என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Ragupathy"

    • தமிழ்நாட்டில் எந்த மொழிக்கும் அச்சுறுத்தல் கிடையாது.
    • பா.ஜ.க.வின் ஊதுகுழலாகவே ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்றார்.

    சென்னை:

    கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திராவிடம் என்பது கற்பனை எனக்கூறிய ஆளுநருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாஜகவின் ஊதுகுழலாகவே ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.

    திராவிடம் என்ற வார்த்தை தேசிய கீதத்தில் இடம்பெற்றுள்ளது என்பது ஆளுநருக்கு தெரியாதா?

    எங்கே சென்றாலும் தமிழர்களை இழிவுபடுத்துவதை கொள்கையாக வைத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் எந்த மொழிக்கும் அச்சுறுத்தல் கிடையாது.

    தமிழ்நாட்டில் இருக்கும் பீகாரிகள் அச்சுறுத்தப்படுவதாக கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டார்கள்.

    தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது என்ற கருத்து ஏற்கக் கூடியதல்ல என தெரிவித்தார்.

    • அமித்ஷா பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் கோழைக்கு வீரவசனம் எல்லாம் எதற்கு?
    • தினம் தினம் அஞ்சி, ரத்தக் கொதிப்பிலேயே வாழ்பவர்களா ரத்தத்தின் ரத்தங்களைக் காப்பாற்றப் போகிறார்கள்?

    தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முதலமைச்சர் அவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி என்ற பெயரில் முன்வைத்த வதந்திகளுக்கெல்லாம் ஆதாரத்தோடு பதிலளித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடும் அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நடந்து கொண்ட விதத்தைத் தோலுரித்துக் காட்டியதைக் கண்டும், பதில் பேசத் திராணியின்றிச் சட்டமன்றத்தை விட்டே ஓடிய பழனிசாமி,சமூக வலைத்தளத்தில் வந்து கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார்.

    கடந்த அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் காலி இருக்கைகளைப் பார்த்துப் பேசிய வீராதி வீரன் யார்? அன்றைக்குக் காற்றோடு கத்திச் சண்டை போட்டவர், இன்று வெட்டி வசனம் பேசுகிறார்.

    கூவத்தூரில் ஊர்ந்தெடுக்கப்பட்டு, டேபிளுக்கு அடியில் ஒளிந்து கிடந்த சூராதி சூரர், சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்துவிட்டு வீரவசனம் பேசுகிறார்.

    சிபிஐ-க்கு பயந்து, அமலாகத் துறைக்கு அஞ்சி, தேர்தல் ஆணையத்திற்கு நடுங்கி பிரதமர் மோடி பின்னாலும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பின்னாலும் ஒளிந்து கொண்டிருக்கும் கோழைக்கு வீரவசனம் எல்லாம் எதற்கு?

    கருப்பு பட்டை அணிந்து வந்தது பற்றி சொல்லியிருக்கிறார் பழனிசாமி. வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் திமுக தீர்மானம் இயற்றியது. எங்கே தனது டெல்லி எசமானர்கள் கோபித்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் சட்டசபையில் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக வழங்கப்பட்ட கருப்பு பேட்ஜைக் கூட வாங்காமல் ஓடிய பயந்தான்கொள்ளிகள், கருப்பு பட்டை பற்றிப் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா? பாஜகவின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமோ.. அமலாகத்துறை வந்துவிடுமோ எனத் தினம் தினம் அஞ்சி, ரத்தக் கொதிப்பிலேயே வாழ்பவர்களா ரத்தத்தின் ரத்தங்களைக் காப்பாற்றப் போகிறார்கள்?

    அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பங்கேற்ற மகாமகத்தில் நெரிசலில் சிக்கி 48 பேர் துள்ளத் துடிக்க இறந்து போனார்கள். ''மகாமகத்திற்கு வந்து இறந்து போனதால் அவர்கள் உடனே மோட்சத்திற்குப் போவார்கள்'' எனச் சொன்னவர்கள் எல்லாம், கரூர் நெரிசல் மரணத்திற்குப் பாடம் எடுப்பது வேடிக்கை.

    இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறார் பழனிசாமி. 41 பேரின் இறப்பில் கூட்டணி அரசியல் செய்யும் கேடுகெட்ட அரசியல்வாதியைத் தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை.

    ஒன்றிய பாஜகவின் அடிமையான பழனிசாமி தனக்கொரு அடிமை சிக்க மாட்டாரா? எனத் தவம் கிடப்பது அவரது தவிப்பிலேயே தெரிகிறது. ஆனால், அதற்காக இறந்தோரை வைத்து அரசியல் செய்தால் அதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் ஏற்க மாட்டார்கள்.

    வெறும் வாட்ஸ்அப் வதந்திகளை மட்டும் நம்பி உயிர் வாழும் எடப்பாடி பழனிசாமிக்கு உண்மை என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்கத் தகுதியில்லை. தமிழ்நாட்டு மக்களிடம் உங்களின் மயான அரசியல் எடுபடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மக்கள் எங்களுக்கு சான்றிதழ் தரவேண்டும்.
    • எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் எங்களுக்கு வேண்டாம்.

    புதுக்கோட்டை:

    அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் வைத்தது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று. அ.தி.மு.க. ஆட்சியிலும் எடப்பாடி பழனிசாமி படம் போடப்பட்டது. மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயரை வைத்தார்கள். அந்த சட்ட மசோதா ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    மீண்டும் நாங்கள் அந்த சட்ட மசோதாவை கொண்டு வந்தபோது கவர்னர் ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பினார். அதற்கு சேர்த்துதான் உச்ச நீதிமன்றத்தில் கலைஞருக்காக, அவர்களது தலைவர் ஜெயலலிதாவிற்கும் சேர்த்து அவரது பெயரை வைக்க வேண்டும் என்று வாதாடி பெற்றிருக்கின்ற இயக்கம் தான் தி.மு.க.

    எங்களுக்கு கட்சி வேறுபாடு கிடையாது. எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு எங்களுடைய முதலமைச்சர் பெயரை சூட்ட வேண்டுமோ அந்த பெயரை சூட்ட கடமைப்பட்டுள்ளோம். அதையெல்லாம் விமர்சித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உள்ளது வரவேற்கத்தக்கது.

    பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் மோடியால் வளர்ச்சி விகிதத்தை எட்ட முடிந்ததா? இல்லை... மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தான் தமிழ்நாடு இந்த வளர்ச்சி விகிதத்தை எட்டி உள்ளோம். இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசுடைய உழைப்பு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்திருக்கின்ற முயற்சிக்கு கிடைத்து உள்ள மிகப்பெரிய அங்கீகாரம்.

    திருவாரூரில் கலைஞர் பல்கலைக்கழகம் திறப்பதற்கு கவர்னருக்கு அனுப்பிய சட்ட மசோதாவை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். ஜனாதிபதி என்ன பதிலளிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    ஒரு எதிர்க்கட்சி சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கின்றது என்று சான்றிதழ் கொடுக்க மாட்டார்கள். நாங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அந்த சான்றிதழை எதிர்பார்க்கவில்லை. மக்கள் எங்களுக்கு சான்றிதழ் தரவேண்டும். அந்த மக்கள் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம், நலமாக இருக்கின்றோம் என்று மக்கள் எங்களது தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சான்றிதழ் தருகின்றனர். அந்த சான்றிதழ் எங்களுக்கு போதும். எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் எங்களுக்கு வேண்டாம்.

    திருப்பூரில் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் போலீஸ்காரரை தாக்கி விட்டு தப்பா சென்றதால் தான் இந்த என்கவுண்டர் சம்பவம் நடந்துள்ளது. காவல்துறைக்கு பாதுகாப்பு தேவையில்லை. காவல்துறை தனியாக போய் சில சமயங்களில் இது போன்ற கொலை சம்பவம் நடைபெறுகிறதே தவிர வேறு எங்கேயும் கிடையாது.

