என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "video release"

    ஆண் பாவம் பொல்லாதது கடந்த அக்டோபர் 31-ந்தேதி வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

    2023-ஆம் ஆண்டு அறிமுக இயக்குநரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து ''ஜோ'' பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம் 'ஆண் பாவம் பொல்லாதது'. இப்படத்தை அறிமுக இயக்குநரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.

    இச்சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. 'ஆண்பாவம் பொல்லாதது' படம் கடந்த அக்டோபர் 31-ந்தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    'ஆண்பாவம் பொல்லாதது' படம் உலகளவில் ரூ. 2 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆண்பாவம் பொல்லாதது படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

    • பாஜக நேரடியாக நுழைய முடியாததால் அதிமுகவுடன் சேர்ந்து என்னென்ன செய்கிறது.
    • திமுக ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்பதில் குறியாக உள்ளனர்.

    நம் பயணம் நீண்டது, தமிழ்நாட்டை தலைகுனிய விடாமல் இலக்கை நோக்கி விரைவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3வது வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் முதலமைச்சர் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தை குறிவைத்து பாஜக செய்பவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்து சொல்வதால் தான் திமுகவை டார்கெட் செய்கின்றனர்.

    பாஜக நேரடியாக நுழைய முடியாததால் அதிமுகவுடன் சேர்ந்து என்னென்ன செய்கிறது என கரூர் மாநாட்டிலேயே எடுத்து சொன்னேன்.

    தொகுதி மறுவரையறை, கல்வி நிதி மறுப்பு, இந்தி திணிப்பு, கீழடி அறிக்கையை மறைப்பது என லிஸ்ட் நீள்கிறது.

    அவர்களின் கூட்டணிக்குள் பல குழப்பம் இருந்தபோதிலும் திமுக ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்பதில் குறியாக உள்ளனர்.

    பாஜகவை எதிர்ப்பதாக வெளியில் நிறைய பேர் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் உண்மையாக எதிர்ப்பது திமுக தான்.

    அனுபவம், வலிமை, கொள்கைகளோடு பாஜகவை தடுத்து நிறுத்தும் ஆற்றல் திமுகவிற்கு மட்டும்தான் உள்ளது.

    திமுக ஆட்சி தொடர்ந்தால் தான் தொடர்ந்து தலைநிமிர்ந்து நிற்க முடியும். ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரை முன்னெடுப்பில் ஒருகோடிக்கும் அதிகமான குடும்பங்கள் திமுகவில் இணைத்துள்ளனர்.

    இந்த 100 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்துள்ள உயரம் என்பது ஒரு குழந்தை நடைபழகுவது போலதான் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெர்மனி தொழிலதிபர்கள் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்.
    • முதலீட்டாளர்கள் ஆர்வத்தை அடுத்தக்கட்டம் எடுத்து செல்ல வேண்டும்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐரோப்பிய பயணமும்- ஆக்ஸ்போர்டு நினைகளும் என்ற தலைப்பில் எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில்," தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜெர்மனி தொழிலதிபர்கள் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்.

    முதலீட்டாளர்கள் ஆர்வத்தை அடுத்தக்கட்டம் எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காகவே தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்துகிறோம்" என்றார்.

    • மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
    • டீசர் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

    கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

    இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாடலான சன்ஃப்ளவர் கடந்த மாதம் வெளியானது. டீசர் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தில் நடிகர் சித்தார்த் "டாடி ரொம்ப பாவம்" என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் இன்று மாலை வெளியானது.

    • நடிகர் பெஞ்சமின் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.
    • நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கியுள்ளார்.

    இயக்குனர் பேரரசு இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியான திருப்பாச்சி படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் விஜய்க்கு நண்பராக நடிகர் பெஞ்சமின் நடித்துள்ளார்.

    அந்த படத்திற்கு பிறகு பெஞ்சமின் புகழ்பெற்று பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், பெஞ்சமின் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.

    இதனை மறுத்து நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கியுள்ளார்.

    இதுகுறித்து வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

    சமூக வலைத்தளங்களில் என் புகழை கலங்கப்படுத்துவதற்காக என்னை பற்றி தவறுதலான செய்திகளை போடுகிறார்கள்.

    இது 4வது முறை. திருப்பாச்சி பட நடிகர் பெஞ்சமின் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

    இது மிகவும் சங்கடமாக உள்ளது. மக்கள் என்னுடைய வீட்டிற்கு சென்று என் மனைவியிடம் விசாரித்து வருகிறார்கள்.

    நான் தற்போது பரமத்தி வேலூரில் கோரைக்காரன் என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன்.

