என் மலர்
நீங்கள் தேடியது "அஞ்சலி"
- படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடித்து உள்ளார்.
- நடிகர் விஷாலே இப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.
நடிகர் விஷாலின் 35-வது திரைப்படம் 'மகுடம்'. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும். படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடித்து உள்ளார். மேலும் அஞ்சலியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார்.
நடிகர் விஷால் 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை சார்ந்து உருவாக்கப்பட்ட கதைக்களம் என கூறப்படுகிறது. முன்னதாக இப்படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், திடீரென அவர் இப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து நடிகர் விஷாலே இப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.
இந்த நிலையில், 'மகுடம்' படத்தின் புது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டையொட்டி வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் துடிப்பான வாலிபராக நடிகர் விஷால் காணப்படுகிறார். மேலும் இப்படம் கோடைவிடுமுறையையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- எர்ணாகுளத்தில் கந்தநாட்டில் உள்ள அவரது வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.
- ரஜினிகாந்தும் ஸ்ரீவிவாசனுடன் வகுப்புத் தோழனாக இருந்ததை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார்.
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 69.
கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீனிவாசன் நேற்று மரணமடைந்தார்.
ஸ்ரீனிவாசனின் இறுதிச் சடங்கு இன்று காலை எர்ணாகுளத்தில் கந்தநாட்டில் உள்ள அவரது வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பு தொடர்பாக எர்ணாகுளம் சென்றிருந்த நடிகர் சூர்யா, ஸ்ரீனிவாசன் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த வந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, நான் சினிமாவில் நுழைவதற்கு முன்பில் இருந்தே அவரது படங்களைப் பார்க்கிறேன். ஸ்ரீனிவாசனின் மரணச் செய்தியைக் கேட்டதும் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
நேரில் வந்து அவரைப் பார்க்க வேண்டும் என்ற தோன்றியது. சினிமாவுக்கு அவரது பங்களிப்புகள், அவர் கற்றுக்கொடுத்த விஷயங்கள் மற்றும் அவரது எழுத்துக்கள் எப்போதும் அனைவரின் மனதிலும் இருக்கும்" என்று தெரிவித்தார். முன்னதாக நகுடிகர் ரஜினிகாந்தும் ஸ்ரீவிவாசனுடன் வகுப்புத் தோழனாக இருந்ததை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார்.
நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் மலையாளம், தமிழ் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் எழுத்தாளர்.
நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராக அவரது பங்களிப்புகளுக்காக பல வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரங்கள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஸ்ரீனிவாசனுக்கு விமலா என்ற மனைவியும், வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் என்ற மகன்களும் உள்ளனர். இருவரும் மலையாள சினிமாவில் முக்கிய நபர்களாக உள்ளனர்.
- 69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
- பொதுக்குழுவில் விஷால், நாசர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் விஷால், நாசர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த நடிகர்கள் ராஜேஷ், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட 70 நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த பொதுக்குழுவில் நடிகர் சங்க கட்டடம் உட்பட பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போஜ்புரி சினிமாவின் முன்னணி நடிகையான அஞ்சலி ராகவ், லக்னோவில் நடந்த ஒரு பட விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, அருகே நின்று கொண்டிருந்த நடிகர் பவன்சிங், திடீரென அவரது இடுப்பை கிள்ளினார்.
அஞ்சலியும் சிரித்தபடி சமாளித்தார். பொதுமேடையிலேயே நடிகையின் இடுப்பை கிள்ளிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இடுப்பை தொடும் நடிகரிடம் எதிர்ப்பு தெரிவிக்காமல் அஞ்சலி சிரிக்கிறாரே... அவரும் இதை ரசித்து அனுபவிக்கிறாரோ, என்னவோ... என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ஆவேசமடைந்த அஞ்சலி, ''இதை எப்படி ரசிப்பேன் என்று நினைக்கலாம். என் இடுப்பில் ஏதோ இருக்கிறது? என்று கூறியபடி பவன்சிங் தொட்டார். எனக்கு அதிர்ச்சி இருந்தாலும் மேடை என்பதால் காட்டிக்கொள்ளவில்லை. எந்த பெண்ணையும் அனுமதியின்றி தொடுவது தவறு. நான் அதை அனுமதிப்பதும் கிடையாது. இனி போஜ்புரி படங்களில் நான் பணியாற்ற போவதில்லை'', என்று அறிவித்தார்.
