என் மலர்
நீங்கள் தேடியது "EPS"
- இருவரும் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
- நயினார் நாகேந்திரன் உடன் மத்திய அமைச்சர் எல். முருகனும் உடன் சென்றிருந்தார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக பாஜக- அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பா.ம.க. உள்பட பல கட்சிகள் இடம் பிடித்துள்ளன.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்திற்கு சென்று தமிழக காங்கிரஸ் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அமைச்சர் எல். முருகனும் உடன் சென்றிருந்தார்.
இந்த சந்திப்பு குறித்த கேள்விக்கு "எடப்பாடி பழனிசாமியுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு" என வேறேதும் கூறாமல் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அடுத்த மாதம் தொடக்கத்தில் பிரதமர் மோடி அடுத்தடுத்து தமிழகம் வருகிறார். அதற்கு முன்பாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நிறைவு செய்ய பாஜக விரும்புவதாக தெரிகிறது. இதனால் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- தமிழ் அழகன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
- அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக பணியாற்றியவரும், அதிமுக-வில் மூத்த முன்னோடியாக விளங்கிய, மறைந்த மரியாதைக்குரிய ஆர்.எம். வீரப்பன் அவர்களின் மகனும்,
தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் பணியாற்றியவரும், சிறப்பான ஆன்மீக சேவை புரிந்தவருமான
வீ. தமிழ் அழகன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- 11-ம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் கையில் அஇஅதிமுக ஆட்சி லேப்டாப்பை கொண்டு சேர்த்தது.
- போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, ஆட்சி மீதம் இருக்கின்ற 2 மாதங்களிலாவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
சென்னை எம்கேபி நகர் அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவனிடம் ஆசிரியர்கள் சோதனை செய்யும் போது பேண்ட் பாக்கெட்டில் 5 கிராம் கஞ்சா போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"சென்னை வியாசர்பாடியில் அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒரு ஆட்சியாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,Total Failure என்பதற்கு இந்த செய்தியே சாட்சி!
அறிவுப்பூர்வமான கல்விக்கு வித்திட 11-ம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் கையில் அஇஅதிமுக ஆட்சி லேப்டாப்பை கொண்டு சேர்த்தது. ஆனால், இன்றைய திமுக ஆட்சியிலோ, 11-ம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் தான் சென்றுள்ளது. இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?
ஆனால், இதையெல்லாம் பற்றி கிஞ்சற்றும் கவலைப் படாத ஒரு முதல்வர் நமக்கு வாய்த்திருப்பது ஆகப்பெரும் சாபக்கேடு! கஞ்சா, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது மூலம், ஸ்டாலின் மாடல் திமுக அரசு தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளது. இளைஞர்களை, பள்ளி மாணவர்களை அடியோடு சீரழிக்கத் துணை போகும் இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆண்டுதோறும் நான் தொடர்ச்சியாக சுட்டிக் காட்டி வந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது மாதிரி, வழக்கம் போல "ஓ" போடுவதோடு நிறுத்தாமல், பள்ளி மாணவன் கையில் போதைப்பொருள் வந்தது எப்படி என தீர விசாரித்து, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, ஆட்சி மீதம் இருக்கின்ற 2 மாதங்களிலாவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ஜவுளி மேம்பாடு திட்டம் திருப்பூர், கரூர் போன்ற பகுதிகளுக்கு பயனளிக்கும்.
- சிறு, குறு தொழில் அதிக அளவில் உள்ள தமிழ்நாடு பட்ஜெட்டில் பயன்பெறும்.
மத்திய அரசின் 2026-2027-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மத்திய பட்ஜெட் குறித்து பாஜகவினர் வரவேற்பு அளித்துவரும் நிலையில், எதிர்க்கட்சியினர் வெற்று பட்ஜெட் என விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், தே.ஜ.கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக கட்சியின் பொதுச்செயலாளருமான இபிஎஸ் மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில்,
"இந்திய நாட்டின் 2025-2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிக்கை கடந்த 29.1.2026 அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2026-2027-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் இன்று (1.2.2026 - ஞாயிற்றுக் கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 2025-2026-ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கை, உலக அளவில் போர் போன்ற பதற்றத்தால் உள்ள உறுதியற்ற சூழ்நிலையிலும், இந்திய பொருளாதார வளர்ச்சி 2025-2026-க்கு 6.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயரும் என்றும், 2026-2027-ல் 6.8 முதல் 7.2 சதவீதமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொருளாதார நிலையில் இந்தியா வலுவான நிலையில் உள்ளதைக் காட்டுகிறது.
