகுமரி கிழக்கு பேரறிவாளன்.
தாம்பரம் மாநகர் வடக்கு-திருநீர்மலை தமிழ ரசன், தாம்பரம் மாநகர் தெற்கு-சாமுவேல், சேலம் மாநகர் வடக்கு-காஜா மைதீன், சேலம் மாநகர் தெற்கு-மொழியரசு, திருச்சி மாநகர் மேற்கு-புல்லட் லாரன்ஸ், திருச்சி மாநகர் கிழக்கு-கனியமுதன்.
சிவகங்கை தெற்கு-பாலையா, ராமநாதபுரம் கிழக்கு-அற்புதகுமார், ராமநாதபுரம் மேற்கு-பிரபாகர், விருதுநகர் கிழக்கு-இனியவன், விருதுநகர் மேற்கு-பிரியதர்ஷினி, விருதுநகர் மையம்-சாத்தூர் சந்திரன்.
காஞ்சீபுரம் வடக்கு-மேனகா தேவி கோமகன், காஞ்சிபுரம் தெற்கு-எழிலரசு, மயிலாடுதுறை வடக்கு-இனியவன், மயிலாடுதுறை தெற்கு-மோகன்குமார், நாகப்பட்டினம் வடக்கு-அருட் செல்வன், நாகப்பட்டினம் தெற்கு-செல்வராஜ், கடலூர் வடக்கு-அறிவுடை நம்பி, கடலூர் மையம்-நீதிவள்ளல், கடலூர் மேற்கு-திராவிடமணி, கடலூர் தெற்கு-மணவாளன், கடலூர் கிழக்கு-அரங்க-தமிழ் ஒளி, பெரம்பலூர் மேற்கு-ரத்தின வேல், பெரம்பலூர் கிழக்கு-கலையரசன் உள்ளிட்ட மேலும் சில மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
- ஈரோடு மாவட்டத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஈரோடு:
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் ஒரு கிலோ தக்காளி சில்லரை விற்பனையில் விண்ணைத்தொடும் அளவுக்கு ரூ.130 வரை விற்கப்பட்டு வருகிறது.
இதனால் பொதுமக்கள் தக்காளியின் பயன்பாடுகளை குறைத்து விட்டனர். ஈரோடு மாவட்டத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காமராஜரின் 121-வது பிறந்த நாள் மற்றும் திருமாவளவனின் தந்தை தொல்காப்பியரின் நினைவு நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஜாபர்அலி தலைமையில் கட்சியினர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து மற்ற கட்சியினரும் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களுக்கும், அங்கிருந்த பெண்களுக்கும் இனிப்புக்கு பதிலாக தக்காளி வழங்கினர்.
இதை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். தக்காளி விலை ஏற்றத்தை பொதுமக்கள் உணரும் வகையில் பொதுமக்களுக்கு தக்காளி வழங்கப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர்.
- கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
- சிறப்பு விருந்தினர்களாக ஹமீது யாசின் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அமீரக விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக தியாகி கக்கன் பிறந்தநாள் விழா மற்றும் மாவீரன் முடக்கத்தான் பாண்டியன் நினைவு நாள் விழா துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை அமீரக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் அசோகன், முத்தமிழ் வளவன், பொருளாளர் கண்ணதாசன் மற்றும் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழகத்தில் இருந்து வருகை புரிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
மேலும் இதில் சிறப்பு விருந்தினர்களாக ஹமீது யாசின், ஏபிஜே அப்துல் கலாம் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் இயக்குனர் ரொட்டேரியன், குடந்தை அசரப், நஜீம் மரிக்கா, கமால் K.V.L, மீடியா அஸ்கர், அமமுக அமீரக நிர்வாகி சாதிக், பால் பிரபாகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் அமீரக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பிரேம்குமார், முகமது சித்தீக், முத்தழகு, ஜியாவுதீன், வாகை கிரன், வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
- இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு திடலில் நடைபெறுகிறது.
- விருது வழங்கும் விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் பஸ், கார், வேன்களில் வருகிறார்கள்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பாடுபட்டு வரும் தலித் அல்லாத சான்றோரை போற்றும் வகையில் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரில் அம்பேத்கர் சுடர் என்னும் விருது 2007-ம் ஆண்டு வழங்கப்பட்டது.
2008-ம் ஆண்டு முதல் அம்பேத்கர் சுடர் விருதுடன் பெரியார் ஒளி, அயோத்தி தாசர் ஆதவன், காமராசர் கதிர், காயிதே மில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளுடன் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து வரும் சான்றோருக்கு பாராட்டுப் பட்டயம், நினைவு கேடயம் ஆகியவற்றுடன் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டு வருகின்றன.
2022-ம் ஆண்டு முதல் கார்ல்மார்க்ஸ் பெயரில் மார்க்ஸ் மாமணி என்னும் விருது வழங்கப்படுகிறது. இவ்விழா ஆண்டு தோறும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு திடலில் நடைபெறுகிறது.
விழாவிற்கு கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன், துரை.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ.எம்.எல்-விடுதலை பொதுச்செயலாளர் பட்டாச்சார்யாவுக்கும், பெரியார் ஒளி விருது இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் ராஜாவுக்கும், காமராஜர் கதிர் விருது தமிழக சபாநாயகர் அப்பாவுக்கும் வழங்கப்படுகிறது.
மார்க்சிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு மார்க்ஸ் மாமணி விருது, டெல்லி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபால் கவுதமிற்கு அயோத்தி தாசன் விருது, காயிதே மில்லத் பிறை விருது பெங்களூரு சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் மோகன் கோபாலுக்கும், செம்மொழி ஞாயிறு விருது தமிழறிஞர் தாயம்மாள் அறவாணனுக்கும் திருமாவளவன் வழங்கி கவுரவிக்கிறார்.
