என் மலர்

    நீங்கள் தேடியது "Kamal Haasan"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 40 வருடத்துக்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதி, என்னை அரசியலுக்கு அழைத்தார்.
    • நாங்கள் இந்தி ஒழிக என்று சொல்லவில்லை, தமிழ் வாழ்க என்று சொல்கிறோம்.

    கோவை:

    மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் கோவையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சனாதனம் என்ற ஒரு வார்த்தையை சொன்னதற்காக ஒரு சின்ன பிள்ளையை பாடாய் படுத்துகிறார்கள். அந்த குழந்தையின் தாத்தாவுக்கு தாத்தா சொன்ன விஷயம்தான் அது. எங்களுக்கு அந்த வார்த்தை தெரிந்ததே பெரியார் சொல்லிதான். அவரை தி.மு.க. மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. வேறு கட்சிகளும் சொந்தம் கொண்டாட முடியாது. தமிழ்நாடே அவரை சொந்தம் கொண்டாடலாம். அதில் ஒருவன் நான்.

    40 வருடத்துக்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதி, என்னை அரசியலுக்கு அழைத்தார். ஆனால் நான் செல்லவில்லை. அவ்வாறு செய்தது தவறு. இனிமேல் அதை செய்ய நான் தயாராக இல்லை. இவ்வளவு காலம் கடந்து அரசியலுக்கு வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    மதுரை, கோவை, சென்னை என்று பல இடங்களில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுங்கள் என்று கட்சியில் அழைக்கிறார்கள். நான் சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் நின்று வெற்றிவாய்ப்பை இழந்தேன். அது சூழ்ச்சி காரணமாக நடந்தது. அந்த சூழ்ச்சியில் நாம் இனிமேல் சிக்கிக்கொள்ளக்கூடாது.

    கோவை பாராளுமன்ற தொகுதிக்கு சரியாக வேலை செய்ய 40 ஆயிரம் பேர் வேண்டும். போர்படையின் முன்வரிசையில் நிற்க பயமாக இருந்தால் அவன் தலைவனே இல்லை. நான் நிற்கிறேன். ஏற்கனவே நான் கோவையில் தோல்வியடைந்து மூக்கை உடைத்து விட்டேன். அதற்கு மருந்து போட்டுவிட்டு நான் மீண்டும் கோவையில் போட்டியிடுவேன்.

    தி.மு.க. நிர்வாகிகளே என்னிடம் நீங்கள் தோற்கக்கூடாது என்று சொன்னார்கள். அந்த அளவுக்கு நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

    தமிழ்நாடு தொழில் தலைநகரமாக மாற வேண்டிய முயற்சியை நாம் எடுக்க வேண்டும். இந்தியாவின் தலைவாசல் இமாலயம் அல்ல, கன்னியாகுமரி என்று சொல்லக்கூடிய வாய்ப்பை நம்மால் செய்து காட்ட முடியும். அதற்கு நாம் நேர்மையாக இருக்க வேண்டும்.

    தேர்தலுக்காக நேரம் அதிகம் இல்லை. மத்திய அரசின் சவுகரியத்துக்காக செய்யப்படும் சூழ்ச்சிதான் இது. அதற்கு நமது அசவுகரியத்தால் நாம் பலியாகிவிடக்கூடாது.

    ஒருவர் தான் மட்டுமே பிரதமர் ஆக வேண்டும் என்று நினைத்தால் அது ஜனநாயகம் அல்ல. அதை எதிர்த்துதான் இன்று 'இந்தியா' வெகுண்டு பேசிக்கொண்டு இருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை ஏற்க முடியாது. சீனாவில் அவர்களின் மொழியை திணிப்பது இல்லை. அதற்காக நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை.

    நாங்கள் இந்தி ஒழிக என்று சொல்லவில்லை, தமிழ் வாழ்க என்று சொல்கிறோம். இப்படிதான் அனைத்து விஷயத்திலும் நாங்கள் இருப்போம். எங்களுக்கு பிடித்ததை தேடுவோம். இந்தி பேசினால்தான் வேலை என்றால் அந்த வேலை எங்களுக்கு வேண்டாம்.

    நமது அரசியல் வெகுண்டு எழும் அரசியல் அல்ல. பெரியார், காந்தி, அம்பேத்கர் உள்பட பல அறிஞர்கள் எனக்கு வழங்கிவிட்டு போன அரசியல். இப்போது சனாதனத்தை பேசியதற்கு வந்த கோபம் ஏன் அப்போது வரவில்லை?. அன்பு ஒன்றுதான் எனக்கு தெரிந்த மதம். அதிலும் பெரியது என்றால் அது மனிதம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடிகர் ரோபோ சங்கர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் சமீபத்தில் மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.

    தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

    சமீபத்தில் மஞ்சள் காமாலையினால் ரோபோ சங்கர் மிகவும் மெலிந்து காணப்பட்டார். இவரை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது இவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கர் தன் குடும்பத்துடன் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஆசிப்பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரோபோ சங்கருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது கமல்ஹாசன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அறிவுரை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதை நாளை மறுநாள் கோவையில் நடைபெறும் கூட்டத்தில் கமல்ஹாசன் முடிவு செய்ய உள்ளார்.
    • பா.ஜ.க. வெளியேறி விட்டால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரலாமா? என்பது பற்றியும் மக்கள் நீதிமய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    கோவை:

    நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் எந்த ஒரு தொகுதியிலும் அந்த கட்சி வெற்றி பெறவில்லை.

    கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் கமல்ஹாசன் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். கமல்ஹாசன் போட்டியிட்டால் எந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளது என ஆய்வு செய்யப்பட்டது. கோவை, தென்சென்னை அல்லது மதுரை ஆகிய 3 தொகுதிகளில் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெற்று விடலாம் என கட்சி நிர்வாகிகள் கருதுகிறார்கள்.

    ஏற்கனவே கோவை தெற்கு தொகுதி சட்டசபை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டு உள்ளதால், தொகுதி மக்களுக்கு அவர் பரீட்சயமானவராக மாறி விட்டார். இதனால் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி எளிதாக இருக்கும் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து கோவை தொகுதியை குறிவைத்து கமல்ஹாசன் காய் நகர்த்தி வருகிறார். பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் வெற்றி எளிதாகும் என்பதால் தனித்து போட்டி என்ற முடிவில் இருந்து கூட்டணி அமைத்து போட்டி என்ற நிலைப்பாட்டில் கமல்ஹாசன் இருக்கிறார்.

    தற்போது கமல்ஹாசன், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் நட்பு ரீதியாக நெருக்கமான நிலையில் இருக்கிறார். இதனால் காங்கிரஸ்-தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் இணைந்து அவர் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அந்த கூட்டணியில் சேரும் பட்சத்தில் கமல்ஹாசன் எதிர்பார்க்கும் தொகுதி கிடைக்குமா என்பது சந்தேகமே? இருந்தாலும் கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி எப்படியாவது கேட்கும் தொகுதியை பெற்று விடலாம் என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    அப்படி கேட்கும் தொகுதி கிடைக்காவிட்டால் என்ன செய்வது, அடுத்தக்கட்ட நகர்வு என்ன? என்பது பற்றியும் கமல்ஹாசன் ஆலோசித்து வருகிறார். இந்தநிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் தற்போது சிறுஉரசல் ஏற்பட்டுள்ளது. அந்த அணியில் இருந்து பா.ஜ.க. வெளியேறி விட்டால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரலாமா? என்பது பற்றியும் மக்கள் நீதிமய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதை நாளை மறுநாள் (22-ந்தேதி) கோவையில் நடைபெறும் கூட்டத்தில் கமல்ஹாசன் முடிவு செய்ய உள்ளார். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டல மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பீளமேட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நாளை மறுநாள் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் 4 மாவட்ட நிர்வாகிகள் மட்டுமல்லாமல் மாநில நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் பாராளுமன்ற தேர்தல் குறித்து கமல்ஹாசன் ஆலோசிக்கிறார். கூட்ட முடிவில் கமல்ஹாசன், யாருடன் கூட்டணி என்பதை இறுதி செய்ய இருக்கிறார்.

    கமல்ஹாசன் கோவையில் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவை எடுக்க உள்ளதால் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் நாளை மறுநாள் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.30 மணிக்கு கோவை வருகிறார். நேராக கூட்டம் நடக்கும் ஓட்டலுக்கு சென்று கூட்டத்தில் பங்கேற்கிறார். காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    கூட்டம் முடிந்த பின்னர் மாலையில் கணியூரில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். அங்கு பேராசிரியர்களுக்கு அவர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேர்தலில் வெற்றி பெற கட்சியினர் வியூகம்
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை

    கோவை, 

    மக்கள் நீதி மையம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கினார். கட்சி தொடங்கப்பட்ட ஓராண்டிலேயே நடந்த பாராளுமன்ற தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மையம் கட்சி தேர்தலில் தோல்வியை சந்தித்த போதிலும் கணிசமான வாக்குகளை பெற்றது. இதை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றையும் கமல்ஹாசன் தனித்தே சந்தித்தார். சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வானதி சீனி வாசனிடம் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவினார்.

    இப்படி கட்சி தொடங்கிய பிறகு தனித்தே களம் கண்ட மக்கள் நீதி மையம் கட்சி வருகிற பாராளுமன்ற தேர் தலில் கூட்டணி அமைத்து களம் காண முடிவு செய்து உள்ளது. இதற்கு அச்சார மாக ஈரோடு இடைத்தேர்த லில் கமல்ஹாசன் காங்கிர சுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.

