என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Metro Train"
- மெட்ரோ ரெயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
- பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில் மெட்ரோ ரெயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ ரெயில்களை (மொத்தம் 30 பெட்டிகள்) வழங்குவதற்கான துணை ஒப்பந்தத்தை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.269 கோடி மதிப்பில் (வரிகள் உட்பட) வழங்கி உள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் அல்ஸ்டோம் டிரான்ஸ் போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர். இந்த ஒப்பந்ததின் கீழ், மெட்ரோ ரெயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். வழித்தடம்-4-ல் பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில் மெட்ரோ ரெயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
- பயணிகளின் பயண நேரத்தை குறைக்க சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் நடவடிக்கை.
- நெரிசல்மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை :
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:-
அதிகரித்து வரும் மெட்ரோ ரெயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மற்றும் அவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும் இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல்மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவைகள் இன்று முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
மெட்ரோ ரெயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை விரிவாக்கம் செய்வதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
- பொது மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள சலுகையுடன் ஒரு நிபந்தனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அதிநவீன போக்குவரத்து முறையாக அறிமுகமாகி இன்று அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக உருவெடுத்து இருக்கிறது சென்னை மெட்ரோ ரெயில். நகரின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் துவங்கப்பட்டு, தற்போது நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதில் இருந்தே, மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொள்ள முடியும்.
சென்னை மெட்ரோ ரெயிலில் தினசரி பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பொது மக்களுக்கு அவ்வப்போது சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றன.
அந்த வகையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி ஒரு நாள் மட்டும் ரூ.5 கட்டணத்தில் பொது மக்கள் பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.
ஆனால், அதற்கு ஒரு நிபந்தனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாடிக் க்யூஆர், பேடிஎம், வாட்ஸ்அப் மற்றும் போன்பே மூலம் பெறும் டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்த சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- மெட்ரோ ரெயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவை, நாளை 09.11.2023 (வியாழக்கிழமை), 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ ரெயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த மெட்ரோ ரெயில் நீட்டிப்பு சேவை 09.11.2023 (வியாழக்கிழமை), 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டுமே.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.
- தொழில்நுட்ப கோளாறு வெகுவிரைவில் சரிசெய்யப்பட்டு மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.
சென்னை:
மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,
விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறால் நீல வழித்தடத்தில் 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது
நீல வழித்தடத்தில் விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இன்று காலை 11.20 மணியளவில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து சுங்கச்சாவடி மெட்ரோ ரெயில் நிலையம் வரை 9 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மெட்ரோ இரயில்கள் 20 நிமிட இடைவெளியில் ஒரு வழிப் பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.
நீலவழித்தடத்தில் சுங்கச்சாவடி மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து ஏ.ஜி- டி.எம்.எஸ்., நந்தனம் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம் போல் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது.
விம்கோ நகர் மெட்ரோ இரயில் நிலையத்தில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை தொழில்நுட்ப வல்லுநர்கள் சரிசெய்யும் பணியில் துரிதமாக ஈடுப்பட்டுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு வெகுவிரைவில் சரிசெய்யப்பட்டு மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.
பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத தடங்கல்களுக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருந்துகிறது என கூறப்பட்டுள்ளது.
- அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தடையற்ற பயணத்தை வழங்குவதற்காக, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
- சென்னையில் நடைபெற்ற போட்டி நாட்களில் மெட்ரோ ரெயில் சேவை நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நடப்பாண்டில் ஐ.சி.சி. ஆடவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 5-ந்தேதி தொடங்கி சென்னை எம்.ஏ.சிதம்பரம் சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெற்றன. அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தடையற்ற பயணத்தை வழங்குவதற்காக, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. சென்னையில் நடைபெற்ற போட்டி நாட்களில் மெட்ரோ ரெயில் சேவை நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற முதல் 2 கிரிக்கெட் போட்டிக்கான பயணச்சீட்டு வைத்திருந்த பயணிகளுக்கு போட்டியை பார்த்துவிட்டு திரும்பும் போது மெட்ரோ ரெயிலில் இலவச பயணம் வழங்கப்பட்டது. பின்னர், புக் மைஷோ உடன் இணைந்து, பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு தடையற்ற நுழைவு மற்றும் வெளியேறலை எளிதாக்கும் வகையில், போட்டிக்கான பயணச்சீட்டுகள் கியூ.ஆர். பார்கோடுடன் இணைக்கப்பட்டன. இதன் மூலம், கிரிக்கெட் போட்டிக்கான செல்லுபடியாகும் பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள், சென்னையில் நடைபெற்ற மீதமுள்ள மூன்று போட்டிகளுக்கும் கட்டணமின்றி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.