    ஒரு சில நண்பர்கள் தங்கள் சேனலுக்கு வியூவர்ஸ் வரவேண்டும் என்பதற்காக பெஞ்சமின் இறந்துவிட்டார் என்று செய்தியை பரப்புகின்றனர்.

    இது கஷ்டமாக இருக்கிறது. இப்படி செய்தி பரவினால் என் வீட்டில் யாருக்காவது அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது என்றால் நான் என்ன செய்வது.

    என் வீட்டில் ஏற்கனவே 4 பேர் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துள்ளனர். நானும் ஹார்ட் அட்டாக் வந்து பிழைத்திருக்கிறேன்.

    இப்படி செய்தியை பரப்பி வியூவர்சை கொண்டு வரவேண்டும் என்கிற அவசியம் உங்களுக்கு வேண்டாம். தயவு செய்து இதுபோன்று செய்திகளை பரப்பாதீர்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உயர்மட்ட குழு பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
    • எந்த இடத்திலும் தான் கட்சியில் இருந்து விலகுவதாக கூறவில்லை.

    தேமுதிக கட்சியில் இருந்து தான் விலகுவதாக எந்த இடத்திலும் சொல்லவில்லை என அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேமுதிக பொதுக்குழுவில் நான்கு பேர் துணை பொது செயலாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

    அதில் ஒரு பதவி எனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். அது கிடைக்கவில்லை என்பதால் வருத்தம் அடைந்தேன்.

    உயர்மட்ட குழு பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

    ஆனால், எந்த இடத்திலும் தான் கட்சியில் இருந்து விலகுவதாக கூறவில்லை.

    என்னுடைய உயிர் மூச்சு உள்ளவரை தேமுதிகவில் தான் இருப்பேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது.
    • உலக அளவில் இந்தப் படம் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்

    திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது. திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

    உலக அளவில் இந்தப் படம் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் OG SAMBAVAM வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    • கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவானார்.
    • சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் பதுங்கி இந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனால் தனது கருத்துக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்தார்.

    எனினும், நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். அவரை கைது செய்வதற்காக தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. இதையடுத்து ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் பதுங்கி இந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில், ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை போலீசார் சென்னை அழைத்து வந்தனர். சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

    அதன்பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை கஸ்தூரியை நவம்பர் 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், கைது நடவடிக்கைக்கு முன்பு கஸ்தூரி வெளியிட்டு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    அந்த வீடியோவில், " நான் தலைமறைவாகவில்லை, ஓடி ஒளியவில்லை. ஐதராபாத்தில் எனது வீட்டில் தான் இருந்தேன்.

    படப்பிடிப்பிற்காக ஐதராபாத் வந்திருந்தேன். தினமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தேன்.

    நேற்று படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியபோது தான் கைது செய்தனர். என்னிடம் எனது செல்போன் இல்லை, வழக்கறிஞரிடம் கொடுத்திருந்தேன்" என கூறினார்.

    காவலர் ராஜவேலுவை ரவுடிகள் தாக்கியதில் கழுத்தில் வெட்டப்பட்டு அங்கிருந்து தப்பி ஓடிவரும் காட்சிகள் அடங்கிய வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். #ChennaiEncounter
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடிசைப் பகுதியில் ஒரு கும்பல் தகராறில் ஈடுபடுவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ராஜவேலு உடனடியாக அங்கு விரைந்து சென்றார். 

    அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் அந்த கும்பல் காவலர் ராஜவேலுவை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதுதொடர்பாக போலீசர் 6 பேர மீது வழக்கு பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். அவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது ரவுடி ஆனந்தன் தப்பினார்.

    இதற்கிடையே, தப்பிச்சென்ற ரவுடி ஆனந்தனை சென்னை கோட்டூர்புரத்தில் ரவுடி ஆனந்தன் என்பவரை போலீசார் நேற்று இரவு என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.  ரவுடிகளை பிடிக்க சென்ற காவலர் மீது தாக்குதல் நடத்தியதால் தான் ரவுடி ஆனந்தனை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றோம் என கூடுதல் ஆணையர் சாரங்கன் தெரிவித்தார்.

    இந்நிலையில், காவலர் ராஜவேலுவை ரவுடிகள் தாக்கியதில் கழுத்தில் வெட்டப்பட்டு அங்கிருந்து தப்பி ஓடிவரும் காட்சிகள் அடங்கிய வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் ரவுடிகளிடம் வெட்டுப்பட்டதும்  அங்கிருந்து தப்பி வரும் காட்சிகள் பதிவாகியுள்ளது. #ChennaiEncounter


    ×