என் மலர்
நீங்கள் தேடியது "Kamal Haasan"
- எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ஏகே 61.
- இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, வீரா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

அஜித்குமார்
போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் எச். வினோத்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இயக்குனர் எச். வினோத் அடுத்தாக கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏகே 61 படத்தின் பணிகள் முடிந்த பிறகு இவர் கமல் படத்தில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் இப்படத்தில் கமல் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் கமல்ஹாசனுக்கு நகர்ப்புறங்களில்தான் செல்வாக்கு உள்ளது. கிராமங்களில் அவருக்கு அதிக வாக்குகள் கிடைக்கவில்லை.
- கிராம மக்களும் கை கொடுத்தால் தான் கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் புத்துணர்ச்சி ஊட்டும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.
இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் கமல்ஹாசனுக்கு நகர்ப்புறங்களில்தான் செல்வாக்கு உள்ளது. கிராமங்களில் அவருக்கு அதிக வாக்குகள் கிடைக்கவில்லை.
எனவே கிராம மக்களும் கை கொடுத்தால் தான் கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு கிராமங்களை நோக்கி செல்ல கமல்ஹாசன் ஆலோசித்து வருகிறார். கிராம மக்கள் மத்தியில் தனது திட்டங்களை விளக்கி சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த அவர் நினைக்கிறார்.
கமல் திட்டத்துக்கு கிராம மக்கள் கை கொடுப்பார்களா? என்பது தேர்தல் சமயத்தில்தான் தெரியும்.
- கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- ஆட்சிக்கு வந்தபின்னர், “அனைவருக்கும் வழங்க முடியாது. உரிமைத்தொகை பெறத்தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து வழங்குவோம்” என்றார் நிதி அமைச்சர்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
மக்கள் நீதி மய்யம் முதலில் முன்வைத்த "மகளிர் உரிமைத் தொகையானது" தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றது.
கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஆட்சிக்கு வந்தபின்னர், "அனைவருக்கும் வழங்க முடியாது. உரிமைத்தொகை பெறத்தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து வழங்குவோம்" என்றார் நிதி அமைச்சர்.
கடந்த பட்ஜெட்டின் போது, நிதிநிலைமை சரியானதும் வழங்கப்படும் என்று புதுநிலைப்பாடு எடுத்தார் நிதி அமைச்சர்.
தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து விவாதிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிதி அமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள சூழலில் "மகளிர் உரிமைத்தொகை" திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மய்யத்தை நோக்கிவரும் இளைஞர்களை இருகரம் கூப்பி வரவேற்று உரிய வாய்ப்பளிக்கவேண்டும்.
- கொடிக்கம்பங்கள் நடுவதோடு மரக்கன்றுகளையும் நடவேண்டும்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிக்காக மக்கள் நீதி மய்யத்தின் மாநில நிர்வாகிகள் மாவட்டந்தோறும் பயணித்து கூட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று முதல் அடுத்த 12 நாட்களுக்கு நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. முதல் நாளான நேற்று ராசிபுரத்தில் (நாமக்கல்) நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் கமல்ஹாசன் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.
மய்யத்தை நோக்கிவரும் இளைஞர்களை இருகரம் கூப்பி வரவேற்று உரிய வாய்ப்பளிக்கவேண்டும்; கொடிக்கம்பங்கள் நடுவதோடு மரக்கன்றுகளையும் நடவேண்டும்; அனைவரையும் அரவணைத்து கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கி மய்ய நிர்வாகிகளை ஊக்கப்படுத்தினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- ஐக்கிய அமீரகம் இந்திய திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது.
- இந்த விசா 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடியது.
ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு, சரத்குமார் ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர். சில தினங்களுக்கு முன்பு நடிகர் கமல் ஹாசனுக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கியது குறித்து கமல் நன்றி கூறி ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
I'm honored to receive the Golden Visa from United Arab Emirates.
— Kamal Haasan (@ikamalhaasan) July 21, 2022
Thank you Lieutenant General Mohammed Ahmed Al Marri, Director General GDRFA for tour in General Directorate of Residency and Foreigners Affairs offices in Dubai. (1/2) pic.twitter.com/2PWZLbZgd1
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.
- இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்து ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலை கடந்துள்ளது.
'விக்ரம்' வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இப்படம் 'இந்தியன் 2' படப்பிடிப்பிற்கு பிறகு நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதில் நடிகர் பகத் ஃபாசிலும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம்
மேலும், படம் குறித்த அப்டேட்கள் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் விரைவில் வெளியாகும் என இயக்குனர் மகேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
- உங்களால் முடிந்த தொகையை கட்சிக்கு நன்கொடையாக வழங்குங்கள். அது சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை.
- 100 ரூபாய் சம்பாதிக்கும் நபராக இருந்தால் அதில் ஒரு ரூபாயை அளியுங்கள் என்று கமல்ஹாசன், நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகளின் கூட்டம் மாங்காட்டில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் நிர்வாகிகள் அனைவரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர் கூறும்போது, "கட்சியில் நான் செய்யாத எதையும் உங்களை செய்ய அறிவுறுத்த மாட்டேன். அந்த வகையில் எனது வருமானத்தில் இருந்து கட்சிக்காக ரூ.1½ கோடியை நன்கொடையாக வழங்குகிறேன்" என்று தெரிவித்தார். இதனை கட்சி நிர்வாகிகள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
அப்போது கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹான் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார். உங்களால் முடிந்த தொகையை கட்சிக்கு நன்கொடையாக வழங்குங்கள். அது சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை என்றார். 100 ரூபாய் சம்பாதிக்கும் நபராக இருந்தால் அதில் ஒரு ரூபாயை அளியுங்கள் என்றும் கமல்ஹாசன், நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார். கட்சி வளர்ச்சிக்காக விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.
- இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான, பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர். ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், பிரபல மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ளதாகவும் இப்படத்தில் நடிக்க மலையாள நடிகர் மம்மூட்டியை படக்குழு தேர்வு செய்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

சுஷின் ஷ்யாம்
இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் பிரபல மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கும்பலங்கி நைட்ஸ், வைரஸ், ட்ரான்ஸ், மின்னல் முரளி உள்ளிட்ட படங்களில் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம்.
- விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான, பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர். ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விக்ரம்
இப்படம் உலகம் முழுவதும் ரூ.440 கோடி வசூலை கடந்துள்ளது. இந்நிலையில் 'விக்ரம்' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மேக்கிங் வீடியோவை கமல் ரசிகர்கள் உள்பட பலரும் தங்களது சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இளையராஜாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை:
மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் கேரளாவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை பி.டி. உஷாவும் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இருவரும் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக ஆகின்றனர்.
இதையடுத்து, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டரில், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டரில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்க வேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம் என பதிவிட்டுள்ளார்.
- ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.
- இவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
கிராம சபைகளைப் போலவே, நகர்ப்புற மக்கள் பங்கேற்பு ஜனநாயகத்திற்கு வழிகோலும் ஏரியா சபை, வார்டு கமிட்டிகளை அமைப்பதற்கான சட்டம் 2010-ல் கொண்டு வரப்பட்டது. இவற்றை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வகுக்காததால் இந்தச் சட்டம் 12 ஆண்டுகளாக செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது.
தற்போது ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. இவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் பங்கேற்பை உறுதி செய்யும் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும். ம.நீ.ம.வின் பணிகள் தொடரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.