search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sengottaiyan"

    • கூட்டணியை பொருத்தவரை அ.தி.மு.க. தலைமையும், டெல்லியும் தான் முடிவு செய்ய வேண்டும்.
    • பா.ஜ.க. உடனான கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு யூகங்கள் அடிப்படையில் பதில் கூற முடியாது.

    கோபி:

    கோபிசெட்டி பாளையத்தில் இன்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டபோது தமிழகத்தில் ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழலையும் வெளியிடுவேன் என்று கூறியது அவரது கருத்து. இது பா.ஜ.க. உடனான கூட்டணி க்கு நெருக்கடியா என்பதற்கு பதில் கூற முடியாது. ஊழல் பட்டியலை கவர்னரிடம் அ.தி.மு.க. கொடுக்குமா என்பது குறித்து பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார்.

    2024-ம் தேர்தலில் அதிக சீட் பெறுவதற்காக அ.தி.மு.க.வை பயமுறுத்த அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டு வைத்துள்ளரா என்பதற்கு அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை தெளிவாக உள்ளது. கூட்டணியை பொருத்தவரை அ.தி.மு.க. தலைமையும், டெல்லியும் தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் கூட்டணியை முடிவு செய்ய வாய்ப்பில்லை. அ.தி.மு.க. மீதான ஊழல் குற்றச்சாட்டு வெளியானால் பா.ஜ.க. உடனான கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு யூகங்கள் அடிப்படையில் பதில் கூற முடியாது.

    கர்நாடாகவில் அ.தி.மு.க. போட்டியிடுவது குறித்து பொதுச்செயலாளர் முடிவு செய்ய வேண்டும். பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இட நெருக்கடி காரணமாக அவதிப்பட்டு வருவதால் 25 ஏக்கர் நிலம் வனத்துறை சார்பில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. விரைவில் நிலம் தருவதாக அரசு சார்பில் உத்தரவாதம் தரப்பட்டு உள்ளது.

    அத்திகடவு-அவினாசி திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது. செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்கு பல்வேறு இடர்பாடுகள் இருப்பதாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். கனிம வளத்துறை சார்பில் அனுமதி வழங்கப்படும் என்று கூறி உள்ளனர். அதேபோன்று மண்பாண்டம் செய்பவர்களுக்கு குளத்தில் இருந்து இலவசமாக மண் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி என 3 தொகுதிகளில் கிட்டத்தட்ட 3.50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
    • டெல்டா பகுதி வேளாண் சிறப்பு மண்டலமாக அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி செல்கிறார். தேர்தல்போது இரட்டை இலை சின்னம் கிடைத்தது. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பு, அ.தி.மு.க.வின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது போன்ற நல்ல விஷயங்கள் நடந்து வருகிறது.

    தற்போது அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அ.தி.மு.க.வினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் இந்த படிவங்கள் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

    ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி என 3 தொகுதிகளில் கிட்டத்தட்ட 3.50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இதற்காக அ.தி.மு.க.வினர் வீடு வீடாக சென்று ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உறுப்பினர் சேர்க்கைக்கு பிறகு அ.தி.மு.க. அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். 2024 தேர்தல் திருப்புமுனையாக அமையும். 2026 சட்டமன்ற தேர்தலில் அசைக்க முடியாத சக்தியாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

    டெல்டா பகுதி வேளாண் சிறப்பு மண்டலமாக அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு பாதுகாப்பான அரசாக அ.தி.மு.க. இருந்தது. 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் பங்கேற்காதது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளேன்.

    கூட்டணி குறித்து நாங்கள் தெளிவாக உள்ளோம். அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே முரண்பாடுகள் இல்லை. நேர சூழல் காரணமாக பிரதமர்- இ.பி.எஸ். சந்திப்பு நடைபெறவில்லை. பிரதமரை எங்கு எப்போது சந்திக்க வேண்டுமோ அப்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விலைவாசி உயர்வு, பால், மின் கட்டணம், குப்பை வரி உயர்வால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
    • எடப்பாடி பழனிசாமியின் 4½ ஆண்டு ஆட்சி காலம் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று அ.தி.மு.க. சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எம்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.

    அ.தி.மு.க.வின் மக்கள் சக்தியாக மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தனர். அவர்கள் வழியில் மக்கள் சக்தியாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.

    மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தை போலீசார் தடுத்து நிறுத்தாமல் அவர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. அ.தி.மு.க. சார்பில் மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஆனால் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிட்டது.

