என் மலர்
நீங்கள் தேடியது "Governor Tea Party"
- தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர், அமைச்சர்கள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதல்வரும், துணை முதல்வரும் இன்று மாலை தஞ்சையில் நடக்கும் திமுக மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
கவர்னர் ஆர்.என்.ரவி கிண்டியில் உள்ள அவரது மாளிகையில் குடியரசு தினத்தையொட்டி தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று மாலை 4.30 மணிக்கு தேநீர் விருந்து நடைபெறுகிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
மேலும், தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர், அமைச்சர்கள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரும், துணை முதல்வரும் இன்று மாலை தஞ்சையில் நடக்கும் திமுக மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
அதனால், முதலமைச்சர் பங்கேற்காதது உறுதியான நிலையில் அமைச்சர்களும் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் அதிகாரிகள் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளனர்.
திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரின் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆளுநர் உரையில் என்ன இடம்பெற வேண்டுமென்பதை ஆளும் பீடத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள் தாம் முடிவு செய்வர் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருந்து வரும் மரபாகும்.
- தி.மு.க. அரசுக்கு எதிரான திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட அவதூறு ஆகும்.
சென்னை:
விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சட்டமன்றத்தில் ஆளுநர் தனது கடமையை ஆற்றாமல் அவையில் இருந்து வெளியேறியிருப்பது அவரது வாடிக்கையான அணுகுமுறை தான். இதில் அதிர்ச்சியடைவதற்கு ஒன்றுமில்லை. அவர் இப்பொறுப்பில் இருக்கும் வரை இத்தகைய அடாவடிகளைத் தொடரவே செய்வார். அதற்கு ஏதேனும் சாக்குபோக்குகளையும் சொல்வார்.
ஆளுநர் உரையில் என்ன இடம்பெற வேண்டுமென்பதை ஆளும் பீடத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள் தாம் முடிவு செய்வர் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருந்து வரும் மரபாகும். ஆனால், இவர் தாம் விரும்புவதுபோல 'ஆளுநர் உரை' அமைய வேண்டுமென எதிர்பார்க்கிறார். இது அவரது திட்டமிட்ட 'அவை மரபு' மீறலாகும். தொடர்ந்து சட்டப் பேரவையை அவமதிக்கும் அவரது இப்போக்கை வி.சி.க. வன்மையாகக் கண்டிக்கிறது.
'தமிழ்த்தாய் வாழ்த்து' என்பது அவை நடவடிக்கைகளின் தொடக்கத்திலும் 'தேசிய கீதம்' என்பது அவை நிறைவிலும் தான் இசைக்கப்படும் என்பது அவருக்குத் தெரிந்த ஒன்று தான். எனினும், தொடக்கத்திலேயே ஏன் இசைக்கவில்லை என்பது குதர்க்க வாதம். இது தி.மு.க. அரசுக்கு எதிரான திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட அவதூறு ஆகும்.
சனாதன சக்திகளிடம் வலுப்பெற்றுள்ள 'திராவிடக் கருத்தியலுக்கு' எதிரான 'ஒவ்வாமையின்' வெளிப்பாடு தான் ஆளுநரின் இத்தகைய செயல் என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும்.
இந்நிலையில், குடியரசு நாளையொட்டி ஆளுநர் அளிக்கவுள்ள வழக்கமான 'தேநீர் விருந்தில்' விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த ஆண்டும் பங்கேற்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சட்டப் பேரவையில் ஆளுநர் ஆற்றும் உரையில் தன் விருப்பப்படி கருத்துக்களை நுழைத்து வாசிக்கிறார்.
- உலகப் புகழ் பெற்ற பேரறிவாளர் காரல் மார்க்ஸ், பொதுமறை வழங்கிய வள்ளுவர் உள்ளிட்டோர் படைப்புகளை தவறாக வியாக்கானப்படுத்தி, அவமதித்து வருகிறார்.
குடியரசுத் தினத்தன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியால் வழங்கப்படும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
"நாட்டின் குடியரசு தின விழாவையொட்டி, வரவேற்பு விழாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வழக்கமாக அழைப்பு அனுப்பி வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளும், செயல்பாடும் கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராகவும், அரசியலமைப்பு அதிகாரத்தை அத்து மீறுவதாகவும் அமைந்துள்ளது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசு தயாரித்துக் கொடுக்கும் அரசின் கொள்கை அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துவிட்டு, அதனை சட்டப் பேரவையில் ஆளுநர் ஆற்றும் உரையில் தன் விருப்பப்படி கருத்துக்களை நுழைத்து வாசிக்கிறார். வழிவழியாக பேணப்பட்டு வரும் நல் மரபுகளை உடைத்து களங்கப்படுத்துகிறார்.
சட்டமன்றப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்படும் சட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து, இறுதியில் அவை காலவதியாகி விட்டதாக தன்னிச்சையாக அறிவிக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் ஒட்டு மொத்தமாகவும், ஒரு முகமாகவும் எதிர்த்து வருகிற புதிய தேசியக் கல்விக் கொள்கையை, ஆளுநர் மாளிகை வழியாக, பல்கலைக்கழக துணை வேந்தர்களை நிர்ப்பந்தித்து வருகிறார்.
அறிவுசார் கருத்துக்களை நிராகரித்து மூட நம்பிக்கைகளை ஊக்கப்படுத்தும் கருத்துக்களை பொது வெளியில் வெளியிட்டு மக்களை தவறாக வழி நடத்த முயற்சிக்கிறார். உலகப் புகழ் பெற்ற பேரறிவாளர் காரல் மார்க்ஸ், பொதுமறை வழங்கிய வள்ளுவர் உள்ளிட்டோர் படைப்புகளை தவறாக வியாக்கானப்படுத்தி, அவமதித்து வருகிறார். ஆளுநர் என்ற உயர்ந்த பொறுப்புக்கு சற்றும் பொருத்தமற்றவரான ஆர்.என்.ரவியின் அழைப்பையும், அவரது வரவேற்பு விழாவையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நடப்பு ஆண்டு நாட்டின் சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது.
- கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
சென்னை:
நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், எம்.ல்.ஏ.க்களுக்கு மாநில கவர்னர்கள் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
இதற்கிடையே, நடப்பு ஆண்டு நாட்டின் சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இந்த தேநீர் விருந்தில் திமுக, அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில் கூறியதாவது:
தமிழ்நாட்டு மக்களுக்கும், மண்ணின் உரிமைக்கும் பதவியேற்ற காலத்திலிருந்தே எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும், மத்திய பாஜக அரசின் தூண்டுதலின் பேரில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை ஏற்படுத்தும் இந்தியத் தேர்தலை ஆணையத்தை கண்டித்தும்,
முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை வேண்டுமென்றே காலம்தாழ்த்தி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதைக் கண்டித்தும், சுதந்திர தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் கூறுகையில், வழக்கம்போல் கவர்னர் ஆர்.என்.ரவி சுதந்திரதின விழாவில் பங்கேற்கும்படி வி.சி.க.வுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். வழக்கம்போல் அவ்விழாவில் வி.சி.க. பங்கேற்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
- சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி.
- ஆளுநர் பதவிக்காலம் முடிந்தும் அந்தப் பதவியில் தொடர்வது அரசமைப்புக்கு எதிரானது.
சென்னை:
சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,
சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி.
ஆனால், கடந்த எழுபதாண்டுகளில் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கட்சி அரசியல் சார்ந்ததாக அமைவதில் மக்களாட்சியின் மாண்புகள் சீர்குலைக்கப்படுகிறது.
அவ்வகையில் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.
மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிப்பதில் முட்டுக்கட்டை போடுவதால், பட்டப்படிப்பு முடிந்தும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு நிகழ்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், ஆளுநர் பதவிக்காலம் முடிந்தும் அந்தப் பதவியில் தொடர்வது அரசமைப்புக்கு எதிரானது.
அதனால், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக புறக்கணிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்துள்ளது.
திமுக கூட்டணி கட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து மதிமுகவும் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது.
- ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிக்கிற தகுதியை இழந்துவிட்டார்.
- குடியரசு தின தேநீர் விருந்தை இந்திய கப்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிக்கிறது.
குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை விசிக, சிபிஎம் ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சிபிஎம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தின தேநீர் விருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிக்கிறது. அரசியலமைப்பு சாசனத்தையும், குடியரசின் விழுமியங்களையும், கூட்டாட்சி கோட்பாடுகளையும், சட்டமன்ற மாண்புகளையும் மதிக்காமல் தொடர்ந்து சிதைத்து வருகிற ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிக்கிற தகுதியை இழந்துவிட்டார்.
ஆகவே ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடிய குடியரசு தின தேநீர் விருந்தை இந்திய கப்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா? அல்லது புறக்கணிப்பாரா?
- இன்று தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்று கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிக்கை வெளியிட்டு உள்ளன.
செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்)
தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றதில் இருந்து தமிழர்களின் நலனுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதனை கண்டிக்கும் வகையில் கவர்னரின் குடியரசு தின வரவேற்பு தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பார்கள்.
பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)
அரசியலமைப்பு சாசனத்தையும், குடியரசின் விழுமியங்களையும், கூட்டாட்சி கோட்பாடு களையும், சட்டமன்ற மாண்புகளையும் மதிக் காமல் தொடர்ந்து சிதைத்து வருகிற கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் கவர்னராக நீடிக்கிற தகுதியை இழந்து விட்டார். ஆகவே கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடிய குடியரசு தின தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிக்கிறது.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்டு)
சட்டசபையில் நிறை வேற்றி அனுப்பும் மசோ தாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போடுவது, பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் மாநில உரிமையை மறுத்து, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரான சிந்தனைகளை கவர்னர் திணித்து வருகிறார். எனவே கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி புறக்கணிக்கிறது.
கு.கா.பாவலன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர்)
தமிழ்நாட்டிற்கு கவர்னராக வருகின்றவர்கள் மாநில சுயாட்சி நிலைப் பாட்டிற்கும், இருமொழி கொள்கைக்கும் எதிராகவே செயல்பட்டு வருகின்றனர்.
ஆகவே மக்களின் நலன் கருதி கொள்கை அளவில் கவர்னரோடு முரண் நடவடிக்கைகளில் தலைவர் திருமாவளவன் தலை மையில் வி.சி.க. ஈடுபட்டு வருவதால் கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்.
(மனித நேய மக்கள் கட்சி)
கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்கிறது. சட்ட மன்றத்தில் தமிழ்நாடு அரசு இயற்றும் சட்டத்திற்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்துவது, சட்டமன்றத்தின் மரபைப் பேணாமல் வெளி நடப்பு செய்வது பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வது என்று தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு விரோத மாக நடந்து கொண்டிருக்கும் கவர்னரின் செயல்பாடு களுக்கு எங்களின் எதிர்ப்பை பதிவு செய்கிறோம்.
கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா? அல்லது புறக்கணிப்பாரா? என்பது இன்று தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- முக்கிய நிகழ்வுகளின்போது முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு ராஜ்பவனில் கவர்னர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கமாக உள்ளது.
- தேநீர் விருந்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
சென்னை:
இந்திய குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு ராஜ்பவனில் கவர்னர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கமாக உள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு ராஜ்பவனில் இன்று அளிக்கப்பட உள்ள தேநீர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என்று முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு கவர்னர் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் கவர்னரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் அவர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே புறக்கணித்துள்ளனர்.