இந்த சூழ்நிலையில் 2026-2027-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை, நிதிநிலை மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் நிதிப் பற்றாக்குறையையும், பொருளாதார உற்பத்தி மதிப்பில் கடன் அளவைக் குறைக்க எடுத்துள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கது. இது வருங்கால பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும்.
இறக்குமதியை குறைக்க, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, ஆராய்ச்சி, உற்பத்தி, உயர் தொழில்நுட்பம் சார்ந்த கட்டமைப்புகள் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, மின்னணுசார் உற்பத்தி, மருந்துகள், ஜவுளி, கண்டெய்னர் உற்பத்தி போன்ற துறைகளில் உற்பத்தியை ஊக்குவிக்க பூங்காக்கள், உயிரி மருத்துவ பூங்கா, உற்பத்தி மண்டலங்கள் போன்ற பல முயற்சிகளை இந்த நிதிநிலை அறிக்கையில் முன்மொழிந்துள்ளதை பாராட்டுகிறேன். இதற்கான நிதி ஆதாரங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜவுளி மேம்பாடு திட்டம் திருப்பூர், கரூர் போன்ற பகுதிகளுக்கு பயனளிக்கும்.
சரக்கு வேக வழித்தடப் பாதைகள், வேக ரயில் பாதைகள், நீர் வழிப் பாதைகள் மேம்பாடு போன்றவை, போக்குவரத்துத் துறையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆயுர்வேதம், கால்நடை துறை முதலியவற்றுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளதைப் பாராட்டுகிறேன்.
சிறு, குறு தொழில் மேம்பாட்டுக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக. நிதி ஆதாரம் பெறுவதை உறுதி செய்ய ரூபாய் 2000 கோடி, மற்றும் சிறு, குறு தொழில் வளர்ச்சி நிதியாக ரூபாய் 10,000 கோடி ஒதுக்கீடு போன்றவை மிக உதவியாக இருக்கும். சிறு, குறு தொழில் அதிக அளவில் உள்ள தமிழ்நாடு இதனால் பயன்பெறும்.
இந்த நிதிநிலை அறிக்கை இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுப்பதோடு, உலக அளவில் இந்தியா பொருளாதார நிலையில் வலுவான நாடாக உயர்வதற்கு வழிவகுக்கும் என்பதால், பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- இன்று திமுகவை விமர்சித்து அறிக்கை விட்டுள்ளார் ராமதாஸ்.
- அதிமுகவால் 3 முறை முதல்வரான ஓபிஎஸ் தன்னை வாழவைத்த கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது
தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியை அரசியல் கட்சிகள் ஒருங்கிணைத்து வருகின்றன. திமுக தனது நாடாளுமன்ற தேர்தலின்போது இணைந்த கூட்டணி கட்சிகளுடனேயே தேர்தலை சந்திக்கிறது. ஆனால் நடுநடுவே திமுக-காங்கிரஸ் மோதல் புகைந்துகொண்டே இருக்கிறது. இருப்பினும் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கூட்டணியில் உறுதியாக இருக்கிறார்கள்.
இதனிடையே ராமதாஸ் தரப்பு திமுகவில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இன்று திமுகவை விமர்சித்து அறிக்கை விட்டுள்ளார் ராமதாஸ். மேலும் பாமக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம் என திருமாவளவன் உறுதியாக உள்ளார். இதனால் ராமதாஸ் தரப்பு பாமக, திமுக கூட்டணியில் இடம்பெறாது என கூறப்படுகிறது.
மறுபுறம் பிரிந்த அதிமுக ஒண்றிணைந்து வருகிறது. ஓபிஎஸ் மட்டும் இன்னும் இணையவில்லை. இதனிடையே ஓபிஎஸ் திமுக கூட்டணியில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அதற்கு மூன்றுமுறை அதிமுக முதலமைச்சராக இருந்தவர் எப்படி திமுகவிற்கு செல்வார், அதிமுகவால் 3 முறை முதல்வரான ஓபிஎஸ் தன்னை வாழவைத்த கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஓபிஎஸ் தே.ஜ.கூட்டணியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது ஓபிஎஸ் கூட்டணியில் இருந்தால் எவ்வளவு பலமாக இருக்கும்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு,
"இப்போது இருக்கும் கூட்டணியே பலமான கூட்டணிதான். மற்ற பலனும் நல்லப் பலன்தான். கூட்டணிகள் பலமாக வந்துசேர்கின்றன. நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். " என தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த யூகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள ஓபிஎஸ்,
"எனது ஒற்றை கோரிக்கை, வேண்டுகோள் என்னவென்றால், பிரிந்திருக்கும் அதிமுகவின் அனைத்து சக்திகளும் ஒன்றிணையவேண்டும். இதன்மூலம் தேர்தலை சந்திக்கவேண்டும் என்பதுதான். மீண்டும் ஒன்றிணையவது பற்றி ஆண்டவன் கையிலேயே உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து என்னிடம் யாரும் பேசவில்லை. கூட்டணிக்கு என்னை யாரும் இதுவரையில் அழைக்கவுமில்லை" என தெரிவித்துள்ளார்.