    ஒரு அரசு மக்களின் சாதனை அரசாக தான் இருக்கணும். ஆனால் தி.மு.க. வேதனை அரசாக உள்ளது. விலைவாசி உயர்வு, பால், மின் கட்டணம், குப்பை வரி உயர்வால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமியின் 4½ ஆண்டு ஆட்சி காலம் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

    தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே தட்டிக் கேட்க முடியும். காற்றை சுவர் எழுப்பி தடுக்க முடியாது. கடலை அணை கட்டி தடுக்க முடியாது. அதேப்போல் எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியையும் யாராலும் தடுக்க முடியாது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம். அதனைத் தொடர்ந்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் நாம் வெற்றி பெறுவோம் என்றார்.

    இதைத்தொடர்ந்து செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறை அவருக்கு பாதுகாப்பு அளிப்பதை விட்டு வழக்கு பதிவு செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம்.

    முன்னாள் முதல்-அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது இந்த அரசு வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இதுபோன்று செயலில் இனி ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அதிமு.வில் உள்ள அத்தனை பேரும் எந்த தியாகத்தையும் செய்வோம்.

    உச்சநீதிமன்றமே அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அவர் சார்பில் நீக்கப்பட்டது அனைத்தும் செல்லும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளது.

    எனவே அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் எடப்பாடி பழனிசாமி வரப்போகிறார். மிக விரைவில் அவர் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனநாயக நாட்டில் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாபெரும் இயக்கத்தை பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.
    • தமிழக காவல் துறையானது முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    கோபி:

    முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனநாயக நாட்டில் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாபெரும் இயக்கத்தை பொறுப்பேற்று நடத்தி வருகிறார். அவருக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பை அரசு தவறி விட்டது. அதற்கு பதிலாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது.

    எதிர்க்கட்சியை நசுக்க வேண்டிய நிலை உருவாக்கியுள்ளது. இது அரசுக்கு அவப்பெயரை உருவாக்கும். தமிழக காவல் துறையானது முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆனால் அதை தவறவிட்டு அவர்மீது வழக்கு போடப்பட்டுள்ளது கண்டனத்துக்குரிய செயலாகும்.

    இது போன்ற நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்வது இந்த அரசின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. கொள்கை வேறு, கூட்டணி வேறு. பா.ஜ.க. வுடன் கூட்டணி தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முன்னாள் முதல்-அமைச்சர்கள் மறைந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர்.
    • தற்போது பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசும் போட்டியிட்டனர்.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்திருந்தது. அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை 2 நாட்கள் பிரசாரம் மேற்கொண்டார். நடந்து முடிந்த தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1 லட்சத்து 10,156 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசு 43,923 வாக்குகள் பெற்றார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளி திருப்பூரில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    முன்னாள் முதல்-அமைச்சர்கள் மறைந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர்.

    குறிப்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பள்ளி மாணவர்களுக்காக லேப்டாப், சைக்கிள் திட்டங்களை கொண்டு வந்தார். தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர் போன்ற திட்டங்கள் பெண்களிடம் அமோக வரவேற்பு பெற்றன. ஆனால் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற முதல் அ.தி.மு.க திட்டங்களை நிறுத்தி வருகிறது.

    தற்போது பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் தான் 42 ஆயிரம் சிறுபான்மை ஓட்டுக்களை நாம் இழந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.

    அவர்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இதே தி.மு.க.வினர் தான் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் பா.ஜனதாவுடன் 5 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தனர் என்பதை மறந்து விடக்கூடாது. அ.தி.மு.க. என்றும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாகவே இருந்து வரும் கட்சியாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எடப்பாடி கே.பழனிசாமியின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
    • முழு பாதுகாப்பு கொடுத்து இருந்தால் இது போன்ற சம்பவம் நிகழ்ந்து இருக்காது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அவருக்கு முழு பாதுகாப்பு கொடுத்து இருந்தால் இது போன்ற சம்பவம் நிகழ்ந்து இருக்காது.

    பாதுகாப்பு அளிப்பதை விட்டுவிட்டு அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு இருப்பது கண்டனத்திற்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம்.
    • நாளை மறுதினம் (9-ந்தேதி) வேட்பாளர் அறிமுக கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெறுகிறது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று காலை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் முதல்கட்ட தேர்தல் பிரசாரம் ஆலய வழிபாட்டோடு நடைபெற்று வருகிறது. இன்று தொடக்க நாளே குபேர மூலையில் தொடங்கப்பட்டு உள்ளது. குபேர மூலை என்றாலே செல்வத்தை பெருக்குவதும், வெற்றியை பெருக்குவதும் ஆகும்.

    திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம். நாளை மறுதினம் (9-ந்தேதி) வேட்பாளர் அறிமுக கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெறுகிறது.

    அ.தி.மு.க வெற்றி யாராலும் தடுக்க முடியாது. இடைத்தேர்தலில் வரலாற்றை படைப்போம். இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள். ஒற்றுமை உணர்வோடு பணிகள் ஆற்றி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருமகன் ஈவெரா விட்டு சென்ற பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றால் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்.
    • ஆளும் கட்சியோடு கூட்டணியில் இருக்கின்ற காங்கிரசுக்கு வாக்களிக்க மக்கள் தெளிவாக உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதசார்பற்ற கூட்டணியில் இருக்கின்ற ஒட்டுமொத்த தலைமை கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களிடத்தில் நேரடியாக சென்று பார்த்த போது வரவேற்பு உள்ளது.

    தி.மு.க.வுக்கு தான் வாக்களிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். பெண்கள் வாக்கு தி.மு.க.வுக்கு தான். முதலமைச்சர் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளார். புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இது எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்று. திருமகன் ஒன்றை ஆண்டு காலத்தில் இறந்து விட்டார். பல்வேறு பணிகளை அவர் செய்துள்ளார். ஈரோடு மாநகர பகுதியில் 400 கோடி அளவுக்கு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடர்ந்து நடக்க வேண்டும் அதற்கு ஆளுங்கட்சிக்கு உறுதுணையாக இருப்பவர் எம்.எல்.ஏ.வாக இருந்தால் தான் அனைத்து பணிகளும் நடக்கும்.

    எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவரால் சட்டமன்றத்தில் கேள்வி மட்டும் தான் எழுப்ப முடியும். அது தவிர அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாது. தங்கள் தொகுதிக்கு தேவையான திட்டம் குறித்து அவரால் கேட்க முடியுமா. எனவே திருமகன் ஈவெரா விட்டு சென்ற பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றால் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்.

    ஆளும் கட்சியோடு கூட்டணியில் இருக்கின்ற காங்கிரசுக்கு வாக்களிக்க மக்கள் தெளிவாக உள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பாக செங்கோட்டையன் எம் எல் ஏ ஒரு பேட்டியில் கூறும்போது, இந்த தேர்தல் முடிவு என்பது செங்கோட்டைக்கே தெரியும் என்று கூறி இருக்கிறார். அவர் தவறுதலாக தனது பெயரை கூறுவதற்கு பதில் அப்படி சொல்லி இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த ஆட்சி குறித்து நல்ல விதமாக அவர் தான் கூறியுள்ளார். அவர் அந்த கட்சியில் இருப்பதால் தேர்தல் பணியாற்றி வருகிறார். அவருக்கே நன்றாக தெரியும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் மாநகராட்சி வளரும் என்று.

    நேற்று தோழமைக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து ஒருங்கிணைப்பது எப்படி குறித்து பேசி இருந்தோம். அப்போது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அமைச்சர் நேரு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அமைச்சர் நாளை மறுதினம் செயல்வீரர்கள் கூட்டம் வைத்திருக்கிறோமே அதற்கு வரும் தலைவர்களுக்கு முறையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டுள்ளார்.

    அதற்கு அமைச்சர் அளித்த பதிலை தவறாக புரிந்து கொண்ட விஷமிகள் சிலர் அமைச்சர் நேரும், இளங்கோவனும் பணம் குறித்து பேசுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டனர். அதை நான் கூட தான் கேட்டேன். இதை வேண்டுமென்றே திட்டமிட்டு மார்பிங் செய்து பரப்பி விட்டு உள்ளனர். எது செய்தாலும் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் வரலாற்று சிறப்புமிக்கதாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும்.
    • திருப்பு முனையை உருவாக்கும் தேர்தலாக இருக்கும். வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம். எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் வழியில் எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டு காலம் தமிழகம் வியக்கத்தக்க வகையில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் பல மாற்றங்களை துறைதோறும் உருவாக்கி சிறந்த முறையில் ஆட்சி நடத்தினார்.

