என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kamal haasan"

    • மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று தாய் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

    பிறந்தநாளையொட்டி மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்ய தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒரு சமூகத்தை முன்னேற்ற வேண்டுமானால், முதலில் பெண்களின் வாழ்வில் ஏற்றத்தைக் கொண்டு வரவேண்டும். இதைத் தமிழ்நாடு புரிந்துகொண்டது, அதன் வழியே செயல்படுகிறது என்பதன் அடையாளமாக எத்தனையெத்தனை திட்டங்கள்!

    புதுமைப் பெண் திட்டம் — நாளைய எதிர்காலத்துக்கான விதை

    விடியல் பயணம் — ஒளியாய் நகரும் நம்பிக்கை நடை

    மகளிர் உரிமைத் தொகை - பெண்களின் எழுச்சியில் மாநிலத்தின் உயர்வு

    இவை வெறும் ஏட்டுத் திட்டங்களல்ல… மாற்றத்துக்கான நாற்றங்கால்கள்.

    இவை அத்தனையையும் செய்து காட்டியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், என் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய நண்பர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

    • நல்லக்கண்ணு மறைவு தமிழ்நாடு முழுவதிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
    • கமல் ஹாசன் தோழர் நல்லக்கண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான தோழர் நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக இன்று (பிப். 25) மதியம் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. தோழர் நல்லக்கண்ணு மறைவு தமிழ்நாடு முழுவதிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    மறைந்த தோழர் நல்லக்கண்ணுவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில், நடிகரும், எம்.பி.யுமான கமல் ஹாசன் தோழர் நல்லக்கண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணு ஐயா நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

    ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரீகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர்.

    தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • கடும் கூட்ட நெரிசல் காரணமாக மூச்சுவிடக் கூட முடியாமல் தவிக்கின்றனர்.
    • தென்னக ரெயில்வே உடனடியாக செயல்பட்டு மக்களின் இன்னல்களைத் துடைக்க முன் வரவேண்டும்

    மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை மாநகரின் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட போக்குவரத்துக்கு நம்பியிருந்த புறநகர் ரெயில்கள் முன்னறிவிப்போ, தகுந்த முன்னேற்பாடோ இன்றி ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    தொழிலாளர்கள், வியாபாரிகள், வேலைக்குச் செல்பவர்கள், மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் ரெயில்களுக்காகக் காத்திருக்கிறார்கள். முதியவர்கள், பெண்கள், குழந்தைகளால் ரெயிலில் ஏறமுடியவில்லை. கடும் கூட்ட நெரிசல் காரணமாக மூச்சுவிடக் கூட முடியாமல் தவிக்கின்றனர்.

    இதனால் பொதுமக்கள் கடுமையான வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். பொதுத் தேர்வுகள் நெருங்கும் வேளையில் நமது மாணவர்களுக்கு இப்படியொரு சித்ரவதை கடுமையான உளநெருக்கடியை உண்டாக்குகிறது.

    தென்னக ரெயில்வே உடனடியாக செயல்பட்டு மக்களின் இன்னல்களைத் துடைக்க முன் வரவேண்டும். போர்க்கால அடிப்படையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தற்போது 'கல்கி 2898 ஏடி' 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
    • இந்த பாகத்தில் கமல்ஹாசனின் யாஸ்கின் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் உலகமெங்கும் ரூ.1100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

    பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார். மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக இப்படம் எடுக்கப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

    தற்போது 'கல்கி 2898 ஏடி' 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த பாகத்தில் கமல்ஹாசனின் யாஸ்கின் என்ற வில்லன் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 'கல்கி 2898AD' 2 படப்பிடிப்புத் தளத்தில் அமிதாப் பச்சனை கமல்ஹாசன் சந்தித்தார். அமிதாப் பச்சன், கமல்ஹாசனுக்கு இடையேயான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. 'கல்கி 2898AD' 2 ஆம் பாகம் 2028 ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ப்ரோமோ வீடியோவில் அனிருத்தின் துள்ளலான ரெட்ரோ இசை அனைவரையும் கவர்ந்தது.

    45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

    திரைத்துறையில் உச்ச நட்சத்திரங்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஒரே திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த ப்ரோமோ வீடியோவில் அனிருத்தின் துள்ளலான ரெட்ரோ இசை அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், இந்த பின்னணி இசையை உருவாக்கின்போது வைப் செய்த வீடியோவை அனிருத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

    கமல், ரஜினி ஒரே திரைப்படத்தில் நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது. திரைத்துறையில் உச்ச நட்சத்திரங்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஒரே திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    பலரும் இந்தப் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணையும் படம் குறித்த இயக்குநர் நெல்சனின் X தளப்பதிவுக்கு இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா பதிலளித்துள்ளார்.

