என் மலர்

    நீங்கள் தேடியது "Tamil Nadu"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேர்தல் முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது
    • டி.ஆர். பாலு மற்றும் துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்

    2024ல் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் படியூரில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் (poll booth agents) கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் தி.மு.க.வின் மாநாட்டை போல சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், அவருடன் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோரும் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும் போது மேடையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முக்கிய மாலை நாளிதழான 'மாலைமலர்' பிரதியை ஆர்வத்துடன் படித்து கொண்டிருந்தார்.

    மாலைச்செய்திகளை எளிமையாகவும், நடுநிலையுடனும் முந்தி தருவதில் தமிழ்நாட்டின் முதன்மையான நாளேடான, தினத்தந்தி குழுமத்தின் 'மாலைமலர்', முதல்வர் கையில் இடம்பெற்றிருந்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என கரூரில் நல்லசாமி கூறியுள்ளார்
    • தடையை நீக்கி அறிவிக்க தவறினால் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை

    கரூர்,

    கரூரில் நேற்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகம் காரணமாக கீழ் பவானி பாசனம் நடப்பு ஆண்டில் பாதிப்புக்கு ஆளாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் தற்போது வெகுவாக குறைந்ததற்கு மழை பொழிவு குறைந்ததுதான் காரணம். இதற்கு நீர்வளத்துறை அமைச்சரும் பொறுப்பு ஏற்க வேண்டும்.தேர்தலுக்கு முன்பு தேவையற்ற இலவசங்களை அறிவித்து அவற்றை நடைமுறை படுத்தி வந்தால் இலங்கைக்கு வந்த நெருக்கடியை விட மோசமான நிலை தான் வரும். 28 மாத கால ஆட்சியில் 8 முறை ஆவின் பால், பால் பொருட்களின் விலையை அரசு உயர்த்தி உள்ளது. இதற்கு நிர்வாகமின்மையே காரணம்.

    தமிழகத்தில் கள், காவிரிநீர், நீட்ேதர்வு, சனாதனம் பற்றிய புரிதல் இல்லை. புதுச்சேரி, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லை. தமிழக அரசு கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்கி அறிவிக்க வேண்டும். அதை செய்ய தவறினால் வருகிற 2024 ஜனவரி 21-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்.2024 நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பு தமிழக அரசு கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்கி அறிவிக்க வேண்டும். தவறினால் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 15,000 மாணவர்களுக்கு டிஜிட்டல் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.
    • தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் தொழில் தொடங்க ஊக்கப்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் மாளிகையில் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்துதல் மற்றும் மாதிரி கிராமம் ஏற்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். தலைமை செயலர் ராஜீவ் வர்மா, வளர்ச்சி ஆணையர் ஜவகர், தொழில்நுட்பத்துறை செயலர் மணிகண்டன், ஊரக வளர்ச்சித்துறை செயலர் நெடுஞ்செழியன், மாவட்ட கலெக்டர் வல்லவன், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்திரி மற்றும் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    புதுச்சேரியில் தொழில் நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும். ஸ்கில்டா மூலமாக 4,000 தொழிற்கல்வி மாணவர்கள் மற்றும் பிற கல்லூரிகளை சேர்ந்த 15,000 மாணவர்களுக்கு டிஜிட்டல் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.

    இளநிலை கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு தொடர்பான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த பல்கலைக்கழகம் மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது.

    இது மாணவர்களின் வேலை வாய்ப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பதால் புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதலில் அதற்கான திட்டம் வகுக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

    உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் விதமாக புதுச்சேரியில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் தொழில் தொடங்க ஊக்கப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிளெஸ்டர் அளவிலான போட்டிகளில் ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
    • அலங்காநல்லூரில் நடைபெற்ற வாலிபால் போட்டியை தமிழக பத்திரப் பதிவு துறை அமைச்சர் திரு. மூர்த்தி தொடங்கி வைத்தார்.

    ஈஷா அவுட்ரீச் சார்பில் தென்னிந்திய அளவில் நடத்தப்படும் 15-வது 'ஈஷா கிராமோத்வசம்' திருவிழாவின் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆக.12) கோலாகலமாக தொடங்கியது.

    70-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற கிளெஸ்டர் அளவிலான இப்போட்டிகளில் ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டு வீரர், வீராங்கணைகளாக கலந்து கொண்டனர். மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற வாலிபால் போட்டியை தமிழக பத்திரப் பதிவு துறை அமைச்சர் திரு. மூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைத்தார்.