    பழகுவதற்கு எளிமையானவர். பொறுப்பேற்ற காலம் முதல் இன்று வரை பொதுமக்கள், கழகத்தினர் போற்றும் அயராத உழைப்பினால் எதிர்க்கட்சித் தலைவராக சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

    அவரது தலைமையில் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களத்தில் முதன்முறையாக இடைத்தேர்தலை சந்திக்கின்றோம். கொங்கு மண்டலம் என்பது அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. யாராலும் தகர்க்க முடியாது. அவரது தலைமையில் இன்று பணியை ஆற்றுகின்றோம்.

    அனைத்து பகுதிகளிலும் தேர்தல் களம் கண்டவர்கள் வந்துள்ளனர். பல தேர்தலை சந்தித்தவர்கள் பணியாற்றுகின்றார்கள். தேர்தல் களத்தில் அமைதியோடு மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்கும் பணியை சிறப்பாக செய்து வருகின்றோம்.

    இந்த தேர்தல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் வரலாற்று சிறப்புமிக்கதாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும். திருப்பு முனையை உருவாக்கும் தேர்தலாக இருக்கும். வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது.

    ஆகவே களத்தில் பணிகளை சிறப்போடு, அமைதியோடு செய்து வருகின்றோம். சரியான முறையில் கழகத்தின் சார்பாக எடப்பாடி தலைமையில் சரியான முறையில் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. தேர்தல் களத்தில் அந்த பணிகளை சிறப்பாக செய்து வருகின்றோம்.

    இரட்டை இலை சின்னம் வழக்கை பொறுத்தவரை நீதித்துறையில் என்னென்ன தேவையோ அதை பூர்த்தி செய்து செயல்பட்டு வருகிறோம். அச்சமின்றி தேர்தல் பணி செய்கிறோம். தெளிவாக 98.5 சதவீத பேர் ஒரு மனதாக பொதுச்செயலாளரை தேர்வு செய்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தலைமை கழக நிர்வாகிகள் செயலாற்றுகிறோம். முழு மனதோடு வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கையோடு உள்ளோம்.

    4 அணிகளாக பிரிந்து போட்டியிடுவதால் வாக்குகள் சிதறாது. தேர்தல் களத்தில் மனு தாக்கல் தொடங்கி முடிய கால அவகாசம் உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதையும் ஆய்வு செய்து வருகின்றோம். முழுமையாக ஆய்வு செய்த பிறகு வேட்பாளர் அறிவிக்கப்படுவார். குருச்சேத்திர யுத்தத்தை போல் வியூகம் வகுத்து தேர்தலை சந்தித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணி, தனித்து போட்டி குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றார். மேலும் வேட்பாளர் அறிவிப்பு காலதாமதம் குறித்த கேள்விக்கு விரைவில் அறிவிக்கப்படுவார் என்று பதில் அளித்தார்.

    • ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள பணிக்குழு அமைப்பு.
    • அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், செயலாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் அடங்குவர்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்காக அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. தேர்தல் பணிக் குழுவில் 106 நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, கழக அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் கீழ்க்கண்டவர்கள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்றுவார்கள்.

    அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், செயலாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், பொன்னையன், தம்பிதுரை, தங்கமணி, வேலுமணி, பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண் முகம், செம்மலை,

    தளவாய்சுந்தரம், பா.வளர்மதி, செல்லூர் ராஜூ, கோகுல இந்திரா, விஜயபாஸ்கர், கடம்பூர் சி.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, பென்ஜமின், கருப்பசாமி பாண்டியன், கழக அமைப்பு செயலாளர் நா.பாலகங்கா, கழக இலக்கிய அணிச் செயலாளர் வைகைச் செல்வன், எஸ்.ஆர்.விஜய குமார், சி.த.செல்லப்பாண்டி யன், செ.தாமோதரன், இசக்கி சுப்பையா, ஆதிராஜாராம், வாலாஜாபாத் பா.கணேசன், எம்.சி.சம்பத், கே.சி.கருப்பணன், எம்.ஆர். விஜய பாஸ்கர், எஸ்.பி. சண்முக நாதன், மாதவரம் மூர்த்தி, பி.வி.ரமணா, எஸ்.ஆர். ராஜேஷ், டி.ஜி. வெங்கடேஷ் பாபு, தி.நகர். சத்தியா, எம்.கே.அசோக், விருகை வி.என்.ரவி, கே.பி.கந்தன், திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், சிட்லபாக்கம் ராஜேந்திரன், சிறுணியம் பலராமன், வி.அலெக்சாண்டர், தஞ்சை கணேச ராஜா, செல்வ மோகன்தாஸ் பாண்டியன், ஜாண்தங்கம் உள்ளிட்ட பல நிர்வாகிகள் இடம் பெற்று உள்ளன.

