search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் தலைமையில் கைதான திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு
    X

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த காட்சி.

    முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் தலைமையில் கைதான திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு

    • 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டு முன்பு குவிந்தனர்.

    திருப்பூர் :

    கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ். பி .,வேலுமணி வீடு உள்பட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். இது குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்டம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் அவரது வீட்டு முன்பு குவிந்தனர்.அப்போது போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. ,வேலுமணியின் வீட்டில் நடைபெறும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. சு.குணசேகரன் தலைமையில் மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், கவுன்சிலர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், பகுதி செயலாளர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கோவை சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து கோவையில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர்.இந்த தகவல் கிடைத்ததும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ,திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகளை கைது செய்து அடைத்து வைக்கப்பட்டு இருந்த மண்டபத்திற்கு நேரடியாக சென்று நிர்வாகிகளை சந்தித்தார்.

    Next Story
    ×