என் மலர்
நீங்கள் தேடியது "Nallakannu"
- கடந்த வாரம் 10-ந்தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
- நேற்றிரவு உணவு உட்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு (வயது 100), கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதனிடையே, திடீர் மூச்சுத் திணறல் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நல்ல கண்ணுக்கு மூத்த மருத்துவர்கள் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், கடந்த வாரம் 10-ந்தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இந்த நிலையில், இன்று காலை நல்ல கண்ணுக்கு மீண்டும் உடல்நலம்பாதிக் கப்பட்டது. இதையடுத்து ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அதிகாலை 2 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் வாய் வழியாக உணவு உட்கொள்ள முடியாத நிலையில் டியூப் மூலம் உணவு செலுத்தப்படுகிறது. நேற்றிரவு உணவு உட்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மீண்டும் உணவு சீராக உட்கொள்வதற்கான சிகிச்சையினை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.
சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவை கம்யூனிஸ்டு முன்னாள் மாநில தலைவர் முத்தரசன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
- நல்லகண்ணு மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார்.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்த 22-ந்தேதி வீட்டில் தவறி விழுந்ததால் காயம் அடைந்தார். கடந்த 24-ந்தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவை நேரில் பார்த்தார். மேலும் அவரது உடல்நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சென்றிருந்தனர்.
- அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
- நல்லகண்ணுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவ குழு பரிந்துரையின் படி அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 48 மணி நேரத்தில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு நல்லகண்ணுவுக்கு மீண்டும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிலையில், நல்லகண்ணு விரைவில் நலம்பெற விழைகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களது உடல்நலன் குறித்து தோழர் முத்தரசன் அவர்களிடமும் - மாண்புமிகு அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களிடமும் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லகண்ணு அய்யா அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்று இரவு நல்லகண்ணுவுக்கு மீண்டும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது.
- நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவ குழு பரிந்துரையின் படி அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 48 மணி நேரத்தில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு நல்லகண்ணுவுக்கு மீண்டும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆஸ்பத்திரிக்கு சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, நல்லகண்ணுவுக்கு 2 நாட்கள் உடல் நிலை சீராக இருந்தது. நேற்று இரவு மீண்டும் வெண்டிலேட்டர் ( செயற்கை சுவாசம்) உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
- நல்லகண்ணு சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- நல்லகண்ணு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமாகிய நல்லகண்ணு கடந்து ஆகஸ்ட் 22ம் தேதி அவரது வீட்டில் கீழே விழுந்து தலையில் காயம் அடைந்தார்.
இதையடுத்து அவரை சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு, தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், நூறு வயது தாண்டிய நிலையில், வயது மூப்பின் காரணமாக உடம்பில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சனைகளுக்கும் சிகிச்சைகள் அளிக்க நரம்பியல் நிபுணர், நுரையீரல் நிபுணர், இருதய நிபுணர், தீவிர சிகிச்சைப் பிரிவு றிபுணர் ஆகியோர் அடங்கிய சிறப்பு மருத்துவர் குழு ஏற்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை நடிகர் சிவகார்த்திகேயன், நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
- சிறப்பு மருத்துவர் குழு ஏற்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
- இன்னும் ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வெங்கடேஸ்வரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமாகிய நல்லகண்ணு நேற்று முன்தினம் (22 ஆகஸ்ட் 2025), வீட்டில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு, தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், நூறு வயது தாண்டிய நிலையில், வயது மூப்பின் காரணமாக உடம்பில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சனைகளுக்கும் சிகிச்சைகள் அளிக்க நரம்பியல் நிபுணர், நுரையீரல் நிபுணர், இருதய நிபுணர், தீவிர சிகிச்சைப் பிரிவு றிபுணர் ஆகியோர் அடங்கிய சிறப்பு மருத்துவர் குழு ஏற்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக தற்போது, அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- ஆளுநர் உரை என்பது ஆட்சியாளர்கள் தயாரிக்கும் உரை தான்.
- பெரியார் , அம்பேத்கர், அண்ணா பெயர்களை வாசிக்காமல்விட்டது மாபெரும் தவறு. அவர்கள் பெயர் உச்சரிக்க கூடாத பெயரா?