    அடுத்த ஆண்டு நடை பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கி ரஸ் கூட்டணியில் இடம் பெற்று தேர்தலை சந்திக்க கமல் திட்டமிட்டுள்ளார். இந்த தேர்தலில் வெற்றி பெற கட்சியினர் தீவிரமாக களப்பணியாற்றி வியூகம் அமைத்து செயல்பட அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசன் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு தங்கி இருந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார்.

    இதன் பிறகு மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற சபதம் எடுத்திருப்பதாக தக வல்கள் வெளியாகி இருக் கின்றன. நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து ள்ளார். பாராளு மன்ற தேர்தலில் கோவை, தென்சென்னை, மதுரை ஆகிய 3 தொகுதிகளிலும் கட்சியினர் தீவிர கவனம் செலுத்தி செயல்பட்டு வரு வதாக தகவல்கள் வெளி யாகி இருக்கின்றன. பாராளு மன்ற தேர்தலில் தென் சென்னை அல்லது கோவை தொகுதியில் கமல் போட்டி யிடுவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இதை தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹா சன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை முழுமையாக எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்த முறை வெற்றியை ருசிக்க வேண்டும் என்று அவர் நிர்வாகிகளிடம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இதனால் கட்சி நிர்வாகிகளும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கட்சியினர் உற்சாகமாக தயாராகி வருகிறார்கள். இது தொடர்பாக கமல் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது சட்ட மன்ற தேர்தலில் குறை வான ஓட்டு வித்தியாசத்தில் தலைவர் கமல்ஹாசன் தோல்வி அடைந்தது கட்சி யினர் மத்தியில் இப்போதும் வருத்தமான விஷயமாகவே பேசப்பட்டு வருகிறது. எனவே பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதற்காக பூத் கமிட்டிகளை பலப்படுத்தி கட்சியை அனைத்து தரப்பி னரிடமும் கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறோம் என்றார். இதன் மூலம் கூட்டணி அரசியலில் நிச்ச யம் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டி ருப்பதாகவும் அந்த நிர்வாகி தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அச்சாரமாக ஈரோடு இடைத்தேர்தலில் கமல்ஹாசன் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.
    • கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற சபதம் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    சென்னை:

    மக்கள் நீதி மையம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கினார். கட்சி தொடங்கப்பட்ட ஓராண்டிலேயே நடந்த பாராளுமன்ற தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மையம் கட்சி தேர்தலில் தோல்வியை சந்தித்த போதிலும் கணிசமான வாக்குகளை பெற்றது. இதை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றையும் கமல்ஹாசன் தனித்தே சந்தித்தார். சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வானதி சீனிவாசனிடம் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவினார்.

    இப்படி கட்சி தொடங்கிய பிறகு தனித்தே களம் கண்ட மக்கள் நீதி மையம் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து களம் காண முடிவு செய்து உள்ளது. இதற்கு அச்சாரமாக ஈரோடு இடைத்தேர்தலில் கமல்ஹாசன் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்று தேர்தலை சந்திக்க கமல் திட்டமிட்டுள்ளார். இந்த தேர்தலில் வெற்றி பெற கட்சியினர் தீவிரமாக களப்பணியாற்றி வியூகம் அமைத்து செயல்பட அவர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கமல்ஹாசன் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு தங்கி இருந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார்.

    இதன் பிறகு மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற சபதம் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் கோவை, தென்சென்னை, மதுரை ஆகிய 3 தொகுதிகளிலும் கட்சியினர் தீவிர கவனம் செலுத்தி செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பாராளுமன்ற தேர்தலில் தென் சென்னை அல்லது கோவை தொகுதியில் கமல் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை முழுமையாக எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்த முறை வெற்றியை ருசிக்க வேண்டும் என்று அவர் நிர்வாகிகளிடம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இதனால் கட்சி நிர்வாகிகளும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கட்சியினர் உற்சாகமாக தயாராகி வருகிறார்கள். இது தொடர்பாக கமல் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது சட்ட மன்ற தேர்தலில் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் தலைவர் கமல்ஹாசன் தோல்வி அடைந்தது கட்சியினர் மத்தியில் இப்போதும் வருத்தமான விஷயமாகவே பேசப்பட்டு வருகிறது.