    இதைவிட மோசமான சம்பவங்கள் எல்லாம் வட மாநிலங்களில் வருகின்றது. இந்தியாவிலேயே தொழில் தொடங்கவும், வசிக்கவும் தகுந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். ஆணவ படுகொலைகள் எங்களுக்கு தெரிந்து நடப்பது கிடையாது. தெரிந்தால் நிச்சயம் அதை தடுத்து விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றார் அமைச்சர் ரகுபதி.
    • பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் அமலாக்கத்துறை மூலமாக நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

    டாஸ்மாக் நிறுவன அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாற்று கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களை பழிவாங்க மாட்டோம் என பாஜகவினர் சொன்னார்கள்.

    ஆனால், பாஜக ஆளாத மாநிலங்களில் பழிவாங்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.

    மாற்று கட்சியினர் எங்கெல்லாம் ஆட்சி செய்கிறார்களோ அங்கெல்லாம் மத்திய பாஜக அரசு பழி வாங்குகிறது.

    அமலாக்கத்துறை வழக்கு தொடரப்பட்டவர்கள் பாஜகவில் சேர்ந்தவுடன் புனிதர்களாகி விடுகிறார்கள்.

    பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் அமலாக்கத்துறை மூலமாக நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

    டெல்லி பாணியில் அரசியல் செய்யலாம் என்று பாஜக கனவு கண்டு கொண்டிருக்கிறது.

    அமலாக்கத்துறையில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியர்கள் அல்ல. அமலாக்கத்துறை அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துறை அதிகாரிகளே லஞ்சம் வாங்குகிறார்கள்.

    டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழலுக்கு ஏதேனும் ஆதாரங்கள் இருக்கிறதா ?

    அனுமதியின்றி போராடப் போகிறவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்வது தவறு இல்லை. முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட அண்ணாமலை வந்து பார்க்கட்டும்; என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.

    டாஸ்மாக் ஊழல் தொடர்பாக மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.

    டாஸ்மாக் மதுபான விற்பனையால் இளம் விதவைகள் அதிகரிப்பதாக கூறுவதில் உண்மை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோரிக்கை கடிதங்களும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன.
    • சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பதின்மூன்று (13) மசோதாக்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன.

    சென்னை:

    சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களான டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா, மாவா விநியோகிப்பாளர்களிடமிருந்து சட்ட விரோதமாக பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) வழக்குப் பதிவு செய்து விசாரித்து, இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை சி.பி.ஐ. கோரியது. மாநில அமைச்சரவையும் அந்த இசைவு ஆணை கோரும் சி.பி.ஐ.-யின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 12.09.2022 அன்று அனுப்பியது. ஆனால் துரதிருஷ்டவசமாக இதுவரையில் இந்த கடிதம் தொடர்பாக எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாமல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதப்படுவதால் இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

    இதேப்போன்று, மேலும் இரண்டு நிகழ்வுகளில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், முன்னாள் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி மற்றும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணை கோரியது. இந்தக் கோரிக்கைகளுக்கு மாநில அமைச்சரவை அனுமதி அளித்து அதற்கான கடிதங்களை முறையே 12.09.2022 மற்றும் 15.05.2023 ஆகிய தேதிகளில் கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த கோரிக்கை கடிதங்களும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. முந்தைய அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான எந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளிலும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்கிட தேவையான இசைவு ஆணையை இதுவரை கவர்னர் வழங்கவில்லை.