    இது குறித்த பதிவில் அவர், "ஆஹா, என்ன ஒரு பெருமையான தருணம், இரண்டு வெற்றியாளர்களும் ஒன்றாக நடந்து வருவது கண்கொள்ளாக் காட்சி. என்ன ஒரு காட்சி நெல்சன் திலிப் குமார் சார். அனிருத் நீங்கள் எப்போதும் போல் கலக்குகின்றீர்கள். ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெருமையான தருணத்தை உருவாக்கியது," என குறிப்பிட்டுள்ளார்.

    • KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
    • ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ ரஜினி மற்றும் கமலின் பிறந்த தேதிகளைக் குறிக்கும் வகையில் நாளை (இன்று) 12:07 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை தொடர்ந்து ரஜினி- கமல் இணையும் புதிய படத்தின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

     

    ப்ரோமோ வீடியோவில் ரஜினி, கமல், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வீடியோவில் டீம் மியூசிக் ரெடியா இருக்கு என்று அனிருத் சொல்ல, யாரு ஹீரோ? என்று கமல்ஹாசன் கேட்க, கேட்குறாங்களா சொல்லுங்க ஜீ என்று ரஜினிகாந்த் சொல்ல இயக்குனர் நெல்சனும், அனிருத்தும் செய்வதறியாது திகைக்கின்றனர். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    நெல்சனின் ஆஸ்தான நடிகர்களான யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    • சிரமப் பொழுதுகளில் சிந்தித்திருக்கவும் எனக்குச் சொல்லாகி வருவது தமிழ்.
    • மொழியால் உருவானேன். மொழிவதால் வாழ்கின்றேன்.

    சர்வதேச தாய்மொழி தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மரபணுவில் உருவாகி, தாய்ப்பாலில் உணவாகி, செவிப்பொறியில் ஒலியாகி உடலுக்குள் உயிராகி நிற்பது என் தாய்மொழி.

    அடிபட்டால் அரற்றவும், உறக்கத்தில் உளறவும், சிரமப் பொழுதுகளில் சிந்தித்திருக்கவும் எனக்குச் சொல்லாகி வருவது தமிழ்.

    அவரவர் தாய்மொழி அவரவர் வாழ்வு. எனக்கென் தாய்மொழி என்றென்றும் என் சுவாசம்.

    மொழியால் உருவானேன். மொழிவதால் வாழ்கின்றேன்.

    தாய்மொழி நாளில் தமிழர்களை வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ரஜினிகாந்த் - கமல் ஹாசன் இணையும் படத்தை இன்பநிதி தயாரிக்கிறார்.

    கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். இதையடுற்றது ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.

    இந்தப் படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    ரஜினி மற்றம் கமல் இணையும் படத்தின் ப்ரோமோ வீடியோ நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக படக்குழு சார்பில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ரஜினி-கமல் 47 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் இணையும் படத்திற்கான ப்ரோமோ வீடியோ நாளை திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது.

    ரஜினிகாந்த் - கமல் ஹாசன் இணையும் படத்தை இன்பநிதி தயாரிக்கிறார்.

    கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். இதையடுற்றது ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.

    இந்தப் படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    நேற்றிரவு 7.12 மணிக்கு ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில், ரஜினி மற்றம் கமல் இணையும் படத்தின் ப்ரோமோ வீடியோ நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு சார்பில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

    போஸ்டரில் ரஜினி மற்றும் கமல் ஹாசனின் கைகள் ரெட்ரோ தோற்றத்தில் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகும் போதிலும், இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலேயே உள்ளது.

    • ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்
    • படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது

    கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார்.

    இதையடுற்றது ரஜினி-கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.

    இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார்.

    படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இன்று இரவு 7.12 மணிக்கு ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    தான் கமலின் பிறந்தநாளான 7 மற்றும் ரஜினியின் பிறந்தநாளான 12 என்பதை குறிக்கும் விதமாக 7.12 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் அடுத்த அறிவிப்பு நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரஜினி தற்போது ஜெயிலர்-2 டப்பிங் பணிகளில் இருக்கிறார். இந்த பணிகள் முடிவடைந்ததும் மார்ச் மாதத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினியின் 173-வது படப்பிடிப்பு தொடங்குகிறது.

    • ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.
    • படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது

    கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார்.

    இதையடுற்றது ரஜினி-கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.

    இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார்.

    படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இன்று இரவு 7.12 மணிக்கு புதிய படத்தின் அப்டேட் வெளியாகும் என்று ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    அந்த போஸ்டரில் "உலகங்கள் ஒன்றிணையும் போது,ஒரு பக்கம் சாய்வதேது?" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதற்காக தான் கமலின் பிறந்தநாளான 7 மற்றும் ரஜினியின் பிறந்தநாளான 12 என்பதை குறிக்கும் விதமாக 7.12 மணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ரஜினி தற்போது ஜெயிலர்-2 டப்பிங் பணிகளில் இருக்கிறார். இந்த பணிகள் முடிவடைந்ததும் மார்ச் மாதத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினியின் 173-வது படப்பிடிப்பு தொடங்குகிறது.

    ×