என் மலர்
நீங்கள் தேடியது "Geographical indication"
- புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும்.
- தமிழ்நாட்டில் பாரம்பரியமும், தரமான பொருட்களின் தயாரிப்பு என்பது அதிகளவில் உள்ளது.
சர்வதேச அளவில் உண்மையான பொருட்களை அங்கீகரித்து சந்தைப்படுத்த புவிசார் குறியீடு முறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் 1999-ம் ஆண்டு இதற்கான சட்டம் இயற்றப்பட்டது. 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவில் பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு புவிசார் குறியீடு (GI) வழங்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது வரை, 658 பொருட்கள், இலட்சினைக்களுக்கு GI வழங்கப்பட்டுள்ளது.
புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளின் பூர்வீகத்தையும், அதன் சிறப்புத் தன்மையையும் உலகறியச் செய்து, அதைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான அங்கீகாரமாகும்.
புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும். புவிசார் குறியீடானது வேளாண் பொருள்கள், உணவுப் பொருள்கள், கைவினை பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்றால், அப்பொருள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தோன்றிருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்றும் இருக்க வேண்டும். அப்பொருள்களுக்கும் அப்பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள தொடர்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் . புவிசார் குறியீடு பெரும் பொருட்களுக்கான உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள், அத்தொழிலை பாரம்பரியமாக செய்து வருபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கான பொருளாதார தேவையும் இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

பண்ருட்டி பலாப்பழம் - கும்பகோண வெற்றிலை
தமிழ்நாட்டில் பாரம்பரியமும், தரமான பொருட்களின் தயாரிப்பு என்பது அதிகளவில் உள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் ஒரு சிறப்பான உற்பத்தி, கைவினை அல்லது விவசாயப் பொருட்கள் இருக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகும் மொத்தம் 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு இருந்தது. சமீபத்தில், தமிழ்நாட்டின் மொத்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 74-ஐ எட்டியுள்ளது.
இந்த ஆண்டில் புவிசார் குறியீடு பெற்ற சில முக்கிய பொருட்கள்: பண்ருட்டி பலாப்பழம், கும்பகோண வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, செட்டிகுளம் சின்ன வெங்காயம், ராமநாதபுரம் சித்திரைகார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வற்றல் மிளகாய், உறையூர் பருத்தி சேலைகள், தூயமல்லி அரிசி போன்ற பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டுள்ளது.
புவிசார் குறியீடு - மாவட்டம்
ஈத்தாமொழி நெட்டைத் தேங்காய் - கன்னியாகுமாரி
நீலகிரி டீ - நீலகிரி
விருப்பாச்சி வாழை - திண்டுக்கல்
சிறுமலை மலை வாழைப்பழம் - திண்டுக்கல்
ஈரோடு மஞ்சள் -ஈரோடு
மதுரை மல்லி - மதுரை
கொடைக்கானல் மலை பூண்டு - திண்டுக்கல்
கன்னியாகுமரி கிராம்பு - கன்னியாகுமரி
ராமநாதபுரம் குண்டு மிளகாய் - ராமநாதபுரம்
வேலூர் முள் கத்திரிக்காய் - வேலூர்
ஆத்தூர் வெற்றிலை - தூத்துக்குடி
கம்பம் பன்னீர் திராட்சை - தேனி
சோழவந்தான் வெற்றிலை - மதுரை
மட்டி வாழைப்பழம் - கன்னியாகுமரி
மதுரை மரிக்கொழுந்து - மதுரை
கும்பகோணம் வெற்றிலை - தஞ்சாவூர்
பண்ருட்டி பலாப்பழம் - பண்ருட்டி
பண்ரூட்டி முந்திரி - பண்ருட்டி
புளியங்குடி எலுமிச்சை - தென்காசி
சம்பா மிளங்காய் வந்தல் - விருதுநகர்
சிட்டிகுளம் சின்ன வெங்காயம் - பெரம்பலூர்
சித்திரை கார் அரிசி - ராமநாதபுரம்