சென்னை:
தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி ம.தி.மு.க சார்பில் இன்று முதல் அடுத்தமாதம் 20- ந்தேதி வரை பொது மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.
இதையொட்டி இன்று காலை எழும்பூர் ம.தி.மு.க தலைமைக் கழகமான தாயகத்தில் பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு முதல் கையெழுத்திட்டார். ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ, வஞ்சிய தேவன், ஜீவன், கழககுமார் பூங்கா ராமதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:- தமிழ்நாட்டின் வரலாற்றில் சுதந்திர இந்தியா என்று நாடு விடுதலை பெற்ற பின் தமிழ்நாட்டு கவர்னர்கள் யாரும் செய்யாத அட்டூழியம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்திய குடியரசு தலைவரை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம்.
ஜூன் 14-ந் தேதி நடத்திய பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்து இன்று கையெழுத்து இயக்கம் நடத்த தொடங்கி உள்ளோம்.
ஆளுநர் உரை என்பது ஆட்சியாளர்கள் தயாரிக்கும் உரை தான். குடியரசு தலைவர் உரை இந்திய அரசு தயாரிக்கும் உரை தான்.
ஆனால் பெரியார் , அம்பேத்கர், அண்ணா பெயர்களை வாசிக்காமல்விட்டது மாபெரும் தவறு. அவர்கள் பெயர் உச்சரிக்க கூடாத பெயரா?
மார்க்சியம் காலாவதியானது என்று சொன்னார். அது பற்றி இவருக்கு என்ன தெரியும். அம்பேத்கர் சொன்ன கருத்துக்கு மாறாக பேச ஆரம்பித்தார். முதலமைச்சர் வெளிநாட்டுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்த போது அவர் முயற்சியை முகத்திற்கு நேராக பேசுகிறார்.
முதலமைச்சர் செயலை விமர்சிப்பதற்கு இவர் எதிர்கட்சி தலைவரா?
கவர்னர் பதவியை விட்டு விட்டு என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். இந்தியை திணிக்க சொல்ல இவருக்கு என்ன உரிமை தகுதி உள்ளது. ஆளுநர் பதவியே இருக்க கூடாது, இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும்.
தமிழக ஆளுநர் நீக்கப்பட்டால் தான் தமிழ்நாட்டில் ஜனநாயகம் ஜனநாயகமாக இருக்கும். தமிழ்நாட்டின் முதல் விரோதி, அரசியல் சட்டத்தின் விரோதி ஆர் என் ரவி. இவரை திரும்ப பெற்று பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். நாகாலாந்தில் இதே நாச வேலை செய்தார் அவர்கள் துரத்திவிட்டார்கள். கையெழுத்து எல்லோரிடமும் பெற வேண்டும் இது அரசியல் காரணத்திற்கு இல்லை. தமிழ் நாட்டின் நன்மைக்கு என்று சொல்லுங்கள். எங்கெங்கு கையெழுத்து வாங்க முடியுமோ அங்கு எல்லாம் கையெழுத்து வாங்குங்கள், வீடுகள் கடைகள் என அனைத்து இடங்களிலும் வாங்குங்கள். இது வெற்றி பெரும் என்ற நம்பிக்கையோடு இதனை தொடங்குகிறோம். தி.மு.க. தோழமை கட்சிகள் இதனை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 99-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் நல்லகண்ணு.
- நல்லகண்ணு, நமக்கெல்லாம் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்து என்றும் வழிநடத்திட வேண்டும்.
சென்னை :
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
99-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர், தோழர் நல்லகண்ணு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்!
ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியை நம் மண்ணில் இருந்து அகற்றப் போராடிய ஐயா நல்லகண்ணு, நமக்கெல்லாம் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்து என்றும் வழிநடத்திட வேண்டும்! என கூறியுள்ளார்.
99-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர், தோழர் #நல்லகண்ணு அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்!
— M.K.Stalin (@mkstalin) December 26, 2023
ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியை நம் மண்ணில் இருந்து அகற்றப் போராடிய ஐயா நல்லகண்ணு அவர்கள், நமக்கெல்லாம் ஊக்கமாகவும்…
- ஒவ்வொரு முறையும் தேசிய அளவிலும் கோவை தொகுதி கவனம் பெற்று வருகிறது.
