என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜேந்திரன்"

    • ராஜேந்திரன், இடுக்கியில் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியது உள்பட பல்வேறு புகார்களுக்கு உள்ளானார்.
    • பா.ஜ.க. மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகரை திருவனந்தபுரத்தில் ராஜேந்திரன் சந்தித்தார்.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ராஜேந்திரன். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இவர், இடுக்கியில் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியது உள்பட பல்வேறு புகார்களுக்கு உள்ளானார். இதனை தொடர்ந்து அவர் மீது விசாரணை நடத்திய கம்யூனிஸ்டு, கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்தது.

    இந்த சூழலில் முன்னாள் எம்.எல்.ஏ.ராஜேந்திரன், பாரதிய ஜனதாவில் இணைய போவதாக கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 10-ந் தேதி பா.ஜ.க. மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகரை திருவனந்தபுரத்தில் ராஜேந்திரன் சந்தித்தார்.

    பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், பாரதிய ஜனதாவில் இணைவது தொடர்பாக விவாதித்தேன். அந்தக் கட்சியின் முடிவுக்கு காத்திருக்கிறேன் என்றார். மேலும் பா.ஜ.க.வில் சேர்வதற்கு எந்த தனிப்பட்ட கோரிக்கையோ, சிறப்பு நிபந்தனையையோ முன்வைக்கவில்லை என்றும், மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்துள்ளேன் என்றும் அவர் கூறினார்.

    இந்த நிலையில் அவர் இன்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமையகத்திற்கு வந்து பாரதிய ஜனதாவில் இணைந்தார். அவருக்கு மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர், கட்சி உறுப்பினர் பதவியை முறையாக வழங்கினார்.

    3 முறை கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வான அவர், கடந்த 4 ஆண்டுகளாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து பிரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி வாரியாக மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வருகிறோம்.
    • எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியிலேயே தற்போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்துள்ளன.

    சேலம்:

    சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டமன்றத் தேர்தலின் போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து இதுவரை 90 சதவீத மனுக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி வாரியாக மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியிலேயே தற்போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்துள்ளன.

    அவர் தனது தொகுதிக்கு கூட எதுவும் செய்யவில்லை. தற்போது தேர்தல் ஜூரம் வந்துவிட்டதால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உளறிக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து முதலமைச்சர் வழியில் மக்கள் பணிகளில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செம்மொழி சிற்ப பூங்காவை பராமரித்து பிரபலமாக்க அறிவுறுத்தினார்.
    • கோயில் வளாகத்தில் 3டி அனிமேஷன் திட்டப்பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது பயணிகள் தங்கும் அறைகள், நீச்சல் குளம், கழிப்பறைகள், கட்டிடங்கள், சமையல் கூடம் மற்றும் வளாகத்தில் உள்ள செம்மொழி சிற்ப பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டார். பூங்காவை பராமரித்து பிரபலமாக்க அறிவுறுத்தினார். 

    பின்னர், மாமல்லபுரத்தில் பழைய சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி, பேருந்து நிலையம் அருகே மரகத பூங்காவில், ரூ.8 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் விளக்குகள் மூலம் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணி மற்றும் 5கோடி மதிப்பீட்டில் தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் 3டி அனிமேஷன் திட்டப்பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    முன்னதாக, திருவிடந்தையில் நித்தியகல்யாண பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் 223 ஏக்கரில் "ஆன்மீக கலாச்சார பூங்கா" அமைய உள்ள இடத்தையும் ஆய்வு செய்தார். 

    ஆய்வின்போது, சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், செங்கல்பட்டு கலெக்டர் அருண் ராஜ், சப்-கலெக்டர் நாராயண சர்மா, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், காஞ்சிபுரம் திமுக மாவட்ட பொருளாளர் விசுவநாதன், பேரூராட்சி கவுன்சிலர் மோகன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×