விருது வழங்கும் விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் பஸ், கார், வேன்களில் வருகிறார்கள்.
எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் உஞ்சை அரசன், வன்னிய அரசு, பாவரசு, பாலசிங்கம், தயாளன், பாவலன், வீர.ராஜேந்திரன், சென்னை மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், ந.செல்லத்துரை, வி.கோ.ஆதவன், அம்பேத்வளவன் விசங்கர், கவுன்சிலர்கள் யாழினி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.
- 2009-ம் ஆண்டு மே 17-ந் தேதி உலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் போது, முள்ளி வாய்க்கால் நிலப்பரப்பில் வைத்து தமிழினப்படுகொலை நடந்தது.
- பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் நடத்திய போராட்டம் அறம் சார்ந்த இன விடுதலைப் போராட்டமாகும்.
சென்னை:
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வீரவணக்கப் பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் நாளை நடைபெறுகிறது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்று பேசுகிறார்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2009-ம் ஆண்டு மே 17-ந் தேதி உலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் போது, முள்ளி வாய்க்கால் நிலப்பரப்பில் வைத்து தமிழினப்படுகொலை நடந்தது.
பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் நடத்திய போராட்டம் அறம் சார்ந்த இன விடுதலைப் போராட்டமாகும்.
ஈழத்தந்தை செல்வா தலைமையிலான அறவழிப் போராட்டமாகட்டும், பிரபாகரன் தலைமையிலான ஆயுதவழி அறப்போராட்டமாகட்டும் எல்லாமே மக்களுக்கான விடுதலைப் போராட்டமே!
ஆனால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை தீவிரவாதமாக பார்த்து தடை செய்தது. தடைகளை மீறி போராட்டங்கள் தொடரத்தான் செய்கிறது.
2010-ம் ஆண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பேசும் போது,
"கடைசி விடுதலைச் சிறுத்தைகள் இருக்கும் வரை, ஈழவிடுதலைக்காக போராடுவோம்-ஈழ விடுதலைப் போரை முன்னெடுப்போம்" என பிரகடனப்படுத்தினார்.
எத்தனையோ அவதூறுகள், எத்தனையோ சாதிவெறித் தாக்குதல்கள்
அத்தனையையும் முறியடித்து மக்களுக்காக நின்று களமாடி வருகிறோம்.
இனப்படு கொலைகளுக்கு எதிரான களத்தில், எந்த சோர்வும் இல்லாமல் விடுதலைச் சிறுத்தைகளை வழிநடத்தி வரும். தமிழ்த்தேசியப் பெருந்தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில், நாளை மாலை 4 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் நடைபெறுகிறது.
இனப்படுகொலைகளுக்கு எதிராக களமாட உறுதி ஏற்போம்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பிரசாரம் செய்யப்பட்ட 11 தொகுதிகளில் எட்டு தொகுதிகளை காங்கிரஸ் வென்றிருக்கிறது என்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
- கர்நாடகாவில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பா.ஜ.க. முற்றிலும் துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. பா.ஜ.க.வின் ஊழல் ஆட்சியையும், மதவெறி அரசியலையும் மரண அடி கொடுத்து வீழ்த்தியுள்ளனர்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழர்கள் வாழும் பெங்களூரு பகுதிகளில் பத்து சட்டமன்றத் தொகுதிகளில் வி.சி.க. சார்பில் பிரசாரத்தை மேற்கொண்டோம். பிரசாரம் செய்யப்பட்ட 11 தொகுதிகளில் எட்டு தொகுதிகளை காங்கிரஸ் வென்றிருக்கிறது என்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
கர்நாடகாவில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பா.ஜ.க. முற்றிலும் துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை தூக்கிச் சுமந்து வரும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் இந்தத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், பா.ஜ.க.வுடன் கொண்டுள்ள தங்களது கூட்டணி உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விடுதலை சிறுத்தைகள் விருதுகள் வழங்கும் விழா மே 28-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது.
- “அம்பேத்கர் சுடர்” விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யாவுக்கு வழங்கப்படுகிறது.
சென்னை:
விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
அந்த வரிசையில் 2023-ம் ஆண்டுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி- விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.
இந்த ஆண்டுக்கான "அம்பேத்கர் சுடர்" விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா-வுக்கும், "பெரியார் ஒளி" விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் து.ராஜாவுக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.
2023-ஆண்டுக்கான வி.சி.க.-விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் வருமாறு:-
1. அம்பேத்கர் சுடர்-திபங்கர் பட்டாச்சார்யா, பொதுச்செயலாளர், சி.பி.ஐ. (எம்.எல்).
2. பெரியார் ஒளி-து.ராஜா, பொதுச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
3. காமராசர் கதிர்-மு.அப்பாவு, தலைவர், தமிழ்நாடு சட்டப் பேரவை.
4. அயோத்திதாசர் ஆதவன்-ராஜேந்திரபால் கவுதம், முன்னாள் அமைச்சர், டெல்லி மாநில அரசு.
5. மார்க்ஸ் மாமணி-கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சி.பி.ஐ.(எம்)
6. காயிதேமில்லத் பிறை-முனைவர் மோகன் கோபால், முன்னாள் துணைவேந்தர், சட்டப் பல்கலைக்கழகம், பெங்களூர்.
7. செம்மொழி ஞாயிறு-தாயம்மாள் அறவாணன், தமிழறிஞர்.
விடுதலை சிறுத்தைகள் விருதுகள் வழங்கும் விழா மே 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் சென்னையில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.