- கமல்ஹாசன், தனது முதல் தேர்தலை கோவையில் தான் சந்தித்தார்.
சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் எந்த தேர்தல் வந்தாலும் கோவை தொகுதி அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட கூடிய தொகுதியாக மாறுகிறது. ஒவ்வொரு முறையும் தேசிய அளவிலும் கோவை தொகுதி கவனம் பெற்று வருகிறது.
பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது அந்த கட்சியில் உள்ள மிக முக்கியமான பிரமுகர்கள் இங்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவதே கோவை நட்சத்திர தொகுதி அந்தஸ்தை பெற்று வருவதற்கான காரணமாக உள்ளது.
என்னதான் நட்சத்திர வேட்பாளர்கள் ஒரு நட்சத்திர பிம்பத்துடன் போட்டியிட்டாலும் கோவை தொகுதியில் அவர்களுக்கு வெற்றி கிடைத்ததா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இங்கு போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் உள்ளூர் வேட்பாளர்களிடம் தோற்று 2-வது இடத்தை தான் அவர்களால் பிடிக்க முடிந்துள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது, தமிழகத்தில் அ.தி.மு.க.வும், பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. கோவை தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் பா.ஜ.க.வை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்தியிலும் பா.ஜ.க அரசு அமைந்தது. ஆனால் 13 மாதங்களிலேயே வாஜ்பாய் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
இதனை தொடர்ந்து 1999-ம் ஆண்டு மீண்டும் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தமிழகத்தில் தி.மு.கவும், பா.ஜ.கவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. கோவை தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து கம்யூனிஸ்டு சார்பில், பொதுவாழ்வில் நேர்மையானவர், எளிமையானவர் என அறியப்படும் ஆர்.நல்லக்கண்ணு போட்டியிட்டார். கோவை எப்போதும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு செல்வாக்கு மிகுந்த பகுதியாகவே இருந்து வருகிறது. இதனால் எப்படியும் தங்களுக்கு தான் வெற்றி நிச்சயம் என நினைத்தனர்.
ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்தன. தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆர்.நல்லக்கண்ணுவால் 2-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது.
மக்கள் நீதிமய்யம் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், தனது முதல் தேர்தலை கோவையில் தான் சந்தித்தார். கோவை தெற்கு தொகுதியில் அவர் போட்டியிட்டார்.
அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரான வானதி சீனிவாசன் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசனை தோற்கடித்தார்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறிவந்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கடைசி நேரத்தில் கோவை தொகுதியில் களமிறக்கப்பட்டார். முடிவில் அவர் 4.50 லட்சம் வாக்குகள் பெற்று 2-ம் இடத்தையே பிடித்தார். தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5.68 லட்சம் வாக்குகள் பெற்று எம்.பி.ஆனார்.
இதுவரை நடந்த பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில், கோவை பாராளுமன்ற, சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வெளியூரை சேர்ந்த நட்சத்திர வேட்பாளர்கள் தொடர் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்துள்ளனர்.
மாறாக அவர்களை எதிர்த்து போட்டியிடும் உள்ளூர் வேட்பாளர்கள் இங்கு ஆதிக்கம் செலுத்தி வெற்றியை நிலைநாட்டி வருகிறார்கள்.
இதனால் வரும் காலங்களில் நட்சத்திர வேட்பாளர்கள் கோவையில் போட்டியிட தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது:-
சாதி பின்னணி கொண்ட, சாதி பின்னணி ஏதும் இல்லாத நட்சத்திர வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் இறங்கி தோற்பது கோவையில் ஆடுபுலி ஆட்டமாக நடந்து வருகிறது.
தேர்தல் அரசியலை பொறுத்தவரை ஒவ்வொரு தொகுதியில் வசிக்கும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் பிரதான வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆளுமை மிக்க தலைவர்களே, தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகத்தினருக்கு தான் தேர்தலில் அதிக வாய்ப்பு அளித்தது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
ஆர்.நல்லக்கண்ணு, கமல், அண்ணாமலை, ஆகியோர் தேர்தல் களத்தில் அதிகம் பணியாற்றினாலும் அவர்களால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பி.ஆர்.நடராஜன், தி.மு.க.வை சேர்ந்த கணபதி ராஜ்குமார் ஆகியோர் உள்ளூரை சேர்ந்தவர்கள் என்பதாலும், கட்சியிலும் அடிமட்ட நிலை வரை இணைப்பு இருந்ததாலும் வெற்றி பெற்றுள்ளனர். எனவே நட்சத்திர வேட்பாளர்களாக களம் இறங்கினாலும் வெளியூர்காரர்களை கோவை மக்கள் அங்கீகரிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்ததுடன், திருவள்ளுவர் சிலையை அன்பளிப்பாக வழங்கினார்.
