என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Metro Train"

    • வடபழனி - பூந்தமல்லி இடையேயான 16 கி.மீ. தூர மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன.
    • முதல் 2 நாள் பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரெயில் பெட்டிகள் வசதி, பயணிகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

    சென்னையில் இரண்டாம் கட்டமாக 3 வழித்தடங்களில் ரெயில்களை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் சாலை வரை 26 கி.மீ. தொலைவு ரெயில் பாதை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த தடத்தில் வடபழனி - பூந்தமல்லி இடையேயான 16 கி.மீ. தூர மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன.

    இந்நிலையில், பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான இறுதி ஆய்வை நாளை ரெயில் பாதுகாப்பு ஆணையம் மேற்கொள்கிறது. நாளை முதல் 3 நாட்களுக்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு மேற்கொள்கிறார்.

    முதல் 2 நாள் பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரெயில் பெட்டிகள் வசதி, பயணிகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். 3-வது நாள் 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்கிறது. 10 ரெயில் நிலையங்களிலும் ஆய்வுகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னை மெட்ரோ ரெயில் நிறு​வனம் 2024-25-ம் நிதி​யாண்​டின் அறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளது.
    • பயணக் கட்டண வரு​வாய் மட்​டுமின்​றி, இதர பிரிவு​களில் வரு​வாய் அதி​கரித்​துள்​ளது.

    சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரெயிலில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பயணம் செய்கின்றனர். மெட்ரோ ரெயில் நிறுவனம் டிக்கெட் கட்டண வருவாய் மட்டுமின்றி, இதர வழிகளிலும் வருவாயை திரட்டும் பணிகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

    வாகன நிறுத்தும் இடம் அதிகரிப்பு, மெட்ரோவுக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு நீண்ட காலத்துக்கு குத்தகை விடுவது, ரெயில்கள், ரெயில் நிலையங்களில் தனியார் விளம்பரம் செய்ய அனுமதிப்பது உட்பட பல்வேறு வகைகளில் வருவாயை ஈட்டுகிறது. இதனால் அந்நிறுவனத்தின் வருவாய் கணிசமாக அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையே, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 2024-25-ம் நிதியாண்டின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.369.49 கோடியிலிருந்து ரூ.425.64 கோடி ஆக உயர்ந்துள்ளது. இது 15 சதவீதம் அதிகமாகும்.

    பயணக் கட்டண வருவாய் மட்டுமின்றி, இதர பிரிவுகளில் வருவாய் அதிகரித்துள்ளது. இதர பிரிவு வருவாய் ரூ.104.30 கோடியிலிருந்து ரூ.135.39 கோடியாக அதிகரித்துள்ளது. இது 30 சதவீதம் அதிகமாகும்.

    வரும் ஆண்டுகளில் பயணிகள் எண்ணிக்கையும், இதர பிரிவுகளில் பயன்பாடுகளும் அதிகரிக்கும் என்பதால், வருவாய் மேலும் அதிகரிக்கும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சிக்னல் அமைப்பு, தண்டவாள செயல்திறன், ரெயில் இயக்கம், உறுதித் தன்மை உள்ளிட்டவைகள் பரிசோதிக்கப்பட்டது.
    • பூந்தமல்லி - வடபழனி இடையே பயணிகள் ரெயில் சேவையை தொடங்குவதற்கான அனுமதியை வழங்கும்.

    சென்னை:

    சென்னையில் 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் (26 கிலோ மீட்டர்) பூந்தமல்லி - போரூர் வரையிலான 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் முடிந்துள்ளது. இந்த பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதற்கான பாதுகாப்பு சான்றிதழையும் ரெயில்வே வாரியம் வழங்கியது.

    இந்த நிலையில், போரூர் - வடபழனி இடையில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து கடந்த 11-ந்தேதி வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டது.

    அப்போது, சிக்னல் அமைப்பு, தண்டவாள செயல்திறன், ரெயில் இயக்கம், உறுதித் தன்மை உள்ளிட்டவைகள் பரிசோதிக்கப்பட்டது. இதனால், பூந்தமல்லி - வடபழனி இடையில் மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான அனைத்து சோதனை பணிகளையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முழுமையாக முடித்துள்ளது. இதேபோல, போரூர் - வடபழனி இடையே இம்மாத இறுதிக்குள் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதைத்தொடர்ந்து, பூந்தமல்லி - வடபழனி வரையிலான வழித்தடத்தில் வரும் பிப்ரவரி மாதம் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட இருக்கிறது.

    இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பூந்தமல்லி - வடபழனி இடையே சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொண்டு வந்த சோதனை பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் குறிப்பிட்ட வழித்தடம், பயணிகள் வசதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த பின்னர் அவருடைய ஆய்வுக் குறிப்புகள் ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதைத்தொடர்ந்து, பூந்தமல்லி - வடபழனி இடையே பயணிகள் ரெயில் சேவையை தொடங்குவதற்கான அனுமதியை வழங்கும். பிப்ரவரி மாதம் இவ்வழித்தடத்தில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மெட்ரோ ரெயில் இருக்கை விவகார் தொடர்பாக பொதுநல வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
    • அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவு.

    சென்னை மெட்ரோ ரெயில்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகள் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய, மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் சில அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

    வழக்கறிஞர் வி.பி.ஆர். மேனன் தாக்கல் செய்த பொது நல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில்களில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு எனத் தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் இளைஞர்களும் மற்ற பயணிகளும் அந்த இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொள்வதாகப் புகார்கள் எழுந்தன.

    இது தொடர்பாகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மெட்ரோ ரயில்களில் அதிகாரிகள் அவ்வப்போது 'திடீர் சோதனை' நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

    முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பயணிகளுக்கான இருக்கைகளில் மற்றவர்கள் அமர்ந்திருக்கிறார்களா என்பதை அவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும், தகுதியற்ற நபர்கள் அந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டு, முதியோர்களுக்கோ அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கோ இடம் தர மறுத்தால், அவர்கள் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், முன்னுரிமை இருக்கைகள் யாருக்கானவை என்பது குறித்த அறிவிப்புகளை ரெயில்களுக்குள்ளும், நிலையங்களிலும் தெளிவாகத் தெரியும்படி வைக்க வேண்டும். ஒலிபெருக்கி மூலமாகவும் பயணிகளுக்குத் தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரெயிலில் இருக்கும் பாதுகாப்பு ஊழியர்கள், ஒவ்வொரு நிறுத்தத்திலும் முதியோர்கள் ஏறும் போது அவர்களுக்கு இருக்கைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், உடல் ரீதியான சவால்களைக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது ஒரு நாகரீகமான சமூகத்தின் கடமை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

    மேலும், மெட்ரோ நிர்வாகம் இதனைச் சரியாகக் கண்காணிக்கத் தவறினால், சட்டப்படியான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

    • டெல்லி மெட்ரோவில் பயணம் செய்யும் நபர்களில் சிலர் சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபடுகின்றனர்.
    • பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற அறிவு கூட இல்லை

    டெல்லி மக்களுக்கு அத்தியாவசிய போக்குவரத்தை வழங்குவதில் மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சேவை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

    அவ்வப்போது டெல்லி மெட்ரோவில் பயணம் செய்யும் நபர்களில் சிலர் சர்ச்சைக்குரிய வகையில் செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    அந்த வகையில் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் நபர் ஒருவர் சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தலைநகர் டெல்லியில் உள்ள மெட்ரோ ரெயிலில் பயணிப்பவர்களிடையே பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற அறிவு கூட இல்லை என்று இணையத்தில் விமர்சனம் எழுந்துள்ளது.

    • வழக்கம்போல அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.
    • பொங்கலை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊர் சென்றதாலும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதாலும் சேவை குறைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களை ஒட்டி மெட்ரோ ரெயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று மெட்ரோ ரெயில் சேவை குறைக்கப்பட்டது. இன்றும் நாளையும் 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. வழக்கம்போல அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

    அதிகாலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.

    மேலும் பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடத்திற்கு ஒரு சேவையும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கலை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊர் சென்றதாலும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதாலும் சேவை குறைக்கப்பட்டு உள்ளது.

    • சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம்போல காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இயக்கப்படும்.
    • நண்பகல் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, ஒவ்வொரு 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026 ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இயக்கப்படும்.

    மெட்ரோ ரெயில் சேவை விவரங்கள்:

    1. சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம்போல காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இயக்கப்படும்.

    2. காலை 5:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை மற்றும் இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை, ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    3. நண்பகல் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, ஒவ்வொரு 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    4. மேலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை, ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2வது வாரத்தில் ரெயில் சேவையைத் தொடங்க திட்டம்
    • போரூர் - வடபழனி வழித்தடத்தில் நடைபெற்ற முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு

    சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படும், போரூர் - வடபழனி வரையிலான 7 கி.மீ., வழித்தடத்தில் நேற்று நடைபெற்ற முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

    பூந்தமல்லி- போரூர் வரையிலான 10 கி.மீ தூரத்திற்கு சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில் போரூர்- வடபழனி இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது .

    பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2வது வாரத்தில் ரெயில் சேவையைத் தொடங்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

    இந்நிலையில், போரூர் - வடபழனி வழித்தடத்தில் நேற்று நடைபெற்ற முதற்கட்ட சோதனை ஓட்டம் தொடர்பான வீடியோவை சென்னை மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    இது சென்னையின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பால வழித்தடமாகும். இதில் கீழ் அடுக்கில் வாகனங்களும், மேல் அடுக்கில் மெட்ரோ ரயில்களும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும்போது, ஆற்காடு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். குறிப்பாக பூந்தமல்லி மற்றும் போரூர் பகுதியிலிருந்து வடபழனி வழியாக நகரின் மையப்பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
    • மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது.

    கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது.

    இதனிடையே, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மெட்ரோ ரெயில் திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான 20 லட்சம் மக்கள் தொகை இரு நகரங்களிலும் இல்லை என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்தது.

    20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஆக்ரா, போபால், இந்தூர் போன்ற பிற நகரங்களில் மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர், "கோவை, மதுரை மெட்ரோ ரயில் பணிகள் நிறுத்தப்படவில்லை. நிலம் எடுப்பதற்கான முதற்கட்ட பணிகள் முடிவடைந்துவிட்டன. விரிவான திட்ட அறிக்கை மீண்டும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

    • பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2வது வாரத்தில் ரெயில் சேவையைத் தொடங்க திட்டம்
    • இது சென்னையின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பால வழித்தடமாகும்.

    சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படும், போரூர் - வடபழனி வரையிலான 7 கி.மீ., வழித்தடத்தில் இன்று முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

    பூந்தமல்லி- போரூர் வரையிலான 10 கி.மீ தூரத்திற்கு சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில் போரூர்- வடபழனி இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது .

    பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2வது வாரத்தில் ரெயில் சேவையைத் தொடங்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது

    இது சென்னையின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பால வழித்தடமாகும். இதில் கீழ் அடுக்கில் வாகனங்களும், மேல் அடுக்கில் மெட்ரோ ரயில்களும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும்போது, ஆற்காடு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். குறிப்பாக பூந்தமல்லி மற்றும் போரூர் பகுதியிலிருந்து வடபழனி வழியாக நகரின் மையப்பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நேற்றைய தினம் ஒருங்கிணைந்த கணினி சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன.
    • கடந்த சில நாட்களாக மின்மயமாக்கல் மற்றும் சிக்னல் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

    சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படும், போரூர் - வடபழனி வரையிலான 7 கி.மீ., வழித்தடத்தில் இன்று சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

    பூந்தமல்லி- போரூர் வரையிலான 10 கி.மீ தூரத்திற்கு சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில் போரூர்- வடபழனி இடையே சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

    இது சென்னையின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பால வழித்தடமாகும். இதில் கீழ் அடுக்கில் வாகனங்களும், மேல் அடுக்கில் மெட்ரோ ரயில்களும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை சுமார் 11:00 மணி அளவில் இந்தச் சோதனை ஓட்டம் நடைபெறும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதற்காக கடந்த சில நாட்களாக மின்மயமாக்கல் மற்றும் சிக்னல் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. நேற்றைய தினம் ஒருங்கிணைந்த கணினி சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன.

    இந்த வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும்போது, ஆற்காடு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். குறிப்பாக பூந்தமல்லி மற்றும் போரூர் பகுதியிலிருந்து வடபழனி வழியாக நகரின் மையப்பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தொழில் நுட்ப கோளாறு காரணமாக நேற்று காலை 6 மணியில் இருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
    • தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர்.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை ஒருவழித் தடத்தில் நேற்று முடங்கியது. சென்ட்ரல்-கோயம்பேடு விமான நிலையம் நேரடி சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

    தொழில் நுட்ப கோளாறு காரணமாக நேற்று காலை 6 மணியில் இருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர். சரி செய்யும் பணி இரவு வரை நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலையில் இருந்து அந்த வழித்தடத்தில் சேவை தொடங்கியது.

    இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவிலிருந்து விமான நிலையம் (இன்டர்-காரிடார்) வரையிலான நேரடி ரெயில் சேவை மீண்டும் இயல்பான செயல்பாட்டை தொடங்கி உள்ளது.

    ப்ளூ லைனில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் டிப்போ வரையிலான மெட்ரோ ரெயில் சேவையும், கிரீன் லைனில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான மெட்ரோ ரெயில் சேவையும் வார நாள் அட்டவணையின்படி இயங்குகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×