search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government transport corporation"

    • மகளிர், பள்ளி மாணவர்கள் இலவச பயணத்திற்கு அரசு கணக்கிட்டு டிக்கெட் கட்டணத்தை போக்குவரத்து கழகங்களுக்கு கொடுத்து வருகிறது.
    • மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பிரிவினருக்கு பஸ்களில் இலவசமாக செல்ல அரசு சலுகை வழங்கியுள்ளது.

    சென்னை :

    தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. நகர் பகுதி முதல் கிராமங்கள் வரை மட்டுமின்றி மலைப்பகுதியிலும் அரசு பஸ்கள் செல்வதால் ஏழை, எளிய மக்கள் அதிகளவில் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமாக 19 ஆயிரம் பஸ்கள் உள்ளன. சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் தொழிலாளர்கள் இதில் பணியாற்றி வருகிறார்கள்.

    அரசின் நிறுவனங்களில் மிகப்பெரிய நிறுவனமாக இருந்து வந்த அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஆண்டுக்கு ஆண்டு தேய்ந்து தற்போது மிகவும் மோசமான சூழலில் தள்ளாடி கொண்டிருக்கிறது.

    அரசு பஸ்களில் தினமும் ஒரு கோடியே 30 லட்சம் மக்கள் பயணம் செய்கிறார்கள். 35 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் கட்டணமின்றி பயணிக்கிறார்கள்.

    பெண்களுக்கு நகர பஸ்களில் இலவச பயணம் செய்ய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுமார் 55 லட்சம் பெண்கள் சராசரியாக தினமும் பயணிக்கிறார்கள். இதுதவிர 40 லட்சம் பொது க்கள் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    மகளிர், பள்ளி மாணவர்கள் இலவச பயணத்திற்கு அரசு கணக்கிட்டு டிக்கெட் கட்டணத்தை போக்குவரத்து கழகங்களுக்கு கொடுத்து வருகிறது.

    மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பிரிவினருக்கு பஸ்களில் இலவசமாக செல்ல அரசு சலுகை வழங்கியுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 5 வருடத்திற்கு முன்பு அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனால் போக்குவரத்து கழகங்களின் வருவாய் இழப்பு சற்று குறைந்தது. ஆனாலும் தொடர்ந்து அதிகரித்து வந்த டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம், மூலப்பொருட்கள் விலை உயர்வால் மீண்டும் பழையபடி கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

    அரசு பஸ்களில் தினமும் பொதுமக்கள் பயணம் செய்வதன் மூலம் ரூ.25 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் பஸ்களை இயக்குவதற்கான டீசல் செலவு, சம்பளம், படி உள்ளிட்ட அனைத்தையும் கணக்கிட்டால் தினமும் ரூ.15 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது. பொதுமக்கள் நலன் சார்ந்த சேவையாக போக்குவரத்து இருப்பதால் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. டீசல் கொள்முதல், சுங்கச்சாவடி கட்டணம், ஓய்வூதியதாரர்களுக்கு செலுத்த வேண்டிய தொகை, ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு, அகவிலைப்படி என பல்வேறு செலவினங்கள் அதிகரித்து செல்வதால் வருவாய் இழப்பு அதிகரித்து வருகிறது என்று துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் 7, 8 ஆண்டுகள் பயன்படுத்திய பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. புதிய பஸ்கள் வாங்க அரசுதான் நிதியுதவி அளித்து வருகிறது.

    மோசமான நிலையில் உள்ள பஸ்களை மாற்றி புதிய பஸ்கள் வாங்குவதற்கு போக்குவரத்து கழகங்களிடம் எவ்வித நிதி ஆதாரங்களும் இல்லை.

    சுங்கச்சாவடி கட்டணமாக மட்டும் மாதத்திற்கு அரசு போக்குவரத்து கழகங்கள் ரூ.30 கோடி செலுத்துவதாக கூறப்படுகிறது. வருவாயில் ஒரு பகுதி சுங்கச்சாவடிக்கு போய் விடுவதாக குற்றம் சாட்டுகின்றனர். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 13 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஒரு சுங்கச்சாவடிக்கு ரூ.450 வசூலிக்கப்படுகிறது. ஒரு பஸ்சிற்கு சுங்க கட்டணமாக ரூ.5000 வரை செலுத்த வேண்டியுள்ளது.

    அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சுங்க கட்டண விலக்கு அளித்தால் ஓரளவிற்கு நஷ்டத்தை குறைக்கலாம். தனியார் பஸ்களை போல அரசு பஸ்களை இயக்க முடியாது.

    லாப நஷ்டத்தை பார்க்காமல் மக்கள் சேவையாக கருதியே ஒவ்வொரு வழித்தடங்களிலும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்குவதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு லாபம் கிடைப்பது இல்லை. நஷ்டம் தான் ஏற்படுகிறது. மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கூடுதல் பஸ்கள் பல்வேறு நகரங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் டீசல் செலவு அதிகரிக்கிறது.

    அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு வழங்கி ஈடு செய்தால் மட்டுமே புதுப்பொலிவு பெறும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிதி நெருக்கடி, செலவினம் அதிகரிப்பால் போக்குவரத்துக் கழகங்கள் தடுமாறுகின்றன. இதுபற்றி போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது,

    மக்கள் நலனுக்காக அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதனால் நஷ்டம் ஏற்படுவது தவிர்க்க முடியாது. ஆனால் தொடர்ந்து நஷ்டம் அதிகரித்து வருவதால் பல்வேறு சிரமங்களை நாங்கள் சந்திக்கிறோம்.

    ஓய்வூதிய பலன்கள், ஊதிய உயர்வு ஒரு பக்கம் செலவினத்தை அதிகரித்து வரும் நிலையில் டீசல் விலை கடும் இழப்பை ஏற்படுத்துகிறது.

    பஸ் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வழியில்லை. ஆனால் அது அரசின் கொள்கை முடிவு. போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி சுமையில் இருந்து அரசுதான் உதவ வேண்டும்.

    புதிய பஸ்கள் வந்தால் தான் மக்கள் அதிகளவில் பயணிப்பார்கள். அதிகரித்து வரும் வருவாய் இழப்பை குறைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தான் போக்குவரத்துக் கழகங்கள் புத்துணர்ச்சி பெறும் என்றனர்.

    • டிரைவர், கண்டக்டர்களுக்கு 2 மாத சம்பள வழங்கவில்லை என குற்றச்சாட்டு
    • புதிய பஸ்கள் வாங்கப் பட்டாலும் அதனை சரிவர பராமரிக்கப்படா ததால் அடிக்கடி பழுதாகி விடுகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்து வதற்காக 1986-ம் ஆண்டு புதுவை சாலை போக்குவரத்து கழகம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன.

    குறிப்பாக புதுவையில் கிராம பகுதிக ளுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் கிராமபுற மக்கள் பெரிதும் பயன் அடைந்து வந்தனர். நாளடைவில் கிராம புற பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் குறைக்கப்பட்டன. அவ்வப்போது போக்கு வரத்து கழகத்துக்கு புதிய பஸ்கள் வாங்கப் பட்டாலும் அதனை சரிவர பராமரிக்கப்படா ததால் அடிக்கடி பழுதாகி விடுகிறது.

    போக்குவரத்து கழகத்துக்கு 139 பஸ்கள் இருந்தன. ஆனால் தற்போது 40 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்கு வரத்து கழகத்துக்கு புதிதாக வாங்கப்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டதில் நடுரோட்டிலேயே பழுதாகி நின்று போனது. இதனால் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பெரும்பாலான பயணிகள் அரசு பஸ்சை நம்பி உள்ளனர். ஆனால் அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் பஸ்கள் படிப்படியாக குறைக்கப்படுவதால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர்.

    இதற்கிடையே புதுவை சாலை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் பஸ்கள் சேவை குறைக்கப்பட்டுள்ளதால் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    மேலும் இந்த மாதம் டிரைவர், கண்டக்டர்கள் 12 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    ஏற்கனவே இதுபோல் 14 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது. இந்த சஸ்பெண்டு நடவடிக்கையால் 10 பஸ்கள் நிறுத்தப்பட்டு ள்ளதாகவும் இதனால் ஒருநாளைக்கு 1.50 லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது.