ஸ்ரீவில்லுபுத்தூர் பால்கோவா - விருதுநகர்
கோவில்பட்டி கடலை மிட்டாய் - தூத்துக்குடி
பழனி பஞ்சாமிர்தம் - திண்டுக்கல்
மணப்பாறை முறுக்கு - திருச்சி
ஊட்டி வர்க்கி - நீலகிரி
உடன்குடி பனங்கருப்பட்டி - தூத்துக்குடி
சேலம் ஜவ்வரிசி - சேலம்
மார்த்தாண்டம் தேன் - கன்னியாகுமரி
சேலம் சுங்குடி - சேலம்
காஞ்சிபுரம் பட்டு - காஞ்சிபுரம்
பவானி ஜமக்காளம் - ஈரோடு
மதுரை சுங்குடி - மதுரை
தஞ்சாவூர் ஓவியம் - தஞ்சாவூர்
தஞ்சாவூர் கலைத்தட்டு - தஞ்சாவூர்
சுவாமிமலை வெண்கலக் சின்னங்கள் - தஞ்சாவூர்
நாகர்கோவில் கோவில் நகைகள் - கன்னியாகுமரி
ஆரணி பட்டு - திருவண்ணாமலை
கோவை கோரா பருத்தி - கோயம்புத்தூர்
சேலம் பட்டு - சேலம்
தஞ்சை தலையாட்டி பொம்மை - தஞ்சாவூர்
தோடா பூந்தையல் - நீலகிரி
பத்தமடைப் பாய் - திருநெல்வேலி
நாச்சியார்கோவில் குத்துவிளக்கு - தஞ்சாவூர்
செட்டிநாடு கொட்டான் - சிவகங்கை
தஞ்சாவூர் வீணை - தஞ்சாவூர்
கண்டாங்கி சேலை - சிவகங்கை
தஞ்சாவூர் நெட்டி சேலை - தஞ்சாவூர்
மாமல்லபுரம் கல் சிற்பங்கள் - செங்கல்பட்டு
அரும்பாவூர் மரச்சிற்பம் - பெரம்பலூர்
திருபுவனம் பட்டுப் புடவை - தஞ்சாவூர்
தஞ்சாவூர் கலைத்தட்டு லோகோ - தஞ்சாவூர்
சுவாமிமலை வெண்கலச் சின்னம் லோகோ - தஞ்சாவூர்
நாகர்கோவில் கோவில் நகை லோகோ - கன்னியாகுமரி
கருப்பூர் கலம்காரி ஓவியங்கள் - அரியலூர்
கள்ளக்குறிச்சி மரச் சிற்பம் - கள்ளக்குறிச்சி
நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் - தஞ்சாவூர்
திண்டுக்கல் பூட்டு - திண்டுக்கல்
மைலாடி கல் சிற்பம் - கன்னியாகுமரி
மானாமதுரை மண்பாண்டம் - சிவகங்கை
தைக்கால் பிரம்பு கைவினைப் பொருட்கள் - மயிலாடுதுறை
ஜடேரி நாமக்கட்டி - திருவண்ணாமலை
நெகமம் காட்டன் சேலை - கோயம்புத்தூர்
செடிபுட்டா சேலை - திருநெல்வேலி
விளாச்சேரி களிமண் பொம்மை - மதுரை
தோவாளை மாணிக்க மாலை - கன்னியாகுமரி
கோயம்புத்தூர் வெட் கிரைண்டர் - கோயம்புத்தூர்
கிழக்கிந்திய தோல் பொருட்கள் - திருச்சி
உறையூர் பருத்தி சேலை - திருச்சி
கவிந்தபாடி நாட்டு சர்க்கரை - ஈரோடு
நாமக்கல் மாக்கல் பாத்திரங்கள் - நாமக்கல்
பாரம்பரிய தூயமல்லி அரிசி - தஞ்சாவூர்
அம்பாசமுத்திரம் சொப்பு சாமான் - திருநெல்வேலி
- தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற நடவடிக்கையின் பலனாக புவிசார் குறியீடு பதிவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருகிறது.
- இந்தியாவிலேயே புவிசார் குறியீடு பெற்ற முதல் இசைக் கருவியாக தஞ்சாவூர் வீணை உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையின்கீழ் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இயங்கி வருகிறது. இந்த மன்றத்தின் ஒரு அங்கமான காப்புரிமை தகவல் மையம், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து காப்புரிமைகள், பதிப்புரிமைகள் வர்த்தக குறியீடுகள், தொழில்துறை வடிவமைப்புகள், புவிசார் குறியீடுகள் போன்ற அறிவுசார் சொத்துரிமைக்கு மாநில அளவிலான உதவிகளை வழங்குகிறது.
அந்த வகையில் ஒரு பொருளின் தரம், தனித்துவம் மற்றும் நன்மதிப்பை உறுதிப்படுத்தும் வகையில் வழங்கப்படக்கூடிய புவிசார் குறியீடு பெற தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த புவிசார் குறியீடு விவசாயம், இயற்கை, கைவினை, உணவு பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், தயாரிப்புகளுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்குவதற்கும், அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதை தடுக்கவும் புவிசார் குறியீடு முக்கியமாக கருதப்படுகிறது.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற நடவடிக்கையின் பலனாக புவிசார் குறியீடு பதிவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருகிறது. இதுவரை 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பித்திருக்கிறது.