    ஊழல் வழக்குகளில் இசைவு ஆணை நிலுவையில் இருப்பது தவிர, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பதின்மூன்று (13) மசோதாக்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. இவற்றில் இரண்டு மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. எனவே, மேற்குறிப்பிட்டுள்ள முக்கியமான கோப்புகள் மற்றும் மசோதாக்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, இனியும் தாமதிக்காமல் ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணையையும், மசோதாக்களுக்கு ஒப்புதலையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
    • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

    இந்நிலையில், அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்துக்கு தமிழக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

    அதில், முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகள் சி.பி.ஐ.யின் விசாரணையில் உள்ளது.

    முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கில் விசாரணை கிடைத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் குறித்து மாநில அரசிடம் இருந்து விளக்கம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.

    • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
    • ஆளுநர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு மட்டுமே வந்துள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

    புதுக்கோட்டை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

    இதற்கிடையே, அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்துக்கு தமிழக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். அதில், முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகள் சி.பி.ஐ.யின் விசாரணையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கில் விசாரணை கிடைத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் குறித்து மாநில அரசிடம் இருந்து விளக்கம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அமைச்சர் ரகுபதி இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் குறித்த புகாருக்கு முறையான பதிலைத் தராமல் மழுப்பலான பதிலை ஆளுநர் அளித்துள்ளார்.

    ஆளுநர் ஆர்.என்.ரவி, அ.தி.மு.க.வின் 2 முன்னாள் அமைச்சர்களைக் காப்பாற்ற நினைக்கிறார். தான் அனுப்பிய கடிதத்திற்கு ஆளுநர் பதில் கடிதம் அனுப்பவில்லை. ஆளுநர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு மட்டுமே வந்துள்ளது என தெரிவித்தார்.

    • அரசு சட்டக் கல்லூரியில் மொத்தமாக எம்எல் படிப்பிற்காக 1607 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
    • அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அவசியம் ஏற்பட்டால் அதை செய்து தருவோம்.

    சென்னை:

    தமிழக அரசின் சட்ட கல்லூரிகளில் முதுநிலை சட்டப்படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற முதல் 10 மாணவ, மாணவியர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு சட்டக் கல்லூரியில் மொத்தமாக எம்எல் படிப்பிற்காக 1607 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அது பரிசீலனை செய்யப்பட்டு 11 அரசு சட்டக்கல்லூரிகளில் உள்ள 21 முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு 420 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் 10 நபர்களுக்கு இன்று தேர்ச்சிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அவசியம் ஏற்பட்டால் அதை செய்து தருவோம்.

    நீண்டகால சிறைவாசிகள் 49 பேருக்கு விடுதலை செய்ய ஆளுநருக்கு அனுப்பியுள்ள கோப்புகள் அனைத்தும் தற்போது வரையிலும் நிலுவையில் உள்ளது.

    கேள்வி:- நீண்ட கால சிறைவாசிகள் விடுதலை செய்ய தமிழக அரசு அனுப்பிய கோப்புகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கமாட்டார் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறாரே?

    பதில்:- அதாவது கவர்னரும், அண்ணாமலையும் ஒன்று என்பதை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். அவ்வளவுதான். கவர்னர் தான் அண்ணாமலை. அண்ணாமலைதான் கவர்னர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திரையுலகம் எங்களுடைய நட்பு உலகம்.
    • திரைத்துறையை முடக்க இந்த அரசு எந்த முயற்சியையும் செய்யவில்லை

    சென்னை:

    லியோ சிறப்பு காட்சி தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- லியோ படம் தொடர்பாக அரசியல் நடப்பதாக சொல்கிறார்கள். ஒருசில ஆளும் கட்சி சார்ந்த தயாரிப்பு நிறுவனம் கேட்டால் சிறப்பு காட்சி உடனே கொடுக்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்களே?

    பதில்:- எங்களை பொறுத்தவரை 6 காட்சி சிறப்பு காட்சி வேறு. 5 காட்சி சிறப்பு காட்சிகள் என்பது வேறு. எனவே 6 சிறப்பு காட்சி கொடுக்கிற போதுதான் காலையில் 4 மணிக்கு, 5 மணிக்கு என்பது போன்ற பிரச்சனை வருகிறது.

