search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CPIM"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது
    • இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியும், அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் களம் காண்கிறது

    பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியும், அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் களம் காண்கிறது.

    இந்நிலையில், இந்தியா கூட்டணிக்கே எனது ஆதரவு என 'அயலான்' பட இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல் மற்றும் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களான சச்சிதானந்தம், சு.வெங்கடேசன் ஆகியோரின் படங்களைப் பதிவிட்டு இந்தியா கூட்டணிக்கே எனது ஆதரவு என்று அவர் தெரிவித்துள்ளார்.

    நேற்று இன்று நாளை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்த ரவிக்குமார் அண்மையில் அயலான் திரைப்படத்தை இயக்கினார். அவர் இயக்கிய 2 திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ளதால் வெற்றிப்பட இயக்குநர் என அவர் பெயர் எடுத்துள்ளார்.

    • தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காமலும், சட்டத்துக்கு புறம்பாகவும் செயல்படுவதாக பல இடங்களில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன
    • பாஜக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அண்டை மாநிலங்களிலிருந்து கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடைபெறுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன

    திருநெல்வேலில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக அவரது ஊழியர்கள், உறவினர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி, சட்டத்துக்குப் புறம்பாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதற்காக சுமார் ரூ. 4.5 கோடி பணத்தை நேற்று (ஏப்.6) நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுத்துச் சென்றுள்ளனர். தேர்தல் அதிகாரிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனையிட்டு பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

    பிடிபட்ட மூன்று நபர்கள் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நெருங்கிய உறவினர் எனவும் அப்பணத்தை திருநெல்வேலியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனிடம் கொடுப்பதற்காக எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது மட்டுமின்றி, சட்டத்துக்கு புறம்பான செயலாகும்.

    தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காமலும், சட்டத்துக்கு புறம்பாகவும் செயல்படுவதாக பல இடங்களில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. உதாரணமாக, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்ட போது பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதுடன் தரக்குறைவாக பேசியுள்ளார். இச்சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்து அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பாஜக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அண்டை மாநிலங்களிலிருந்து கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடைபெறுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. எனவே, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும், அவருடன் நெருக்கமாக உள்ள உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரின் வீடுகளிலும் சோதனையிட வேண்டும். நயினார் நாகேந்திரன் மீது உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், இதேபோன்று பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பண முறைகேடுகள் நடைபெறா வண்ணம் உரிய தலையீடு செய்வதுடன், ஜனநாயகப் பூர்வமான முறையில் தேர்தல் நடத்துவதை உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேடுதல் பத்திர விவரங்கள் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்
    • நம்மால் எதையும் செய்யமுடியும் என்று சங்பரிவார் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது

    தேடுதல் பத்திர விவரங்கள் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் தான் இந்த பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப, டெல்லி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். நம் நாடு எதிர் நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான உதாரணம் இது. நம்மால் எதையும் செய்யமுடியும் என்று சங்பரிவார் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

    தேர்தல் பத்திர முறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. தேர்தல் பத்திர முறை இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று அவர் தெரிவித்தார்.

    உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.

    அதன் பின்பு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்பட அனைத்து விவரங்களையும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

    • திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் நாடாளுமன்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டியிடும் தொகுதிகள் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

    அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    ஏற்கனவே திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கேரளா ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.
    • ஆர்.எஸ்.எஸ்.காரர்களை துணைவேந்தர்களாக நியமிக்க முயற்சிக்கிறார் என குற்றச்சாட்டு.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பல்கலைக்கழக நியமன விவகாரம் தொடர்பாக, ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் அம்மாநில மார்க்சிஸ்ட் அரசுக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. கேரளாவில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஆளுநர் மாளிகை தரப்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது.

    இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என்றும், இந்த விவகாரத்தில் ஆளுநர் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை அவர்கள் அனைவரும் தங்கள் பதவியை தொடரலாம் என்றும் உத்தரவிட்டது.

    இந்நிலையில் ஆரிப் முகமது கானுக்கு எதிராக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவனந்தபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் பேரணியாக சென்றனர். இந்த போராட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், கேரள ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு வேலை செய்கிறார் என்றார்.