    எனவே பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதற்காக பூத் கமிட்டிகளை பலப்படுத்தி கட்சியை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறோம் என்றார். இதன் மூலம் கூட்டணி அரசியலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகவும் அந்த நிர்வாகி தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உண்மையான ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு என்பது அதன் குடிமக்கள் கருத்து வேறுபாடு மற்றும் விவாதத்தில் ஈடுபடுவதே ஆகும்.
    • சரியான கேள்விகளை கேட்பது முக்கியமான பல பதில்களுக்கு வழி வகுத்துள்ளது.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உதயநிதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:- உண்மையான ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு என்பது அதன் குடிமக்கள் கருத்து வேறுபாடு மற்றும் விவாதத்தில் ஈடுபடுவதே ஆகும். சரியான கேள்விகளை கேட்பது முக்கியமான பல பதில்களுக்கு வழி வகுத்துள்ளது. சனாதனத்தை பற்றி கருத்துக் கூற உதயநிதிக்கு உரிமை உள்ளது. அந்த கருத்துடன் உடன்படாதவர்கள் விவாதத்தில் ஈடுபடலாம்.

    ஆனால் அவரது வார்த்தைகளை திரித்து கூறி அரசியல் ஆதாயத்துக்காக அச்சுறுத்தி மிரட்டல் விடுப்பது சரியானது அல்ல. இணக்கமான சமூகத்தை வளர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான விவாதங்களை ஏற்றுக்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜவான் படம் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாக இருக்கிறது.
    • ஜவான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஜவான் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவர் நேரில் கலந்து கொள்ளவில்லை. மாறாக வீடியோ மூலம் தோன்றி படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    அட்லி இயக்கி இருக்கும் ஜவான் படத்தில் ஷாரூக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கௌரி கான் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்து இருக்கும் ஜவான் படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல விருதுகளை குவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 64 வருடங்கள் நிறைவுபெற்றுள்ளது.
    • பலரும் தங்களது வாழ்த்துக்களை கமல்ஹாசனுக்கு தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்ட நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார்.

    1960-ஆம் ஆண்டு வெளியான 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது, பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது என பல விருதுகளை குவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 64 வருடங்கள் நிறைவுபெற்றுள்ளது. இதனை இவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    வாழ்த்தியவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி என கமல்ஹாசன் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக.

    உங்கள்

    நான் என பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயல்வீரனாக, எனது மனச்சாட்சிக்கு விரோதமின்றி நான் செயல்பட்டு வந்தேன்.
    • என்னை ஊக்குவித்து வந்த துணைத்தலைவரும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான ஏ.ஜி.மவுரியா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தொழிலாளர் அணி செயலாளர் பொன்னுசாமி விலகியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எனது செயல்பாடுகளை பார்த்து கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்சியின் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் பொறுப்பில் நியமனம் செய்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் செயல்வீரனாக, எனது மனச்சாட்சிக்கு விரோதமின்றி நான் செயல்பட்டு வந்ததை அனைவரும் நன்கறிவீர்கள்.

    என்னை ஊக்குவித்து வந்த துணைத்தலைவரும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான ஏ.ஜி.மவுரியா மற்றும் கட்சியின் ஏனைய நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், மய்ய உறவுகளுக்கும் இந்த நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குறிப்பிட்ட சில தொகுதிகளை அடையாளம் கண்டு வைத்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அதில் கமல்ஹாசனை களம் இறக்க திட்டமிட்டுள்ளனர்.
    • தென் சென்னை, கோவை ஆகிய பாராளுமன்ற தொகுதிகள் முதல் இடத்தில் உள்ளன.

    சென்னை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி தீவிரமாக செயலாற்றி வருகிறது. இதற்காக குறிப்பிட்ட சில தொகுதிகளை அடையாளம் கண்டு வைத்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அதில் கமல்ஹாசனை களம் இறக்க திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக 12 பாராளுமன்ற தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அடையாளம் கண்டு வைத்துள்ளனர். இதில் தென் சென்னை, கோவை ஆகிய பாராளுமன்ற தொகுதிகள் முதல் இடத்தில் உள்ளன. மத்திய சென்னை, வட சென்னை, பொள்ளாச்சி, ஸ்ரீபெரும்புதூர், திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட தொகுதிகளும் இந்த 12 தொகுதிகளுக்குள் வருகின்றன. இப்படி அடையாளம் காணப்பட்டுள்ள 12 தொகுதிகளில் ஒன்றில் கமல்ஹாசனை போட்டியிட வைத்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் கட்சியினர் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதற்காக இந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பணியாற்றி வருகிறார்கள்.

    மக்களோடு மய்யம் என்ற பெயரில் தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வரும் கமல் கட்சியினர் கோவை தொகுதியில் கவனம் செலுத்தி பொதுமக்களின் குறைகளை கேட்டு வருகிறார்கள்.

    அடுத்ததாக தென்சென்னை, மதுரை தொகுதிகளிலும், பின்னர் மற்ற தொகுதிகளிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலுக்குள் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி எது என்பதை இறுதி செய்யவும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo