என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    என்னுடைய உயிர் மூச்சு உள்ளவரை தே.மு.தி.க.வில் தான் இருப்பேன்- நல்லதம்பி
    X

    என்னுடைய உயிர் மூச்சு உள்ளவரை தே.மு.தி.க.வில் தான் இருப்பேன்- நல்லதம்பி

    • உயர்மட்ட குழு பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
    • எந்த இடத்திலும் தான் கட்சியில் இருந்து விலகுவதாக கூறவில்லை.

    தேமுதிக கட்சியில் இருந்து தான் விலகுவதாக எந்த இடத்திலும் சொல்லவில்லை என அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேமுதிக பொதுக்குழுவில் நான்கு பேர் துணை பொது செயலாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

    அதில் ஒரு பதவி எனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். அது கிடைக்கவில்லை என்பதால் வருத்தம் அடைந்தேன்.

    உயர்மட்ட குழு பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

    ஆனால், எந்த இடத்திலும் தான் கட்சியில் இருந்து விலகுவதாக கூறவில்லை.

    என்னுடைய உயிர் மூச்சு உள்ளவரை தேமுதிகவில் தான் இருப்பேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×