    ஆர்.எஸ்.எஸ்.காரர்களை துணைவேந்தர்களாக நியமிக்க அவர் முயற்சிக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஆளுநர் தனக்கு ராஜ அதிகாரம் இருப்பதாக நினைப்பது வெட்கக்கேடானது, ஆளுநரின் செயல்பாடு கேரள உயர்கல்வித் துறையை அழிக்கும் முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1987, 1991 மற்றும் 1996 இல் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா தொகுதியில் இருந்து சிபிஐ (எம்) வேட்பாளராக கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • 1987-1991ல் ஈ.கே.நாயனார் தலைமையிலான சி.பி.ஐ.(எம்) தலைமையிலான எல்.டி.எஃப் அரசில் மின்சாரம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

    மூத்த சிபிஐ(எம்) தலைவரும், கேரள முன்னாள் நிதியமைச்சருமான டி.சிவதாச மேனன் (90) வயது தொடர்பான உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் அவர் கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் காலமானார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது உடல் தகனம் நாளையில் மஞ்சேரியில் நடைபெறுகிறது.

    மன்னார்க்காட்டில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய மேனன், ஆசிரியர் சங்கங்களை அமைத்து அரசியலில் நுழைந்தார்.

    இந்தத் துறையில் முக்கியப் பதவிகளை வகித்த பிறகு, மேனன் சிபிஐ(எம்) கட்சியின் முக்கியத் தலைவராக பொறுப்பேற்றார்.

    அவர் 1987, 1991 மற்றும் 1996 இல் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா தொகுதியில் இருந்து சிபிஐ (எம்) வேட்பாளராக கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    1987-1991ல் ஈ.கே.நாயனார் தலைமையிலான சி.பி.ஐ.(எம்) தலைமையிலான எல்.டி.எஃப் அரசில் மின்சாரம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

    பின்னர், மேனன் 1996 முதல் 2001 வரை ஐந்து ஆண்டுகள் நாயனார் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றினார். சிபிஐ(எம்) கட்சியின் மாநிலச் செயலர் உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.

    கொல்கத்தாவில் அமித் ஷா பேரணியின்போது ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திரிணாமுல், மா.கம்யூனிஸ்ட் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கொல்கத்தா:

    வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது வங்காளம் என்றழைக்கப்பட்ட பெரும்பகுதியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர், ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர். சிறந்த கல்வியாளராகவும், தத்துவவாதி மற்றும் மொழிபெயர்ப்பாளராகவும், பேராசிரியராகவும், பெரும் கொடையாளராகவும் திகழ்ந்த இவரை மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சமூக சீர்திருத்தவாதியாக போற்றி, மதித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கொல்கத்தா நகரில் நேற்று பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியின்போது அக்கட்சியினருக்கும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடையில் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.



    இந்த மோதலின்போது வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மற்றும் மாணவர் அணி அமைப்பினர் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க உரிய சட்டம் இயற்றுவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.#LSpolls #CPM #ElectionManifesto
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் பாராளுமன்ற தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:

    பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க உரிய சட்டங்கள் இயற்றப்படும். மக்களவை, சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்

    தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 நிர்ணயிக்கப்படும். விலைவாசி உயர்வை பொறுத்து ஊதிய உயர்வு வழங்கப்படும்.

    விவசாயிகளுக்கு உற்பத்தி செலவை விட 50 சதவீதம் அதிக தொகையில் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்றப்படும் 

    தனியார் காப்பீடு நிறுவன சிகிச்சை முறை நிறுத்தப்பட்டு, சுகாதாரத்திற்கு ஜிடிபியில் 5 சதவீதம் ஒதுக்கப்படும். அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வேலை என்பது அடிப்படை உரிமையாக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #LSpolls #CPM #ElectionManifesto
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கு 38 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று அறிவித்துள்ளது. #LSpolls #CPI(M) #CPI(M)candidates
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடுகளை முடித்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் மொத்தம் 42 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இங்கு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை போல் வலிமையான கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் விளங்குகிறது. இங்கு திரிணாமுல் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற முயற்சி மேற்கொண்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க காங்கிரஸ் கட்சி விரும்பியது. ஆனால் மாநில தலைமை அதனை விரும்பவில்லை. திரிணாமுல் இங்கு தனியாகவே களமிறங்குகிறது.

    இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது.



    இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 38 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது. இன்னும் 4 தொகுதிகள் மட்டுமே மீதமுள்ளது. 

    இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பிமன் போஸ் கூறுகையில், முதல் கட்டமாக 38 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். காங்கிரசுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளோம். கூட்டணி இல்லையென்றால் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை விரைவில் அறிவிப்போம் என தெரிவித்துள்ளார். #LSpolls #CPI(M) #CPI(M)candidates
    பாராளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்டுடன் கூட்டணி கிடையாது என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறினார். #MullappallyRamachandran #CPIM
    திருச்சூர்:

    கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் திருச்சூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-

    கேரளாவில் காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. எனவே இங்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுடன் எந்த உடன்பாடும் செய்துகொள்ளமாட்டோம். மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றிபெறும்.



    சபரிமலை ஐயப்பன் கோவில் பிரச்சினை எந்தவகையிலும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆளும் கம்யூனிஸ்டு அரசு அனைத்து வகையிலும் தோல்வி அடைந்துவிட்டது. வெள்ளம் வந்து 6 மாதங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் எந்த உதவியும் வழங்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MullappallyRamachandran #CPIM
    பா.ஜனதா கட்சியில் இருந்து விலகியுள்ள மாநில நிர்வாகிகள் 4 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இணையப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். #Sabarimala #BJP #CPIM
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பா.ஜனதா கட்சி சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. தற்போது கேரள அரசு தலைமை செயலகம் முன்பு அந்த கட்சி சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.

    பா.ஜனதா கட்சி நடத்தும் போராட்டம் காரணமாக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.



    இந்த நிலையில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகிகள் 4 பேர் அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளனர். தாங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இணையப்போவதாக அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

    பா.ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகளான கிருஷ்ணகுமார், ஜெயக்குமார், சுரேந்திரன், சுகுமாரன் ஆகியோர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சபரிமலை பிரச்சினை மூலம் பா.ஜனதா கட்சி கேரள மக்களிடம் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்த முயற்சி செய்கிறது. இதன் மூலம் அரசியல் லாபம் பெற அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த பிரச்சினை தொடர்பாக மாநில கமிட்டி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை நிறைவேற்றும் எந்திரமாக பா.ஜனதா கட்சி செயல்படுவது கண்டனத்துக்குரியது.

    விளிம்பு நிலை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முற்போக்கு சிந்தனை உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போன்ற கட்சியில் இணைந்து செயல்பட நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர். #Sabarimala #BJP #CPIM

    எச்.ராஜாவை போலீசார் கைது செய்யாவிட்டால் நாங்களே அவரை பிடித்து போலீசில் ஒப்படைக்கும் நிலை ஏற்படும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார். #HRaja #Balakrishnan
    விழுப்புரம்:

    பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி விழுப்புரம் வடக்கு மாவட்ட குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி மைதானத்தில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். மத்திய குழு வாசுகி, மாநில செயற்குழு நூர்முகம்மது, அரசியல் தலைமை குழு ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பரையாற்றினர். கூட்டத்தில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உடனே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்.

    தமிழகத்தில் பா.ஜ.க.வினர் சிலரை பேசவிட்டு பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றனர். பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிவருகிறார். ஆனால் இதுவரை அவரை தமிழக அரசு கைது செய்யவில்லை.

    ஆனால் பா.ஜ.க.வை விமர்சிப்பவர்கள் மட்டும் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். எச்.ராஜாவை போலீசார் கைது செய்யாவிட்டால் நாங்களே அவரை பிடித்து போலீசில் ஒப்படைக்கும் நிலை ஏற்படும்.

    தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. பதவியை காப்பாற்றி கொள்ளவே முனைப்பாக உள்ளது. தமிழக அரசின் சுகாதாரதுறை, மின்துறை உள்ளிட்ட பல துறைகளில் ஊழல் புகார்கள் கூறப்படுகின்றன. இந்த ஊழல் முறைகேடுகளை கண்டித்து மக்களை திரட்டி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆட்சி செய்ய முடியாது என்று டி.டி.வி. தினகரன் கூறி வருவது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் பேசினார். #HRaja #Balakrishnan
    ×