    அதோடு சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 2 வருடமாக போனசும் குறைந்த அளவே வழங்கப்பட்டுள்ளது.

    சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சம்பள பாக்கி மற்றும் போனஸ் தொகையை வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பஸ்களை நன்றாக பராமரித்து சரியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள வலியுறுத்தி யுள்ளனர்.

    • கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது.
    • முகாமில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்,

    கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமினை கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்.

    முகாமில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணிபாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் 225 நபர்கள் பங்கேற்றனர். தஞ்சாவூர் மீனாட்சி மருத்து வமனை மருத்துவர்கள், செவிலி யர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று ரத்தஅழுத்தம், சர்க்கரை அளவு, இ.சி.ஜி போன்ற பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.

    மேல்சிகிச்சை தேவைபடு பவர்களை கண்டறிந்து பரிந்துரை செய்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.

    இம்முகாமில் பொது மேலாளர்கள் இளங்கோவன், முகமதுநாசர், முதுநிலை துணை மேலாளர் கோவிந்த ராஜன், துணை மேலாளர்கள் சிங்காரவேலு, ராஜேஷ், பணி மேலாளர் ஸ்ரீதர், உதவி மேலாளர் ராஜசேகர், மருத்துவர்கள் குருநாதன், சினேகா, செல்வராஜ் மற்றும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பின்னோக்கி பஸ்களை இயக்கும் போது சிக்னல் தர கட்டாயம் ஒருவரை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
    • பணிமனைக்குள் பஸ்கள் 5 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்.

    திருப்பூர்:

    அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் சில விதிமீறல்கள் நடப்பதாக தொடர் புகார்கள் வந்ததை தொடர்ந்து டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்த சில வழிகாட்டுதல்களை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    அதன்படி தொழில்நுட்ப பணிகளுக்காக பணிமனைக்குள் பஸ் இயக்கப்படும் போது லைெசன்ஸ் பெற்ற ஒரு பணியாளர் மட்டுமே பஸ்களை நகர்த்த வேண்டும். வேறு ஒருவர் இயக்க கூடாது. பின்னோக்கி பஸ்களை இயக்கும் போது சிக்னல் தர கட்டாயம் ஒருவரை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஓய்வறைகளில் புகை பிடிப்பது, மது அருந்துவது கூடாது. மீறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். மதுஅருந்திய நிலையில் பணிக்கு வருபவர் குறித்து பாதுகாவலர் கண்காணிக்க வேண்டும். பஸ்சில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள், வெடி பொருட்களை ஏற்ற எந்த நேரத்திலும் அனுமதிக்க கூடாது. பணிமனைக்குள் பஸ்கள் 5 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தரப்பில் இருந்து திருப்பூர் உள்பட அனைத்து கிளை மண்டல மேலாளர்களுக்கு விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    சாத்தான்குளம் வட்டார காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையை முழுமையாக செயல்படுத்த கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டார காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சாத்தான்குளத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. வட்டார தலைவர் ஜனார்த்தனம், மாவட்ட துணைத் தலைவர் சங்கர், மாவட்ட துணை செயலாளர் ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    கூட்டத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், சாத்தான்குளம் வட்டாரத்தில் அதிக அளவில் கட்சியினர் பூத் கமிட்டி அமைத்து பொதுமக்களின் பிரச்சனைக்காக உழைக்க வேண்டும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக அளவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் தேவ திரவியம், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி அன்புராணி, வட்டாரத் தலைவர்கள் உடன்குடி ஜோசப் துரைராஜ், ஸ்ரீவை. சற்குணம், ஸ்ரீவை. வட்டாரத் தலைவர் நல்லகண்ணு, தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன் உட்பட பலர் பேசினார்கள்.

    முன்னதாக அனைவரையும் சாத்தை நகரத் தலைவர் வக்கீல் வேணுகோபால் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முழுமையாக செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த பணிமனையிலிருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் நிர்வாகிகள் கண்மணி ஜெயபிரகாஷ், மரியராஜ், ராபின்சன், ஆனந்தபுரம் நல்லதம்பி உட்பட கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் சாத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவர் அலெக்ஸ் ஜோசப் நன்றி கூறினார்.
    ×