search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ex MLA"

    • நஃபே சிங்குடன் கட்சி நிர்வாகி ஜெய்கிஷன் உயிரிழந்தார்.
    • காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதி.

    அரியானாவில் இந்திய தேசிய லோக்தள தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான நஃபே சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

    பகதூர் என்ற இடத்தில் நஃபே சிங் காரில் சென்று கொண்டிருந்தபோது சூழ்ந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

    அப்போது, துப்பாக்கி குண்டு பாய்ந்து நஃபே சிங் மற்றும் கட்சி நிர்வாகி ஜெய்கிஷன் ஆகியோர் உயிரிழந்தனர்.

    மேலும், காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • 1000 சவரன் நகை கேட்டு துன்புறுத்துவதாக மனைவி ஸ்ருதி புகார்.
    • எந்தவித ஆதாரமும் இல்லாமல் தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தனின் மருமகள் ஸ்ருதி நேற்று கணவர் குடும்பத்தினர் மீது வரதட்சனை புகார் அளித்திருந்த நிலையில், இன்று கணவர் சதீஷ் குமார் டிஜிபி அலுவலகத்தில் ஸ்ருதிக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

    1000 சவரன் நகை கேட்டு துன்புறுத்துவதாக மனைவி ஸ்ருதி புகார் அளித்திருந்த நிலையில் சதீஷ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். 

    அந்த புகாரில், "எந்தவித ஆதாரமும் இல்லாமல் தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

    தன்னிடம் பணத்தை பறிப்பதற்காகவே இதுபோன்ற பொய்யான புகாரை தனது மனைவி கொடுத்துள்ளார் என சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    மேலும், "கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு தாங்கள் பிரிந்த நிலையில், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தன் மீது பொய்யான புகார் தெரிவித்து வரும் ஸ்ருதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் மனுவில் சதீஷ் குமார் கூறியுள்ளார்.

    • 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டு முன்பு குவிந்தனர்.

    திருப்பூர் :

    கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ். பி .,வேலுமணி வீடு உள்பட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். இது குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்டம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் அவரது வீட்டு முன்பு குவிந்தனர்.அப்போது போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. ,வேலுமணியின் வீட்டில் நடைபெறும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. சு.குணசேகரன் தலைமையில் மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், கவுன்சிலர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், பகுதி செயலாளர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கோவை சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து கோவையில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர்.இந்த தகவல் கிடைத்ததும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ,திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகளை கைது செய்து அடைத்து வைக்கப்பட்டு இருந்த மண்டபத்திற்கு நேரடியாக சென்று நிர்வாகிகளை சந்தித்தார். 

    • விதிகளை மீறி அந்த குவாரிகள் செயல்படுகின்றன என்பதை தெரிவித்தும் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய முன்வரவில்லை.
    • கடந்த 5-ந்தேதி ஆலங்குளம் தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டம் நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழக அரசின் வருவாய்த்துறை செயலாளர் மற்றும் தொழில்துறை செயலாளர் ஆகியோருக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    விதி மீறல்

    ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் குவாரிகளால் அந்த கிராமம் மற்றும் ஆண்டிபட்டி ஊராட்சிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

    விதிகளை மீறி அந்த குவாரிகள் செயல்படுகின்றன என்பதை தெரிவித்தும் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய முன்வரவில்லை. அதனை ஆய்வு செய்து விதிமீறல் நடந்திருந்தால் குவாரியை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நடவடிக்கை

    கடந்த 5-ந்தேதி ஆலங்குளம் தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் குவாரிகள் அதற்கான உரிமம் பெற்ற காலம் வரை செயல்படும் என்றும், வெடி வைப்பதை பொதுமக்கள் பார்வையிடலாம் என்றும் தெரிவித்து பொதுமக்களை அனுப்பி வைத்து விட்டனர்.

    இந்த குவாரிகளில் சக்தி வாய்ந்த வெடி மருந்து கையாளப்பட்டு போர்வெல் எந்திரங்கள் மூலம் துளையிடப்பட்டு பாறைகள் தகர்க்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×