என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anjali"

    அருகே நின்று கொண்டிருந்த நடிகர் பவன்சிங், திடீரென அவரது இடுப்பை கிள்ளினார்.

    போஜ்புரி சினிமாவின் முன்னணி நடிகையான அஞ்சலி ராகவ், லக்னோவில் நடந்த ஒரு பட விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, அருகே நின்று கொண்டிருந்த நடிகர் பவன்சிங், திடீரென அவரது இடுப்பை கிள்ளினார்.

    அஞ்சலியும் சிரித்தபடி சமாளித்தார். பொதுமேடையிலேயே நடிகையின் இடுப்பை கிள்ளிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

    இடுப்பை தொடும் நடிகரிடம் எதிர்ப்பு தெரிவிக்காமல் அஞ்சலி சிரிக்கிறாரே... அவரும் இதை ரசித்து அனுபவிக்கிறாரோ, என்னவோ... என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ஆவேசமடைந்த அஞ்சலி, ''இதை எப்படி ரசிப்பேன் என்று நினைக்கலாம். என் இடுப்பில் ஏதோ இருக்கிறது? என்று கூறியபடி பவன்சிங் தொட்டார். எனக்கு அதிர்ச்சி இருந்தாலும் மேடை என்பதால் காட்டிக்கொள்ளவில்லை. எந்த பெண்ணையும் அனுமதியின்றி தொடுவது தவறு. நான் அதை அனுமதிப்பதும் கிடையாது. இனி போஜ்புரி படங்களில் நான் பணியாற்ற போவதில்லை'', என்று அறிவித்தார்.

    இதற்கிடையில் தனது செயல்பாடு குறித்து மன்னிப்பு கேட்டிருக்கும் நடிகர் பவன்சிங், படங்களில் நடிக்க மாட்டேன் என்ற முடிவை வாபஸ் பெறுமாறும் அஞ்சலியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும்.
    • இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை சார்ந்து உருவாக்கப்பட்ட கதைக்களமாகும்.

    ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு, விஷாலின் 35-வது திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு விஷால் திரைப்படத்திற்கு ஜிவி இசையமைக்கிறார்

    படத்தை ஆர் பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும். படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஞ்சலியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

    படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு 'மகுடம்' என தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை சார்ந்து உருவாக்கப்பட்ட கதைக்களமாகும்.

    இந்த நிலையில், 'மகுடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் தெரிவித்து வெளியாகி உள்ள ஃபர்ஸ்ட் லுக்கில் விஷால் 3 விதமான கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

    • விஷால் நடிக்கும் 35 -வது திரைப்படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
    • படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார்.

    விஷால் நடிக்கும் 35 -வது திரைப்படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இப்படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குகிறார். படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு விஷால் திரைப்படத்திற்கு ஜிவி இசையமைக்கிறார்.

    படத்தை ஆர் பி சவுதிர்யின் சூப்பர் குட் பிலிம் தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும். படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஞ்சலியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு மகுடம் என தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை சார்ந்து உருவாக்கப்பட்ட கதைக்களமாகும்.

    • ராம் இயக்கிய ‘பறந்து போ’ படத்தில் கவுரவ வேடத்தில் தலைகாட்டியிருந்தார்.
    • சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் நடிப்பில் கடைசியாக 'மதகஜராஜா' படம் வெளியாகி ஹிட் அடித்தது.

    இதையடுத்து ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பில் ரவி அரசு இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்கிறார். இது விஷால் நடிக்கும் 35-வது படம் ஆகும். விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.

    இந்தநிலையில் விஷால் படத்தில் அஞ்சலி இணைந்திருக்கிறார். ஏற்கனவே 'மதகஜராஜா' படத்தில் விஷாலுடன் அவர் இணைந்து நடித்திருந்தார்.

    சென்னையை காலி செய்து ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள அஞ்சலி, சமீபத்தில் ராம் இயக்கிய 'பறந்து போ' படத்தில் கவுரவ வேடத்தில் தலைகாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
    • டீசர் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

    கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

    இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாடலான சன்ஃப்ளவர் கடந்த மாதம் வெளியானது. டீசர் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தில் நடிகர் சித்தார்த் "டாடி ரொம்ப பாவம்" என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் இன்று மாலை வெளியானது.

    • ராம் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • நடிகர் சித்தார்த் "டாடி ரொம்ப பாவம்" என்ற பாடலை பாடியுள்ளார்.

    கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

    இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாடலான சன்ஃப்ளவர் கடந்த மாதம் வெளியானது. டீசர் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தில் நடிகர் சித்தார்த் "டாடி ரொம்ப பாவம்" என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

    • குருபூஜை விழாவில் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.
    • அஞ்சலி செலுத்த வருவோருக்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

    காளையார்கோவில்

    மாமன்னர் மருது பாண்டியர்களின் 221-வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. நினைவிடத்தில் ஏராளமா னோர் அஞ்சலி செலுத்தினர்.

    அஞ்சலி செலுத்த வருவோர் முளைப்பாரி எடுத்தும், பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும் அஞ்சலி செலுத்தினர். சிவகங்கை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் கண்காணி க்கப்படுகின்றனர்.

    மருதுபாண்டியர் குருபூஜையையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அஞ்சலி செலுத்த வருவோர் டூவீலரில் செல்ல அனுமதி இல்லை. வாடகை வாகனத்தில் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, மானா மதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார் கோவில், தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    அஞ்சலி செலுத்த வருவோருக்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • இயக்குனர் ராம் தற்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இந்த படத்தில் நிவின் பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    2007-ஆம் ஆண்டு வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு 'தங்கமீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது 'ஏழு கடல் ஏழு மலை' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார்.


    ஏழு கடல் ஏழு மலை

    மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    ஏழு கடல் ஏழு மலை போஸ்டர்

    அதன்படி, 'ஏழு கடல் ஏழு மலை' படக்குழு நடிகை அஞ்சலியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நிவின் பாலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அஞ்சலி வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • அஞ்சலி தற்போது நடித்துள்ள வெப் தொடர் 'ஃபால்'.
    • இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது.

    'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.


    ஃபால்

    இதையடுத்து இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபால்' வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் "வெர்டிஜ்" எனும் கனடிய வெப் தொடரின் ரீமேக்காகும். இதில், எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    ஃபால்

    இந்த தொடருக்கு அஜேஷ் இசையமைக்க கிஷன் சி செழியன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இத்தொடரை இயக்குவது மட்டுமல்லாமல் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் இயக்குனர் சித்தார்த் ராமசாமி. இந்த தொடரின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


    ஃபால்

    இந்நிலையில், இந்த தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. மர்மங்களும் குழப்பங்களும் நிறைந்ததாக வெளியாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. 'ஃபால்' வெப் தொடர் வருகிற டிசம்பர் 9 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • வேன் குளத்தில் கவிழ்ந்து ஆசிரியர் சுகந்தி மற்றும் 9 மாணவர்கள் உயிரிழந்தனர்.
    • பெற்றோர்கள், ஆசிரியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து மலர் தூவி அஞ்சலி .

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நாகக்குடையான் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு வேன் குளத்தில் கவிழ்ந்து ஆசிரியர் சுகந்தி மற்றும் 9 மாணவ - மாணவிகள் உயிரிழந்தனர்.

    உயிரிழந்தவர்கள் நினைவாக நாகக்குடையான் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் அருகே 13 ஆம் ஆண்டு நினைவு நாளில் உயிரிழந்த குழந்தைகளுக்கு ஆசிரியைக்கும் ஊர் மக்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்தவர் அஞ்சலி.
    • அஞ்சலிக்கு திருமணம் முடிவாகி விட்டதாக வெளியான தகவலுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அஞ்சலி, தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். தற்போது அஞ்சலிக்கு 36 வயது ஆனாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சில நடிகர்களுடன் அஞ்சலியை இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்து அடங்கியது. நடிகர் ஜெய்யுடன் காதல் மலர்ந்ததாகவும், பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாகவும் பேசினர். இதற்கெல்லாம் அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

     

    அஞ்சலி

    அஞ்சலி

    இந்த நிலையில் அஞ்சலிக்கு திருமணம் முடிவாகி விட்டதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் புதிய தகவல் பரவி வருகிறது. இதற்கு அஞ்சலி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ''நான் இப்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இல்லை. திருமணத்தை பற்றி யோசிக்கவே இல்லை. ஆனாலும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். திருமணம் முடிவானதும் மறைக்காமல் எல்லோருக்கும் தெரியப்படுத்துவேன்" என்றார்.

    • மேலூர் அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
    • ஊர்வலமாக எடுத்துச்சென்று பெரிய கண்மாய் அருகே காளையை அடக்கம் செய்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டியில் முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான கோவில் காளை உள்ளது. இந்த காளை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்பட பல ஊர்களில் நடைபெற்ற பிரபலமான மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. இந்த நிலை உடல்நலக்குறைவு காரணமாக காளை நேற்று இரவு இறந்தது.

    இதையடுத்து அந்த காளைக்கு ஜாதி மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று பெரிய கண்மாய் அருகே காளையை அடக்கம் செய்தனர்.

    ×