    • அ.தி.மு.க.வால் தனித்து நிற்கவும் முடியும். நம்மை யாராலும் வீழ்த்த முடியாது.
    • நம்மை விட்டுச் சென்றவர்களைப் பற்றி கவலை இல்லை.

    அட... செங்கோட்டையனா இது? இவரது அற்புதமான பேச்சை கேட்டு எவ்வளவு காலம் ஆச்சு... என்று அவரது பேச்சை கேட்டு ஈரோட்டு அரங்கில் விசில் பறந்தது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம்தான் அது. அந்த கூட்டத்தில் பேசும்போது, "நமது மண் திராவிட மண், ஒடுக்கப்பட்ட மக்களை தட்டி எழுப்பியவர் தந்தை பெரியார். பெரியாருக்கு பிறகு அண்ணா தனது எழுத்து ஆற்றலால் இளைய சமுதாயத்தை தட்டி எழுப்பி ஒடுக்கப்பட்டவர்களும் கோட்டைக்கு வரலாம் எனக் காட்டினார். அவர்கள் வழியில் வந்த எம்ஜிஆர் மாபெரும் புரட்சியை உருவாக்கினார். வரும் பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று அதற்கடுத்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியாரை முதல்வராக அமர வைக்கும் வரை தொண்டர்கள் உழைக்க வேண்டும்.

    அ.தி.மு.க. கூட்டத்தைக் கூட்டினால் எந்தக் கட்சியும் நம்முடன் போட்டியிட முடியாது. தமிழகத்தில் தனித்து நிற்கிறோம் என எந்தக் கட்சியையாவது சொல்லச் சொல்லுங்கள். ஆனால் அ.தி.மு.க.வால் தனித்து நிற்கவும் முடியும். நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. நம்மை விட்டுச் சென்றவர்களைப் பற்றி கவலை இல்லை. சில வெட்டுக்கிளிகளும், வேடந்தாங்கல் பறவைகளும், சில பட்டுப்பூச்சிகளும், பருவகாலச் சிட்டுகளும் அதிமுகவை விட்டுச் சென்றாலும் யாராலும் வீழ்த்த முடியாது, காற்றை சுவர் எழுப்பித் தடுக்க முடியாது, கடலை அணை போட்டுத் தடுக்க முடியாது' என மூச்சுவிடாமல் பேசினார் செங்கோட்டையன்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு அண்ணன் இப்படி கம்பெடுத்து சுற்றுகிறாரே? என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். அப்போதுதான் கொங்கு மண்டலத்தில் உள்ளவர்கள் எடப்பாடிக்கு வந்த நெருக்கடியை பயன்படுத்தி பல பதவிகள் வாங்கி கொண்டார்கள். உங்கள் கையை பிடித்து அரசியலுக்கு வந்தவர்களை எங்கேயோ போய்விட்டார்கள் பாருங்கள். நீங்கள் இப்படியே இருந்தால்... என்று உசுப்பேற்றி இருக்கிறார்கள்.

    அதை கேட்டு யோசித்த பிறகுதான் தானும் தன் இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செங்கோட்டையன் விசுவரூபம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஒரு மாணவர் மட்டும் படித்தாலும் பள்ளியை மூட மாட்டோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #KASengottaiyan

    கோபி:

    கோபியில் 1089 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி கோபி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா முன்னிலை வகித்தார். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினியை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-

    தமிழகம் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் 15 லட்சத்து 47 ஆயிரம் மாணவ -மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.

    மேலும் அரசு பள்ளிகளில் இந்த மாதம் இறுதிக்குள் இணைய தள வசதியுடன் கணினியும் இணைத்து தரப்படும். இந்த வருடம் எல்.கே.ஜி-யு.கே.ஜி வகுப்பு சேர்க்கையில் ஒரு லட்சம் மாணவ-மாணவிகள் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் ஒரு மாணவர் மட்டும் படிக்கும் பள்ளிகள் 33 உள்ளது. இதே போல் 9 மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் 123 உள்ளது. வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை அதிகரிக்கும். குறைந்த சேர்க்கை காரணம் காட்டி பள்ளிகளை மூடும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்துரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் காளியப்பன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்பட பலர் அருகில் இருந்தனர்.

    முன்னதாக கோபி பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாமை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்து குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றினார். #KASengottaiyan

    ×