இதைத்தொடர்ந்து நல்லுகண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* பொதுவுடைமை இயக்கத்திற்கும் நூற்றாண்டு, நல்லகண்ணுவுக்கும் நூற்றாண்டு. இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைத்ததாக நம்மை பொறுத்தவரை யாரும் கருதி விட முடியாது.
* தோழர் நல்லகண்ணுவை வாழ்த்த வரவில்லை. வாழ்த்து பெற வந்துள்ளேன்.
* திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றிக்கொண்டிருக்கக்கூடிய திட்டங்களுக்கெல்லாம் உறுதுணையாக பக்கபலமாக விளக்கிக்கொண்டிருப்பவர் அய்யா நல்லகண்ணு.
* தோழர் நல்லகண்ணு எதையும் அடக்கமாக, ஆழமாக சிந்தித்து வெளிப்படுத்துபவர்.
* அய்யா நல்லகண்ணுவை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன்.
* எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும் என அய்யா நல்லகண்ணுவை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.
- அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போர்க்களத்தில் முன்னின்று வாழ்ந்துகாட்டிக்கொண்டிருக்கிறார் ஐயா.
- சிறந்த சமூக சீர்திருத்தவாதியான ஐயா நல்லக்கண்ணு, நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், மக்கள் பணிகள் தொடர வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நூறாண்டு காணும் தொண்டு.
எல்லோரும் சமமென்னும் காலம் வரவேண்டும்; நல்லோர் பெரியர் என்னும் காலம் வரவேண்டும் என்பது பாரதியின் கனவு. அதன் நனவான வடிவமே மாபெரும் தோழர் நல்லகண்ணு அவர்களின் வாழ்வு.
சமூகத்தில் சமத்துவம் நிலவவேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் மொத்தத்தையும் அர்ப்பணித்து, அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போர்க்களத்தில் முன்னின்று வாழ்ந்துகாட்டிக்கொண்டிருக்கிறார் ஐயா.
இப்படி ஒருவர் இருக்க இயலுமா என்று வியக்கும் வண்ணம் தன் வாழ்வை அமைத்துக்கொண்ட பெருந்தகை தோழர் நல்லகண்ணு எளியோரின் வாழ்த்துப்படி நூறாண்டு காண்கிறார்.
அவருக்கு என் வாழ்த்து என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இன்றைய தினம், நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், ஐயா நல்லகண்ணுக்கு, இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த சமூக சீர்திருத்தவாதியான ஐயா நல்லக்கண்ணு, நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தமது மக்கள் பணிகள் தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான தோழர் நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
- நல்லகண்ணு பிறந்த திருவைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி.ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தப்படும்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் முதுபெரும் பொதுவுடைமைச் சிந்தனையாளரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான தோழர் நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
நமது மாநிலத்திற்கும், தமிழ் மக்களுக்கும் அன்னார் அவர்கள் ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும்விதமாக, தமிழ்நாடு அரசு 2022-ஆம் ஆண்டு 'தகைசால் தமிழர்' விருது வழங்கிச் சிறப்பித்தது. இன்று அவரது நூறாவது பிறந்த நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தியபோது, அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர் பிறந்த திருவைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி.ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தி, கூடுதல் வசதிகளுடன் புதிய மருத்துவமனைக் கட்டடம் அமைத்திட உத்தரவிட்டுள்ளார்கள்.
கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியையே எப்போதும் தனது தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னலமற்ற தகைசால் தமிழர் தோழர் இரா. நல்லகண்ணுவின் பெருமையைப் போற்றும்வகையில், திருவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய மருத்துவமனைக் கட்டடத்திற்கு "தோழர் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டடம்" எனப் பெயரிடவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