    5 காட்சிகள் என்பது 9 மணியில் இருந்து 1.30 மணிக்குள் முடித்து விடலாம். அதோடு கூடுதல் காட்சிகள் கேட்கும் போது தான் அதை எப்படி கொடுப்பது என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

    கேள்வி:-காலை 9 மணி காட்சியை முன் கூட்டியே கேட்கிறார்களே?

    பதில்:-ரசிகர் மன்றம் என்று சொல்லி கேட்கிற போது எத்தனை மணி என்றாலும் அவர்களது ரசிகர்கள்தான் பார்க்க போகிறார்கள்.

    எங்களை பொருத்தவரை அரசாங்கம் எடுக்கிற முடிவுதான். நாங்கள் என்றைக்குமே சினிமாவில் எந்தவிதமான தடைகளும் போடுவதில்லை.

    திரையுலகம் எங்களுடைய நட்பு உலகம். திரையுலகத்தோடு நாங்கள் நெருங்கிய நட்பாகத்தான் இருப்போமே தவிர அவர்களது விரோதத்தை நாங்கள் சம்பாதித்து கொள்ள எங்கள் தலைவர் முதலமைச்சர் விரும்ப மாட்டார்.

    கேள்வி:- தி.மு.க. அரசு திரைத்துறையை முடக்க பார்ப்பதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளாரே?

    பதில்:- அவர்கள் அன்றைக்கு திரையுலகை என்ன பாடுபடுத்தினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். போகிற போக்கில் அவர் பேசுகிறார்.

    திரைத்துறையை முடக்க இந்த அரசு எந்த முயற்சியையும் செய்யவில்லை. அவர்களை ஊக்கப்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் நன்றாக உதவி செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை கவர்னர்களோ, குடியரசு தலைவரோ நிராகரிக்கும் போது திருப்பி அனுப்புகிறோம் என்ற வார்த்தையை குறிப்பிடுவதில்லை.
    • ‘வித்ஹோல்டு’ (நிறுத்தி வைப்பு) என்றே குறிப்பிடுவார்கள். தமிழக கவர்னரும் அது போன்ற வார்த்தையையே குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    கவர்னர் மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வருவதற்குள் இந்த அவசர கூட்டம் நடத்த வேண்டியதன் அவசியம் என்ன?

    கவர்னர் மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதாக தானே அர்த்தம் என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அவை முன்னவர் துரைமுருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பதிலளித்து பேசினார்கள். அவர்கள் கூறும்போது, சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை கவர்னர்களோ, குடியரசு தலைவரோ நிராகரிக்கும் போது திருப்பி அனுப்புகிறோம் என்ற வார்த்தையை குறிப்பிடுவதில்லை.

    'வித்ஹோல்டு' (நிறுத்தி வைப்பு) என்றே குறிப்பிடுவார்கள். தமிழக கவர்னரும் அது போன்ற வார்த்தையையே குறிப்பிட்டுள்ளார். எனவே அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றனர்.

    இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த 10 மசோதாக்கள் தொடர்பாக மட்டும்தான் வழக்கு போடப்பட்டுள்ளதா? கவர்னரிடம் நிலுவையில் உள்ள மற்ற கோப்புகளுக்கு எதிராகவும் வழக்கு போடப்பட்டு உள்ளதா? என்றார்.

    இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இந்த மசோதாக்கள் மற்றும் முன் விடுதலை தொடர்பாக நிலுவையில் உள்ள 50 கோரிக்கை தொடர்பாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

    எடப்பாடி பழனிசாமி:-பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நாங்கள் ஏற்கனவே கொண்டு வந்தோம். அப்போது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். ஆனால் அப்போது தி.மு.க. சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இல்லை என்றால் அப்போதே தீர்வு கிடைத்து இருக்கும்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:-பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் போது அரசிடம் கலந்து விவாதிக்கும் பழக்கம் அப்போது இருந்தது. தற்போது அது இல்லை என்பதே பிரச்சனை.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    இதைத் தொடர்ந்து ஜெயலலிதா பெயரில் அமைக்கப்பட்டிருந்த மீன்வள பல்கலைக்கழகம் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

    ஆனால் அதன் பிறகு அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, ஜெயலலிதா பெயரை நீக்கியதாக உண்மைக்கு மாறான தகவலை கூறி வெளிநடப்பு செய்துள்ளார்கள். மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்படவில்லை. நிலுவையில் உள்ளது" என்றார்.

    • இன்றைக்கு 2 கோடி தொண்டர்களை கொண்டு வலிமையுள்ள இயக்கமாக அ.தி.மு.க.வை வெற்றிகரமாக எடப்பாடியார் நடத்தி வருகிறார்.
    • அ.தி.மு.க.வில் எந்த இடைவெளியும் இல்லை. பிளவும் இல்லை.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படும் என்று சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று பரபரப்பாக பேட்டி அளித்திருந்தார்.

    இதற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்து

    உள்ளார். மதுரையில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.பி.உதயகுமார் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைக்கு 2 கோடி தொண்டர்களை கொண்டு வலிமையுள்ள இயக்கமாக அ.தி.மு.க.வை வெற்றிகரமாக எடப்பாடியார் நடத்தி வருகிறார்.

    இதை பொறுக்க முடியாமல் இதை எதிர்கொள்ள முடியாமல் வாய்க்கொழுப்புடன் சிலர் புரளி பேசி வருகிறார்கள். வாய்க்கு வந்ததை உளறி வரும் பைத்தியக்காரர்கள் போல பேசி வருகின்றனர்.

    எடப்பாடி யாரிடமும் பதவி கேட்கவில்லை. தொண்டர்கள்தான் அவரிடம் கேட்டுக் கொண்டார்கள். தொடர்ந்து பொதுக்குழு மூலம் எடப்பாடியார் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க.வை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். ஆனால் தொண்டர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் ரகுபதி பேசி உள்ளார்.

    அ.தி.மு.க.வில் இருந்த பொழுது அ.தி.மு.க.வின் பாலை குடித்துவிட்டு, தற்போது தி.மு.க.வுக்கு சென்றவுடன் அங்கு அ.தி.மு.க.விற்கு எதிராக விஷப்பாலை கக்குவது மிகப்பெரும் பாவச்செயலாகும். அ.தி.மு.க.வில் எந்த இடைவெளியும் இல்லை. பிளவும் இல்லை. தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நீதிமன்றத்தின் மூலம் கட்சியை, தலைமை கழகத்தை மீட்டெடுத்து, இன்றைக்கு 40 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எடப்பாடியார் கையெழுத்து இட்டுள்ளார். நிச்சயம் 40 இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

    • அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்தனர்.
    • யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

    சென்னை:

    சட்டசபை வளாகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * சட்டசபையை முடக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்.

    * கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியது அப்பட்டமான பொய்.

    * அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்தனர்.

    * யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

    * கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக அரசு உண்மையை மறைக்கவில்லை.

    * பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததால் சபையை முடக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்.

    * கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு அவசியம் ஏற்படவில்லை. உரிய முறையில் சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

    * சாத்தான்குளம் விவகாரத்தில் அப்போதைய முதல்வரே உண்மையை மறைத்தார். நாங்கள் இப்போது எதையும் மறைக்கவில்லை.

    * நாங்கள் ஏன் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு துணைபோக வேண்டும்? அதனால் எங்களுக்கு என்ன ஆதாயம்?

    * கள்ளச்சாராயத்தை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மெத்தனால் கலவையால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

    * கள்ளுக்கடைகளை தற்போது திறக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவசியம் ஏற்பட்டால் பின்னர் பார்க்கலாம்.

    * டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றது பற்றி தகவல் தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×