    இதேபோல், புதுச்சேரி கூடப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியை புதுச்சேரி பொது விநியோகம் மற்றும் சமூக மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. சாய் சரவணக்குமார் அவர்களும், ஈரோட்டில் நடைபெற்ற த்ரோபால் போட்டியை பாஜக சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சரஸ்வதி அவர்களும் தொடங்கி வைத்தனர்.

     

    இதுதவிர, கோவை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், கடலூர், வேலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த நிர்வாகிகள், கவுன்சிலர்கள், காவல் துறையினர் என பல தரப்பினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

    இந்த கிளெஸ்டர் போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெறும். முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும், தேர்வாகும் அணிகள் அடுத்த மாதம் நடைபெறும் டிவிஸினல் போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு செப்.23-ம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்தது.
    • தண்ணீர் திறப்பது தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கைய கர்நாடக அரசு ஏற்கவில்லை.

    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்றும் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    ஆனால் இந்த கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது. தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
    • தண்ணீர் திறப்பது தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கைய கர்நாடக அரசு ஏற்கவில்லை.

    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் 22-வது கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்றும் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    ஆனால் இந்த கோரிக்கைய கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இத்தகவலை தமிழக நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா கூறி உள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த ஆண்டில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில ஆர்ஜீத வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
    • நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில ஆர்ஜீத வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 204 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

    நெல்லை:

    இந்த ஆண்டில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில ஆர்ஜீத வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

    204 வழக்குகளில் விசாரணை

    நெல்லை மாவட்டத்தில் நெல்லை உட்பட 4 தாலுகாக்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களால் மொத்தம் 5 அமர்வுகளுடன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய சீனிவாசன் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலர் மற்றும் மாவட்ட நீதிபதியுமாகிய நசீர் அகமது முன்னிலையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில ஆர்ஜீத வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 204 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

    நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீர்செல்வம், 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி திருமகள், குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி குமரேசன், மகளிர் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மனோஜ்குமார், முதன்மை சார்பு நீதிபதி அமிர்தவேலு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன்ராம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வின் செயலாளரும், சார்பு நீதிபதியுமாகிய இசக்கியப்பன், முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சந்தானம், 2-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி வள்ளியம்மாள், நீதித்துறை நடுவர்கள் திருவெனி, ஆறுமுகம், விஜய்ராஜ்குமார், பாக்கியராஜ், கவிபிரியா, அருண்குமார் மற்றும் முரளிநாதன், நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் காமராஜ், வக்கீல்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் முகம்மது இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற நில ஆர்ஜிதம் உள்ளிட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் 204 வழக்குகள் தீர்வு காணும் வகையில் எடுத்துக்கொள்ளப்பட்டு சமரசம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் அக்டோபர் 2019-ம் ஆண்டு பழனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட சாலை விபத்தில் வன காவலர் ஜெயலட்சுமி உயிரிழந்த வழக்கு தொடர்பாக காப்பீட்டு நிறுவனத்திற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே நடைபெற்ற சமரச தீர்வில் ரூ.37 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புகை அளிக்கப்பட்டு அதற்கான காசோலை சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நசீர் அகமது தலைமையில் வழங்கப்பட்டது. இதே போல் மற்றொரு விபத்தில் படுகாயம் அடைந்த நபருக்கு ரூ.5 லட்சம் ரொக்க பணமும் இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டது.

    மொத்தமாக இன்றைய தினம் 2 விபத்துகளில் தொடர்புடைய வழக்குகளுக்கு சமரசம் செய்யப்பட்டு ரூ.42 லட்சம் இழப்பீடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உறுப்பினர் செயலர் நசீர் அகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் நில ஆர்ஜித வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கான சமரச தீர்வு மையம் மூலம் 150 சிறப்பு நீதிமன்றம் இன்றைய தினம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 11,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் தமிழகம் முழுவதும் எடுத்துக் கொள்ளப்பட்டு சமரசம் காணும் முயற்சி நடைபெறுகிறது.