இதற்கிடையில் தனது செயல்பாடு குறித்து மன்னிப்பு கேட்டிருக்கும் நடிகர் பவன்சிங், படங்களில் நடிக்க மாட்டேன் என்ற முடிவை வாபஸ் பெறுமாறும் அஞ்சலியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும்.
- இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை சார்ந்து உருவாக்கப்பட்ட கதைக்களமாகும்.
ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு, விஷாலின் 35-வது திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு விஷால் திரைப்படத்திற்கு ஜிவி இசையமைக்கிறார்
படத்தை ஆர் பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும். படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஞ்சலியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு 'மகுடம்' என தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை சார்ந்து உருவாக்கப்பட்ட கதைக்களமாகும்.
இந்த நிலையில், 'மகுடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் தெரிவித்து வெளியாகி உள்ள ஃபர்ஸ்ட் லுக்கில் விஷால் 3 விதமான கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
- விஷால் நடிக்கும் 35 -வது திரைப்படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
- படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார்.
விஷால் நடிக்கும் 35 -வது திரைப்படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இப்படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குகிறார். படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு விஷால் திரைப்படத்திற்கு ஜிவி இசையமைக்கிறார்.
படத்தை ஆர் பி சவுதிர்யின் சூப்பர் குட் பிலிம் தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும். படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஞ்சலியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு மகுடம் என தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை சார்ந்து உருவாக்கப்பட்ட கதைக்களமாகும்.
- ராம் இயக்கிய ‘பறந்து போ’ படத்தில் கவுரவ வேடத்தில் தலைகாட்டியிருந்தார்.
- சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் நடிப்பில் கடைசியாக 'மதகஜராஜா' படம் வெளியாகி ஹிட் அடித்தது.
இதையடுத்து ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பில் ரவி அரசு இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்கிறார். இது விஷால் நடிக்கும் 35-வது படம் ஆகும். விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.
இந்தநிலையில் விஷால் படத்தில் அஞ்சலி இணைந்திருக்கிறார். ஏற்கனவே 'மதகஜராஜா' படத்தில் விஷாலுடன் அவர் இணைந்து நடித்திருந்தார்.
சென்னையை காலி செய்து ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள அஞ்சலி, சமீபத்தில் ராம் இயக்கிய 'பறந்து போ' படத்தில் கவுரவ வேடத்தில் தலைகாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
- டீசர் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாடலான சன்ஃப்ளவர் கடந்த மாதம் வெளியானது. டீசர் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நடிகர் சித்தார்த் "டாடி ரொம்ப பாவம்" என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் இன்று மாலை வெளியானது.
- ராம் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- நடிகர் சித்தார்த் "டாடி ரொம்ப பாவம்" என்ற பாடலை பாடியுள்ளார்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாடலான சன்ஃப்ளவர் கடந்த மாதம் வெளியானது. டீசர் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நடிகர் சித்தார்த் "டாடி ரொம்ப பாவம்" என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
- பறந்து போ படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.
- பறந்து போ படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், பறந்து போ படத்தில் இடம்பெற்றுள்ள சன் ஃபிளவர் என்கிற பாடல் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் மே 23ம் தேதி சன் பிளவர் என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
- தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
திரைத்துறையில் இருந்து ஏராளமானோர் வந்து கவுண்டமணியின் மனைவியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மேலும், விஜய் நடிகர் கவுண்டமணியை ஆரத் தழுவி ஆறுதல் தெரிவித்தார்.
- அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.
- நீட் விவகாரத்தில் திமுக அரைக் கண்டித்து அதிமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளின் புகைப்படங்கள் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி அதிமுக மாணவர் அணி அஞ்சலி செலுத்தினர்.
அதன்படி, சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், நீட் தேர்வு ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் சொல்லி திமுக ஆட்சிக்கு வந்ததாக குறிப்பிட்டு அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீட் விவகாரத்தில் திமுக அரைக் கண்டித்து அதிமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.






