என் மலர்
நீங்கள் தேடியது "Tourism Minister"
- லேம்ஸ்ராக் காட்சி முனையில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
- கழிப்பறை, நடைபாதை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
குன்னூர்
தற்போது சமவெளிப் பகுதிகளில் கடுமையான வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நீலகிரி மாவட்டத்தை நோக்கி சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக குன்னூரில் உள்ள லேம்ஸ்ராக் காட்சி முனையில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அழகிய பசுமை நிறைந்த காடுகளையும். சமவெளி பகுதிகளில் ஓடும் ஆறுகளையும் வானுயர்ந்த மலைகளையும் பார்க்கலாம் என்பதால் இங்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் சுற்றுலா தளங்களை மேம்படுத்த மாண்புமிகு தமிழக முதல்-அமைச்சரின் ஆணைப்படி சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் குன்னூர் லாம்ஸ் ராக் காட்சி முனை பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு இயற்கை காட்சிகளை பார்த்து ரசிக்க இருக்கை அமைப்பது, கழிப்பறை, நடைபாதை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது சுற்றுலா துறை அலுவலர் உமா சங்கர், குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், பர்லியார் ஊராட்சி மன்ற தலைவி சுசீலா மற்றும் பலர் இருந்தனர்.
- செம்மொழி சிற்ப பூங்காவை பராமரித்து பிரபலமாக்க அறிவுறுத்தினார்.
- கோயில் வளாகத்தில் 3டி அனிமேஷன் திட்டப்பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது பயணிகள் தங்கும் அறைகள், நீச்சல் குளம், கழிப்பறைகள், கட்டிடங்கள், சமையல் கூடம் மற்றும் வளாகத்தில் உள்ள செம்மொழி சிற்ப பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டார். பூங்காவை பராமரித்து பிரபலமாக்க அறிவுறுத்தினார்.

பின்னர், மாமல்லபுரத்தில் பழைய சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி, பேருந்து நிலையம் அருகே மரகத பூங்காவில், ரூ.8 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் விளக்குகள் மூலம் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணி மற்றும் 5கோடி மதிப்பீட்டில் தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் 3டி அனிமேஷன் திட்டப்பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
முன்னதாக, திருவிடந்தையில் நித்தியகல்யாண பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் 223 ஏக்கரில் "ஆன்மீக கலாச்சார பூங்கா" அமைய உள்ள இடத்தையும் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், செங்கல்பட்டு கலெக்டர் அருண் ராஜ், சப்-கலெக்டர் நாராயண சர்மா, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், காஞ்சிபுரம் திமுக மாவட்ட பொருளாளர் விசுவநாதன், பேரூராட்சி கவுன்சிலர் மோகன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சுற்றுலா பயணிகளை ஊக்கும்விக்கும் வகையில் மத்திய அரசு ‘பவான் ஹன்ஸ் லிமிடெட்’ என்னும் ஹெலிகாப்டர் சேவையை நடத்தி வருகிறது. இத்தகைய சேவை ஏற்கனவே இமாசலபிரதேசம், சிக்கிம், டையு மற்றும் டாமன், அந்தமான் மற்றும் நிகோபார் மற்றும் அசாம் மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
சுற்றுலாப் பயணிகளுக்கான இந்த ஹெலிகாப்டர் சேவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்திலும் இச்சேவையை தொடங் குவது குறித்த சாத்தியக் கூறு ஆய்வு ஒன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
இதுபற்றி நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் கூறியதாவது:-
மத்திய அரசு நிறுவனமான பவான் ஹன்ஸ் தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவையை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிய ஆய்வை தமிழக அரசுடன் இணைந்து மேற்கொண்டது.
சுற்றுலா பயணிகளுக்கான இந்த சேவையை குறிப்பாக மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தொடங்குவது குறித்த வாய்ப்புகள் இதில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முதல் கட்ட அறிக்கை மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்துக்கு விரைவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #KJAlphons #HelicopterTourism #Tamilnadu #tamilnews
இந்தியாவில் உள்ள பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பராமரிக்கும் பணியை மத்திய அரசு தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, சுமார் 95 நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலும் ஒன்றாகும்.

மேலும், டெல்லியில் உள்ள செங்கோட்டை பகுதியை தனியார் சிமெண்ட் நிறுவனம் பராமரித்து வருவதை மேற்கோள் காட்டிய மத்திய மந்திரி கே.ஜே.அல்போன்ஸ், இத்தாலி நாட்டில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான கொலோசியத்தை செருப்பு தயாரிக்கும் நிறுவனம் பராமரித்து வரும் நிலையில், தாஜ்மகாலை தனியாரிடம் ஒப்படைப்பதில் என்ன தவறு என கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய சுற்றுலாத்துறை மந்திரியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய திருநாட்டின் அடையாளமாக விளங்கும் நினைவுச் சின்னங்களை வணிக நோக்கத்துடன் தனியாரிடம் ஒப்படைக்கும் இந்த திட்டத்துக்கு கண்டனங்களும் வலுக்கத் துவங்கியுள்ளது.
சமீபத்தில் தாஜ்மகாலை பராமரிப்பதில் உத்தரப்பிரதேச அரசு முறையாக செயல்படவில்லை எனவும், தாஜ்மகாலை பராமரிப்பதற்கான எந்தவித திட்டமும் மாநில அரசிடம் இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #TajMahal #KJAlphons