மேலும், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து போட்டி நடைபெற்ற சிதம்பரம் மைதானத்திற்கு மெட்ரோ இணைப்பு பஸ்களை வழங்கியதன் மூலம் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்தது. மொத்தம் 25 ஆயிரம் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட அக்டோபர் மாதத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 117 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் அதிகம் பயணித்துள்ளனர்.
- அதிகபட்சமாக 20.10.2023 அன்று 3,60,743 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட அக்டோபர் மாதத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 117 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் அதிகம் பயணித்துள்ளனர்.
நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகள் மற்றும் அக்டோபர் மாதத்தில் 85,50,030 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 20.10.2023 அன்று 3,60,743 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட் மற்றும் அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போட்டியை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி எந்தவித கட்டணமும் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம்.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று (27-ந்தேதி) நடைபெறவுள்ளது. இதையொட்டி, சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கான பயண போக்குவரத்து செலவின தொகையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்றுள்ளது.
எனவே, போட்டியை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி எந்தவித கட்டணமும் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம். 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரெயிலில் பெண் பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுகள், அசம்பாவிதம், பாலியல் தொந்தரவு குறித்து புகார் செய்யலாம்.
- மெட்ரோ ரெயிலில் பெண்களுக்கு துன்புறுத்தல் ஏற்படுத்தியதாக வடபழனி நிலையம், விமான நிலையம் ஆகியவற்றில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை:
சென்னையில் ஓடும் ஒவ்வொரு மெட்ரோ ரெயிலிலும் 4 அலாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அலாரத்தின் பொத்தானை அழுத்தினால் பெண்களுக்கு உடனடி உதவிகள் கிடைக்கும். கண்ட்ரோல் ரூம் மற்றும் டிரைவரின் கட்டுப்பாட்டு அறைக்கு இதன் மூலம் பேச முடியும்.
மெட்ரோ ரெயிலில் பெண் பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுகள், அசம்பாவிதம், பாலியல் தொந்தரவு குறித்து இதில் புகார் செய்யலாம். உடனடியாக சி.சி.டி.வி. கேமரா மூலம் ஆய்வுசெய்து சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள்.
கடந்த 4 மாதத்தில் இதுவரை 12 ஆயிரம் பெண்கள் இந்த அவசர அலார பொத்தானை அழுத்தி புகார் செய்து பயன்பெற்று உள்ளனர். இதில் உள்ள "விரைவு பதிலளிப்பு குழுக்கள்' பெண்களுக்கு ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை உரிய நேரத்தில் தடுத்து பெண்களுக்கு தக்க பாதுகாப்பை வழங்கி வருகின்றனர். இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மெட்ரோ ரெயிலில் 'பீக் ஹவர்ஸ்' மற்றும் இரவு நேரங்களில் பெண்கள் மட்டும் செல்லும் பெட்டிகளில் ஆண் பயணிகள் பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்த பொத்தானை அழுத்தி பெண் பயணிகள் புகார் கூறி உள்ளனர். பெண்கள் சிரமத்தை எதிர்கொண்டால், ரெயிலின் கதவுக்கு அருகில் பொருத்தப்பட்டு உள்ள 'பயணிகள் பாதுகாப்பு பொத்தானை அழுத்தி இண்டர்காம்' மூலம் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்.
ஒவ்வொரு மெட்ரோ ரெயில் பெட்டியிலும் அவசர தேவைகளுக்காகவும், பாலியல் துன்புறுத்தல், மதுபோதை குறித்தும் புகார் அளிக்க 4 இண்டர்காம் போன் வசதிகள் நிறுவப்பட்டு உள்ளன.
மெட்ரோ ரெயிலில் பெண்களுக்கு துன்புறுத்தல் ஏற்படுத்தியதாக வடபழனி நிலையம், விமான நிலையம் ஆகியவற்றில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு.
- இரு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் ரெயில் இயக்கம்.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிக்காக மாலையில் நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவை, இன்று 21-ந்தேதி இரவு 8 மணி முதல் 10 மணிவரை 6 நிமிடத்துக்கு ஒரு ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.
இந்நிலையில், 19-ந் தேதி அன்று 3,43,922 பயணிகளும், 20-ந்தேதி அன்று இதுவரை இல்லாத அளவில் 3,60,743 பயணிகளும் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை.
இதில் அதிகபட்சமாக புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 28,021 பயணிகளும், கிண்டி மெட்ரோ ரெயில் நிலையத்தில் 20,423 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 18,375 பயணிகளும், விமான நிலையம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 18,113 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கியூ.ஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட் போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (83000 86000) மூலமாக மற்றும் பேடிஎம் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.