ஆனால் இவை அனைத்திற்கும் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருக்கிறார் இபிஎஸ். திமுகவை வீழ்த்த, டிடிவி தினகரனுடன் கைக்கோர்த்தது போல ஓபிஎஸ் உடனும் கைக்கோர்ப்பாரா? பாஜக ஓபிஎஸை இணைக்கக் கோரினால் இணைப்பாரா? என கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பதிலை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
- எடப்பாடி கே.பழனிசாமியை முழுமனதாக ஏற்றுக்கொண்டு கூட்டணிக்குள் வந்துள்ளோம்.
- எங்களுக்குள் இருந்த சண்டையால் பிரிந்திருந்தோம் என்பது உண்மை.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான எடப்பாடி கே.பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன்,
"தமிழ்நாட்டில் நடக்கும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர அமமுக தே.ஜ.கூட்டணியில் இடம்பெற வேண்டும் என பிரதமர் மோடி விரும்பினார். இந்தக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் எடப்பாடி கே.பழனிசாமியை முழுமனதாக ஏற்றுக்கொண்டு கூட்டணிக்குள் வந்துள்ளோம். நாங்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள், புரட்சித்தலைவர் வழிவந்தவர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டனர். எங்களுக்குள் சண்டை, சச்சரவுகள் இருந்தது உண்மைதான். ஆனால் தமிழ்நாட்டின் நலனுக்காகவும், அ.ம.மு.க.வின் நலனுக்காகவும் பிரதமரின் அழைப்பை ஏற்று, மனதில் இருந்த எல்லா கோப, தாபங்களையும் விட்டுவிட்டு மீண்டும் அம்மா ஆட்சியை மலரசெய்ய இந்த கூட்டணியில் இணைந்துள்ளோம்.
ஒரு விஷயத்தை எதிர்ப்பது என்றால் அதிலும் உறுதி, ஆதரிப்பது என்றால் அதிலும் உறுதியாக இருக்கக்கூடிய தன்மையை ஜெயலலிதா எனக்கு கொடுத்திருக்கிறார். ஒரேக் குடும்பத்தை சேர்ந்தவர்கள்; பங்காளிகளாக இருந்தவர்கள். எங்களுக்குள் இருந்த சண்டையால் பிரிந்திருந்தோம் என்பது உண்மை. ஆனால் மக்களாட்சியை தமிழ்நாட்டில் நிறுவவேண்டும் என்பதற்காக நாங்கள் முழுமனதோடு இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிறோம் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடே இன்று கொலை, கொள்ளை நாடாக மாறிக் கிடக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. போதைப்பொருள் புழக்கம். தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் வருத்தத்தில் இருக்கும்போது மகனை முதலமைச்சராக துடித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அந்தக் குடும்ப ஆட்சியை முழுமையாக முறியடிப்போம்" என தெரிவித்தார்.
- திமுகவின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு எஞ்சியது துன்பமும் வேதனையும் தான்.
- ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மதுராந்தகத்தில் நடக்கும் என்டிஏ கூட்டணி கூட்டத்தில் பிரதமர் என்ன பேசப்போகிறார் என நாடே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.
என்டிஏ கூட்டணி பொபதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பதால் இயற்கையே இன்று சூரியனை மறைத்துவிட்டது.
நம்மை எதிர்ப்பவர்கள் தீயவர்களாக இருந்தாலும் உரியவர்களோடு ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
திமுகவின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு எஞ்சியது துன்பமும் வேதனையும் தான்.
ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
திமுகவின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் அவர்களின் ஒரே சாதனை ஊழல், ஊழல், ஊழல் மட்டும் தான்.
இந்த தேர்தல் தான் திமுகவிற்கு இறுதித்தேர்தல், தீயச்சக்தி திமுகவை நீக்குவோம், எம்ஜிஆர், அம்மா கண்ட கனவை நிறைவேற்றுவோம்.
குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல், ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல். வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும்.
அதிமுக ஆட்சியில் மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று பல திட்டங்களை செயல்படுத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டி.டி.வி. தினகரனை எடப்பாடி பழனிசாமி வரவேற்று, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. கூட்டணி முடிவை அறிவித்த பின்னர், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்து தினகரன் தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று, வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், NDA கூட்டணியில் இருந்து அமமுக விலகியிருந்த சமயத்தில், "பழனிசாமியுடன் கூட்டணி போறதுக்கு பதில் தூக்கு மாட்டி தொங்கிட்டு போயிடலாம்" என்று டிடிவி தினகரன் பேசிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- டி.டி.வி. தினகரனை எடப்பாடி பழனிசாமி வரவேற்று, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. கூட்டணி முடிவை அறிவித்த பின்னர், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்து தினகரன் தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில், "மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர்
மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.
- பியூஸ் கோயல், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
- கூட்டணி அறிவிப்புக்கு பிறகு இபிஎஸை டிடிவி தினகரன் சந்திக்கவில்லை.
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. கூட்டணி முடிவை அறிவித்த பின்னர், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்து தினகரன் தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்.
இந்த சந்திப்பின்போது பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர். ஆனால் இக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான இபிஎஸ் இல்லை. தொடர்ந்து பியூஸ் கோயல், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது உங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? எடப்பாடியை ஏற்றுக்கொள்வீர்களா? என்பதுபோன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அப்போது டிடிவி தினகரன் பதிலளித்துக்கொண்டிருந்தபோதே, பியூஷ் கோயல் நயினார் நாகேந்திரனிடம் கிளம்பலாம் எனக்கூறி பேச்சை நிறுத்தினார். இது தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.
- 2014 இல் மோடி அவர்கள் எவ்வளவோ வாக்குறுதிகளை வாரி வழங்கினார்.
- தேர்தல் தொடர்பான அவருடைய வாக்குறுதிகள் வெளிப்படுத்துகின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலத் தலைவர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2014 இல் மோடி அவர்கள் எவ்வளவோ வாக்குறுதிகளை வாரி வழங்கினார். அதில் முக்கியமானது "ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன்" என்றது.
ஆட்சியைப் பிடிக்க ஆயிரம் பொய் சொல்லலாம் என்ற மோடியின் தந்திரத்தை எடப்பாடி பழனிச்சாமியும் பின்பற்றத் தொடங்கிவிட்டார் என்பதை தான் தேர்தல் தொடர்பான அவருடைய வாக்குறுதிகள் வெளிப்படுத்துகின்றன.
தமிழக மக்களே, எடப்பாடி பழனிசாமி இப்போது மோடியுடன் சேர்ந்து வருகிறார் உஷார்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள்.
- தமிழ்நாடு அரசிடம் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.
'கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களை கைது செய்யும் விடியா திமுக அரசுக்கு என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ் நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகளும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு, கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள்.
தற்போது இந்நிறுவனங்கள் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 50 பைசா வளர்ப்பு கூலியாக கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
தேங்காய் நார்மஞ்சி விலை உயர்வு மூலப் பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, ஆள் கூலி உயர்வு என பல்வேறு செலவுகள் அதிகரித்ததற்கு ஏற்ப நிறுவனங்கள் கூலி உயர்வு வழங்காததால் பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்புக்கு கிலோவுக்கு ரூ. 20-ஐ அடிப்படை கூலியாக வழங்க வேண்டும்; மின் கட்டண சலுகை, தரமான தீவனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 2
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் முன்னெடுப்பில், தமிழ்நாடு அரசிடம் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.
1.1.2026 முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று பண்ணையாளர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே நிறுவனங்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, 7.1.2026 அன்று சென்னை கால்நடை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 21.1.2026 அன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராட்டம் நடத்தி வந்த கறிக்கோழி பண்ணை விவசாயிகளையும், தமிழக விவசாய பாதுகாப்புச் சங்க நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 10 பேரை 14.1.2026 அன்று விடியா திமுக அரசின் காவல்துறை கைது செய்து, சிறையில் வைத்துள்ளதாக வந்த செய்தி கடும் கண்டனத்திற்குரியது.
கைது செய்த கறிக்கோழி பண்ணை விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்துவதுடன், கறிக்கோழி பண்ணை விவசாய சங்கத்தினரையும், நிறுவனங்களையும் உடனடியாக அழைத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி.
கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்