    சாலை விபத்து, நில ஆர்ஜிதம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 204 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு சாலை விபத்து தொடர்பான இரு வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.42 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த ஆண்டில் இதுவரை சிறப்பு நீதிமன்றம் மூலம் 4.5 லட்சம் வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.100 கோடிக்கு மேல் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகம் விளையாட்டுத்துறையில் வியத்தகு சாதனைகளை புரிகிறது என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கையில் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி (காரைக்குடி), தமிழரசி(மானாமதுரை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் பெரிய கருப்பன் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற 1638 விளை யாட்டு வீரர்-வீராங்கனை களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ், ஊக்கத்தொகை களை வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

    முதல்-அமைச்சர் எல்லோருக்கும் எல்லாமும் என்ற அடிப்படையில், அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடையும் வகையில், தமிழகத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதில் குறிப்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணையர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலும், முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி, விளையாட்டுத்துறையில் வியத்தகு சாதனைகளை மேற்கொண்டு, 60 ஆண்டுகளாக செய்ய வேண்டிய வேலையை ஆறே மாதங்களில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இத்துறையை மேம்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், கல்லல் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சொர்ணம் அசோகன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரமேஷ்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநில அரசு, மாவட்டம் வாரியாக ஏற்றுமதி வர்த்தக விவரங்களை பராமரிக்கிறது.
    • தமிழகத்தின் ஏற்றுமதி வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 711 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

    திருப்பூர் :

    மத்திய அரசின் தகவல் அடிப்படையில் மாநில அரசு, மாவட்டம் வாரியாக ஏற்றுமதி வர்த்தக விவர ங்களை பராமரிக்கிறது. இந்தநிலையில் கடந்த நிதியாண்டு க்கான(2022-23) ஏற்றுமதி வர்த்தக விவரம் வெளியிட ப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2021-22ம் ஆண்டில் 2லட்சத்து 62 ஆயிரத்து 323 கோடி ரூபாயாக இருந்த தமிழக த்தின் ஏற்றுமதி வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 711 கோடி ரூபாயாக உயர்ந்து ள்ளது. மாநில அளவில் காஞ்சிபுரம் முதலிடத்திலும், சென்னை இரண்டா மிடத்திலும் இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் 3-ம் இடத்தில் உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2021-22ம் ஆண்டில் ரூ.35 ஆயிரத்து 834 கோடி அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. கடந்த நிதியாண்டில்(2022-23) ரூ.36 ஆயிரத்து 419 கோடி யாக உயர்ந்துள்ளது. இருப்பி னும் முந்தைய ஆண்டில் 13.70 சதவீதமாக இருந்த திருப்பூரின் மாநில அள விலான பங்களிப்பு 11.10 சதவீதமாக குறைந்துள்ளது.

    பருத்தி நூலிழை 'டி- சர்ட்' வகைகள் - ரூ.8,396 கோடி , குழந்தைகளுக்கான பருத்தி நூலிழை பின்னலாடைகள் - ரூ.3,790 கோடி , பாலியஸ்டர் உள்ளி ட்ட செயற்கை நூலிழை 'டி-சர்ட்'கள்-ரூ. 2,493 கோடி , இரவு அணியும் பருத்திபின்னலாடைகள் மற்றும் பைஜாமா ஆடைகள் - ரூ. 1,933 கோடி , இரவு அணியும் சட்டைகள் மற்றும் பைஜாமா- ரூ.1,288 கோடி , டி-சர்ட் அல்லாத பனியன் துணியில் தயாரித்த சட்டை வகைகள் ரூ.1,075 கோடி , உல்லன் மற்றும் உரோமத்தை பயன்படுத்தி தயாரிக்க ப்பட்ட மதிப்பு கூட்டிய குழந்தைகள் பின்ன லாடைகள் -ரூ. 806 கோடி ,பருத்தி நூலிழையில் தயாரித்த 'டிரவுசர்'கள், 'ஷார்ட்ஸ்' கள்-ரூ. 805 கோடி , பருத்தி நூலிழை யிலான இதர பின்ன லாடைகள் - ரூ.705 கோடி , செயற்கை நூலிழை உள்ளாடைகள் ரூ.688 கோடிக்கு ஏற்றுமதி செய் யப்பட்டுள்ளன.

    மேலும் 14 ஆயிரத்து 541 கோடி ரூபாய்க்கு இதர பின்ன லாடை ரகங்கள், ஆயத்த ஆடைகள் மற்றும் 'ஆக்டி வேட்டட் கார்பன்' வகைகள், வேளாண் பொருட்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை.
    • கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது மேகதாது அணை திட்டம்.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்து இருக்கிறார். மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று உள்ளார். அதன்படி பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை நடத்தினார். அதில் துறைரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிகே சிவக்குமார், "காங்கிரஸ் கட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும். கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கிய திட்டம், மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்திப்பேன்."

    "விரைவில் அனுமதி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வேன். மேகதாது அணை கட்டுவது எங்கள் உரிமை. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை, " என்று தெரிவித்தார்.