இதில் தஞ்சாவூர் வீணை, திண்டுக்கல் பூட்டு, கொடைக்கானல் மலை பூண்டு, உடன்குடி பனங்கருப்பட்டி ஆகிய 4 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அதிலும் இந்தியாவிலேயே புவிசார் குறியீடு பெற்ற முதல் இசைக் கருவியாக தஞ்சாவூர் வீணை உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமல்லாமல், கடந்த 7 மாதங்களில் அதாவது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை 10 பொருட்களை அடையாளம் கண்டு அதற்கு புவிசார் குறியீடு கேட்டு, புவிசார் குறியீடு பதிவு அலுவலகத்தில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் காப்புரிமை தகவல் மையம் விண்ணப்பம் செய்ய உதவியுள்ளது.
இந்த பட்டியலில், ஜவ்வாது புளி, வந்தவாசி கோரைப்பாய், கொல்லிமலை காபி, கொல்லிமலை பலாப்பழம், பொள்ளாச்சி தென்னை நார், முகவை குழியடிச்சான் சிவப்பு அரிசி, மதுரை அப்பளம், கீழக்கரை தொதல் அல்வா, மதுரை ஜிகர்தண்டா, கன்னியாகுமரி நன்னாரி ஆகியவை அடங்கும் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் ச.வின்சென்ட் தெரிவித்தார்.
- புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்று வருகிறது.
சென்னை:
சட்டசபையில் சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. அசோகன், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற் குறிப்பு அரசிடம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பதில் அளித்து கூறியதாவது:-
சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற்குறிப்பு தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை. புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும்.
புவிசார் குறியீடானது வேளாண் பொருள்கள், உணவுப் பொருள்கள், கைவினை பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய அளவில் 64 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு 2-ம் இடத்தில் உள்ளது. கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, பண்ருட்டி பலாப் பழம்-முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி, பெரம்பலூர் செட்டிக்குளம் சின்ன வெங்காயம் ஆகியவற்றுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாகவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆத்தூர் வெற்றிலை, கோவில்பட்டி கடலை மிட்டாய், உடன்குடி பனங் கருப்பட்டி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா ஆகியவற்றிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், செட்டிநாடு கைமுறுக்கு-சீடை, கோவில்பட்டி சீவல், ராமநாதபுரம் பட்டறை கருவாடு-பனங் கற்கண்டு ஆகியவற்றிற்க்கு எம்.எஸ்.எம்.இ. துறையின் மூலம் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு பொருளுக்கு புவி சார் குறியீடு பெற வேண்டும் என்றால், அப்பொருள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தோன்றிருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்றும் இருக்க வேண்டும். அப்பொருள்களுக்கும் அப்பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள தொடர்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் .
தீப்பெட்டி தொழிலை பொருத்தமட்டில் சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் 566 நிறுவனங்களும் கோவில்பட்டியில், சுமார் 400 நிறுவனங்களும், தீப்பெட்டி உற்பத்தி செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆண்டிற்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்று வருகிறது.
தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூலம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த சுமார் 28 ஆயிரத்து 300 தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இங்கு தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் இந்தியா முழுவதும் விற்பனை செய்வதோடு உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த தீப்பெட்டி களின் தனித்துவத்தை உலகம் முழுவதும் அறிய செய்யவும், விற்பனையை அதிகரிக்கவும் எம்.எஸ். எம்.இ. துறையின் சார்பில் ஆல் இந்தியா சேம்பர் ஆப்-மேட்ச் பேக்டரி சிவகாசி, தமிழ்நாடு சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சிவகாசி ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற ஆலோசனைகள் வழங்கப்பட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதற்கான செலவினத்தில் 50 சதவிகிதத் தொகையை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் மானியமாக வழங்கப்படும் என அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் சங்க உறுப்பினர்கள் தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு பெற அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும், சிவகாசி, சாத்தூர், கோவில்பெட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யபடும் தீப்பெட்டி தோன்றியதற்கான வரலாற்று ஆவணங்கள் ஏதும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. ஆவணங்கள் கிடைக்கப் பெறும் பட்சத்தில் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. எழுந்து இதற்கான ஆவணங்கள் இருப்பதாக கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், வரலாற்று ஆவணத்தை அளித்தால் ஆய்வு செய்து, சிவகாசி தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.
- கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது.
- புவிசார் குறியீடு அங்கீகாரத்தில் இந்திய அளவில் 69 பொருட்களுடன் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது.
ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு, மதுரை மரிக்கொழுந்து விளாச்சேரி களிமண் பொம்மை உட்பட பல்வேறு உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
சமீபத்தில் கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், செட்டிகுளம் சின்ன வெங்காயம் மற்றும் ராமநாதபுரம் சித்துறைகார் அரிசி ஆகிய பொருட்களுக்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் மேலும் 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
புவிசார் குறியீடு அங்கீகாரத்தில் இந்திய அளவில் உத்தரப்பிரதேசம் 79 பொருட்களுடன் முதல் இடத்திலும், 69 பொருட்களுடன் தமிழ்நாடு 2-வது இடத்திலும் உள்ளது.
- மதுரை மரிக்கொழுந்து விளாச்சேரி களிமண் பொம்மை உட்பட பல்வேறு உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
- வந்தவாசி கோரைப்பாய், ஜவ்வாது புளி, கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு, மதுரை மரிக்கொழுந்து விளாச்சேரி களிமண் பொம்மை உட்பட பல்வேறு உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன
இந்நிலையில் கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இரு பொருட்களுக்கும் புவிசார் குறியீடு பெறப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி அறிவித்துள்ளார். முதல்முறையாக விவசாய பொருளான கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வந்தவாசி கோரைப்பாய், ஜவ்வாது புளி, கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை ஐகோர்ட்டு வக்கீலும், அறிவு சார் சொத்துரிமை அட்டார்னி தலைவருமான சஞ்சய்காந்தி தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் பாதுகாக்கும் பொருட்டு கடந்த 8-ந்தேதி அறிவுச்சார் சொத்துரிமை அட்டார்னி சங்கம் சார்பில் புவிசார் குறியீடு பதிவகத்தில் தமிழகத்தின் உள்ள தலை சிறந்த பாரம்பரியமிக்கமான நெல் வகையான சீரக சம்பா நெல்லுக்கு புவிசார் குறியீடு பதிவு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றுப்படுக்கையில் உள்ள நெல்வகைகளில், நெல்களின் தாய் என்று சீரக சம்பா அழைக்கப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் இந்த அறிய வகையான நெல் பயிரிடப்பட்டு உள்ளன. இப்பழமையான நெல்வகை அழிந்து விடக்கூடாது இதனுடைய பூர்விக வரலாறு, தனிச்சிறப்பு, உற்பத்தி ஆகியவற்றையும், இதுதொடர்பான ஆய்வு ஆவணங்களையும் அறிவுசார் சொத்துமை அட்டார்னி சங்கம் சார்பில் காவிரி டெல்டா பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இந்த நெல்வகை உரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளது. இந்த நெல்வகை சுமார் 50 வருடங்களுக்கு முன்பு திருச்சி, உப்பிலியபுரம் பகுதியில் அதிக அளவில் மகசூல் செய்யப்பட்டதாக தெரிகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த யோகிகளும் சித்தர்களும் பத்தாரத குணபாடம் என்ற புத்தகத்தில் இந்நெல்லின் மருத்துவ குணங்கள் பற்றி கூறுகிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவில் அருகில் உள்ள துறமாடி என்ற பகுதியில் இந்த நெல்வகை அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு காவிரி டெல்டா பகுதிக்கு முன்னோடியாக திகழ்கிறது. இந்த அரிசி சீரகம் போன்று இருப்பததால் இதற்கு சீரக சம்பா அரிசி என்ற பெயர் அளிக்கப்படுகிறது. மற்ற அரிசி வகைகளையும் காட்டிலும் இந்த அரிசி வகைக்கு வாசனை அதிகம். மேலும் இந்த அரிசியை வைத்து தயாரிக்கும் பிரியாணி வகைக்கு தனி மவுசு அதிகம் ஆகயே இந்த வகையான அரிசியினை பிரியாணி வகையான அரிசி என்று அழைக்கப்படுகிறது.
இந்த சீரக சம்பாவில் கொழுப்பினை குறைக்க கூடிய சக்தி உள்ளது என்று ஆராய்ச்சி கட்டுரை கூறுகிறது.
ஆய்வறிக்கையில் புற்றுநோய் தடுக்கும் சக்தி, சர்க்கரை நோய் தடுக்கும் சக்தி, குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கான சக்தி, இளைஞர்களை சுறுசுறுப்பாக இருக்கும் சக்தி, முதியோர்களுக்கு ரத்தத்தை சீராக்கும் சக்தி, முகம் வசிகரபடுத்தும் சக்தி, ஆகியவை இந்த பாரம்பரிய நெல் வகையில் இருந்து கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த பாரம்பரிய நெல் வகைக்கு விரைவிலே புவிசார் குறியீடு கிடைக்கும்.
அவ்வாறு கிடைத்தால் காவிரி டெல்டா அனைத்து விவசாயிகளும் பாரம்பரியமாக அந்த வேளாண்மை அறிவு களஞ்சியத்தை உலகளவில் நிலைநாட்டுவதற்கு உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.






